search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.1,500 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. #Airtel



    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏர்டெல் சேவையை பயன்படுத்த புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.

    வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்கும். இந்த கூப்பன்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் லின்க் செய்திருக்கும் மை ஏர்டெல் செயலியில் தானாக கிரெடிட் செய்யப்பட்டு விடும். இதனை போஸ்ட்பெயிட் கட்டணம் செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.



    புதிய ஏர்டெல் இணைப்பு வெற்றிகரமாக ஆக்டிவேட் ஆனதும், பரிந்துரை செய்தவருக்கும் புதிய இணைப்பை பெற்றவருக்கும் 24 மணி நேரத்தில் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகையை அதிகபட்சம் பத்து முறை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.1,500 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். செயலியில் உள்ள மை ஏர்டெல் ஆப் சென்று ஏர்டெல் போஸ்ட்பெயிட் ரெஃபரல் (postpaid referral) சலுகையை பெற முடியும். சலுகையில் இணைய செயலியில் லாக்-இன் செய்து நோட்டிஃபிகேஷன் பகுதியில் காணப்படும் “Rs. 150 discount on your postpaid bill” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    இந்த குறியீட்டை (ரெஃபரல் லின்க்) காப்பி செய்து, சமூக வலைதள பட்டன்கள் மூலம் பகிர்ந்து கொண்டோ அல்லது தானாகவோ சிலரை பரிந்துரை செய்யலாம். நீங்கள் அனுப்பும் லின்க்கை உங்களது நண்பர் கிளிக் செய்து அனைத்து வழிமுறைகளையும் பூர்த்தி செய்து, வெற்றிகரமாக ஏர்டெல் சேவையில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கும், புதிதாய் ஏர்டெல் சேவையில் இணைந்த நண்பருக்கும் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.

    ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பிரீபெயிட், ஏர்டெல் பிராட்பேன்ட், ஏர்டெல் கார்ப்பரேட் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. #RelianceJio



    இந்தியாவில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் 119.14 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து வாடிக்கையாளர்களை அதிகளவு பெற்று வருவது தெரியவந்துள்ளது.

    செப்டம்பரில் மட்டும் சுமார் 1.32 கோடி புது வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 5.44 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. ஜியோ தவிர மற்ற நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை பெருமளவு வாடிக்கயைாளர்களை இழந்துள்ளன.

    புதிய மொபைல் போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஆகஸ்டு மாத இறுதியில் 118.9 கோடியில் இருந்து, செப்டம்பரில் 119.1 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது மாதாந்திர அடிப்படையில் பார்க்கும் போது 0.20 சதவிகித வளர்ச்சியாகும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ மாதம் 1.3 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து அதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்சமயம் 25.22 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் 21.57 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 29.38 சதவிகித பங்குகளுடன் முன்னிலையில் இருந்த நிலையில், 23 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோன்று ஐடியா செல்லுலார் நிறுவனம் சுமார் 40 லட்சம் (தற்போதைய மொத்த வாடிக்கையாளர்கள் 21.31 கோடி) வாடிக்கையாளர்களையும், வோடபோன் 26 லட்சம் (தற்போதைய மொத்த வாடிக்கையாளர்கள் 22.18 கோடி) வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் சுமார் 11.3 கோடி வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 9.67 சதவிகித பங்குகளை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சேவையை நிறுத்திக் கொண்ட ஆர் காம் செப்டம்பரில் 16,349 வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு 20 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL



    இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் சலுகையை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்த முடியும்.

    பி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகையில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

    பத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தம் 20 ஜி.பி. டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.



    பி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகை வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரூ.65 மற்றும் ரூ.95 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இரண்டு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. எனினும் இவற்றின் பலன்களில் மாற்றம் கொண்டிருக்கின்றன.

    ரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் பயனர்களுக்கு ரூ.55 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நொடிக்கு 1 பைசா கட்டணத்தில் வசூலிக்கப்படுகின்றன. ரூ.95 விலையில் கிடைக்கும் சலுகையில் ரூ.95 டாக்டைம், 500 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்று ரூ.98 விலையில் சலுகையை வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. 
    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கிறது. #Jio



    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி 2019, ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே ஜியோ சேவையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் இந்திய ரயில்வே டெலிகாம் செலவீனங்களை குறைந்தபட்சம் 35 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்திய ரயில்வே பாரதி ஏர்டெல் நிறுவன சேவையை பயன்படுத்தி வந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு என மொத்தம் 1.95 லட்சம் மொபைல் போன் இணைப்புகளை (சி.யு.ஜி.) இந்திய ரயில்வே பயன்படுத்தியது. இதற்கென இந்திய ரயில்வே மொத்தம் ரூ.100 கோடியை ஆண்டு கட்டணமாக செலுத்தி வந்தது. இதற்கான வேலிடிட்டி இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் நிறைவுறுகிறது.

    இதுகுறித்து ரயில்வே போர்டு வெளியிட்டு இருக்கும் உத்தரவில், ரெயில்டெல் நிறுவனத்திற்கு புதிய மொபைல் போன் இணைப்புகளை வழங்கும் உரிமை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய டெலிகாம் சேவை டிசம்பர் 31, 2018-க்குள் நிறைவுறுகிறது.

    புதிய சி.யு.ஜி சேவைகள் ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரும் என ரயில்வே வெளியிட்டிருக்கும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சி.யு.ஜி. இணைப்புகளில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட குழுவினருடன் அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொள்ளவும் முடியும்.



    இந்திய ரெயில்வே பயன்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சி.யு.ஜி. சேவையில் 4ஜி / 3ஜி இணைப்புகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரெயில்வேக்கு நான்கு திட்டங்களை வழங்குகிறது. 

    இவை மூத்த அதிகாரிகள்: 60 ஜி.பி. சலுகை, மாதம் ரூ.125 விலையிலும், 45 ஜி.பி. சலுகை மாத கட்டணம் ரூ.99 விலையிலும், இணை செயலாளர் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு 30 ஜி.பி. சலுகை ரூ.67 விலையிலும், க்ரூப் சி பணியாளர்களுக்கு ரூ.49 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    சாதாரண பணியாளர்களுக்கு 25 ஜி.பி. டேட்டா ரூ.199 விலையில் வழங்கப்படுகிறது. இதன் பின் பயனர்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை பயன்படுத்த ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரெயில்வே பணியாளர்கள் ரூ.10 கட்டணத்திற்கு 2 ஜி.பி. கூடுதல் டேட்டா பயன்படுத்தலாம்.

    ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் 1.95 லட்சம் பணியாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 3.78 லட்சம் ரெயில்வே பணியாளர்களுக்கு சேவையை வழங்குகிறது. இதன் காரணமாக ரெயில்வேயின் டெலிகாம் சேவை கட்டணங்கள் 35 சதவிகிதம் வரை குறையும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் ஒரு செயலியை டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. இலவச டேட்டா பெற முடியும். #BSNL



    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் பழைய சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் முதல் முறை பி.எஸ்.என்.எல். செயலியை டவுன்லோடு செய்யும் போது சிறப்பு சலுகை வழங்குகிறது. 

    ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை பி.எஸ்.என்.எல். செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட புது பி.எஸ்.என்.எல். செயலி கால்2ஆக்ஷன் கம்யூனிகேஷன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.



    புதிய மேம்படுத்தப்பட்ட செயலி 8 எம்.பி. அளவில் கிடைக்கிறது. செயலியை இன்ஸ்டால் செய்யும் பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பருடன் சைன்-அப் செய்ய வேண்டும். சைன் அப் செய்ததும் 1 ஜி.பி. 2ஜி/3ஜி டேட்டா பயனர்களின் அக்கவுன்ட்டில் சேர்க்கப்படும்.

    இலவச டேட்டா பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. புதிய இலவச டேட்டா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள் பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தும் வசதியை பி.எஸ்.என்.எல். அறிவித்திருந்தது. 

