search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95877"

    இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
    செய்முறை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்

    இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    6369940440
    நாம் முத்திரை பயிற்சி மூலமும், உணவில் ஒழுக்கத்தின் மூலமும் அடிக்கடி மலம் கழிக்கும் குறையை நீக்கிவிடலாம். இப்பொழுது முத்திரை சிகிச்சையாக பார்க்கப் போகின்றோம்.
    அபான முத்திரை: நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடிபவர்கள் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல், மோதிரவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். படத்தை பார்க்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    பிருதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். விரிப்பில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிரவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேர இடைவெளி வேண்டும்.

    சுத்தப்படுத்தும் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை தேடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரலின் முதல் பகுதியில் பெருவிரல் நுனியால் தொடவும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    மாதங்கி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    முகுள முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் செய்யவும்.

    மணிப்பூரக சக்கரா தியானம்

    மேற்குறிப்பிட்ட முத்திரைப் பயிற்சி செய்தவுடன் ஒரு எளிய மணிப்பூரக சக்கரா தியானம் செய்ய வேண்டும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். உங்களது மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். நல்ல பிராண காற்று வயிற்று உள் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    வஜ்ராசனம்: விரிப்பில் ஒவ்வொரு காலாக மடித்து படத்தில் உள்ளது போல் வஜ்ராசனம் போடவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் நீங்கள் இருக் கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் உங்களுக்கு ஒரு யோகச் சிகிச்சையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிக்கையுடன் காலை, மாலை இரு வேளை பயிற்சி செய்யுங்கள்.

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது. ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர்.
    செய்முறை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது. ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர். எப்பொழுதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இது உடல் ரீதியாக இருக்கும் ஒரு குறைபாடுதான். ஜீரண மண்டலம் சரியாக இயங்குவதில்லை. மலக்குடலில் சக்தி ஓட்டம் சரியாக இல்லை.

    உடலில் நிலம் மூலகம் நல்ல சக்தி ஓட்டம் பெறாமல் உள்ளது. இதனால் ஆசனவாய் தசைகள் வெளியே வரும் நிலை, மூலவியாதி, ஆசன வாய் தசைகளில் புண் ஏற்படுகின்றது. அடிக்கடி மலம் கழிப்பதால் ஆசன வாய் தசைகளின் உட்புறப் பகுதியில் புண் ஏற்படுகின்றது. இந்நிலையில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்குரிய யோக முத்திரை இதுவாகும்.

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது.
    உள்ளங்கையில் தான் எல்லா உறுப்புகளுக்கும் ஆதாரப் புள்ளி உள்ளது. வண்டிக்கு அச்சாணி மாதிரி, அதிகாலையில் 10 தடவை கை தட்டினால் அனைத்து நரம்புகளும் நல்ல முறையில் செயல்படும். ஒரு நாள் முழுவதும் உற்சாகம் இருக்கும். பொதுவாக ஒருநகைச் சுவைப்படம் பார்க்கும் பொழுது கைதட்டிச் சிரித்துப் பார்க்கிறோம் அல்லவா? அப்பொழுது நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்குவதாகவும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கை தட்டுவது ஒரு உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், காலையில் மறவாமல் கை தட்டினால் போதும். அதைப் போலவே முத்திரைகள். இந்த முத்திரைகள், எத்தனையோ நோய்களுக்கு தீர்வு சொல்கின்றது. நீரழிவு நோயில் இருந்து நிம்மதி கிடைக்க உதவுகிறது.

    சிறுநீரகத்தை வலுப்படுத்துவதற்கு கூட முத்திரை உள்ளது. நடுவிரலும், மோதிர விரலும் சேர்ந்து பெருவிரலைத் தொட வேண்டும். ஆட்காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி வைக்கவேண்டும். இந்த முத்திரை காதைத் தூக்கி இருக்கும் நாயைப் போல இருக்கவேண்டும். இதன் பலன் சிறுநீரகத்தை வலுப்படுத்தும். நீரழிவு நோயினால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கும்.
    ×