search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருடன் சசிகலா 75 நாட்கள் தங்கியிருந்ததால், அவரிடம் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.



    சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி,  பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெற்று தரும்படி கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர் சிவக்குமாரிடம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக இன்று விசாரணை நடத்தியது. #jeyalalithadeathprobe
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
     
    ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

    அந்த வகையில் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜரானார். இவரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.



    அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. விசாரணை ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் உரிய பதிலளித்தார்.

    அதன்பின்னர் மருத்துவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தேன்.
    ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான சூழல் ஏற்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் யாரும் பரிந்துரையும் செய்யவில்லை.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்பட்டது, முறையான தகவல்களை கொடுத்துள்ளேன். சிகிச்சை குறித்த ஆவணங்களும் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #jeyalalithadeathprobe
    பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #Jayalalithaa
    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் கடந்த 2012-ம் ஆண்டு நீக்கப்பட்டார். இதுகுறித்து இந்தியா டுடே பத்திரிகை 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி செய்தி வெளியிட்டது.

    அதில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் செங்கோட்டையனை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி அந்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடர்ந்தார்.


    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரிகை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையில் வெளியான செய்தியினால் தன்னுடைய நற்பெயருக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. எனவே, பத்திரிகை மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன்.

    இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான பத்திரிகையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நெறிக்கப்பட்டால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோரது உழைப்பு வீணாகிவிடும்.

    சில நேரங்களில் பத்திரிகைகளில் தவறுகள் நேரலாம். அதேநேரம் ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கை மறுக்க முடியாது.

    ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டும்போது அதன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது. இதுபோன்ற விசயங்களுக்காக அவதூறு வழக்குகள் தொடரப்படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாகிவிடும்.

    பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், பொதுமக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமைகள் உள்ளது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். #MadrasHC #Jayalalithaa 
    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இதனால் அவரிடம் இருந்து அபராதம் வசூலிக்கத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    ஜெயலலிதா, சசிகலா உள்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் 155 சொத்துக்களை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர்களது 155 சொத்துக்களை கைப்பற்றுமாறு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவுப்படி இந்த சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடருமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியது.

    சொத்துக்களை அடையாளம் கண்ட பிறகு வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில் இது தமிழக அரசுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகைகள் வைப்பார்கள். இந்த சொத்துக்கள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத்தையும் அனுமதிக்க கூடாது என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் கோர்ட்டு சொத்து மதிப்பு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்து அதன் அடிப்படையில் தீர்ப்பளித்தது. தற்போது இதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.



    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் இந்த சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கையகப்படுத்தும் சொத்துக்களில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவை குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி அவரது பூர்வீக சொத்து என்பதால் அது அவரது வாரிசுகளுக்கு சொந்தமாகும் என்று கூறப்படுகிறது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    சபரிமலைக்கு பேரனின் சோறு ஊட்டு நிகழ்ச்சிக்காக மீண்டும் செல்வதாக போலீசாரிடம் தெரிவித்த இந்து அமைப்பு பெண் தலைவர் சசிகலாவை போலீசார் எச்சரித்து சபரிமலை செல்ல அனுமதித்தனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா.

    மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்த அன்று இவர் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்று அவர் மீண்டும் சபரிமலை புறப்பட்டார். பேரனின் சோறு ஊட்டு நிகழ்ச்சிக்காக சபரிமலை செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    மேலும் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் உத்தரவாதம் கொடுத்தார். இன்று இரவே அவர் சபரிமலையில் இருந்து ஊர் திரும்ப வேண்டும் என்று போலீசார் எச்சரித்து அவர் சபரிமலை செல்ல அனுமதித்தனர்.  #Sabarimala #SabarimalaTemple
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் தொடங்கி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், சசிகலா உறவினர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலா சார்பில் ஏற்கனவே வக்கீல் மூலம் வாக்கு மூலம் தாக்கம் செய்யப்பட்டது. மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்களிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

    அடுத்த கட்டமாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால் அவருக்கு முதலில் சிறை அதிகாரிகள் மூலம் சம்மன் அனுப்பப்படும்.

