search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் இயங்கும் தேவாலயங்களுக்கு வாடிகன் பிஷப்புகளை நியமித்து வரலாற்று சிறப்பு மிக்க புதிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. #China #Vatican
    பீஜிங்:

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா கம்யூனிச நாடாகவே அறியப்படுகிறது. இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் புத்த மதமே இங்கு பின்பற்றப்படுகிறது.

    இந்நிலையில், வாடிகன் சீனாவுடன் புதிய வரலாற்று சிறப்பு மிக்க இணைப்பை, ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு வாடிகன் நேரடியாக பிஷப்புகளை நியமித்துள்ளது.



    இதன்மூலம், சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று வாடிகனில் இருந்து நியமிக்கப்பட்ட பிஷப்புகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய சீன கத்தோலிக்க தேவாலய பிஷப், சோசியலிச நாட்டுக்கு தகுந்த வகையில் தாங்கள் நடந்துகொள்வோம் எனவும், சீன அரசின் தலைமையிலேயே செயல்படுவோம் எனவும் உறுதி அளித்துள்ளனர். #China #Vatican
    ரஷிய ராணுவ ஒத்துழைப்பில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் கூறியுள்ளார்
    பீஜிங்:

    ரஷிய நாட்டிடம் இருந்து சீனா அதிநவீன போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கி குவித்து உள்ளது.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் நேற்று ஆவேச கருத்து வெளியிட்டார்.

    அப்போது அவர், “ரஷியாவிடம் இருந்து சீனா போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்க முடிவு எடுத்தது, வழக்கமான நடவடிக்கைதான். இறையாண்மை கொண்ட இரு நாடுகள் இடையேயான ஒரு ஒத்துழைப்பு செயல்தான். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கூறினார்.

    மேலும், “அமெரிக்காவின் அணுகுமுறையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளின் ஒரு அப்பட்டமான மீறல் ஆகும். ஒரு மேலாதிக்கத்தின் முழுமையான வெளிப்பாடும் ஆகும். இரு நாடுகள் மற்றும் இரு ராணுவங்கள் இடையேயான உறவுகளில் கடுமையான மீறலும்கூட” எனவும் தெரிவித்தார். 
    பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்த மங்குட் புயலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லட்சம் பேர் வெளியேற்றபப்டுள்ளனர். #Manghkut
    பெய்ஜிங் :

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.

    புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

    இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #Manghkut
    சீனாவில் பிச்சைக்காரர்கள், பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெற்று அதிக லாபம் பெறுகிறார்களாம். #China #DigitalTransaction
    பீஜிங்:

    உலகம் பணமில்லா பரிவர்த்தனையான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லி விடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.

    இந்த நிலையை சரிசெய்ய முடிவு செய்த சீன யாசகர்கள் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக்கொண்டனர்.

    வழக்கமாக கையில் பாத்திரமும், பையில் பழைய அழுக்கு துணிகளுமாக இருக்கும் பிச்சைக்காரர்கள், தற்போது கையில் பாத்திரமும், பையில் துணிக்கு பதிலாக பிரிண்ட் செய்யப்பட்ட கியூ.ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்கள்.

    சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கியூ.ஆர்.கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என கணக்கும் அவர்களுக்கு உள்ளதாம்.

    இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறாராம். டிஜிட்டல் பரிவர்த்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. #China #DigitalTransaction
    சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #ChinaCarAttack
    பீஜீங்:

    சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.

    இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChinaCarAttack
    முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டை பெருக்க ஒருகுழந்தை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா முடிவு செய்துள்ளது. #China #familyplanning
    பெய்ஜிங்:

    சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு வளர்ந்து வந்த மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மனித வளம் குறைந்தது.

    2016-ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 1 கோடியே 72 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் விகிதம் 17.3 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

    தற்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடி. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டை பெருக்க ஒருகுழந்தை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சீனா முடிவு செய்துள்ளது.

