search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.159 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அமைந்துள்ளது. #Vodafone #offers


    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் வோடபோன் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    புதிய வோடபோன் சலுகை ரூ.159 விலையில் கிடைக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.159 சலுகை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வோடபோன் ரூ.159 புதிய சலுகையில் 28 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் வோடபோன் புதிய சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய சலுகை வோடபோன் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

    இத்துடன் புதிய சலுகை சென்னை, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் குஜராத் போன்ற வட்டாரங்களிலும் இதுவரை வழங்கியதாக தகவல் இல்லை. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வோடபோன் ரூ.159 சலுகையில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும், முழு வேலிடிட்டிக்கும் 100 பிரத்யேக நம்பர்களுக்கு அழைக்க முடியும் என வோடபோன் தெரிவித்துள்ளது. 28 ஜிபி டேடட்டா, தினமும் 1 ஜிபி வீதம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு வட்டாரங்களில் எஸ்.எம்.எஸ். சலுகையை மாற்றுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். சில இடங்களில் முழு சலுகைக்கும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் ரூய149 சலுகையில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றியும், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் வரை இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
    கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம், 1 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. #KeralaFloods


    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம் கிரெடிட், 1 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் கேரளாவில் உள்ள பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் புதிய அறிவிப்பு கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கித்தவிக்கும் கேரள பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் இலவச வைபை மற்றும் அழைப்புகளை வழங்க ஏதுவாக கேரளாவில் ஐந்து முக்கிய இடங்களில் VSAT (மிகச்சிறிய அப்ரேச்சர் டெர்மினல்) மையங்களை செட்டப் செய்ய திட்டமிட்டுள்ளது.



    - ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 வரை டாக்டைம் கிரெடிட் முறையில் பெறும் வசதி
    - அனைத்து ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா (ஏழு நாட்கள் வேலிடிட்டி)
    - ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்கள் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம்
    - மக்களுக்கு இலவச வைபை மற்றும் வாய்ஸ் கால் வழங்க ஐந்து ஏர்டெல் சிறிய அப்ரேச்சர் போர்ட் அமைக்கப்படுகிறது
    - மின் இணைப்பு சீரற்ற பகுதிகளிலும் ஏர்டெல் சேவை தொடர்ந்து கிடைக்க நெட்வொர்க் குழுவினர் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும் திர்ச்சூர், கோழிக்கோடு, மல்லப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏர்டெல் ஃபிளாக்ஷிப் மையங்களில் மக்கள் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் செய்து, இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். #KeralaFloods
    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது 23-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமேசான் பே உடன் இணைந்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. 

    புதிய சலுகையின் படி ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும், இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யும் பயனருக்கும் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இலவசமாக வழங்கப்படும் அமேசான் கிஃப்ட் கார்டு கணக்கில் ஏற்கனவே ரூ.51 சேர்க்கப்பட்டிருக்கும். பயனர்கள் இந்த கார்டு மூலம் அமேசான் பே கணக்கில் பணத்தை சேர்த்துக் கொண்டு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பொருட்களை வாங்கவோ, ரீசார்ஜ் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

    கிஃப்ட் கார்டை பெற ஏர்டெல் பயனர்கள் தங்களது மைஏர்டெல் செயலிக்கு சென்று ஏர்டெல் தேங்ஸ் (Airtel Thanks) பேனரை க்ளிகி செய்ய வேண்டும். இனி பேனரை க்ளிக் செய்து கிஃப்ட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த சலுகையை பெற பயனர் செய்யும் ரீசார்ஜ் ஏர்டெல் செயலி, அமேசான் மற்றும் பேடிஎம் மூலமாகவும் மேற்கொள்ளலாம். 

    அமேசான் பே கிஃப்ட் கார்டை இலவசமாக பெற பயனர்கள் தங்களது ஏர்டெல் எண்களுக்கு ரீசார்ஜ் அல்லது போஸ்ட்பெயிட் சலுகைக்கு அடுத்த 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
    ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #GalaxyNote9


    சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    அதன்படி கேலக்ஸி நோட் 9 வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தி புத்தம் புதிய நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை பெறலாம். பின் மீதித் தொகையை மாதம் ரூ.2,999 என 24 மாதங்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் இரண்டு ஆண்டுக்கான மொத்த தவணை மற்றும் ஏர்டெல் திட்டதிற்கான கட்டணம் ரூ.79,876 ஆகும்.

