search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95897"

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. #ICC
    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
    கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐசிசி கண்டித்துள்ளது. அத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 39-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின்போது, ஆடுகளத்தின் அபாயகரமான பகுதி (Danger)-யில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.



    இதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. போட்டி முடிந்த பின்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை ஐசிசி எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியது. இத்துடன் ஆண்டர்சன் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளார்.
    இந்திய அணியின் கேப்டனும், ரன் மெஷினும் ஆன விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. #HappyBirthdayVirat
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், 2010-ம் ஆண்டு டி20 போட்டியிலும், 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.

    கடந்த 2015-ல் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 24 சதம், 19 அரைசதங்களுடன் 6331 ரன்கள் குவித்துள்ளார். 216 ஒருநாள் போ்டடியில் 38 சதங்கள், 48 அரைசதங்களுடன் 10232 ரன்கள் குவித்துள்ளார். 62 டி20 போட்டியில் 18 அரைசதங்களுடன் 2102 ரன்கள் குவித்துள்ளார்.

    இந்திய அணியின் ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள். 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி பிறந்த விராட் கோலி இன்று 30 வயதை நிறைவு செய்து 31-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் விரைவாக 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனை்ப படைத்தவர். கேப்டனாக ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ரன்களை விரைவாக கடந்தவர். ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம், 16 ஆயிரம், 18 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்தவர்.
    இந்தியாவின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இன்று அதிகாரப்பூர்வமாக ஹால் ஆஃப் ஃபேம் கவுரவ பட்டியலில் இணைந்தார். #IndvWI #BCCI #Dravid
    ‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் கவுரவ பட்டமாகும். இந்த கவுரவ பட்டியலில் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இணைக்கப்படுவார் என்ற ஐசிசி தெரிவித்திருந்தது.

    இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஹால் ஆஃப் பேம் பட்டத்திற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை டிராவிட்டிடம் வழங்கினார். இதன்மூலம் ராகுல் டிராவிட் கவுரவமான இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.



    164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார். ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் ஏற்கனவே இந்தியாவின் பிஷன் சிங் பேடி, கபில்தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சாவை சஸ்பெண்டு செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. #ICC ##NuwanZoysa
    துபாய்:

    இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சா. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சூதாட்ட குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

    நுவான் ஜோய்சா மீது மேட்ச் பிக்சிங் மற்றும் அணியின் தகவல்களை பலருக்கு பரிமாறியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அவர் இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஊழலில் சிக்கி திணறி வருகிறது. ஏற்கனவே முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு தலைவருமான ஜெய சூரியா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.

    இதே போல் காலே மைதான ஆடுகள பராமரிப்பாளர் ஜெயநந்தா வர்ண வீராவுக்கு ஊழல் தடுப்பு விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் 3 ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #ICC #NuwanZoysa
    இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சனத் ஜெயசூர்யா மீது ஐசிசி, ஊழல் தடுப்புப் பிரிவில் குற்றம் சுமத்தியுள்ளது. #Jayasuriya
    இலங்கை அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சனத் ஜெயசூர்யா. ‘பவர் பிளே’ ஓவர்களில் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் எப்படி விளாச வேண்டும் என்பதை சர்வதேச போட்டியில் அடித்து காண்பித்தவர் ஜெயசூர்யா. 1996-ம் ஆண்டும் இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணியின் தேர்வுக்குழு சேர்மனாக இருந்தார். 2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார்.



    இந்த காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில் சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு ஆஜராகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    இன்றில் இருந்து இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
    மீடூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோர ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். #MeToo #BCCI
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. கிரிக்கெட் வாரியத்துக்கு வருவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. அவர் அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் வருகிற 17 மற்றும் 18-ந்தேதியில் சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொள்ள இருக்கிறார்.
    புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிசிபி புகாரை விசாரிக்க தொடங்கியது ஐசிசி. #BCCI #PCB #ICC
    மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.



    இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

    பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி-யின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் நேற்று விசாரணையை தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்தனர்.



