search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து, அங்கு பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய லூனார் ரோவரை சீனா அனுப்பி உள்ளது. #China #Mission #Moon
    பீஜிங்:

    நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
     
    இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

    ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

    Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

    பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

    பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

    அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

    "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  #China #Mission #Moon
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி சீனாவை 11 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Australia #China
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் சீனா அணிகள் இன்று மோதின.

    தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோலாக்கினர். அவர்களது துல்லியமான ஆட்டத்துக்கு சீன வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி சீனாவை 11- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 3 கோல்கள் அடித்த பிளாக் கோவர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி புள்ளிப்பட்டியலில் பி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

    பி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 4 -2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த அயர்லாந்து அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #Australia #China
    பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் ‘ஷாகீன்-7’ என்னும் பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. #ShaheenVII #Pakistan #China
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இதில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் யார் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சிகள் மாறினாலும், அவர்களின் நட்புறவு பாதிப்பதில்லை. இரு தரப்பு ராணுவ உறவும் வலுவாக உள்ளது.

    அது மட்டுமின்றி இரு நாடுகள் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பும் மிக ஆழமாக உள்ளது. மேலும், புதிதாக சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்ற உள்கட்டமைப்பு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

    சி.பி.இ.சி. என்னும் இந்த சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

    இரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சீன பிரதமர் லீ கெகியாங்கையும் இம்ரான்கான் சந்தித்து, இரு நாடுகள் இடையேயான உறவை பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தார். மேலும், சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அது மட்டுமின்றி, நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்க சீனா முன் வந்துள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் ‘ஷாகீன்-7’ என்னும் பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

    இதில் இரு நாடுகளின் போர் விமானங்கள், ‘அவாக்ஸ்’ விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. மேலும், இரு தரப்பு விமானப்படை வீரர்களுடன் போர் விமானங்களை இயக்குகிற விமானிகள், வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள், தொழில் நுட்பக்குழுவினர் ஆகியோரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

    இது இரு நாட்டு விமானப்படைகளின் 7-வது கூட்டு போர் பயிற்சி ஆகும். 6-வது கூட்டு போர் பயிற்சி, சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

    7-வது கூட்டு போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. #ShaheenVII #Pakistan #China
    இந்தியாவில் வரும் 15-20 ஆண்டுகளுக்கு சரியான அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விடலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi #surgicalstrike #politicalasset
    ஜெய்பூர்:

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் ராணுவ ரீதியான நடவடிக்கையாகும். ஆனால், ராணுவத்தின் பெருமையை சொந்தம் கொண்டாட விரும்பும் நமது பிரதமர் மோடி இந்த தாக்குதலை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் என ராகுல் குற்றம்சாட்டினார்.

    பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல்கள் மூன்றுமுறை  நடத்தப்பட்டன. இதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?. இதை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலின்போது கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் செய்தியாக பரப்பப்பட்டு, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.



    மோடியின் அரசு 15,20 தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனால், எங்கள் ஆட்சிக்காலத்தில் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் இயங்காத பண இருப்பு, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது.

    பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவை மிகப்பெரிய ஊழலாகும். இதன் மூலம் பெரிய நிறுவனங்களுக்கான கதவுகள் திறந்து விடப்பட்டன. சாதாரண மனிதனின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.

    முன்னேற்றத்தில் சீனாவுடனான போட்டியில் நாம் தோற்று விடவில்லை. நமது நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு இங்கு சரியான அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். #Modi #RahulGandhi #surgicalstrike #politicalasset

    இந்தியா, சீனா, ரஷியா நெருக்கத்தால் கலக்கமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜி-20 உச்சி மாநாட்டின் உலக வர்த்தகம் தொடர்பான இரண்டாம்நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. #TrumpskipG20 #G20
    பியுனஸ் அய்ரெஸ்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளார். ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பலமடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையில் RIC என்றழைக்கப்படும் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில்  மூன்று நாட்டு தலைவர்களும் நேற்று சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது பல்வேறு துறைகளில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.