    வோடபோன், ஏர்டெல் போன்றே மை பி.எஸ்.என்.எல். செயலியிலும் பயனர்கள் தங்களது டேட்டா பயன்பாடு, அக்கவுன்ட் விவரங்கள், பிராட்பேன்ட் கட்டணம் செலுத்துவது மற்றும் பிரீபெயிட் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இந்த செயலியை கொண்டு போஸ்ட்பெயிட் பயனர்களும் தங்களது மாதாந்திர கட்டணங்களை செலுத்த முடியும்.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.398 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Airtel #Offers



    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை அடிக்கடி மாற்றியும், புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.398 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 
    ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ரூ.398 மற்றும் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் ரூ.398 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர், தேசிய அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1.5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 105 ஜி.பி. டேட்டா கிடைக்கிறது.

    இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஏர்டெல் சலுகை இந்தியா முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    இதேபோன்று ரூ.399 விலையில் ஏர்டெல் மற்றொரு சலுகையை வழங்கி வருகிறது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் சில பயனர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டியும், மற்றொரு சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வேலிடிட்டி தவிர இந்த சலுகையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.398 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோன்று வோடபோன் வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    வோடபோன் வழங்கும் சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டப்பாடு அறிவிக்கப்பட்டுள்து. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சலுகைகளில் வாய்ஸ் கால் மேற்கொள்ள எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.
    ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio



    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி பேர் இணைந்துள்ளனர். இதே மாதத்தில் பாரதி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி ஆகஸ்டு மாதத்தில் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 23.9 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

    செப்டம்பர் 2018 வரை நிறைவுற்ற நிதிநிலை வருவாய் அறிக்கையின் படி, ஜியோ நெட்வொர்க்கை சுமார் 25.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது. இது ஆகஸ்டு மாதத்தை விட 1.3 கோடி வரை அதிகமாகும்.

    ஜியோ பயனர் எண்ணிக்கை குறித்து செல்லுலார் ஆப்பரேட்டர் அமைப்பு சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் இதில் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். மற்றும் இதர நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இவை செல்லுலார் ஆப்பரேட்டர் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என்பதால் இவற்றின் விவரங்கள் வெளியாகவில்லை.



    மற்ற நிறுவனங்களை பொறுத்த வரை ஏர்டெல், நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகஸ்டு மாதம் 34.58 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த எண்ணிக்கை செப்டம்பரில் குறைந்து தற்சமயம் 34.35 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

    இதேபோன்று ஐடியா செல்லுலார் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்டு மாதம் 21.71 கோடியாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 21.31 கோடியாக குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 40.61 லடசம் பேர் ஐடியா சேவையில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

    இரண்டு மாதங்களில் வோடபோன் நிறுவனம் 37.67 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை வோடபோன் நிறுவனம் சுமார் 22.44 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
    இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முதலிடம் பிடித்து இருக்கிறது. #Airtel



    இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7.53 எம்.பி. ஆக இருக்கிறது. ஏர்டெலை தொடர்ந்து மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்.பி., 4.92 எம்.பி. மற்றும் 2.70 எம்.பி. வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கின்றன.

    இந்த தகவல் ஓபன் சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா டவுன்லோட் வேகத்தில் 25 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதன் சராசரி டேட்டா வேகம் நொடிக்கு 9.96 எம்.பி. ஆக பதிவாகி இருக்கிறது. 

    இதேபோன்று இந்தியா முழுக்க 16 டெலிகாம் வட்டாரங்களில் ஏர்டெல் அதிவேக டேட்டா வழங்கி இருக்கிறது. 4ஜி டேட்டா அப்லோடு வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. ஐடியா 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 3.93 எம்.பி. அப்லோடு வேகம் வழங்கி இருக்கிறது.

    ஐடியா நிறுவனம் பஞ்சாப், டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வட்டாரங்களில் அதிவேக அப்லோட் வேகம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அப்லோட் வேகத்தை பொறுத்த வரை எந்த நிறுவனமும் 4 எம்.பி. வேகத்தை எட்டவில்லை.
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. #Airtel



    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஒரேகட்டமாக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுவரை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட இருக்கின்றனர்.

    புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு நேரடி போட்டியாளராக உருவெடுக்கும். தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவக்கம் முதலே 4ஜி நெட்வொர்க்கில் மட்டும் நேரடியாக சேவையை வழங்கி வருகிறது. 

    ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்படுபவர். இதற்கென ஏர்டெல் நிறுவனம் 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரக்கை பயன்படுத்தி 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க இருக்கிறது. ஜியோவுக்கு சமமான போட்டியை வழங்க ஏர்டெல் நிறுவனத்தின் உச்சக்கட்ட முடிவாக இது இருக்கும் என கூறப்படுகிறது.



    “சமீப காலங்களில் 4ஜி நெட்வொர்க்கிற்கு அதிகளவு தேவை ஏற்பட்டு இருக்கிறது, எங்களது 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் 4ஜி வாடிக்கயாளர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும், இதே நேரத்தில் எங்களின் 2ஜி சேவைகள் 1800 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்கப்படும்,” என ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கோப்பால் விட்டல் தெரிவித்தார். 

    3ஜி நெட்வொர்க்கில் இருந்து போதுமான வருவாய் கிடைப்பதில்லை, 3ஜி தொழில்நுட்பத்தின் முடிவு நெருங்கிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார். ஏர்டெல் நிறுவனம் டிரான்சிஷன் வழிமுறையை கொண்டு தனது வாடிக்கையாளர்களை 3ஜி நெட்வொர்ககில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றுகிறது. 

    இந்தியா முழுக்க 16 வட்டாரங்களில் 116 யூனிட் அலைக்கற்றைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஏர்டெல் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. இவை முழுக்க 4ஜி சேவைக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்குவதற்கான பணிகளை செய்துள்ளது.

    தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மேற்கு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில், ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் புதிய சலுகைகளை அறிவித்தது. இவற்றின் விலை ரூ.25 முதல் துவங்குகிறது.
    ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளரின் மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. கேஷ்பேக் மற்றும் கூடுதல் டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.

    இந்த டிஜிட்டல் கூப்பன்களை தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளையும் போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது டிஜிட்டல் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சலுகையை பெறுவது எப்படி?

    ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்

    அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்டினை செருக வேண்டும்

    மைஏர்டெவ் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் தானாக சேர்க்கப்படும் 

    டிஜிட்டல் கூப்பன்கள் வாடிக்கையைளருக்கு வழங்கியதில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது

    ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்

    முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கியது. கடந்த வாரம் ஏர்டெல் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.
    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புத்தம் புதிய ஐபோன் XR முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. #iPhoneXR



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்த நிலையில், இவற்றின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. 

    புதிய ஐபோன் மாடல்கள் அக்டோபர் 26-ம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் புதிய ஐபோன் XR 64 ஜி.பி. மாடல் ரூ.76,900, 128 ஜி.பி. விலை ரூ.81,900 மற்றும் 256 ஜி.பி. விலை ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐபோன் XR மாடல் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த தளத்தில் முன்பதிவு செய்வோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    இதேபோன்று ஏர்டெல் ஆன்லைன் தளத்திலும் புதிய ஐபோன் முன்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்கு செலுத்தலாம். இத்துடன் ஒவ்வொரு மாதமும் 10 ஜி.பி. டேட்டா, மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் எளிய மாத தவணை முறை வசதி, பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமி்ட்டெட் காலிங் மற்றும் பிரீமியம் தரவுகள் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பேடிஎம் மால் தளத்தில் முன்பதிவு செய்து ரூ.7,000 எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் XR விற்பனை விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
    - 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர்
    - 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர், நியூரல் என்ஜின்
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
    - ஐ.ஓ.எஸ். 12
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
    - 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
    - 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - ட்ரூ டெப்த் கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
    - 2942 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வதிமாக புதிய சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. #airtelthanks



    பாரதி ஏர்டெல் நிறுவனம் #airtelthanks மூலம் தனது பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும் என பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. அந்த வகையில் யனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. விரைவில் #airtelthanks சலுகை வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏர்டெல் நிறுவனம் பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜி.பி. போனஸ் டேட்டா உள்ளிட்டவற்றை பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற சலுகைகளுடன், ஏர்டெல் நிறுவன இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட திட்டங்களை தேர்வு செய்வோருக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

    நெட்ஃபிளிக்ஸ் சந்தாவினை ஏர்டெல் டி.வி. ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலமாகவும் பெற முடியும். இத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஜீ5 தரவுகளை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
    ×