search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திரம்"

    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    ‘ஆதிரை, பரணி, கார்த்திகை
    ஆயில்யம், முப்பூரம், கேட்டை
    தீதரு விசாகம் ஜோதி
    சித்திரை மகம் எராரும்
    மாதனம் கொண்டார் தாரார்
    வழிநடைப் பட்டார் மீளார்
    பாய்தனில் படுத்தோர் தேரார்
    பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.

    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.
    பொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.

    பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும் நிலை ஏற்படும்.  கீழ்கண்ட கிழமைகளில் பட்சி அரசாட்சி செய்யும் நேரம் பார்த்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

    எந்த ராசிக்காரர்கள் எந்த கிழைமையில் தங்கம் வாங்கலாம் என்று பார்ப்போம்…..

    மேஷம் - ஞாயிறு, வெள்ளி
    ரிஷபம் - புதன், வெள்ளி
    மிதுனம் - திங்கள், வியாழன்
    கடகம் - ஞாயிறு, திங்கள், புதன்

    சிம்மம் - புதன், வெள்ளி
    கன்னி - சனி
    துலாம் - திங்கள், வெள்ளி
    விருச்சிகம் - சனி

    தனுசு - வியாழன்
    மகரம் - புதன், வெள்ளி
    கும்பம் - புதன், வெள்ளி, ஞாயிறு
    மீனம் - வியாழன், திங்கள்

    ஆகிய நாட்களில் சித்தயோகம் சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில், ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.
    உங்கள் பெயரின் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.
    நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.

    பொதுவாக பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியலாம் என்பார்கள். அது உண்மைதான், ஆனால் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். ஒருவேளை முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருந்தால் கூட அவை இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.

    மூன்றாம் எழுத்து A

    உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து A வாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் காதல் உணர்வு மிகுதியவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி A என்பது ஆற்றலின் அடையாளமாகும், இவர்கள் துணிச்சலானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே உங்களுடைய தன்னம்பிக்கைதான். உங்களுடைய திறமையையும், சாகசத்தையும் எப்போதும் பிறருக்கு காண்பிக்க விரும்புவீர்கள்.

    மூன்றாம் எழுத்து B

    உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து B ஆக இருந்தால் உங்களுடைய அடிப்படை குணம் பாசம் ஆகும். நீங்கள் எப்பொழுதும் உங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை எப்படி அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் சிலசமயம் உங்களுக்குள் எழும் பேராசை உங்களை பலவீனமாக்கும்.

    மூன்றாம் எழுத்து C

    C என்ற எழுத்து மூன்றாவது எழுத்தாக உள்ளவர்கள் இனிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் அப்பாவியான குணத்தாலும், இனிமையாக பழகுவதன் மூலமும் அனைவருடனும் எளிதில் நன்கு பழகக்கூடியவர்கள். அதேசமயம் நீங்கள் காயப்பட்டுவிட்டால் நிச்சயம் அதற்கு பழிவாங்காமல் இருக்கமாட்டார்கள். அனைத்திற்கும் மேலாக உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த குணம் நேர்மை ஆகும்.

    மூன்றாம் எழுத்து D

    D எழுத்தானது சமநிலை, கடின உழைப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இவர்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், பொருட்களை அதற்குண்டான இடத்தில் வைப்பதிலும் அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். உங்களின் எதிர்மறை குணம் என்பது பிடிவாதம் ஆகும்.



    மூன்றாம் எழுத்து E

    பெயரில் மூன்றாம் எழுத்தை E ஆக வைத்திருப்பவர்கள் இயற்கையிலேயே கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்கள். எந்தவித சிக்கலையும் எளிதாக தீர்க்கக்கூடியவர்கள், விரைவான சிந்தனையாளர்கள், வாழ்க்கை மீதான ஆழமான எண்ணம் கொண்டவர்கள். உங்களுடைய வசீகரிக்கும் குணம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் காதல் உறவுகளில் உங்கள் மீது நம்பிக்கை வருவது கடினம்.

