search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்போர்ட்"

    கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற ஆர்.டி.ஐ கேள்விக்கு, அதற்கான ஆவணங்களை பராமரிக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MEA #RTI
    புதுடெல்லி:

    தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையராக இருந்தவருமான ஷைலேஷ் காந்தி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார். 

    அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?, அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?, தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஆகிய கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி கடந்த 15-ம் தேதி பதில்களை அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை எனவும் மற்ற கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதியை சுட்டிக்காட்டி பதில் தெரிவிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

    ஆவணங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றாலோ, பொதுமக்களின் தகவல்கள் கசியும் என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்க தேவையில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.

    மாறாக, கடந்த 2015-ம் ஆண்டு மனோரஞ்சன் ராய் என்பவர் 2012 முதல் 2013 வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களுக்கு, 2012-ல் 73,89,558 பாஸ்போர்ட்கள் மற்றும் 2013-ல்  58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் முறையான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த அனைத்து சேவைகளை வழங்கும் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். 

    இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.



    பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.
    தேச துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜாராகாத பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை முடக்கம் செய்யப்பட்டது. #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74). இவர் 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

    இவர் பதவியில் இருந்த போது 2007-ம் ஆண்டு அவரை நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலரை வீட்டு காவலில் வைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.

    தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு கோர்ட்டில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக மு‌ஷரப்புக்கு பல தடவை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது துபாயில் தங்கியிருக்கிறார். அதனால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    அதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது.

    ஏற்கனவே இந்த வழக்கில் மு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடும்படி உள்துறை அமைச்சகத்துக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மு‌ஷரப்பிற்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. #PervezMusharraf
    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

    அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

    இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy
    ×