search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி வகுப்பில் சேர்ந்துள்ளனர். #SasikalalearnKannada #SasikalaenrolBU
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    அவர் பரோலில் செல்வதற்கு முன்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்து, இருவரும்  தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.

    இவர்களை தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள 257 கைதிகளும் பல்வேறு வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    தொலைதூர கல்வி வழியாக பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு பாடங்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #SasikalalearnKannada #SasikalaenrolBU  
    சசிகலா கன்னடம் கற்பதில் ஆர்வமாக இருப்பதால், அவரை கன்னட சான்றிதழ் படிப்பில் சேர்ப்பதற்கு சிறை நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலா கன்னடம் கற்று வருகிறார்.

    மற்ற கைதிகள் கன்னடத்தில் பேசினால், அதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது அவர் கன்னடத்தில் எழுதவும் பயிற்சி பெற்று உள்ளார்.

    பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் கைதிகளுக்கு சான்றிதழ் படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரு சிறையில் உள்ள 257 கைதிகள் 2018-19ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

    சசிகலாவையும் கன்னட சான்றிதழ் படிப்பில் சேர வைக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழக தொலை தூர கல்வி மைய டைரக்டர் மயிலரப்பா கூறியதாவது:-

    சசிகலா கன்னடம் கற்க ஆர்வமாக இருப்பதாக ஜெயில் நிர்வாகத்தினர் என்னிடம் தகவல் தெரிவித்தனர். நான் இந்த வாரம் ஜெயிலுக்கு சென்று கைதிகளை பார்க்க இருக்கிறேன். அப்போது கன்னட சான்றிதழ் படிப்பு தொடர்பான விவரங்களை சசிகலாவிடம் தெரிவிப்பேன். சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை வைப்பேன்.

    சசிகலா கன்னடத்தில் பேசவும், எழுதவும் பயிற்சி பெற்றிருப்பதாக ஜெயில் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்துவிட்டது என்று மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்தார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல் ஏக்கள் நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பையொட்டியே வந்திருக்கிறது. சபாநாயகருடைய செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாயகருடைய தீர்ப்பு பாரபட்சம் கொண்டதாகும்.

    ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள். ஆனால் முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என் கருத்தாகும்.


    மேலும் இதை பேசி தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்காது. இந்த தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க.வுக்கு தான். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.

    மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அது எதிர்கட்சிகளுக்கே சாதகமாய் அமையும்

    சொந்த காரணங்களுக்காக, ஆசைகளுக்காக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தான்தான் எல்லாம் என்ற மாயையை தோற்றுவித்து 18 எம்.எல்.ஏக்களையும் ஏமாற்றி பலிகடாவாக்கியவர் தினகரன் தான்.

    தற்போது தினகரன் மேல்முறையீடு செய்வதால் பலன் ஒன்றுமில்லை. ஏற்கனவே 18 தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெறவில்லை. மேலும் தாமதப்படுத்துவது நல்லதல்ல. உடனே தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார் என்று நத்தம் விசுவநாதன் பேசினார். #nathamviswanathan #sasikala #jayalalitha

    சின்னாளபட்டி:

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 47 -வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் கொடியேற்றி விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆத்தூர்ஒன்றிய செயலாளர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி, மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோபி, முன்னாள மாவட்ட கவுன் சிலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணாவால் சுட்டிகாட்டப்பட்ட எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவால் வீருநடைபோட்டு தற்போது ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.

    100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை யாராலும் அழிக்க முடியாது. சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார். தி.மு.க.வில் செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு தலைவராக இருக்கும் தகுதி இல்லை. ஸ்டாலினுக்கு கொடுத்த தலைவர் பதவியை துரைமுருகனுக்கோ அல்லது ஐ.பெரியசாமிக்கோ கொடுத்திருக்கலாம்.

    இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் அன்பழகன், வக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பேட்ரிக் பிரேம்குமார், எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் பாலு, அய்யம்பாளையம் பேரூர் இளைஞரணி செயலாளர் மவுலானா, ஒன்றிய மாணவரணி பொருளாளர் சுகன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமுதாய், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #nathamviswanathan #sasikala #jayalalitha

    ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம் என்று டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #TTVDhinkaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. 1972 அக்டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்கம். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் பாசறையில் தோன்றிய, அண்ணாவின் கொள்கை காக்க, புரட்சித்தலைவரின் ஆற்றல் மிக்க தலைமையில் அவதரித்த மக்கள் இயக்கம், அடுத்தடுத்த வெற்றிகள் படிக்கட்டுகளாய் அமைந்த போதிலும், அ.தி.மு.க. ஒரு நாள் நாடாளுமென்று, அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏற்றுக்கொள்ளவே இல்லை.

    மாயை என்றார்கள், நடிகர் என்றார்கள், அடக்கு முறை ஆயிரம் ஏவினார்கள், புழுதிவாரி தூற்றினார்கள், ஆனாலும் மறந்தே போனார்கள், அன்று அமைந்த தி.மு.க. ஆட்சி புரட்சித்தலைவரின் உழைப்பால் மலர்ந்தது என்று, எனினும், மக்கள் சக்தி மகத்தானது என்பதனை ஒவ்வொரு தேர்தல் களத்திலும் புரட்சித்தலைவரின் தலைமை நிரூபித்துக் காட்டியது.


    புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பின்னால் அ.தி.மு.க.வும் மறைந்துபோகும் என்று ஆருடம் கணித்தவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இயக்கத்தை ஒன்றாக்கி, இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் நம் அம்மா.

    இந்திய நாட்டிற்கே ஆட்சி முறையில் வழி காட்டிய மாநிலமாக தமிழகத்தை திகழச்செய்து, எல்லாத்தரப்பினருக்கும் ஆட்சியின் பலன் சென்று சேரவைத்து தாய்மார்கள், பெரியோர்கள், விவசாயிகள், பாட்டாளிகள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்குமான அரசாக திகழ்ந்தது அம்மாவின் அரசு.

    துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அ.தி.மு.க சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டுதான் அம்மாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக இருக்கும் ஒரு சிலரே.

    இந்த நொடி வரை உண்மையான அ.தி.மு.க.வாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே திகழ்ந்து வருகிறது. இனி வரக்கூடிய காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும்.

    ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்போம். அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயக போராளிகளாக களத்தில் நின்றிடுவோம். துரோகத்தை வீழ்த்திடுவோம், இதில் வென்றிடுவோம்.

    இவ்வாறு தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinkaran #Sasikala #EdappadiPalaniswmai
    அ.தி.மு.க.வுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு விரைவில் பெண்மணி தலைமை தாங்கிடும் நிலை வரும் என்று செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். ஏற்கனவே பொதுச்செயலாளராக பெண்மணிதான் தலைமையில் இருக்கிறார். செல்லூர் ராஜூ சூசகமாக சொல்வது, மற்றவர்களை விட அவருக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

    மற்றவர்கள் எல்லாம் பொதுச்செயலாளரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு தைரியம் உள்ளவர்கள் போன்று காண்பிக்கின்றார்கள்.

    அவரோ இன்று வரை சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கின்றார். மனதில் உள்ளதை சொல்லியுள்ளார். பெண்மணி தலைமையில் வரவேண்டும் என்று கூறி உள்ளார்.


    ஏற்கனவே அம்மாவின் காலத்தில் அ.தி.மு.க. ஒரு பெண்மணி தலைமையில்தான் இருந்தது. இப்போதும் கட்சியில் பொதுச்செயலாளராக இருப்பதும் பெண்மணி தலைமைதான். சசிகலா பொதுச்செயலாளராக உள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம். அது தொடர்பாக ஒரு நெறியாளர் என்னிடம் கேட்டபோது அப்போது நான் சொன்னேன் அரசாங்கத்தின் மீது ஊழல் என்றால் தனிப்பட்டது. அமைச்சர்கள் 10, 12 பேர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளது.

    எனவே அவர்களை நீக்கி விட்டால் இவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்று சொன்னேன். ஒருவேளை 33 பேரும் ஊழல்வாதிகள் என்றால் அதில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் தேர்தல்தான் வரும் என்று சொன்னேன்.

    முதல்-அமைச்சர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

    இதில் கட்சிக்கு என்ன வேண்டி கிடக்கிறது. டி.வி.ஏ.சி. (கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம்) தொடரும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

    டி.வி.ஏ.சி.யை தலைமை ஏற்றிருப்பவர் யார் என்றால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முருகன்தான். அவர் சொல்வதற்கு தயாராக இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. பொன்னையன் எப்படி சொல்ல முடியும். உடனே மறுநாள் மாற்றி பேசுகிறார்.


    ஜெயக்குமார் தினந்தோறும் பேட்டி தருவாரே? அவரை ஏன் காணவில்லை? என்ன காரணம்? அதைப் பற்றி ஏன் ஊடகத்தார் சொல்ல மாட்டீர்களே? பழனிசாமி விவகாரத்தில் வாயை திறக்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்.

    டி.வி.ஏ.சி. சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால்தான் பொன்னையன் தவறுதலாக பேசி விட்டு இப்போது வாபஸ் பெறுகிறார்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளாகியுள்ள பழனிசாமி தார்மீகப் பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

    ஆனால் தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் பெருந்தன்மை, தைரியம் கிடையாது. அவர் அது போன்று நடந்து கொள்ள மாட்டார். ராஜினாமா செய்ய மாட்டார்.

    தானாக சி.பி.ஐ. விசாரணை செய்து அதில் வழக்குப்பதிவு செய்து வழக்கு நடைபெற்று கைது செய்யும் அளவுக்கு சென்றால்தான் அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறங்குவார். அவரிடம் அதுபோன்ற பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

    எதிர்க்கட்சியை விட எங்களுக்கு பழனிசாமியை பற்றி நன்றாக தெரியும். நிச்சயம் பழனிசாமி முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK #ElectionCommission #Sasikala
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

    கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) தலைமை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டார். டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. #ADMK #ElectionCommission #Sasikala
    சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    1.3.2018 முதல் 31.5.2018 ஆகிய காலக்கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டன.