    மூன்றாம் எழுத்து F

    இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். காதல் உறவுகளில் இறுதிவரை நேர்மையாக இருப்பார்கள். ஆனால் பழிவாங்கும் எண்ணமும், வேஷமிடும் குணமும் இவர்களுக்கு அதிகம்.

    மூன்றாம் எழுத்து G

    இவர்கள் தனக்கென ஒரு தனிவழியில் வாழ்பவர்கள், அதீத கற்பனைதிறன் மிக்கவர்கள். நீங்கள் அரிவுரையை வெறுப்பவர்கள், உங்கள் எண்ணம்போல வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களின் பலவீனம் சந்தேகம் ஆகும்.

    மூன்றாம் எழுத்து H

    இவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் எதார்த்தமாக பார்ப்பார்கள், அதேசமயம் பணவிஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அடிப்படையிலேயே இருக்கும் வியாபார குணத்தால் இவர்கள் எளிதில் தலைவர்களாக வரமுடியும். தன் இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் உறவுகளில் அதிக பொறாமை படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து I

    இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்ட தூய ஆத்மாக்கள். மற்றவர்களை சார்ந்து இருந்தாலும் ஆழமாக யோசிக்க கூடியவர்கள், இல்லாதவர்களுக்கு யோசிக்காமல் உதவக்கூடியவர்கள்.இவர்களின் பலவீனமும் இதுதான் பலசமயங்களில் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து J


    சுறுசுறுப்பும், ஆர்வமும் இவர்களின் கூட பிறந்த குணங்களாகும். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.



    மூன்றாம் எழுத்து K

    மிகவும் இரகசியமான குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களின் கவனம் எப்பொழுதும் தன் மீதே இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் இவர்கள் எப்பொழுதும் சமநிலைக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

    மூன்றாம் எழுத்து L

    இவர்களுக்கு வாழ்க்கை மீது எப்பொழுதும் ஒரு வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான கண்ணோட்டம் இருக்கும். இவர்களின் துணைதான் இவர்களுக்கு வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் கூடவே பிறந்த சுட்டித்தனம் இவர்களை அனைவரும் விரும்புபவர்களாக வைத்திருக்கும்.

    மூன்றாம் எழுத்து M

    இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை கவர்வதற்கு என எதையும் செய்யமாட்டார்கள், தன் வாழ்க்கையை தன்னுடைய விதிகளின் படி வாழ்வார்கள். இவர்களின் பிடிவாதமும், முன்கோபமும்தான் இவர்களின் பலவீனம்.

    மூன்றாம் எழுத்து N

    N எழுத்து மூன்றாவதாக உள்ளவர்கள் எப்பொழுதும் தான் செய்யும் காரியங்கள் முழுமையானதாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்கள் இயற்கையிலேயே அதிகமாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றாமல் தனக்கென ஒரு வழியை உருவாக்குபவர்கள்.

    மூன்றாம் எழுத்து O

    இரக்கமும், பிரியமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களை கண்ணைமூடிக்கொண்டு நம்பலாம். தனக்கான பாதையை தானே கண்டறிந்து அதனை வடிவமைத்து அதில் செல்லக்கூடியவர்கள். மற்றவர்களின் முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    மூன்றாம் எழுத்து P

    இவர்கள் வாழ்க்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் அனைத்திலும் தான்தான் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதற்காக எந்தவித வேடிக்கையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.



    மூன்றாம் எழுத்து Q

    இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மர்மம் இருக்கும். இவர்கள் மற்றவர்கள் பின்பற்றும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றமாட்டார்கள். நேர்மையான இவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவும், அறிவுரையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயத்தை இழக்க விரும்பமாட்டார்கள். இதுவே சிலசமயம் பலவீனமாகவும் அமையும்.

