search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.298 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. முன்னதாக போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச தினசரி டேட்டா பலன்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது. 

    புதிய ரூ.298 சலுகை பி.எஸ்.என்.எல். சிறப்பு வவுச்சராக அறிவிக்கப்பட்டிருப்பதாக டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது. இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    புதிய ரூ.298 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ரூ.299 சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். 3ஜி மற்றும் 2ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனம் ரூ.255 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    2018 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு வாக்கில் இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #RelianceJio



    இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் ஊக்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

    அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன. 

    நாட்டின் முன்னணி நிறுவனங்களின் கனெக்டிவிட்டி நாட்டின் 15 பெரு நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், 4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகமும் அதிக வேறுபாடு கொண்டிருக்கின்றன. ஊக்லா வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் இருந்திருக்கிறது.



    2018 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 11.23 Mbps வேகத்தில் மொபைல் டேட்டா வழங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 9.13 Mbps வேகத்தில் இரண்டாவது இடத்திலும், ஜியோ மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்திருக்கின்றன.

    பொதுப்படையாக அதிகளவு கனெக்டிவிட்டி வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ 99.3% பகுதிகளில் சீரான இணைப்பு வழங்கி முதலிடம் பிடித்திருக்கிறது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போன்று வோடபோன் ஐடியாவும் புதிதாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. #VodafoneIdea #Apps



    பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை வழங்கி வரும் நிலையில், வோடபோன் ஐடியா சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வின்க் மியூசிக் மற்றும் சாவன் செயலிகளை வழங்கி வரும் நிலையில் வோடபோன் புதிதாக செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐடியா மியூசிக் செயலியின் சேவையை நிறுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

    ஐடியா மியூசிக் செயலியின் சேவை நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து விரைவில் புதிய மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்வோம். புதிய செயலி ஒப்பந்த அடிப்படையில் அறிமுகமாகும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என வோடபோன் ஐடியா நிறுவனத்தை சேர்ந்த பலெஷ் சர்மா தெரிவித்தார்.



    வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மொத்தம் 547.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    முன்னதாக ரூ.1699 சலுகையில் இதேபோன்ற பலன்களை வழங்கும் சலுகையை வோடபோன் அறிவித்தது. எனினும், ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone #offer



    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,699 சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் புதிய சலுகை ஒரு வருட வேலிடிட்டி வழங்குகின்றன.

    ரூ.1699 சலுகையை போன்று புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனினும், புதிய ரூ.1,999 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ரூ.1699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    முதற்கட்டமாக வோடபோன் சலுகை கேரளாவில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்குகிறது.

    முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.119 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வோடபோன் ரூ.169 விலையில் இதேபோன்ற சலுகைகளுடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்குகிறது.
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #Vodafone #offers



    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    புதிய வோடபோன் சலுகை ரூ.169 சலுகையை போன்ற பலன்களை வழங்குகிறது. இச்சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    எனினும், புதிய ரூ.119 சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வாட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை இந்தியாவின் பெரும்பாலான வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. ரூ.119 சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் மட்டும் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது. ரூ.169 சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    வோடபோன் சலுகையை போன்றே ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.119 விலையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட வாட்டாரங்களில் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை வோடபோன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனமும் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் வோடபோன் வழங்குவதை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. #Airtel #offers



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோவின் வருடாந்திர சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, எஸ்.எம்.எஸ். சலுகை தவிர ஏர்டெல் டி.வி. செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் அறிவித்துள்ள புதிய சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், புதிய சலுகை அந்நிறுவன வலைதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

    ஜியோ வழங்கும் வருடாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூட்டாக 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்க்கவில்லை. 



    அக்டோபர் 2018 இல் மட்டும் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம், எம்.டி.என்.எல். நிறுவனம் 8,068 மற்றும் ஆர்.காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    செப்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதி வரை இந்திய டெலிபோன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 கோடியில் இருந்து 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் வளர்ச்சியாகும்.
    கால் டிராப் விவகாரம் தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் ரூ.56 லட்சம் அபராதம் செலுத்த மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கால் டிராப் பிரச்சனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கால் டிராப் அளவுகளை ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் கடந்துவிட்டன.

    அந்த வகையில் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக செலுத்த டிராய் இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று சேவை தரத்தை மேம்படுத்தாத காரணத்தால் டெலினார் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது. 

