search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்"

    லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். #TNAssembly #Lokayukta
    சென்னை:

    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்டம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் சட்டசபையில் விவாதமே இல்லாமல் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சார்ந்தவர்கள், 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சாராதவர்கள். தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    அதாவது 25 ஆண்டுகள் ஊழலுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. யார் செயலாற்றியவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை இந்த தலைவர் பதவிக்கு நியமிக்கலாம்.

    தேர்வு செய்யும் குழுவில் 3-ல் 2 பங்கு என்ற பெரும்பான்மை அடிப்படையில் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்குழுவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அல்லது பணியில் இருக்கும் நீதிபதி இடம் பெறவில்லை.

    மேலும், ஒப்பந்த பணி தொடர்பாக ஊழல் புகார் கொடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. ஊழலே ஒப்பந்த பணியில் தானே நடக்கிறது. அது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்றால், எது சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும்?

    பொய் புகார் என்று தெரிய வந்தால், சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என்று சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சட்டம் ஊழலை ஒழிக்காது. லஞ்ச ஒழிப்புத்துறை போல கூடுதலாக ஒரு துறையாக இந்த லோக் ஆயுக்தா செயல்படும் என்று தான் கூறவேண்டும்.

    மேலும், எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்கள் மாநிலத்திலும், லோக் ஆயுக்தா அமைத்து விட்டோம் என்று கூறுவதாக, இப்படி ஒரு அவசர நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த சட்டம் குறித்து பெண் வக்கீல் ஆர்.சுதா கூறியதாவது:-

    நாட்டில் ஊழல் என்ற பேயை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்பதற்காக மாநில அளவில் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஊழல் ஒழிந்தால் தான், மக்களுக்கு நல்ல தரமான இலவச கல்வி, குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் தங்கு தடையின்றி கிடைக்கும். இந்த நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை பார்க்கும்போது, அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிர்மாறாக உள்ளது. பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஓர் ஆண்டு சிறை என்று கூறியுள்ளது.

    அப்படி என்றால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார் சொன்னால், அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும். பெரும் தொகையான ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டும் விதமாக உள்ளது.

    இந்த லோக் ஆயுக்தா சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. அவர்களே உருவாக்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்த லோக் ஆயுக்தா சட்டம் பொதுமக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக அரசு செய்யும் கண்துடைப்பு நாடகம் ஆகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #TNAssembly #Lokayukta
    கோவை அருகே ரூ.2½ கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்தியது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
    கோவை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜாக்கோ பிடல் (வயது 45). தொழில்அதிபர்.

    இவர் கன்னியாகுமரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை பாப்ப நாயக்கன்பாளையயத்தில் அலுவலகம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.

    நேற்று மதியம் அலுவலகத்துக்கு 10 பேர் கொண்ட கும்பல் கார்களில் வந்தனர். உருட்டு கட்டையால் அலுவலகத்தை சூறையாடிய கும்பல் அலுவலக ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பெண் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

    பின்னர் கும்பல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு ஜாக்கோ பிடல், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் ஜாக்கோ பிடல்டிடம் ரூ.2½ கோடி பணம் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

    அவர் பணம் இல்லை என கூறவும் ஆவேசமடைந்த கும்பல் ஜான் கோ பிடலையும், மனோகரனையும் 2 கார்களில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் ரூ.2½ கோடி கொடுத்தால் இருவரையும் விட்டு விடுவோம், இல்லையென்றால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அவர்களை கடத்தி சென்றனர்.

    கும்பல் போகும் போது அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.க் கள், 4 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர்கள், காமிராக்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

    சம்பவஇடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த னர். அதன்மூலம் ஜான் கோ பிடல், மனோகரன் ஆகியோரை கடத்தி சென்ற கார்களின் எண்களை கைப்பற்றி மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர்.