    மூன்றாம் எழுத்து R

    இவர்கள் அதிகளவு ஞானத்தையும், உள்ளுணர்வையும் கொண்டவர்கள். மற்றவர்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதற்கெனவே பிறந்தவர்கள். அமைதியை விரும்பும் உங்கள் குணமும், வாழ்க்கையை எதார்த்தமாக பார்க்கும் குணமும் அனைவரையும் விரும்பவைக்கும். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து S

    இவர்களை போல சிறந்த நேர்மையானவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவர்களுக்கு காதல் உணர்வு கொஞ்சம் குறைவுதான். இயற்கையாகவே தலைமை குணம் கொண்ட இவர்களின் வசீகரம் எப்பொழுதும் இவர்களை சுற்றி ஆட்களை இருக்க வைக்கும். தங்களுக்கான இலட்சியங்களை எப்பொழுதும் உயர்ந்ததாகவே வைப்பார்கள். உண்மையான இரக்கமும், அரவணைக்கும் குணமும் இவர்கள் கூடவே பிறந்தது.

    மூன்றாம் எழுத்து T

    இராஜதந்திர குணம் அதிகமிக்கவர்கள் இவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புபவர்கள். உங்களின் வெகுளித்தனமும், உதவும் குணமும் அனைவரும் உங்களை விரும்ப வைக்கும். அவர்கள் விரும்பும்படி செயல்கள் நடைபெறாவிட்டால் இவர்கள் எளிதில் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து U

    இவர்கள் எப்பொழுதும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வலிமையான உள்ளுணர்வு மற்றும் மனநிலையை கொண்ட இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எப்பொழுதும் புதிய யோசனைகளை செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களின் ஈகோ காரணமானாக அடிக்கடி தங்கள் உடனிருப்பவர்களை காயப்படுத்துவார்கள்.

    மூன்றாம் எழுத்து V


    இவர்களை போன்றவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு இவர்கள் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் அதீதமான நினைவாற்றல்தான். உறவில் இவர்கள் எப்பொழுதும் பொறாமைபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீதமான அர்பணிப்பே இவர்களுக்கு சிலசமயம் பலவீனமாக அமையும்.



    மூன்றாம் எழுத்து W

    இவர்கள் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர்கள். உறவுகளில் அடிக்கடி நீங்கள் சிக்கல்களை சந்திப்பீர்கள், அதனை சரிசெய்ய உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். உங்களின் செயல்கள் சிலசமயம் மற்றவர்களை அதிக வெறுப்படையச்செய்யும்.

    மூன்றாம் எழுத்து X

    இவர்கள் எந்தவொரு உறவுகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். இவர்களின் பேராசைதான் இவர்களின் மிகப்பெயய பலவீனம்.

    மூன்றாம் எழுத்து Y

    இவர்கள் தங்களின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் நிலை குறித்து அதிக கவலைப்படுவார்கள். இவர்கள் தங்கள் இடத்தில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் இடம் இவர்களுக்கு ஏற்றதல்ல.

    மூன்றாம் எழுத்து Z


    இவர்கல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். இலட்சியத்தை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிறந்த முதலாளிகளாக இருக்க இவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்கவேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.
    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரகாரர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1-ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4-ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகி யவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

    குண அமைப்பு :

    கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

    குடும்பம் :

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.
    இந்து மதம் அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
    நவ ரத்தினங்கள் எந்த காலத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை யாரும் சொல்ல முடிய வில்லையாம். ஆனால் ‘நவரத்தினா‘ என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தி, கன்னடா, பர்மா, இந்தோனேசியா, நேபாளி ஆகிய மொழிகளில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. தமிழிலும், மலையாளத்திலும் நவரத்தினம் என்றும், தெலுங்கில் நவரத்னலு என்றும் அழைக்கப்படுகிறது. அதுதான் நமக்கு தெரியுமே தமிழின் இறுதியில் ஒரு ‘லு‘ சேர்த்தால் அது தெலுங்கு.

    பல நாடுகளில் மன்னர்களும், ராஜ குடும்பத்தினரும் நவரத்தினங்களை பயன்படுத்தியுள்ளனர். இதில் இந்தியா, நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மத, கலாசார வித்தியாசங்களை மீறி பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தாய்லாந்து நாட்டில் நவரத்தினம் என்பது தேசியச் சின்னமாக மட்டுமின்றி மன்னரின் ராஜ சின்னமாகவும் விளங்குகிறது.

