search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகானே"

    முதல் இரண்டு டெஸ்டிலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரகானே, மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு டெஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரகானே அரைசதம் அடித்தார். அடிலெய்டில் 2-வது இன்னிங்சிலும், பெர்த்தில் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். அவரால் அரைசதத்தை சதமாக மாற்ற முடியவில்லை. இந்நிலையில் மெல்போர்னில் டெஸ்டில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘சதம் வந்து சேரும். மெல்போர்ன் டெஸ்டில் அடிப்பேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. என்னுடைய மனநிலை எப்போதுமே கவுன்ட்டர்-அட்டாக் ஆட்டத்தை நோக்கியே இருக்கும். அந்த வழியில் நான் ஆடினால் உறுதியாக சதம் அல்லது இரட்டை சதம் வந்தே தீரும். இது எனக்கு முக்கியமானது. இதைத்தவிர சாதனை படைக்க வேண்டும் என்ற சிந்தனை கிடையாது. சூழ்நிலையை புரிந்து நான் எனது பேட்டிங் பாணியை அப்படியே தொடர விரும்புகிறேன். அது அணிக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112 ரன்னிற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது.

    43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸதிரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் முதல் பந்தை சந்திக்க ஸ்டார்க் பந்து வீச்சை தொடங்கினார். ஆட்டத்தின் 4-வது பந்திலேயே லோகேஷ் ராகுல் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா 4 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. ஆனால் நாதன் லயன் பந்தில் விராட் கோலி (17), முரளி விஜய் (20) அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியா 55 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


    ரகானே விக்கெட்டை சாய்த்த சந்தோசத்தில் ஹசில்வுட்

    5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 43 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 98 ரன்னாக இருக்கும்போது ரகானே 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரகானே அவுட்டானதும் இந்தியாவின் இன்னிங்ஸ் ஓரளவு முடிவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.

    6-வது விக்கெட்டுக்கு விஹாரி உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தற்போது வரை இந்தியா 41 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


    டிம் பெய்னின் மகிழ்ச்சியும், விராட் கோலியின் சோகமும்

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 175 ரன்கள் என்பது மிகக்கடினம். மேலும், தற்போது களத்தில் இருக்கும் ஜோடி பிரிந்தால், இந்தியாவின் இன்னிங்சை உடனடியாக முடிவிற்கு வர வாய்ப்புள்ளது.
    அடிலெய்டு டெஸ்டில் நான்கு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கி விளையாடி வருகிறது. 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், கேப்டன் விராட் கோலி இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரின்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்தது. இதனால் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்தார்.

    இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடியது. பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், நேர்த்தியாக பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

    நான்கு பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 31 ரன்னில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை காப்பது முக்கியமானது. நாங்கள் பேட் கம்மின்ஸை வீழ்த்திய பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. நான் ஐஸ் போன்று கூலாக இருப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் விளையாடும்போது அவர்கள் ஒரு தவறு செய்ய வேண்டும். அல்லது நாங்கள் ஒரேயொரு சிறந்த பந்து வீச வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. நான்கு பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தது மிகப்பெரிய பெருமையான விஷயம்.



    இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு உயர இது உதவியாக இருக்கும். புஜாரா மற்றும் ரகானே இந்த போட்டியை அருமையாக கொண்டு சென்றனர். நாங்கள் சிறந்த அணி. இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இதேபோல் புஜாரா மற்றும் ரகானே இணைந்து விளையாடினார்கள், எங்களின் மிகவும் திடமான ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

    மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கனும். பெர்த் டெஸ்டிற்கு செல்லும்போது இதுகுறித்து யோசிப்போம். முதல் போட்டியிலேயே 1-0 என முன்னிலைப் பெற்று தந்த பிறகு, அதை நான் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.

    15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.

    இந்தியாவின் ஸ்கோர் 234 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. ரகானே 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 275 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.



    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த அஸ்வின் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரகானே 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் ஏறக்குறைய இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது.

    முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் டக்அவுட்டில் வெளியேற இந்தியா 106.5 ஓவரில் 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா வலுவான முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.

    15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.

    இந்தியாவின் ஸ்கோர் 234 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. ரகானே 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 275 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் லயன் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

    7-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 98 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ஸ்மித், வார்னர் இல்லாவிடிலும், பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் (6-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா பலவீனமாக காணப்படுகிறது. இந்த முறை இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை பலவீனமடைந்த அணி என்று கூறிவிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும்போது, அவர்கள் சிறந்த அணியாகத்தான் திகழ்வார்கள் என்று உணர்கிறேன். ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.

    நாங்கள் எப்போதுமே எதிரணியை எளிதாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. அவர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்திருக்கிறார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா அணி பலவீனமானது என்று நான் கருதவில்லை.



    அவர்களுடைய பந்து வீச்சு யூனிட்டை பார்த்தீர்கள் என்றால், மிகவும் அசுர பலம் கொண்டது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணியாகவே கருதுகிறேன்.

    ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டால், சிறந்ததாக உணர்வீர்கள். இது அணிகளாக ஒன்று சேர்ந்து விளையாடும் போட்டி. ஒவ்வொருவரும் அணிக்காக பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். முக்கியமான விஷயம், நீண்ட பார்ட்னர்ஷிப். இது ஆஸ்திரேலியா மண்ணில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.
    இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டிற்கு பயிற்சி கொடுப்பதற்காக சிட்னி செல்கிறார். #AUSvIND
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நாளை டி20 தொடர் தொடங்குகிறது. அதன்பின் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. 2-வது போட்டி 14-ந்தேதி பெர்த்திலும், 3-வது ஆட்டம் மெல்போர்னில் 26-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதியும் நடக்கிறது.

    டி20 அணியில் இடம்பெறாத டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார்கள். இவர்கள் தற்போது சிட்னி வந்துள்ளனர். டி20 போட்டி நாளை தொடங்கினாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அவர்கள் ஐந்து நாட்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.



    அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சஞ்சய் பாங்கர் சிட்னி செல்கிறார். பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்றோருக்கு பாங்கர் பயிற்சி அளிக்க இருக்கிறார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane
    புவனேஸ்வரில் நடைபெற்ற எகம்ரா விளையாட்டு இலக்கிய விழாவில் ரகானே கலந்து கொண்டார். அப்போது ரகானேவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.



    இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ரகானே ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் விளாசினார். #DeodharTrophy #Rahane
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கெதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகனே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ பேட்டிங் செய்து வருகிறது.
    இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. #INDvWI #UmeshYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஸ் 20 ரன்னுடனும், ஹோல்டர் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில்தான் ஹோல்டரை 19 ரன்னிலும், அம்பிரிஸை 38 ரன்னிலும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார். இந்த ஜோடி 30 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி பரிந்ததும் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. அதன்பின் வந்த வாரிகனை (7) அஸ்வினும், கேப்ரியலை (1) உமேஷ் யாதவும் வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஓட்டுமொத்தமாக 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 72 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஜடோஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இருவரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும்.
    ஐதராபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வேகப்பந்து வீச்சால் இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ரகானே 80 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை சந்தித்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹோல்டர் இந்தியாவின் ரன்குவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



    அதன்பின் வந்த குல்தீப் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 92 ரன்னில் வெளியேறினார். இந்தியா இன்று காலையில் 31 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 ரன்கள் சேர்க்க இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா இன்று காலை 59 ரன்களுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
    ×