    ஜி-20 மாநாட்டின் இரண்டாம் அமர்வாக உலக வர்த்தகம் தொடர்பாக இந்த அமைப்பில் உள்ள தலைவர்கள் உரையாற்றுவதாக இருந்தது. வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, சீனா, ரஷியா ஆகியவை நெருக்கமாகியுள்ளதால் கலக்கமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

    அவர் பங்கேற்காததால் உலக வர்த்தகம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி அந்நாட்டின் சார்பில் வேறு யாரும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை என ரஷியா நாட்டின் நிதி மேம்பாட்டுத்துறை மந்திரி மேக்சிம் ஓரெஷ்கின் குறிப்பிட்டுள்ளார். #TrumpskipG20  #G20  
    அர்ஜென்டினா நாட்டில் இந்தியா, ரஷியா, சீனா இடையே 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்றார். #Indiatrilateral #RIC #G20 #ModiG20
    பியூனஸ் அய்ரெஸ்:

    அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்  உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர்,  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் முத்தரப்பு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளை குறிப்பிட்டு  'JAI' என்றால் இந்தியில் வெற்றி என்று அர்த்தம் என தெரிவித்திருந்தார்.



    இந்த ஆலோசனைக்கு பிறகு சீன அதிபர் க்சி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் மற்றொரு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்றார்.

    RIC என்றழைக்கப்படும் ரஷியா, இந்தியா, சீனா நாட்டின் இந்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் மூன்று நாட்டு தலைவர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஆலோசிக்காத நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Indiatrilateral #RIC #G20 #ModiG20

    இலங்கையில் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இலங்கை மற்றும் சீனா இடையே துறைமுகத் திட்ட ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தானது. #SriLankaPort

    கொழும்பு:

    இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

    துறைமுகங்களை சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

    எனவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து மைத்ரியபால சிறிசேனா வெற்றி பெற்றார். அதையடுத்து அங்கு சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுடன் நட்புறவாக இருந்தனர்.

    தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கி விட்டது.

    தற்போது துறைமுகங்களை மேம்படுத்தும் திட்ட பணிகள் மீண்டும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 2 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் கையெழுத்தானது.

    இலங்கை அரசுக்கு சொந்தமான ஜெயா கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் சீன துறைமுக என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து ரூ.236 கோடி (32 மில்லியன் டாலர்) காண்டிராக்ட் கையெழுத்தாகியுள்ளது.

    சீனாவின் ஷாங்காய் ஷேன்குவா கனரக தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.190 கோடிக்கு (25.7 மில்லியன் டாலர்) மதிப்பில் 3 கிரேன் எந்தி ரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை துறைமுக கழகம் வெளியிட்டுள்ளது. #SriLankaPort

    சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். #ChinaBlast
    பீஜிங்:

    வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #ChinaBlast
    மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளனர். #2138died #infectiousdiseasesinChina #2138diedinChina
    பீஜிங்:

    தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா விளங்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 138.64 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீனாவில் கடந்த (அக்டோபர்) ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான  2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 மக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 539 பேர். இவர்களில் பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் வைரல் ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #2138died #infectiousdiseasesinChina  #2138diedinChina
    சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinaBlast #CarFactoryBlast
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டாங்பெங் பகுதியில் கார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இந்திய நேரப்படி 11.40 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.



    இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #ChinaBlast #CarFactoryBlast
    சீனாவில் சாலையைக் கடந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் பலியாகினர். #ChinaAccident
    பீஜிங்:

    சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் இருந்து வந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்காக சாலையை கடந்து வந்தனர்.

    மாணவர்கள் வரிசையாக சாலையை கடந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மாணவர்கள்  மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



    தவறான பாதையில் கார் வந்ததால் மாணவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மத்திய சீனாவில் பொதுமக்கள் மீது சொகுசு கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaAccident
    உலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர ஓட்டல் இயங்க தொடங்கியுள்ளது. #Worldsfirst #undergroundhotel #abandonedquarry #underground
    பீஜிங்:

    உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும்.

    ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தை இப்படி செய்வதற்கு பதிலாக ஆடம்பர ஓட்டலாக மாற்ற கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. ஷங்காய் நகரின் மத்திய பகுதியில் இருந்து சுமார் ஒருமணி நேர பயண தூரத்தில் தற்போது 17 மாடி கட்டிடமாக ‘இன்ட்டர் கான்ட்டினென்ட்டல் டிரீம்லேன்ட்’ என்ற பெயருடன் இந்த ஓட்டல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    தரை பகுதியில் இருந்து  பல மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் சமீபத்தில் திறப்புவிழா கண்டுள்ளது. சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகியுள்ள இந்த ஓட்டலில் 336 அறைகள் உள்ளன.

    இங்கு தங்குபவர்கள் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றில் ஈடுபடலாம். இதில் ஓரிரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 3 ஆயிரத்து 394 யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Worldsfirst #undergroundhotel #abandonedquarry #underground 
    ×