search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைட்டமின்"

    மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
    உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.

    வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.

    வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.

    இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

    நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

    நமது வழக்கமான உணவிலிருந்து வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். 3 காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி சத்தை பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி'யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி'யும் காணப்படுகிறது.
    சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம்.
    உடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியமானது. சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டு முழுவதும் போதுமான அளவு சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. எனினும் நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. 65 முதல் 70 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    உலகளவில் 100 கோடி பேருக்கு வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தாமதமாக தூங்க செல்வது, காலை வேளையில் சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவு பழக்கம் போன்றவை வைட்டமின் டி பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற வைட்டமின்களை போல் அல்லாமல் வைட்டமின் டி உடலில் உள்ள உயிரணுக்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.

    முதுகுவலி தசை வலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கள் வைட்ட மின் டி பற்றாக் குறையால் ஏற்படுவ தாகும். அதிக எடை, உடல் பருமன் கொண்டவர்கள், போதுமான அளவு மீன், பால் பொருட்களை சாப்பிடாதவர்கள், சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்கள், வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து உள் அறைகளிலேயே தங்கி இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாடுக்கு ஆளாக நேரிடும்.
    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
    வைட்டமின்களும், தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமானவை இதன் குறைபாடு பலரிடம் காணப்படுவதன் காரணம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை நாம் இன்னமும் நன்கு பயன்படுத்த முன்வராதது தான் காரணம். பலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாக முறையான உணவு முறையினை பின்பற்ற முடிவதில்லை. மிகச் சாதாரணமாக நாம் காணும் சத்து குறைபாடுகளானது இரும்பு, வைட்டமின் டி, கால்ஷியம் குறைபாடுகள் ஆகும்.

    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். மருத்துவரே உங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    * எப்போதும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு சத்து குறைபாடு போன்றவை இருக்கக்கூடும்.

    * ஆடு தசையில் ஏற்படும் இறுக்கப் பிடிப்பு மக்னீசயம் குறைபாட்டினைக் குறிக்கலாம்.

    * ஈறுகள் வீக்கம், சிறு காயங்கள் ஆற அதிக நேரம் பிடித்தல் போன்றவை வைட்டமின் ‘சி’ குறைபாடாக இருக்கலாம். அதிக புகை பிடிப்பவர்களுக்கு வைட்டமின் ‘சி’ குறைபாடு அதிகம் காணப்படுகின்றது.

    * இரவில் கண் பார்வை குறைதல் (அ) பொதுவாகவே கண் பார்வை குறை போன்றவற்றுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் முக்கிய காரணமாகும்.

    * சிலருக்கு கை, முதுகு லக்கங்களில் கூட பருக்கள் இருக்கலாம்.இதற்கு சரும மருத்துவர் மூலம் சிகிச்சை பெற வேண்டும் எனினும் லிவீஸீநீ குறைபாடு இருக்கின்றதா எனவும் மருத்துவர் மூலம் அறிந்து குறைபாட்டினை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    * வாயில் சிறு புண்கள், உடலில் வித்தியாசமான சரும பாதிப்புகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு இருக்கின்றதா என்று அறியவும்.

    * நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் சில காரணங்களுடன் முக்கியமான காரணமாக வைட்டமின் ‘பி’ குறைபாடும் இருக்கலாம். இந்த வைட்டமின் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு அவசியம்.

    சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கவனிக்க வேண்டும் என்பதற்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    * தொடர்ந்து சோர்வாக இருந்தால் உடனடியாக இதற்கு கவனம் செலுத்துங்கள்.

    * உங்கள் முயற்சி இல்லாமல் திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவு ஏற்பட்டால் ஏன் என மருத்துவர் மூலம் அறியுங்கள்.

    * உடலில் ஏதோ ஒரு பகுதியில் விடாது வலி இருப்பதும், சிகிச்சை பலனின்றி வலிப்பதும் அதிக மருத்துவ கவனம் தேவைப்படுவது ஆகும்.

    * உடலில் கட்டி போல் சிறு உருண்டை இருப்பின் உடனடியாக பரிசோதித்து தீர்வு பெறுங்கள்.

    * அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் பாதிப்பிற்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவை.

    * சருமத்தில் ஏற்படும் திடீர் மச்சம் போன்றவை அல்லது அதில் ஏற்படும் மாறுதல்கள் இருந்தால் அதனை தீர மருத்துவஆய்வு செய்ய வேண்டும்.

    * இருமல் பொதுவாக சளி, காய்ச்சல் இவற்றோடு ஏற்படுவதுதான்.

    * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு பின் மலச்சிக்கல் என்ற அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * இருமலில் ரத்தம், மேலும் பிறப்புறுப்பு, குடல் வெளியேற்றத்தில் ரத்தம் போன்றவற்றுக்கு சிறிதும் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * உணவு, திரவ உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் கவனித்து விட வேண்டும்.
    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.
    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.

    * வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

    * வைட்டமின் பி6, பி 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. வைட்டமின் பி 12 மாமிச உணவு வகைகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் பி 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் பி 6 சத்து உள்ளது.

    * வைட்டமின் ஈ, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். பல்வேறு வகை பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணெய், கோதுமை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது.

    * ஆப்பிள் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க உதவும்.

    * உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    * பூண்டுவை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும். இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை முறையாக கடைப்பிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
    வைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது.
    வைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி எழுத வேண்டி உள்ளது. இன்றைய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு 200 வகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.

    * வைட்டமின் டி குறைபாடால் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளான சளி, ஃப்ளூ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கின்றது.

    * வைட்டமின் டி உடலில் கால்ஷியம் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு முறிவுகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. எலும்புகள் உறுதியாய் இருக்கவும், சமச்சீரான உடல் அசைவுக்கும் வைட்டமின் டி பெரிதும் அவசியமாகின்றது. இதன் குறைபாடு எளிதில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி விடும்.

    * நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் டி வைட்டமின் உதவுகின்றது.

    * குறைந்த வைட்டமின் டி என்பது அதிக உயர் ரத்த அழுத்தம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக வைட்டமின் டி ரத்த அழுத்தம் சீராய் இயங்கவும். இருதய பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகின்றது.

    * சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

    * போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி இருந்து கொண்டே இருக்கும். ஓயாத பசி இருந்தால் வைட்டமின் டி அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * கூர்ந்து கவனித்து செயல்படுவது குறிப்பாக வயது கூடும் பொழுது ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு இத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் இப்பரிசோதனை செய்து வைட்டமின் டி தேவைகளுக்கான மாத்திரைகள் அளிப்பார்.

    குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

    * வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
    உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது.
    இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதியை பெறுகிறார்கள். காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி.யை அனுபவிக்கிறார்கள். மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி செல்கிறார்கள். இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி குளிர்சாதன வசதியை நோக்கி செல்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர் அவர்கள் மேல் விழாத நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

    தாவரங்களுக்கு எவ்வாறு சூரிய ஒளிக்கதிர் தேவைப்படுகிறதோ அதே போன்று தான் மனிதர்களுக்கும் சூரியஒளிக்கதிர் தேவையாகிறது. மனிதன் உயிர் வாழவும், உடல் உறுப்புகள் பலமிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகிறது. உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயற்கை. சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

    இதனால் உடலில் எலும்பு, தசை சம்பந்தமான நோய்கள் தாக்கும். இன்று பலர் இந்த நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சூரிய ஒளி உடலுக்கு தேவை என்பதும் அது கிடைக்காததால் இப்படி நோய் தாக்குகிறது என்பதும் தெரிகிறது. காலை வெயிலும் மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. மதியம் உச்சி வெயில் என்பது உடலுக்கு கெடுதலை தரும். பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக மதியம் உச்சி வெயிலில் நடமாட கூடாது.

    காலை வெயில் தான் வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவானதாகும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு உடையவர்கள் காலை வெயிலில் காலார நடந்து வர உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும். சில ஆலயங்களில் சூரிய வழிபாடு கூட நடைபெறுவது உண்டு. யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்ற உடற்பயிற்சியும் சூரியனை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் செய்யும் போது உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.