    அக்டோபர் 1, 2017 முதல் அமலாக்கப்பட்ட டிராய் விதிமுறை கடுமையாக்கப்பட்டு வருவதன் காரணமாக டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கால் டிராப் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. என டெலிகாம் மந்திரி மனோஜ் சின்கா தெரிவித்தார்.

    ஜூலை 2015 முதல் டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கூடுதாலக 9.74 லட்சம் மொபைல் சைட்களை 2ஜி, 3ஜி, 4ஜி எல்.டி.இ. சைட்களை நிறுவியிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 20.07 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் ரூ.169 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. #Airtel #offers



    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே விலையில் வோடபோன் நிறுவனமும் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது.

    ஏர்டெல் ரூ.169 பிரீபெயிட் சலுகையின் பலன்களை பார்க்கும் போது, பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 28 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் வழங்கும் ரூ.169 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    எனினும் தினசரி டேட்டா அளவை கடந்ததும் ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும் வாய்ஸ் கால் செய்ய நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

    ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்த சலுகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புது சலுகையை அறிவித்துள்ளது. #Airtel



    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது. 48 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புது சலுகை அதிகளவு வாய்ஸ் மேற்கொள்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வாய்ஸ் கால் சலுகையுடன் பயனர்களுக்கு 1 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    இந்த சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.279 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ஐடியா செல்லுலார் வழங்கும் ரூ.295 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 5 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஐடியா பிரீபெயிட் சலுகையில் அதிகளவு மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது என்றாலும், பெருமளவு வாய்ஸ் கால் மேற்கொள்வோர் எனில், ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை பயனுள்ளதாக இருக்கும். ஐடியா சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது என்றாலும், இதில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Airtel
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதேபோன்ற சலுகையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்து, வழங்கி வருகின்றன. வோடபோன் 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும். 

    வோடபோன் வழங்கும் கேஷ்பேக் கூப்பன்களை மை வோடபோன் செயலி மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போன்ற சலுகையை முன்னதாக ஏர்டெல் அறிவித்தது. எனினும் ரிலையன்ஸ் ஜியோ இந்த சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது.



    மை வோடபோன் செயலியின் படி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு எட்டு கூப்பன்களும், ரூ.458 ரீசார்ஜ் செய்வோருக்கு ஒன்பது கூப்பன்கலும், ரூ.509 ரீசார்ஜ் செய்வோருக்கு 10 கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

    சில வட்டாரங்களில் ரூ.199 ரீசார்ஜ் செய்வோருக்கும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் பீகார், ஜார்கண்ட் பகுதிகளில் உள்ள வோடபோன் பயனர்கள் ரூ.409 (மற்ற வட்டாரங்களில் ரூ.399) சலுகையை பயன்படுத்த முடியாது. இதே போன்று இமாச்சல பிரதேச பயனர்கள் ரூ.458 சலுகைக்கு மட்டும் 100 சதவிகித கேஷ்பேக் பெற முடியும்.

    பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற வட்டாரங்களில் ரூ.399 சலுகை ரூ.409 விலையிலும், ரூ.458 சலுகை ரூ.459 விலையிலும் ரூ.509 சலுகை ரூ.529 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முறையே 70 நாட்கள், 80 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. #Vodafone #Offers
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. #Airtel



    ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் போட்டி நிறைவுற்றதாக தெரியவில்லை. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.

    ஏர்டெல் ரூ.399 சலைகையை ரீசார்ஜ் செய்வோருக்கு அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. அந்த வகையில், பயனர்கள் செலுத்தும் தொகையை அப்படியே கேஷ்பேக் வடிவில் திரும்ப பெற முடியும். ஏர்டெல் வழங்கும் 100 சதவிகிதம் கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள எட்டு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த வவுச்சர்களை பயனர்கள் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொன்றாக பயன்படுத்த முடியும். அப்படியெனில், ஒரு முறை ரீசார்ஜ் செய்ய ரூ.50 மதிப்புள்ள ஒரு வவுச்சரையே பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு முறை ரூ.399 ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.50 மட்டும் குறைக்கப்படும்.


    புகைப்படம் நன்றி: BGR.in

    கேஷ்பேக் வவுச்சர்களை எட்டு முறை பயன்படுத்த முடியும் என்பதால் பயனர்கள் மொத்தம் ரூ.400 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் அறிவித்திருக்கும் சலுகை மார்ச் 31, 2020 வரை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள சலுகையை அந்நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.

    ஏர்டெல் வாடிக்கையாளர் பரிந்துரையின் பேரில் வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
    ×