    அதற்காக ஒருஅறிவிப்பை தேசிய சுகாதர கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன்படி ஒருகுழந்தை திட்டம் துறை இனி மக்கள் தொகை கண்காணிப்பு மற்றும் குடும்ப மேம்பாடு என மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீன குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ஆதரவாக செயல்படும். #China #familyplanning
    700 சதுர மீட்டர் விவசாய நிலத்தில் 1,155 கிலோ உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசி விளைவித்ததன் மூலம் சீனா புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. #Chinariceoutput
    பீஜிங்:

    சீனாவின் விவசாயத்துறை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசியை பயிரிட்டு அதிக மகசூலை பெறும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள கேஜியு பகுதியில் மூன்று நிலங்களை தேர்வு செய்து, பண்படுத்தி அங்கு தொடர்ந்து ஆராய்ச்சி செய்தனர்.

    ஆண்டுதோறும் நிலையான, மிதமான மழை, பனிப்பொழிவு மற்றும் சரிசமமான சதுப்பு நிலப்பகுதியான இந்த பகுதி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


    இந்த நிலத்தில் சோதனை முயற்சியாக 0.07 ஹெக்டேர் (700 சதுர மீட்டர் அல்லது சுமார் 7,534 சதுரடி) கொண்ட வயலில் விதைத்த ஹைபிரீட் ரக நெற்பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில் 1,152.3 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. அரிசி விளைச்சலில் இது புதிய உலக சாதனை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #riceoutputworldrecord #Chinasuperhybridrice #Chinariceoutput
    சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் ஒரேநாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.
    பீஜிங்:

    ஆப்பிரிக்க பன்றிக்க்காய்ச்சல் என்னும் கொடிய வகை தொற்றுநோய் சீனாவில் சமீபத்தில் பரவியது. கடந்த மாதத்தில் இங்குள்ள 5 மாகாணங்களில் 5 பேர் இந்நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால், நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிறபகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பன்றிகள் மூலமாக வேகமாக பரவும் இந்த நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் இங்குள்ள லியாவ்னிங், ஹேனான், ஜியான்சு. ழேஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் நேற்று ஒரேநாளில் கொன்று புதைக்கப்பட்டன. #Africanswinefever #38KhogsculledinChina
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. #USD #ChineseGoods #ImportTariff
    வாஷிங்டன்:

    சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது. இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.

    அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது. இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்” என குறிப்பிட்டார்.  #USD #ChineseGoods #ImportTariff  
    சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற எந்தவித உபகரணமும் இன்றி களத்தில் இறங்கி செயல்பட்ட தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    சீனாவின் குவாய் டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங். இவர் நேற்று காலை தன்னுடைய மகளை பள்ளியில் விடுவதற்காக மகனை வீட்டிலே தனியாக விட்டு சென்றுள்ளார். அந்த நேரம் தூக்கத்திலிருந்து விழித்த அவருடைய மகன், வெளியில் சத்தத்தை கேட்டு, திருடன் என நினைத்துக்கொண்டு, ஏசி வைக்கப்பட்டிருக்கும் பகுதி வழியாக வெளியில் இறங்க முயற்சி செய்துள்ளான்.

    அப்போது எதிர்பாராத விதமாக 7-வது தளத்தின் பின் பக்கத்தில் சிக்கிக்கொண்டு சத்தமிட்டுள்ளான். இதற்கிடையில் வீடு திரும்பிய ஹூவாங், வீட்டில் சிறுவன் இல்லாததை கண்டு வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு அந்தரத்தில் மகன் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்ததுடன், கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

    இதனடிப்படையில் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்த கணவர், எந்தவித உபகரணமும் இன்றி உடனடியாக களத்தில் இறங்கி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டார். ஒருவழியாக சிறுவனை அடைந்த பொழுது, தீ அணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். பின்னர் கயிறுகளின் உதவியுடன் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

    இந்த சம்பவம் துணிந்து கதாநாயகன் போல செயல்பட சிறுவனின் தந்தைக்கு தற்போது நாலாபுரத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    Courtesy
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia
    வாஷிங்டன்:

    வடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது.

    இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.

    இந்த நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது.  #USWarn #China #Russia  #Tamilnews 
    நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி சிக்கிமில் உள்ள நாது லா எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். #IndependenceDayIndia
    சிக்கிம்:

    நாட்டின் 72-வது சுதந்திரம் இன்று நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றினர்.

    இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையான நாது லா பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது, இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. 
    ×