search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    மாநிலங்களின் முதல்-மந்திரிகளோ, மந்திரிகளோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. #ChiefMinister #ChinaVisit
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்த அவர், தன்னை சீனா செல்ல விடாமல் மத்திய அரசு தடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.

    மம்தாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களின் முதல்-மந்திரிகளோ, மந்திரிகளோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன், பல மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அடிக்கடி சீனாவுக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளது.

    அதன்படி சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) ஆகியோர் அவ்வப்போது சீனா சென்று வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் (2015), அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் (2016), சத்தீஷ்காரின் ராமன் சிங் (2016) போன்ற முதல்-மந்திரிகளும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா சென்று வந்ததாக கூறியுள்ளது.

    இதைப்போல தெலுங்கானா தொழில்துறை மந்திரி ஜுபள்ளி கிருஷ்ணராவ், எரிசக்தி துறை மந்திரி ஜெகதிஷ் ரெட்டி போன்ற மாநில மந்திரிகளும் அரசு முறை பயணமாக சீனா சென்று வந்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #ChiefMinister #ChinaVisit #Tamilnews 
    சீனாவில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிப்பதில் இருந்து காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #China
    பீஜிங்:

    சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.

    இவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.

    இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.



    இந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால்  இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.

    கடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

    தற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. #China
    இலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China
    கொலும்பு:

    இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கடனுக்கு சுமார் சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த இந்திரஜித் குமாரசாமி, அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #SriLanka #IndrajitCoomaraswamy  #China
    சிக்கிம் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் டோக்லாமில் கட்டுமான பணிகளை சீனா மீண்டும் தொடங்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. #China #Doklam
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் பகுதியில் டோக்லாம் எனப்படும் பீடபூமி பகுதி உள்ளது. பூடானுக்கு சொந்தமான அந்த பகுதியை சீனா உரிமை கோரி வருவதுடன், கடந்த ஆண்டு அங்கு சாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டது.

    இந்த சாலையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதப்படுவதால், அந்த பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சீனா தனது படைகளை குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி வைத்தது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.



    இந்த இழுபறி சுமார் 73 நாட்கள் நீடித்தநிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. பின்னர் இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி வாபஸ் பெற்றன. இதனால் அங்கு அமைதி சூழல் ஏற்பட்டது.

    இந்த கட்டுமானப்பணிகளை சீனா மீண்டும் தொடங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவில் இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந் தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து கட்டுமான பணிகளை மறைப்பதற்காக இந்த கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.

    சீனாவின் சாலை கட்டுமானப்பணிகள் குறித்து சமீபத்தில் தகவல் வெளியிட்ட அமெரிக்க பெண் எம்.பி. ஆன் வாக்னர், இந்த விவகாரத்தில் இந்தியாவோ, பூடானோ எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக்கூறினார். தென் சீனக்கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடுவது போல, இமயமலை பகுதியையும் சீனா உரிமை கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. டோக்லாமில் சீனா கட்டுமானப்பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்களை குறைகூறிய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங், அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி ஏற்படுத்தப்பட்ட நிலைமை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறினார்.  #China #Doklam #tamilnews
    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் இருக்கும் இம்ரான் கான் சீனாவை முன்மாதிரியாக கொண்டு மக்கள் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். #PakistanElections2018 #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 4 மாகாண சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரையில், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி மூலம் இம்ரான் கான் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



    இந்நிலையில், தனது வெற்றி குறித்து பேசிய இம்ரான் கான், வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும், தனது 22 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றியை தந்த இறைவனுக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர தாம் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சீனா தனது 70 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதை சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானை முன்னேற்றுவதில் சீனாவை முன்மாதிரியாக கொண்டு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  #PakistanElections2018 #ImranKhan
    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சண்டை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரியை உயர்த்தினார்.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்தது.  இதன்மூலம், சீனாவுக்கு 50 முதல் 60 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வரி விதித்து அறிவித்தது.

    இந்த நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #Trumph
    இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், இரண்டு பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா நேற்று விண்ணில் செலுத்தியுள்ளது. #Pakistan #SpySatellitt #China
    புதுடெல்லி: 

    பாகிஸ்தானுக்காக இரு செயற்கைக் கோள்களை சீனா நேற்று விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

    சீனா மார்ச்- 2 சி ராக்கெட்டை நேற்று முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் சர்வதேச செயற்கைக் கோள்களை சீன ராக்கெட்டுகள் வர்த்தக ரீதியில் சுமந்து சென்று விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

    வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 11.56 மணிக்கு சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட், பாகிஸ்தானுக்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.



    இந்த இரு செயற்கைக் கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்' வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.

    பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Pakistan #SpySatellites #China
    30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா?
    பீஜிங்:

    சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த நிலை?

    சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான்.

    பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.

    இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.

    குறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.


    இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.

    1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக்கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.

    ஆனால், மனம்  தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.

    1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. இதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.