    அதில் 43 லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் 60 லட்சம் உறுப்பினர் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, “கடந்த 5 ஆண்டில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    தற்போது குறுகிய காலத்தில் 1 கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்னும் 6 மாதத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றார்.

    அப்போது நிருபர்கள், கட்சியில் சசிகலா சேர்க்கப்பட்டு உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “கட்சியில் சசிகலா புதிதாக சேர்க்கப்படவில்லை. அவர் அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது.

    தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டு உள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    எடப்பாடி பழனிசாமி கூறும்போது, தினகரனுடன் சொற்பமானவர்களே சென்று உள்ளனர். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். #OPanneerselvam #ADMK

    இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார். #Jayadeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

    அப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.

    ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

    அதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 மணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.

    உடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.


    இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    விசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். #Jayadeathprobe
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். #SenthilBalaji #ADMK
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-

    முட்டிப்போட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். நன்றி விசுவாசத்திற்கும், விருந்து உபசரணைக்கும் பெயர் போன பகுதி மேற்கு மண்டலம். ஆனால் சசிகலா, தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் இருந்து நீக்கி துரோகம் செய்து அந்த மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

    சசிகலா, டி.டி.வி. துணையில்லாமல் நாங்கள் அமைச்சர் பதவிக்கு வந்தோம் என்று தங்கமணியும், வேலுமணியும் கோவிலில் சாமி முன்பு சத்தியம் செய்யட்டும். நான் சூடனை அணைத்து சத்தியம் செய்கிறேன். 100 தடவை சசிகலாவின் காலில் விழுந்தவர் தங்கமணி. 1½ கோடி உறுப்பினர்கள் உள்ள அ.தி.மு.க.வில் இப்போது 40 முதல் 50 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.


    தமிழக மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை திணிக்கும் மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு துணை நிற்கிறது. வருகிற 8-ந்தேதி வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசுகிறார். அதன்பிறகு ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்து விடும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார்.

    இவ்வாறு அவர் பேசினார். #SenthilBalaji #ADMK
    சசிகலாவை பார்க்க தம்பிதுரை , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார் என்று செந்தில்பாலாஜி கூறினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி க.பரமத்தியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நான் வாக்கு சேகரிக்க சென்ற போது தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது கரூர் மாவட்டத்திற்கு 5ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கு மேல் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதல்வராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது சசிகலா, டி.டி.வி.தினகரன் வழி காட்டுதல்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடிவு செய்தோம். அவரை முதல்வராக தேர்வு செய்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை மாற்றி விட்டு டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்குவோம். அதன்பின்னர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.


    அ.தி.மு.க. ஆட்சியின் போது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாநில அரசு மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சித்த போது, தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதி பெற்று தருவதாக கூறினார். இதனால் நான் மாநில அரசு மூலம் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டேன். ஆனால் இப்போது வரை அந்த நிதியை அவர் பெற்றுத்தரவில்லை.

    எவ்வளவோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் 2 முறை நீதிமன்றம் சென்று இந்த உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது. இது அறவழி போராட்டம். இந்த உண்ணாவிரதம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் உண்ணாவிரத த்தில் அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலில் முதன் முதலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்ட போது தேர்தலை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சதி செய்தனர். ஏனென்றால் தினகரன் வெற்றி பெற்று முதல்வராகி விடுவாரோ? என்று எண்ணி அவர்கள் இந்த சதி செயலை செய்துள்ளனர்.

    இதற்காக ஆர்.கே. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக அவர்களாகவே ஒரு துண்டு சீட்டை தயார் செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சூழ்ச்சிகளை முறியடித்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனையோ பைல்கள் இருக்கும். ஆனால் பணப் பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டு மட்டும் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. எனவே இதில் சதி நடந்துள்ளது.

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்று அதனை நிறைவேற்றினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரவக்குறிச்சி தொகுதியை புறக்கணித்து வருகிறது.


    சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க பாராளுமன்ற துணை சபாநாயகர் , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினகரனிடம் பேசிய தம்பிதுரை, இரவில் வந்து சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காலையில் என்னை சந்திக்க வாருங்கள். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தினகரன் அ.தி.மு.க. வையும், சின்னத்தையும் கைப்பற்றி விடுவார் என்பதால், இப்போதே தம்பிதுரை துண்டு போட்டு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். இனி அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் பெற முடியாது.

    தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்களை உயிர்பலி வாங்கிய துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறேன். இதற்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் தொடரட்டும். அதனை சந்திக்க தயாராக உள்ளேன். 

    இவ்வாறு அவர் பேசினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமாக உருவாகும் `தி அயர்ன் லேடி' படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க இரு நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #TheIronLady #Jayalalithaa
    இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு ‘‘தி அயர்ன் லேடி’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது.

    ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் தேர்வாகி உள்ளார்.

    நித்யாமேனன் ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார்.

    இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரலட்சுமி சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 படங்களில் வில்லியாகவும் நடித்து இருக்கிறார்.



    சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் காக்கா முட்டை, ரம்மி படங்களில் நடித்தவர். இன்னும் ஒருசில நாட்களில் சசிகலா வேடத்தில் நடிக்க இருப்பது யார்? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். #TheIronLady #Jayalalithaa

    ×