    முதலில் சகிகலாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் நீதிபதி ஜெயிலுக்கு போய் சசிகலாவை ஜெயில் அதிகாரிகள் அறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமா? அல்லது சசிகலாவுக்கு பரோல் அளித்து சென்னைக்கு வரவழைத்து கமி‌ஷன் முன் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


    இதில் நீதிபதி ஜெயிலுக்கு போய் விசாரணை நடத்துவதற்கும் சாத்தியம் இல்லை என்றும், பரோலில் வரவழைத்து விசாரணை நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

    அடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர், துணைத் தலைவர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விசாரணையை வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்ததும் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    ஸ்லோபாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக குற்றம்சாட்டி பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க, அ.தி.மு.க என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போகவேண்டும் என தினகரன் நினைக்கிறார்.

    ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார்.

    இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார். சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்.


    இப்போது அவர்கள் உத்தமர் போல பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசே நான்தான் என தினகரன் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக ஜெயலலிதாவை சிக்கவைத்து விட்டு கருணாநிதி உதவியை நாடியவர் தினகரன். அதனால்தான் ஜெயலலிதா தான் உயிரோடு இருந்தவரை அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே இல்லை. அவரால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.

    அப்போது டி.டி.வி. தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.  #Sasikala #TTVDhinakaran #18MLAs 
    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்தித்து பேசுகின்றனர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை பெங்களூரு செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    ஜெயலலிதா இல்லாததால் திரைத்துறையினருக்கு குளிர்விட்டு போய்விட்டதாகவும், ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ‘சர்கார்’படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் இல்லை என்று தினகரன் கூறி இருக்கிறாரே?

    பதில்:- திரைப்படம் எடுப்பவர்கள், நடிகர்- நடிகைகளுக்கு இப்போது ஒரு பே‌ஷனாகி விட்டது. அம்மா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா? என்று யோசியுங்கள்.

    இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதல்-அமைச்சர் கேரக்டர் எடுத்து நல்லது செய்ய வேண்டும் என்பது போல பல ஆசைகள் இருக்கும். அது தவறு இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் தீர்மானம் செய்வதுதான்.

    அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம்.

    ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஒரு திரைப்படம் மக்களுக்கு நல்ல வி‌ஷயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் எந்த காலத்திலும் விமர்சனம் எழுந்ததில்லை.

    இந்த உலகம் உள்ள வரை எல்லோராலும் போற்றப்படக் கூடிய ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். போல வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலத்திலும் முடியாது.


    ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவாரோ என்பது போல இவர்கள் அழுது புரண்டாலும், தலை கீழாக நின்றாலும் இவர்களுக்கு எம்.ஜி.ஆர். போன்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள். உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதற்காக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த திரைப்பட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை இருக்கும்.

    கேள்வி:- கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா இல்லையா?

    பதில்:- எங்களை பொறுத்தவரை கதைகளை பலர் எழுதி இருக்கிறார்கள். அதை குறை சொல்லவில்லை. ஆனால் எதற்காக தேவையில்லாமல் அந்த பெயரை வைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கேள்வி. எவ்வளவோ பெயர் இருக்கிறதே. அப்படி இருக்கும் போது ஏன் அந்த பெயரை வைக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகவே அதை கருத முடிகிறது. எனவே மனதை புண்படுத்தும் செயலை எந்த நிலையிலும் ஏற்க முடியாது.

    கேள்வி:- பண மதிப்பிழப்பு நடந்து இன்றுடன் 2 வருடம் முடிந்துள்ளது. என்ன மாற்றம் வந்துள்ளது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- சிறந்த தீர்ப்பு வழங்குபவர்கள் மக்கள்தான். சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விடை 2019-ம் ஆண்டு தெரியும்.

    ப:- அது அவர்களின் கனவாக இருக்கலாம். ஆனால் அது கானல்நீர்தான். அது நடக்காத ஒன்று.

    கே:- தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நாளை சசிகலாவை சந்திக்கப்போவதாக தகவல் வந்துள்ளதே?

    ப:- அவர்கள் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முடிந்தால் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்திக்கட்டும்.

    கே:- சந்திரபாபுநாயுடு எதிர்க்கட்சிகளை திரட்டி பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகிறாரே? அதை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

    ப:- 2016-ம் ஆண்டு கூட வலுவான கூட்டணிதான் வைத்தார்கள். ஆனால் என்ன ஆச்சு? ரிசல்ட் ஜீரோ. அதேபோல் 2019-லும், 2021-லும் ஜீரோ தான் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
    தேர்தலில் கூட்டணி கணக்குகள் எல்லாம் வடநாடுகளை போல தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் தமிழ்நாட்டு மக்கள் வேறு மாதிரி முடிவு எடுப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran #DMK #Congress #Sasikala #ADMK
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அக்டோபர் மாதம் 25-ந்தேதி தீர்ப்பு கூறியபோதே நான் அடுத்து தேர்தலை சந்திப்போம் என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தேன்.

    அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடைய கருத்துக்களையும் அறிய வேண்டும் என்று விரும்பினேன். அக்டோபர் 26-ந்தேதி அவர்கள் 18 பேரையும் மதுரையில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர்கள் தேர்தலை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார்கள்.

    ஆனால் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லலாம். சபாநாயகர் முடிவு தவறு என்று நிரூபிக்கலாம் என்று கூறினார்கள்.

    நான் அவர்களிடம் பத்திரிகையாளர்களிடம் நேரடியாக இதுபற்றி சொல்லுங்கள். அதன்பிறகு உங்களுடைய தொகுதிக்கு நேரடியாக சென்று மக்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை பாருங்கள் என்று கூறினேன்.

    அதன்பிறகு நாங்கள் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தோம். ஏற்கனவே இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நாங்கள் அப்பீல் செய்ததால் இந்த அரசு மேலும் 12 மாதம் நீடித்தது.

    மீண்டும் நாங்கள் அப்பீல் செய்தால் அவர்களுக்கு கூடுதல் காலம் ஆட்சியில் இருக்க அவகாசம் அளித்தது போல் ஆகிவிடும்.

    எங்களை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலோடு 18 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலோ, சட்டசபை தேர்தலோ, இடைத்தேர்தலோ இனி எந்த தேர்தல் வந்தாலும் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள்.

    எங்களுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்க்கட்சி. அவர்கள் அரசியல் ரீதியாக எங்களுடைய எதிரி. அவர்கள் தான் எங்களுடைய போட்டியாளர்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக எல்லோரும் சொல்லலாம். ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கணக்குகள் எல்லாம் வடநாடுகளை போல இங்கு எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் வேறு மாதிரி முடிவு எடுப்பார்கள்.

    காங்கிரசுடன் கூட்டணி வைப்போம் என்று நான் ஒருபோதும் சொன்னது இல்லை. பத்திரிகையாளர்கள் என்னிடம் உங்களுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் அணுகினார்களா? என்று கேட்டார்கள். அப்படி யாரும் அணுகவில்லை என்று கூறினேன்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்க நாங்கள் எப்படி காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டேன். காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.


    ராகுல்காந்தியை சந்திக்க நான் முயற்சிப்பதாக கூறுவது தவறு. நான் ஒருபோதும் அப்படி முயற்சிக்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபடவில்லை. நான் அவர்களுக்கு நெருக்கமானவன் அல்ல.

    ஆனால் சில பிராந்திய கட்சிகள் எங்களோடு கூட்டணி வைக்க விரும்புகின்றன. அவர்களோடு நான் பேசி வருகிறேன். தேசிய கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் அவர்கள் பிராந்திய வி‌ஷயங்களில் அக்கறையாக இருப்பது இல்லை.

    2014 தேர்தலில் அ.தி.மு.க. ஜெயலலிதாவால் தான் வெற்றிபெற்றது. ஆனால் இன்று மக்கள் இதில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரு புதிய தலைவரும் மதசார்பற்ற கட்சியும் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் எங்களை ஆதரிக்கிறார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் வாக்குகளை பிரிப்பார்களா? என்பது பற்றி என்னால் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள். மக்களின் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றுவார்களோ, அவர்கள் பின்னால் தான் செல்வார்கள்.

    அ.தி.மு.க. பிரிவதால் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்வதும் தவறானது. இது ஒரு விளையாட்டு அல்ல. மக்கள் மனதில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அது நடக்கும்.

    கட்சி பிரிவினையால் இன்னொரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை சரியானது அல்ல என்பது எனது வலுவான கருத்து. இதை ஆர்.கே. நகர் தேர்தலிலேயே பார்த்தோம். அங்கு தி.மு.க. டெபாசிட் இழந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம்.