    மாயா, திருச்சி. 
    நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    20-ம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் உடல் உழைப்பினை சிறிது சிறிதாக குறைத்து வருகின்றான். சைக்கிள், கார் என வளர்ந்து இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் உலகை வலம் வருகின்றான்.

    பன்னிரெண்டு மணிநேரம் கூட அமர்ந்தே இருக்கும் மனிதர்களுக்கு உடல் அசைவுகள், நடை இவை மிகக்குறையும். ஒரே காரணத்தினால் அவர்கள் ஆயுளைக் கூட அதிகம் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    மேஜை முன்னாடி வேலை என்றாலும் நின்று செய்ய பழகுங்கள். நான் காலையில் ஒரு மணிநேரம் நடக்கின்றேன், உடற்பயிற்சி செய்கின்றேன் என்று சொல்லி மீதி நேரம் அமர்ந்தே வேலை செய்வது உடலை வெகுவாய் பாதிக்கின்றது.

    ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 250 அடிகள் நடக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 2 நிமிடங்களாவது எழுந்து நிற்கவேண்டும். நிற்பதும், நடப்பதும் உடல், மன சக்தியினை கூட்டும். உடல் செயல் பாட்டுத்திறனைக் கூட்டும். மூட்டுகளை இயல்பாய் செயல்பட வைக்கும். புற்றுநோய் தாக்குதலை குறைக்கும். மன உளைச்சலை நீக்கும். இனி அலுவலகத்தில் எல்லோருடனும் நடந்துகொண்டே வேலை செய்வீர்களா?

    கைகள் வலுவடைகின்றன.
    வயிறு தசைகள் இறுக்கம் பெறுகின்றன.
    ஆரோக்கி யமான கால் மூட்டு கிடைக்கின்றது.
    கால்கள் பலம் பெறுகின்றன.

    வைட்டமின் பி12-ன் சில செய்திகளைப் பற்றி அடிக்கடி கூற வேண்டிய அவசியம் மருத்துவ உலகில் உள்ளது. நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தண்ணீரில் கரையும் இந்த வைட்டமின் பி12 பல வருடங்கள் கூட கல்லீரலில் பாதுகாப்பாக சேகரித்து உடலை வைக்கின்றது. இது மிக அவசியம் என்பதால் இதனை பத்திரப்படுத்தி வைக்கும் இயற்கை உந்துதல் உடலுக்கு இருப்பது அதிசயத்தக்க ஒன்றே. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், சீரண மண்டலம், ரத்தக் குழாய்கள், இனப் பெருக்கு மண்டலம் இவை அனைத்திற்கும் மிக முக்கியமானது.

    * ஹார்மோன்  சுரப்புகளை சீர் செய்யும்.
    * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.
    * மாவுச்சத்தினை குளூகோசாக மாற்றும்.
    * புரதம் உடலில் ஏற்று சீராக செயல்பட உதவும்.

     * பொதுவில் சைவ உணவு உடட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவ  ஆலோசனைப்படி பி12 சத்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது கூடும் பொழுது பி12 சக்தியை உணவிலிருந்து உரிஞ்சு சத்து குறையும், ஏனெனில் வயிற்றில் ஆசிட் சுரக்கும் தன்மை குறையும். பொதுவில் ரத்த சோகை, கை கால்களில் குறுகுறுப்பு.

    சோர்வு, மலச்சிக்கல், கண் பார்வை குறைதல், மன நலமின்மை, மறதி, நரம்பு பிரச்சினைகள் இவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படும்.

    உங்கள் மூளையினை சுறுசுறுப்பாக வைக்கின்றது?
    * சக்தி * புரதம் * கார்பன் டை ஆக்சைட்

    உங்கள் உணவினை முழுமையாய் செரிக்க உதவுவது எது?
    * வயிறு மட்டுமே * சீரண மண்டலம் * மூளை

    ஜீரண மண்டலத்தில் உள்ள ஏதாவது மூன்று உறுப்புகளின் பெயர் சொல்லுங்களேன் ?
    உங்கள் சருமம், நகம், முடி, சதை, உள் உறுப்பு, மூளை எவற்றிலுமே புரதம் இல்லை.

