search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #Sasikala #TTVDinakaran
    சென்னை:

    கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டனர். அதன்பின்பு, அவர்கள் ஒன்று சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள்) சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இதில், அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளர் என்ற பதவியும் நீக்கப்பட்டது.



    இதை எதிர்த்தும், தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தாக்கல் செய்தபோது செயல்பட்டு வந்த புரட்சித்தலைவி அம்மா அணி, அம்மா அணி என்ற அணிகள் தற்போது இல்லை என்பதால் தங்களது மனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Sasikala #TTVDinakaran
    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். #TTVDinakaran #VKSasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நேற்று பெங்களூரு வந்தார். காலை சுமார் 11.30 மணிக்கு சிறையின் உள்ளே சென்ற டி.டி.வி. தினகரன், சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வெளியே வந்தார். 
    சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.#Deepa #Sasikala #AssetsCase
    சென்னை:

    மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் டி.டி.வி. தினகரன் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியுள்ளார். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்-தி.மு.க. என கூட்டணியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    2004-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டது. அதனால் 98 சதவீதம் இல்லை. 100 சதவீதம் கூலிப்படையினர் மட்டுமே இவர் பின்னால் வருவார்கள்.


    2011-ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலா குடும்பத்தின் கூட்டு கொள்ளை சதியை முறியடித்து, பத்திரிகையாளர் சோ.ராமசாமி மற்றும் அப்போதைய டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் பெங்களூர் உளவு பிரிவு போலீஸ் எச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறை உதவியோடு சசிகலா மற்றும் அவரின் கூட்டாளிகள் 100-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியோடு போயஸ் தோட்டத்தை விட்டு போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சசிகலா குடும்பம் திக்குமுக்காடி, தி.மு.க.வின் உதவியை நாடியது. அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான். ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பூங்குன்றன் என்னை தொடர்பு கொண்டார்.

    நான் அவரை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அத்தை என்னிடம் பேச கூடாது என்று சசிகலா சொன்னதால் காவலர்கள் என்னை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க தாமதித்தனர். அப்போது மாலை 6 மணி வரை காத்திருந்து திரும்பி சென்றேன். ஆறுமுகசாமி கமி‌ஷனை வைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அரை வேக்காடு குக்கரை வைத்து கையாலாகாத தினகரனை வைத்து அ.தி.மு.க.வை ஆளவும் முடியாது.

    இவ்வாறு தீபா கூறியுள்ளார். #Deepa #TTVDhinakaran
    சசிகலா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeath #Jayalalitha
    சென்னை:

    2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர் சோ மகன் ஸ்ரீராம், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் (முன்பு ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர்) ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

    ‘பத்திரிகையாளர் சோ ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைந்த சோ மூலம் ஸ்ரீராமிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது’ என்ற அடிப்படையில் ஆணையம் ஸ்ரீராமிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது அவர், ‘சசிகலா வெளியேற்றப்பட்ட போது போயஸ் கார்டனில் என்னை அனுமதித்ததாக கூறுவது தவறானது. நான், ஜெயலலிதாவை பார்த்தது இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை எனது தந்தை சோவுடன் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். அதை எனது தந்தை, எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தது கிடையாது. மறுநாள் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு தான் எங்களுக்கு தெரியவரும்’ என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் மருது அழகுராஜ் செய்தி ஆசிரியராக பணியாற்றியதால் அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருப்பார் என்ற அடிப்படையில் அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் ஆணையத்தில் கூறியதாக கூறப்படுவதாவது:-

    என்னை ஜெயலலிதாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது சசிகலாவின் உறவினர் ராவணன்தான். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வேலை பார்த்த நான், ஜெயலலிதாவுக்கு உரை எழுதி தரும் பணியையும் மேற்கொண்டேன்.

    2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கிறார்கள் என்று கூறி அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம், ‘சசிகலா உள்ளிட்டோரை நீக்கி உள்ளேன். இவர்கள் எல்லாம் ராஜ துரோகம் புரிந்தவர்கள். ராவணன் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால் நீங்களும் வெளியே சென்று விடலாம்’ என்று கூறினார். அப்போது நான், ‘உங்களுடன் இருக்கவே பிரியப்படுகிறேன்’ என்றேன்.

    சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் எனக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் 3 மாதங்கள் கழித்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும்வரை சேர்த்துக்கொள்ளவில்லை.

    ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தும் போயஸ் கார்டனில் ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    போயஸ்கார்டனில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்காதது யாருடைய குற்றம்?. ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களின் குற்றம்தானே. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

    ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் மருத்துவமனையில் கூடியிருந்த சிலர் பொய் சொன்னார்கள். இதை ஏன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவில்லை. அப்படியென்றால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உடந்தை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.



    இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மருது அழகுராஜூவிடம் ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர். #JayalalithaaDeath #Jayalalitha 
    பெங்களூரு சிறையில் சசிகலா சாதாரண கைதிபோல நடத்தப்படுகிறார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தபின் மகளிர் ஆணைய தலைவி கூறினார்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறினார்.

    இந்த திடுக்கிடும் தகவல் கர்நாடகம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி கர்நாடக அரசுக்கு அறிக்கை தெரிவித்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறி இருந்தனர்.

    ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி பாய் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு அடைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகளின் நிலை குறித்து விசாரித்தார். அதன் பிறகு சிறையை விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலாவின் அறையை சென்று பார்வையிட்டேன். அவர் சாதாரண கைதி போன்றுதான் நடத்தப்படுகிறார். உயர்தர வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

    சில கைதிகள் சிகிச்சை பெறுவதற்கு பிரத்யேக மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். என்னுடைய ஆய்வு பற்றி மாநில அரசிற்கு கடிதம் எழுத இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் பதவி காலம் ஜூன் 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath

    சசிகலா எனது சகோதரி அல்ல என்றும் அவரை இனி முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன் எனவும் மன்னார்குடியில் திவாகரன் கூறினார் #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    மன்னார்குடி:

    சசிகலா குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

    தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்" என்று தினகரன் கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    மேலும் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார்.

    திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார்.

    அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சசிகலா வக்கீல் மூலம் கொடுத்த நோட்டீசால் திவாகரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். புதிய கட்சியான அம்மா அணியை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

    இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சசிகலா குடும்பத்தில் இருந்து நான் விடுப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது இந்த நிலை வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

    சசிகலாவின் தம்பி என்ற ஒரே காரணத்தால் தான் எனது வீட்டில் 2,3 முறை வருமான வரி சோதனை நடந்தது. சிறைக்கும் சென்று உள்ளேன். நான் ஆன்மீகவாதி, ஆராய்ச்சியாளர். ஆன்மீகவாதியான நான் பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளேன். நான் நடத்தி வரும் கல்லூரியில் 4000 மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது நல்ல பண்புகளை பெற்று செல்கிறார்கள்.

    எங்கள் குடும்பத்தை மன்னார்குடி மாபியா கும்பல் என்று சொல்கிறார்கள். என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. இனிமேல் அந்த பெயர் இருக்காது. சசிகலா எனது சகோதரி அல்ல. அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன். திவாகரன் என்ற பெயரை மட்டுமே விரும்புபவன்.

    என்னை பற்றி சசிகலாவிடம் டி.டி.வி.தினகரன் அவதூறு கூறி வருகிறார். சசிகலாவை தூண்டி விட்டு என் மூலம் பழி வாங்க நினைக்கிறார். சசிகலாவை பழிவாங்க தினகரன் துடிக்கிறார். நான் தொடங்கிய அம்மா அணி கட்சி பணி தொடரும். தவறுகளை நான் என்றும் தட்டி கேட்பேன். எங்களது கட்சியில் தீபா வந்தால் சேர்ப்பேன். அதைபோல் வேறு யாரும் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்.

    நான் சில உண்மைகளை கூறியதால் தினகரனுக்கு கோபம் வந்தது. வெற்றிவேல் மூலம் தூண்டி விட்டார். வெற்றிவேல் காங்கிரசில் இருந்து வந்தவர்.

    தினகரன் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் மன நிலை பாதிக்கப்பட்டு பேசுவதாக கூறுகிறார். காவிரி பிரச்சனையில் நான் எவ்வளவு தெளிவாக பேட்டியில் கூறினேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கெட்ட எண்ணம் காரணமாக தினகரன் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் பாதி சரியில்லாமல் உள்ளது. இதை அவர் திருத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டது. எம்.ஜி.ஆரை போல யாராலும் ஆட்சியை வழங்க முடியாது. ஆகவே எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன்.

    இதற்காக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். ஆதரவாளர்கள் கருத்துப்படி விரைவில் கட்சி தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    ×