    மருத்துவ தேவைகளும் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு? ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலைபோவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.

    ஆண், பெண், குழந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.

    காலப்போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளையதலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று விட்டாலும் ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.


    இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பாம்புத்தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.

    பாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் பல உணவகங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது.

    இதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது - லாபகரமானதும்கூட. எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று  இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகின்றனர். #Chinesevillage #3millionsnakes
    சீனாவின் நிதியுதவியுடன் ராஜபக்சே ஆட்சி காலத்தில் ஹம்பந்தோட்டா துறைமுகம் அருகே உருவாக்கப்பட்ட விமான நிலையத்தை இயக்கி நிர்வகிக்க இந்தியா சம்மதித்துள்ளது. #MattalaAirport
    கொழும்பு:

    இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா என்ற கடற்பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் 70 சதவீதம் பகுதிகளை சீனாவுக்கு வழங்க இலங்கை அரசு கடந்த ஜூலை 29 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் 99 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளது.

    இதேபோல், ராஜபக்சே ஆட்சி காலத்தில் சீன அரசின் 210 பில்லியன் டாலர்கள் நிதியுதவியுடன் ஹம்பந்தோட்டா துறைமுகம் அருகே மிகப்பெரிய விமான நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றும் நோக்கத்திலும், 2028-ம் ஆண்டுவாக்கில் 50 லட்சம் பயணிகள் மற்றும் 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

    மட்டாலா என்னும் இடத்தில் உள்ள இந்த விமான நிலையத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த பலன்களை இந்த விமான நிலையம் பெறவில்லை. இதனால் இலங்கை அரசுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, லாபத்தில் பங்கு என்னும் நோக்கத்துடன் இந்த விமான நிலையத்தை இயக்கி, நிர்வகிக்க  இலங்கை அரசின் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில், மட்டாலா  விமான நிலையத்தை இயக்கி, நிர்வகிக்க இந்திய அரசு முன்வந்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளையும் சமரசப்படுத்த அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சி எம்.பி., இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா, ‘அரசுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதுடன் இறந்து கொண்டிருக்கும் மட்டாலா விமான நிலையத்தை நிர்வகித்து, பராமரிக்க இந்தியா மட்டுமே முன்வந்துள்ளது. அதனால், கூட்டு முயற்சியாக இந்த விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  #MattalaAirport
    இந்தியாவின் நெருக்கடி காரணமாக சீனாவுக்கு குத்தகைக்கு விட்ட துறைமுகத்தில் இலங்கை அரசு தன்நாட்டு கடற்படை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. #HambantotaPort
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுக்கு அதிபர் ராஜபக்சே அரசு ரூ.70 ஆயிரம் கோடிக்கு சீனா நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டது.

    அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் சீனா இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என அதிருப்தியை வெளியிட்டது.

    இலங்கை எதிர்க்கட்சியினரும் அரசின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அங்கு சீனா ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என போர்க்கொடி உயர்த்தினர்.

    அதை தொடர்ந்து ஹம்பந்தோடா துறைமுகத்தில் இலங்கை தனது கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அங்கு கடற்படையின் தெற்கு கமாண்டோ பிரிவை நிறுவுகிறது.

    அதற்கான அறிவிப்பை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நேற்று வெளியிட்டார். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சீனா எந்தவித ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்றார். தற்போது இலங்கை கடற்படையின் தென் கமாண்டோ பிரிவு காலே துறைமுகத்தில் உள்ளது. அது விரைவில் ஹம்பந்தோடாவுக்கு மாறுகிறது. #HambantotaPort
    சீனாவில் சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் மீது நடத்திய கத்திக்குத்து தாக்குததில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். #KnifeWielding #SchoolChildren
    ஷாங்காய்:

    சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.



    உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய ஒரு மாணவருக்கும், படுகாயம் அடைந்த மாணவர் ஒருவரின் தாயாருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் 29 வயதானவர். வேலை இல்லாதவர். சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டவர். அந்தக் கோபத்திலும், வெறுப்புணர்விலும்தான் அப்பாவி மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார் என தெரியவந்து உள்ளது.

    இந்த சம்பவம், ஷாங்காய் பகுதியில் உள்ள பெற்றோர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து சீனா உத்தரவிட்டு உள்ளது. #China #Soybean #ImportTariffs #India
    பீஜிங்:

    சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு சீனாவும் கடுமையாக வரி விதித்து இருப்பதால் அவ்விரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டு உள்ளது.

    இந்த நிலையில், அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் நல்லுறவு பராமரிக்க விரும்புவதாக தெரியவந்து உள்ளது.



    அந்த வகையில் இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் பிறப்பித்து உள்ளது. இது ஜூலை 1-ந் தேதி முதல் அமல் ஆகிறது.

    சோயாபீன்ஸ் மீது 3 சதவீதமும், சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வருகிறது.

    அமெரிக்காவில் இருந்துதான் சீனா அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்தது.இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #China #India #Tamilnews
    ×