search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரவ்"

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • படத்தின் செகண்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கிறார்கள். நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர். விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என பதிவிட்ட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்துபடத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.இதில் ஒரு போஸ்டரில் கார் சேசிங் காட்சி அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் பெரிய ஷாட்கன்னுடன் நெஞ்சில் கைவைத்தப்படி நிற்கிறார்.

    போஸ்டரில் எஃபர்ட் நெவர் ஃபையில் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
    • இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக திரிஷா மற்றும் அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடந்து வருகிறது.

    முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி விடாமுயற்சி படப்பிடிப்பு பற்றி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம் அஜர் பைஜானில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து கார் சேசிங் காட்சிகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த காட்சியில் அஜித் ஓட்டி வந்த கார் அந்தரத்தில் பறப்பது போல் மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    அடுத்த கட்டமாக நேற்று மாலை விடாமுயற்சி படத்தில் அஜித் முதல் தோற்றம் வெளியானது. இதில் அஜர்பைஜான் சாலையில் தனியாக பையுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி நடந்து வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்துள்ளது.

    அஜர் பைஜானில் சில நாட்களும், பின்னர் இறுதியாக இந்தியாவில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். தற்போது அஜர்பைஜானில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தில் திரிஷாவும், அஜித்தும் கணவன்-மனைவியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இரண்டாம் கட்டப்பிடிப்பில் ஜூலை 5-க்கும் மேல் படக்குழுவினருடன் இணையுள்ளார் திரிஷா. படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கடந்த மாதம் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இத்திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
    • இப்படத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    தி கேரளா ஸ்டோரி

    இவ்வாறு இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது. இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்த கேள்விக்கு குறிப்பிட மதத்தையோ, நபரையோ குறித்து கருத்து சொல்லக் கூடாது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நமக்கு கருத்து சுதந்திரம் என்பது இருக்கிறது. அதன் மூலம் நாம் எதை வெளிப்படுத்துகிறோம் என்பதும் இருக்கிறது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் சொல்ல முடியாது. ஒரு சமூகத்தையோ ஒரு மதத்தையோ, தனி நபரையோ தாக்கும் விதமான கருத்துகளை சொல்ல தேவையில்லை.

    அதுபோன்று அனைத்தையும் சர்ச்சையாக்கினோம் என்றால் நாம் எந்த விதமான கருத்துகளையும் சொல்ல முடியாது. சினிமாவில் இருப்பவர்களுக்கு எந்த கருத்தை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. அனைத்தையும் சர்ச்சையாக்கினோம் என்றால் நாம் எதையும் பார்க்க முடியாது" என்று கூறினார்.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  

    ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    ஆரவ்

    திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    ×