    இத்துடன் மாத தவணை முறையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் பில்ட்-இன் திட்டத்தில் பயனர்களுக்கு மாதம் 100 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    தற்சமயம் பயனர்கள் தங்களுக்கான நோட் 9 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4,999 விலையில் கியர்ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்டு 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. #GalaxyNote9 #Airtel
    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #offers
    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளின் படி தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் ஐடியா அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சலுகையின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 100 வெவ்வேறு எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் 100 எண்களை கடந்து அழைப்புகளை மேற்கொள்ளும் போது அழைப்பு கட்டணம் நொடிக்கு ரூ.1 பைசா வீதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று 5 ஜிபி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா கட்டணமாக 10 கே.பி.-க்கு 4 பைசா வசூலிக்கப்படுகிறது. ரூ.295 ஐடியா சலுகை நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் 4ஜி வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. புதிய ஐடியா சலுகையை பயனர்கள் மைஐடியா ஆப் அல்லது ஐடியா வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்ய முடியும்.

    ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் ரூ.299 மற்றும் ஜியோ ரூ.251 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இதில் டேட்டா வழங்கப்படவில்லை.

    ஜியோ வழங்கும் ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ சலுகையில் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுவதில்லை.
    ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு டெலிகாம் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Aircel



    ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு தொலைதொடர்பு விவகாரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனத்துக்கு இந்த உத்தரவு உதவியாக இருக்கும்.

    உத்தரவை தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.450 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கலாம் என்ற வகையில், தொகையை கொண்டு ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே செய்த செலவினங்கள், நிலுவையில் உள்ள ஊதியங்கள், இதர கட்டணங்களை செலுத்த முடியும். 

    மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ஏர்செல் செலுத்த வேண்டிய ரூ.6,600 கோடி நிலுவை தொகையை முடிந்த வரை திரும்ப பெற முயற்சித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பின்னடைவாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    2016-ம் ஆண்டு மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனம் சார்பாக வங்கி உத்தரவாத தொகையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியிருந்தது. ஏர்செல் அலைக்கற்றைகளுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏர்டெல் நிறுவனம் வங்கி உத்தரவாத கட்டணமாக ரூ.411.22 கோடி, ரூ.39.33 கோடி மற்றும் ரூ.3.16 கோடிகளை மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்தி இருக்கிறது.

    இதுகுறித்த விவரம் அறிந்த வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களின் படி, முதற்கட்டமாக வங்கி உத்தரவாத தொகை ஏர்டெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும், பின் அதனை ஏர்செல் நிறுவனத்துக்கு வழங்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

    மத்திய தொலைதொடர்பு விவகாரங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு பொதுவாக வெளியிடப்படவில்லை. எனினும் ஏர்டெல் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில் “ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கி உத்தரவாத கட்டணத்தை வழங்க வேண்டியதில்லை,” என தெரிவித்துள்ளார்.

    ஏர்செல் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் தனது 3000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. #Aircel #bankruptcy
    மத்திய டெலிகாம் துறை வழங்கியிருக்கும் ஒற்றை அனுமதி பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய மத்திய டெலிகாம் துறை அனுமதி அளித்திருக்கிறது. டெலிகாம் துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தை இழக்க இருக்கிறது.

    கடந்த 15 ஆண்டுகளாக டெலிகாம் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா இணையும் பட்சத்தில் முதலிடத்தை இழக்கலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2017-ம் ஆண்டு இரண்டு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் டெலிகாம் துறை விதிமுறைகளுடன் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது.

    இருநிறுவனங்களின் ஒப்பந்தத்திற்கான அனுமதியளிக்க ரூ.7268 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐடியா நிறுவனத்தின் ஒருமுறை ஸ்பெக்டரம் கட்டண தொகை வங்கி உத்தரவாதமாக ரூ.3342 கோடியும், ஏலம் விடப்படாத வோடபோன் நிறுவன சந்தை கட்டணம் ரூ.3,926 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வங்கி உத்தரவாத தொகையை ஐடியா செல்லுலார் எதிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெலினார் ஐடியா நிறுவனத்தை பாரதி ஏர்டெல் கைப்பற்றும் போதும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. ஐடியா மற்றும் வோடபோன் சார்பில் இந்த விவகாரம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. சட்ட ரீதியிலான நகர்வுகள் மற்றும் மத்திய டெலிகாம் துறை நடவடிக்கைகளின் காரணமாக இருநிறுவன இணைப்பு மேலும் தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்

    இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தும் பட்சத்தில் மத்திய டெலிகாம் துறை வோடபோன் இந்தியா உரிமம் மற்றும் வோடபோன் மொபைல் சர்வீசஸ் லிமிட்டெட் உரிமங்களை ஐடியா செல்லுலாருக்கு மாற்றும் பணிகளை துவங்கும். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இருநிறுவனங்களின் இணைப்பு நிறைவுறும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். 