    இந்த வழக்கு விசாரணைக்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ளன. அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    டக்வொர்த் லீவிஸ் மற்றும் வீரர்கள் நன்னடத்தை விதிகளில் கொண்டு வந்துள்ள ஐசிசி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. #ICC
    டக்வொர்த் லீவிஸ் மற்றும் வீரர்களின் நடத்தை விதிமுறைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுசிலிங் (ஐசிசி) கொண்டு வந்துள்ள மாற்றம் இன்று முதல் அமலாகிறது. டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் (டி.எல்.எஸ்) விதிமுறையில் கடந்த 2014-ம் ஆண்டு புதிய மேம்பாட்டு திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இது கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 700 ஒருநாள் போட்டி மற்றும் 428 இருபது ஓவர் போட்டிகளில் வீசப்பட்ட 2,40,000-க்கும் மேலான பந்துகள் கருத்தில் கொள்ளப்பட்டது. இதில் பவர்பிளே உள்பட அனைத்து பந்துகளிலும் எடுக்கப்படும் ரன் விகிதத்தை ஆய்வு செய்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் மூலம் அணிகள் தங்களது ரன் குவிக்கும் வேகங்களை அதிகரித்துள்ளன. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் சராசரி ரன்கள் உயர்ந்துள்ளன. இதன் மூலம் இன்னிங்சின் கடைசி கட்டத்தில் அதிகரித்துள்ள ரன் குவிப்பு விகித அதிகரிப்பையும் இந்த புதிய திருத்தம் உள்ளடக்கும்.



    ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் என இரண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்ட ஒரே டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதிமுறை பொருந்தும்.

    வீரர்கள் நடத்தை விதி மீறலில் 3 நிலை குற்றத்துக்கு விதிக்கப்படும் அதிகபட்ச இடை நீக்கப்புள்ளிகள் 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை). இந்த புதிய மாற்றங்கள் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அமலுக்கு வருகிறது.
    கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கடந்த ஓராண்டில் ஐந்து கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக ஐசிசி அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. #ICC
    கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடைபெறுவதை தடுக்க ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு வீரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகி விடுகிறார்கள். சில வீரர்கள் பேராசைப்படுவதால் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கி கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 5 கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகி உள்ளதாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பொது மேலாளர் அலெக்ஸ் மார்‌ஷல் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த ஒராண்டில் மட்டும் 5 சர்வதேச கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) அணுகியுள்ளனர். ஆனால் அந்த கேப்டன்களின் பெயர்களை இப்போதைக்கு நாங்கள் தெரிவிக்கமாட்டோம்.

    ஆசிய கோப்பை போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ‌ஷேசாத்தை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ப்ரிமீயர் ‘லீக்’ போட்டி சார்ஜாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இந்தப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அவரிடம் புக்கிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பான புகாரை ‌ஷசாத் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியைவிட 20 ஓவர் ஆட்டங்களில்தான் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் சூதாட்ட வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.



    20 ஓவர் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாததால் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகுகின்றனர். தனியாக நடத்தப்படும் 20 ஓவர்கள் போட்டிகளில் சூதாட்டத்தை தடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    பெரும்பாலான சூதாட்ட தரகர்கள் இந்தியர்கள். அவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக 32 விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 23 சம்பவங்களை வீரர்கள், நடுவர்கள் தெரிவித்தவையாகும். 8 சம்பவங்களில் வீரர்களின் செயல்பாடு சந்தேகத்தை அளித்துள்ளது. இதில் 4 முன்னாள் வீரர்களிடம் இன்று வரை விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அலெக்ஸ் மார்‌ஷல் கூறியுள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். #Ashwin
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். தனது மாயாஜால ஆஃப் ஸ்பின்னால் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் வல்லமையும் படைத்தவர்.

    இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 2016-ல் ஐசிசியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளையும்,  300 விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற புகழையும் பெற்றுள்ள அஸ்வின் இன்று தனது 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.



    இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அஸ்வின், 2011-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

    இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 முறை ஐந்து விக்கெட்டுக்கள், 7 முறை 10 விக்கெட்டுக்களுடன் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 4 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2289 ரன்கள் அடித்துள்ளார்.

    111 ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுக்களும், 46 டி20 போட்டியில் 52 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
    ×