    சிறிது நேரத்தில் மனோகரனை பீளமேடு பகுதியில் கடத்தி கும்பல் இறக்கி விட்டு சென்று விட்டனர். ஜாக்கோ பிடல்டை சேலத்தை நோக்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து சேலம், நாமக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காரில் சென்ற ஒரு கும்பலை நேற்று இரவு போலீசார் மடக்கினர். விசாரணையில் ஜாக்கோ பிடலை கடத்தியவர்கள் என்பது தெரிய வந்தது. காரில் இருந்த ஜாக்கோ பிடலை மீட்ட போலீசார் அவரை கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கம்பையநல்லூரை சேர்ந்த கார்த்திக் (வயது 36), ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த வக்கீல் போஸ் முருகன்(37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்(25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இவர்களுக்கும் ஜாக்கோ பிடல்டுக்கும் பணப் பிரச்சினை இருந்ததாகவும், ஜாக்கோ பிடல் பல மாதங்களாக பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவரை கடத்தியதாக கூறினர்.

    இந்த சம்பவத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை சேர்ந்த கரிகாலன் (40), அரூரை சேர்ந்த கோகுல் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவானதாக இல்லை என்று நீதிபதிகள், மூத்த வக்கீல் கருத்து கூறியுள்ளனர். #BanSterlite
    சென்னை:

    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் போராட்டம், கடந்த மே 22-ந்தேதி நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர்.

    இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை இழுத்து மூட மே 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இத்துடன் பிரச்சினை முடிந்ததா?, இனி இந்த நிறுவனம் செயல்படாதா? அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து விடுமா?, அரசாணை ரத்தாகி விடுமா? அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்குமா? என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் கேட்டால், தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம். அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘இப்படி ஒரு அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியின்போது விதிக்கப்படும் விதிமுறைகளை மீறினால், அந்த அனுமதியை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த விதிமீறலை சரி செய்துவிட்டு, மீண்டும் அனுமதி கேட்க அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு அதிகாரமே கிடையாது’ என்றார்.

    மேலும் அவர், ‘வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டினால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் இருக்கிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த நிறுவனம் மூடப்பட்டால், அதற்கான இழப்பீடு அனைத்தையும் மாநில அரசான தமிழக அரசுதான் வழங்க வேண்டும்’ என்றார்.

    ஆனால், இந்த அரசாணையே பலவீனமானது என்கிறார் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன். அவர் கூறியதாவது:-

    நான் வக்கீலாகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்தவன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர்அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங்களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணையை வெளியிட்டு இருக்கவேண்டும்.

    ஆனால், 2 பக்கம் கூட அரசாணை இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டு காரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும்.

    அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொதுமக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.

    அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்த காரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யாமல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள்.

    உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டசபை நடக்கிறது. சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.

    ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா? நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம் என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் பேட்டியில் கூறியது உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா?

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பேர் மக்களுக்கு எதிராக உள்ளனர். 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விரிவாக தீர்ப்பு அளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அப்போது மத்திய அரசும், மாநில அரசும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படாததால், மீண்டும் அந்த தொழிற்சாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.

    எனவே, வலுவில்லாத அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, பழியை நீதித்துறையின் மீது போட தயாராகி விட்டது.

    இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்.

    இந்த அரசாணை குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல், வனம், வன விலங்குகளை பாதுகாக்க மாநில அரசுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 48ஏ வின்படியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1)(பி)யின்படியும், பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், இந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரு தொழிற்சாலையை மூட அரசு கூறும் காரணமா?

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்கள்.

    ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிருந்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு சென்றார். ஆய்வு செய்தார். அங்குள்ள தண்ணீர், நிலம் மாசு அடைந்திருப்பதை உறுதி செய்தார். அங்கிருந்த போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நாற்றத்தை உணர்ந்தார். அதன்பின்னர், நீதிபதிகள் இருவரும் விரிவான தீர்ப்பை கூறி, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டார்கள்.

    அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தெந்த விதிகளை மீறியுள்ளது? எதற்காக இந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடுகிறோம்? என்று பல பக்கங்களுக்கு பல காரணங்களை கூறி, தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள காரணங்களை கூறி, இப்போது கூட தமிழக அரசு விரும்பினால், புதிதாக கூடுதல் அரசாணை ஒன்றை பிறப்பிக்க முடியும். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம், அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு முன்பாக, கூடுதல் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BanSterlite
    சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews
    ×