    * உண்மை * தவறு
    வைட்டமின் டி யினைக் கூறும் மற்றொரு பெயர் என்ன?

    * தூக்க வைட்டமின் * சூரிய ஒளி வைட்டமின்

    நம்மை வேலை செய்ய ஏதுவாக்குகின்றது எது?
    * சக்தி * ஜீரண உறுப்புகள் * நுரையீரல்

    உணவில் உள்ள இதுதான் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது?
    * புரதம் * நார் சத்து * கொழுப்பு சத்து
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும்.
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

    அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

    காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

    கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.

    பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

    நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.

    ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள். வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

    * வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்
    நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
    மன அழுத்தத்தில் இருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக கார்டிசால் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகமாகி பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.

    அதிலிருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. வைட்டமின் சி, கார்டிசால் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆதலால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம்.

    * புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி பழ வகைகள் வைட்டமின் சி அதிகம் நிரம்பப்பெற்றவை. அவற்றுக்கு மன நிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் கார்டிசால் ஹார்மோனுக்கு எதிராக போராடி இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். அவற்றை சாலட்டுகளிலோ, இனிப்பு பலகாரங்களிலோ சேர்த்து சாப்பிடலாம்.



    * தக்காளி பழங்களில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் அதிகம் இருக்கின்றன. அவை மன அழுத்தம் மட்டுமின்றி புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும் தன்மை கொண்டவை. அவற்றை சாண்ட்விச்களிலோ, சாலட்டுகளிலோ, புதினாவுடன் சேர்த்து தக்காளி ஜூஸாகவோ பருகலாம்.

    * தக்காளி, பெர்ரி பழங்களை விட சிவப்பு முள்ளங்கியில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளடங்கி இருக்கிறது. அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * முலாம் பழமும் அதிக அளவில் வைட்டமின் சி சத்து கொண்டது. ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 90 சதவீதத்தை இதன் மூலமே பெற்றுவிடமுடியும். 
    நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
    வைட்டமின்கள், தாது உப்புகள் பற்றி நிறைய தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அதனை சரியாகப் பெறுகின்றோமா, பயன் படுத்துகின்றோமா என்றால் முழுமையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கு சிறிதளவு பலன் கூட கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை அவர்கள் மருத்துவரிடம்சென்று பெறவில்லை என்றே சொல்லலாம்.

    அதில் வைட்டமின் பி12 பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.

    நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ரத்த சிகப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறிப்பிட்ட பிரிவு ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் பொழுது ரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக சோர்வு, சக்தியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த வைட்டமின் பி12 அதிக அசைவ உணவுகளான மீன், முட்டை, பால், மாமிச உணவுகள் இவற்றில் உள்ளது. சோயா, பாதாம் இவற்றிலும் உள்ளது.
    வைட்டமின் பி12 இருதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு பாதிப்பு குறைகிறது.

    ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:

    பி12 உங்கள் நரம்பு மண்டலத்தினை மிகச் சிறப்பாக பாதுகாக்கின்றது. இதில் குறைபாடு இருக்கும் பொழுது கை, கால் விரல் நுனிகளில் மரத்து போதல், ஊசி குத்துவது போல் இருத்தல், குறுகுறுப்பு போன்ற பாதிப்பினை உணர்வீர்கள். வைட்டமின் பி12 மையலின் என்ற ஒரு உறையினை நரம்புகளின் மீது அளித்து நரம்பினை பாதுகாக்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நரம்பு மண்டலம் சீராய் இராது.

    வைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்

    * கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, குறுகுறுப்பு போன்றவை.
    * ரொம்பவும் ஓய்ந்து போகுதல்
    * வெளிரிய அல்லது மஞ்சள் நிற சருமம்.
    * வைட்டமின் பி12 குறைபாடு மஞ்சள் காமாலையினைக் கூட ஏற்படுத்தலாம்.
    * மிக அதிக அளவு பி12 குறைந்து இருந்தால் சில வகை புற்று நோய் பாதிப்பிற்கான ஆய்வுகள் செய்யப் படுகின்றன.
    * சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

    * சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
    * நெஞ்செரிச்சல் பாதிப்பு உடையவர்கள் அதற்கான மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
    * அதிக ஞாபக மறதி ஏற்படுகின்றதா? உங்கள் பி12 அளவினை மருத்துவர் மூலம் சோதித்து குறைபாட்டினை சரி செய்து கொள்ளுங்கள்.
    * 50 வயதினைத் தாண்டியவர்களுக்கு வயிற்றில் ஆசிட் சுரப்பது குறைந்து இருக்கும். வயிற்றில் ஆசிட் பி12 சத்தினை உறிஞ்சிக் கொள்வதற்குத் தேவையாகின்றது. எனவே 50 வயதினைத் தாண்டியவர்கள் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுங்கள்.
    * உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தினைப் பற்றி கூறிவிடும். பி12 குறைபாடு நாக்கில் வீக்கத்தினைக் கொடுக்கும். இதனால் சாப்பிட, பேச கடினமாய் இருக்கும்



    வைட்டபின் பி 12 குறைபாடு கண் நரம்பியல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம். பி12 குறைபாடு தொடரும் பொழுது நடப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு விழுந்து விடலாம். சருமம் பொலிவின்றி இருக்கலாம். பி12 குறைபாடு வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ உதவியுடன் பி12 எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கம்பீரமான தோற்றம்: நிமிர்ந்து நிற்றல், கூன் போடாது இருத்தல், நாற்காலியில் நத்தை போல் சுருண்டு அலுங்காது நிமிர்ந்து அமருதல். இவை அனைத்தும் நம் தோற்ற மதிப்பினைக் கூட்டும். தன்னம்பிக்கையினைத் தரும். உடலினை ஆரோக்கியமாய் வைக்கும். நடக்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ, வண்டி வாகனம் ஓட்டும் பொழுதோ முதுகு நிமிர்ந்து இருப்பதே சரியானது. உங்களை நீங்களே கவனித்து பாருங்கள்.

    இவ்வாறு நீங்கள் இல்லை என்று உங்களுக்கே புரியும். அநேகமாக நீங்கள் அமரும் நாற்காலி முறையானதாக இல்லாது இருக்கும். பைக், சைக்கிள் இவற்றில் செல்பவர்கள் கூட படிந்து, கோணலாகத்தான் செல்கின்றனர். இதன் பெயர் ஸ்டைல் என்று கூறிக் கொள்கின்றனர். முறையான வழிகளை நீங்கள் கடை பிடிக்காவிட்டால் உங்கள் தண்டு வடம் சுருண்டு, உருவிழந்து ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    நிமிர்ந்து அமருதல்: நிமிர்ந்து அமருவதன் மூலம் நம் மூளைக்கு நாமே செல்லித் தருகின்றோம். ‘நான் ஆரோக்கியமாய் இருக்கின்றேன்’ என்று. கூன் போட்டு, வளைந்து உட்காருவது நம் மூளையினை ரொம்ப சோர்வாக, மன உளைச்சலுடன் உணரக் செய்யும். ஆக நாம் மேலும் சோர்வாக மன உளைச்சலுடன் இருப்போம்.

    நிமிர்ந்து அமருவது நம்மை ஆக்கப் பூர்வமாகவும் மகிழ்வாகவும் ஆக்கும். மேலும் மடங்கி சுருங்கி அமர்பவர்கள் எப்போதும் சோகமாக, அழிவுப் பூர்வமாகவே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாம். நிமிர்ந்து அமர்தல் முறையான சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும். மடிந்து, கோணலாக அமரும் பொழுது சீரான ரத்த ஓட்டம் இருப்பதில்லை.

    நிமிர்ந்த தோற்றம் ஜீரண சக்தியினை சீராக்கும். நிமிர்த்த தோற்றம் தலைவலி பாதிப்பு இல்லாது இருக்கும். கழுத்து இறுகாது, வலு விழக்காது இருக்கும்.
    நிமிர்ந்த தோற்றம் முதுகு வலி இல்லாது இருக்கச் செய்யும். இவற்றினைப் படித்த பிறகு நிமிர்ந்த நடை, கூனின்றி அமர்தல், முறையாக வண்டி ஓட்டுதல் ஆகியவற்றினைச் செய்வோமாக.
    ×