    அதுமட்டுமல்ல அ.தி.மு.க. ஓட்டு சதவீதம் சரிந்தது. அவர்கள் இனி 5 சதவீத ஓட்டுகளை கூட பெற முடியாது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    ஆர்.கே. நகர் தொகுதியில் பணத்தால் தான் நான் வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் தோல்விக்கு பிறகு தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அவர்கள் வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் போலீஸ் சோதனை இருந்தது. நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. தி.மு.க.வினரும் பணம் கொடுக்கவில்லை.

    தி.மு.க. பணம் கொடுத்திருந்தால் டெபாசிட்டையாவது தக்க வைத்து இருப்பார்கள். தேர்தலில் கடைசி நேரம் வரை அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தார்கள். எங்களை பொறுத்தவரை வருகிற தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நாஙகள் இல்லை.

    வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ அல்லது பாரதிய ஜனதாவுடனோ நாங்கள் ஒதுபோதும் கூட்டணி வைக்கமாட்டோம். அது தற்கொலைக்கு சமமானது.

    அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் தனியாக நின்றாலும் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் வெற்றி இலக்கின் ஓட்டு சதவீதம் சற்று குறையலாம். இதற்காக நான் எந்த மறைமுக வேலைகளையும் செய்யும் அரசியல்வாதி அல்ல.

    ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி வைக்க விரும்புவதாகவும், அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுவது பற்றி எனக்கு தெரியாது. என்னை யாரும் இதுவரை அணுகவில்லை.

    அப்படியே அவர்கள் அணுகினாலும் நாங்கள் எப்படி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியும். நாங்கள் காங்கிரசுடன் வேண்டுமானால் கூட செல்லலாம், ஆனால் ஒதுபோதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

    அ.தி.மு.க.வுடன் இணைவதற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை. இதுபற்றி நான் சொல்வதானால் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை நாங்கள் செய்வோம்.

    எங்கள் கட்சிக்கு எந்த கொள்கையும் இல்லை என்று ஆளும் கட்சி சொல்வது பற்றி நான் என்ன சொல்கிறேன் என்றால், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது ஒரே எண்ணம். இதைவிட வேறு பெரிய கொள்கை எதுவும் இல்லை.

    தற்போதைய மாநில அரசு மக்கள் விரோத அரசு. அவர்களுக்கு ஆட்சியில் இருக்க கூடிய தகுதி இல்லை. அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய பெரிய கொள்கை.

    நாங்கள் மக்களின் இதயத்தில் அமருவோம். அவர்களுக்காக சேவை செய்வோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றுவோம். இதை தவிர வேறு எந்த பெரிய திட்டங்களும் இல்லை.

    வெற்றியோ, தோல்வியோ எங்களை பாதித்துவிடாது. தண்ணீரும், தாமரை இலையும் போல நான் இருப்பேன்.

    பொதுச்செயலாளர் சசிகலாவை பொறுத்தவரை அரசியலில் எனக்குள்ள 30 ஆண்டு அனுபவம் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். நான் செயல்படுவதற்கு அவர் முழு அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

    ஒவ்வொரு தடவை நான் அவரை சந்திக்கும்போது, அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கிறோம். அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசிக்கிறோம். நான் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அவரிடம் கூறினேன். ஆனால் சசிகலா கூறும்போது, இந்த ஆட்கள் தேர்தலை சந்திக்க விரும்பமாட்டார்கள். தள்ளி போடத்தான் பார்ப்பார்கள் என்று கூறினார். அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பொதுச்செயலாளர் பணிகளை செய்வார்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #DMK #Congress #Sasikala #ADMK
    அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று மதுரையில் இன்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் தெரிவித்தார். #Dhivakaran #Sasikala
    மதுரை:

    அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று மதுரையில் இன்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் தெரிவித்தார்.

    அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை வரவேற்கிறேன்.



    அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு சசிகலாதான் காரணம். திறமை வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது.

    தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது தவறானது. தினகரன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்.

    இடைத்தேர்தலை நேரடியாக சந்திக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தக்கூடாது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணிப்பவர்களுக்கு எங்கள் கட்சி நல்லதொரு கூடாரமாக திகழும்.

    நான் அ.தி.மு.க.வில் சேர மாட்டேன். அதில்நான் பங்கு கோரவில்லை. அவர்களே பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். நாம் ஏன் தொந்தரவு தர வேண்டும் என்று தனி இயக்கம் கண்டிருக்கிறோம். எங்களிடம் நல்லவர்கள் 2 பேர் இருந்தால்கூட போதும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #Sasikala

    ×