    மற்ற விதிமுறைகளை பொருத்த வரை டெலிகாம் துறை வைத்திருக்கும் வோடபோனின் வங்கி உத்தரவாத தொகையான ரூ.6452 கோடியை ஐடியா தன்வசம் மாற்ற வேண்டும். தற்சமயம் டெலிகாம் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், இருநிறுவனங்கள் இணைப்புக்கு பின் உரிமம் வைத்திருப்பவர் என்ற முறையில் ஐடியா நிறுவனம் வோடபோனின் ஒருமுறை ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை செலுத்த ஒப்புக் கொள்வதாக உறுதியளிக்க வேண்டும். 

    இருநிறுவனங்கள் இணைப்பு மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற புதிய நிறுவனம் உருவாகும், இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களால் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்தனியே ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்படுத்தும் போட்டியை எதிர்கொள்ள முடியாத சூழலில் பயனர்கள் மற்றும் லாபம் உள்ளிட்டவற்றை இழந்து வருகின்றன.

    வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து வருவாய் சந்தையில் 37.5% பங்குகளையும், வாடிக்கையாளர்கள் சந்தையில் 39% பங்குகளுடன் டெலிகாம் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
    ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ பிராட்பேன்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்பட இருக்கும் நிலையில், பிராட்பேன்ட் சந்தையில் சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட இருக்கிறது.

    ஐதராபாத் வட்டாரத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களை தொடர்ந்து ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும். இதே போன்ற சலுகைகள் ஐதராபாத் தவிர மற்ற நகரங்களில் ஏர்டெல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. சென்னையில் ரூ.999 விலைக்கு 300 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.



    ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.1,299 சேவையில் அதிகபட்சம் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இத்தகைய வேகத்தை கொண்டு மின்னஞ்சல், ஆடியோ அல்லது வீடியோ தரவுகளை டவுன்லோடு செய்யவும், இணையத்தில் பிரவுசிங் செய்யவும் முடியும்.

    எனினும் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க 1,100 நகரங்களில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

    ஏர்டெல் சேவைகளில் அன்லிமிட்டெட் டேட்டா சீரான வேகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவற்றில் உண்மையில் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் 3000 ஜிபி-க்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதை வணிக ரீதியிலானவை என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

    அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. இதேபோன்று ஆறு மாதத்திற்கு கட்டணம் செலுத்துவோருக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
    வோடபோன் இந்தியா நிறுவனம் தனது ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை குறைந்த விலையில் அறிவித்துள்ளது.




    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. பேசிக் ரெட் சலுகையின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.299 வோடபோன் ரெட் பேசிக் போஸ்ட்பெயிட் சலுகை அந்நிறுவனத்தின் விலை குறைந்த சலுகையாக இருக்கிறது. மற்ற ரெட் சலுகைகளை போன்றே இந்த சலுகையிலும் வோடபோன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், 20 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் அதிகபட்சம் 50 ஜிபி டேட்டாவுக்கு ரோல்ஓவர் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    மேலும் புதிய சலுகையுடன் 12 மாதங்களுக்கு வோடபோன் பிளே சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை செயலியில் மட்டும் பட்டியலிடப்பட்டு இருப்பதோடு தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி, 25 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பாரதி ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 20 ஜிபி 4ஜி டேட்டா, ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் இலவச வாய்ஸ் கால் உள்ளிட்டவை ரூ.399-க்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை, ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டு பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் முன்பை விட இம்முறை இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    போட்டியை மேலும் கடுமையாக்க பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பங்கிற்கு டேட்டா சுனாமி சலுகையில் தன் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 26 நாட்களுக்கு வழங்குகிறது.

    மேம்படுத்தப்பட்ட ஏர்டெல் சலுகை பயனர்களுக்கு வழங்கப்படுவதாக டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஜியோ வழங்கும் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் வழங்கும் 2500-க்கும் அதிக எஸ்எம்எஸ்-களை விட அதிகம் ஆகும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங்-இல் ஏர்டெல் மற்றும் ஜியோ சார்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

    ஏர்டெல் தவிர ஐடியா செல்லுலார் நிறுவனமும் ரூ.109 விலையில் புதிய சலுகையை சில வட்டாரங்களில் அறிவித்தது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகளில் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்டிரீமிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் - ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.

    ரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.


    கோப்பு படம்

    இதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

    ஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழகத்தில் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.

    தமிழகத்தில் 4ஜி சேவைகளை துவங்கிய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இத்துடன் மாநிலத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் துவங்கி கிராம பகுதிகள், நெடுஞ்சாலைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் அதிவேக மொபைல் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ ஏர்டெல் கட்டமைத்திருக்கிறது.

    தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் சேவையை இதுவரை சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


    'ப்ராஜக்ட் லீக் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக சேவை வழங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத் தேவைக்கு ஏற்ற இணைய கட்டமைப்புகளை உருவாக்க தொடர்ந்து முதலீடு செய்வோம்." என தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்துக்கான ஏர்டெல்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி தெரிவித்தார். 
    ×