    அங்கு மன்னர் மக்களுக்கு அளிக்கும் உயர்ந்த விருதின் பெயர் நொவரட் ரச்சாவரபோன். அந்தப் பதக்கத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்து மதம் அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையிலும் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன.

    எனவே இந்த ஒன்பது ரத்தினங்களை அணிவதன் மூலம் கிரகங்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இவைகளை அணியும் போது குறை இல்லாத நல்ல தரமான கற்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிர்‌ஷ்டத்தை கொண்டு வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்பது கற்களுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது.

    மாணிக்கம் சூரியனை குறிப்பதால் அது நடுவில் இருக்க வேண்டும். அதனைச் சுற்றிலும் கடிகார சுற்றுவாக்கில் வைரம், முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், பு‌ஷ்பராகம் மற்றும் மரகதம் என்று அமைய வேண்டும். நவக்கிரக எந்திரத்திலும் இதே அமைப்புதான் இருக்கிறது. தாய்லாந்து அரசிகள் பரம்பரையாக இந்த அமைப்புள்ள செயின்களை அணிகிறார்களாம். இப்படி பல நம்பிக்கைகளை கொண்டதாக நவரத்தின கற்கள் இருக்கிறது. 
    ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:

    1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

    2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

    3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

    4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

    5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

    6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

    7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

    8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

    9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

    10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

    11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

    12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

    13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

    14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.



    15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

    16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

    17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

    18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.

    19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

    20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

    22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

    23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

    25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

    26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

    27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

    நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.
    சூரியனைப் போல் நட்சத்திரத்தையும் புதிய கோள் ஒன்று சுற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
    சென்னை:

    விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. அதில் புதிய கோள்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையில் என்ஜினீயர்களும், பொறியாளர்களும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில், சூரியனைப் போல் நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சூரியனை பூமி சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். இதுபோல், சனிகிரக பாதைக்கு கீழும், நெட்டியூன் கிரக பாதைக்கு மேலும் இருக்க கூடிய நட்சத்திரத்தை புதிய கோள் ஒன்று சுற்றி வருவதை பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

    நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கோள் பூமியின் எடையை போல் 27 மடங்கு பெரிதானது. பூமியின் ஆரத்தை போல 4 மடங்கு ஆரம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

    இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலை நோக்கியுடன் கூடிய மேம்பட்ட பி.எல்.ஆர். கருவியின் உதவியால் இந்த கோளின் எடையளவு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று துல்லியமாக கிரகங்களின் எடையை கண்டறியும் இது போன்ற நிறமாலை கருவிகள் உலகில் ஒரு சிலதான் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த பாரஸ் நிறமாலை கருவிதான் ஆசியாவிலேயே முதலாவது கருவியாகும்.

    இந்த கண்டுபிடிப்பின் மூலம் நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் உருவாவதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவும். இதன் மூலம் சூரிய குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களை சுற்றியுள்ள கோள்களை கண்டுபிடிக்கும் திறமையுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews
    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்வதில் வல்லவராக, வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்து பார்க்காதவராக இருப்பார்கள்.
    இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலாம் ராசிக்கும், 4-ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும்.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்வதில் வல்லவராக, வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்து பார்க்காதவராக இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணம் கொண்டவராகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேசக்கூடியவராகவும் இருப்பார்கள்.

    விசாக நட்சத்திரகாரர்கள் நல்ல கல்வி பெற்று, அறிவாற்றல் உடையவராக இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோவில் அறநிலையத்துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

    ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

    * அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்.

    மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

    * பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

    * கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

    * ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    * மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

    * திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.



    * புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    * பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

    * ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

    * மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    * பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்.

    * உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    * ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    * சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

    * சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

    * விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    * அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    * கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.



    * மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

    * பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    * உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    * திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    * அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

    * சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    * பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    * உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    * ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். 
    ×