search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, தரிசன வரிசையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

    அதில் இலவச தரிசனத்துக்கு 20 மணிநேரமும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 மணிநேரமும், டைம் ஸ்லாட் பக்தர்களுக்கு 5 மணி நேரமும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 5 மணி நேரமும் ஆனது.

    அன்னபிரசாத கூடம், லட்டு பிரசாத கூடம் மற்றும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால் பூங்காக்களிலும் சாலை ஓரமாக சொந்த வாகனங்களிலும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். மேலும் ஆங்காங்கே காணப்படும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம்.

    இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.
    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதியில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் புரிபவர்களை கண்டறிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் பக்தர்கள் போல் நடித்து சகபயணிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்து வந்ததை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். அந்த கும்பல் தங்கியிருந்த இடத்துக்கு சென்று 5 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த பேலா (45), ரேணுகா (55), கார்த்திக் (20), சந்தோஷ் (28), வாணிஸ்ரீ (50), சவிதா (30), நாகராஜூ (21), மது (20), அனூப் (24) என்பது தெரியவந்தது.தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்க்ள் அனைவரும் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேடு உற்சவமும், கோதாதேவி பரிநய உற்சவமும் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.

    பார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.

    அந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி அருகே நக்சலைட் என கூறி தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த பீலேரு பகுதியை சேர்ந்தவர் போய கொண்டப்பா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பாபு (45), ரவி (42). சகோதரர்களான இருவரும் பீலேரு பகுதியில் சிமெண்டு மற்றும் ஸ்டீல் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி பாபு, ரவி ஆகியோருக்கு போய கொண்டப்பா செல்போனில் தொடர்பு கொண்டு நான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன். எனவே எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் உங்களுடைய வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து குடும்பத்துடன் காலி செய்து விடுவேன், இது குறித்து போலீசுக்கு சொல்ல கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

    மேலும் ரூ.10 லட்சத்தை பையில் வைத்து பீலேரு-சித்தூர் ரெயில்வே கேட் அருகே வைத்துவிட்டு சென்று விடவேண்டும் என கூறியுள்ளார்.

    இதையடுத்து பாபு, ரவி இருவரும் பீலேரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சோமசேகரிடம் புகார் அளித்தனர்.

    போலீசாரின் அறிவுரையின் பேரில் பையில் சிறிதளவு பணத்தை வைத்து நேற்று ரெயில்வே கேட் அருகே வைத்துள்ளனர். அப்போது பணத்தை எடுக்க வந்த போய கொண்டப்பாவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் போட்டியின் போது பணம் வைத்து பெட் கட்டியதால் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் கடன் தொல்லை காரணமாக பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து போய கொண்டப்பாவை பீலேரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Tirupati #NewYear2019
    ஆங்கில புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கானது. யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டையே தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் எனக்கூறி, ஆந்திராவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான சிறப்பு முன்னேற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என ஆந்திர அரசு அறநிலையத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

    அதன்படி, 2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோவிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதித்தோமோ அதேபோல், 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளோம், எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்றும் (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) இரு நாட்கள் ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் கார்டு வழங்குவது, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட்டதோ, அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கான தரிசன நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடக்கின்றன. 1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.#Tirupati #NewYear2019
    திருப்பதியில் கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தையை மராட்டிய போலீசார் உதவியுடன் திருமலை போலீசார் மீட்டனர். #Tirumala #Maharashtra #BoyAbducted
    திருப்பதி:

    மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது இவருடைய 1½ வயது ஆண் குழந்தை வீரேசை காணவில்லை.



    இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது உறுதியானது.

    இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இந்தநிலையில் மராட்டிய போலீசாரின் உதவியுடன் திருமலை போலீசார், லத்தூர் பகுதியில் குழந்தையோடு சுற்றித்திரிந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் லத்தூர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (57) என்பது தெரியவந்தது. அவர் குழந்தையை கடத்தியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், குழந்தை வீரேசை பத்திரமாக மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி எர்ரவாரி பாளையம் என்ற இடத்தில் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கொண்டிருப்பதாக திருப்பதி மாவட்ட வன அலுவலர் நாகார்ஜூனுக்கு ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறையினர் ஏர்வாரி பாளையம் வனப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வனத்துறையினர் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

    அவர்களில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் வேலூர் மாவட்டம் அனைக்கட்டை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 37), என்பது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அதேப்போல் பாஜிராப்பேட்டையில் வனத்துறை அதிகாரிகள் ஜோதி, வினோத்குமார், வசந்தன் குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை மட்டும் வனத்துறையினர் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் விட்டு சென்ற 33 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பவரிடம் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 30), என தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    திருப்பதியில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது 1½ வயது மகன் வீரேஷ். பிரசாந்த் ஜி ஜாதவ் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கினர்.

    இந்தநிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் ஜி ஜாதவ் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமலையில் குழந்தை கடத்தல் சம்பங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தேவஸ்தானம் பல்வேறு இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளது. அதன்பின் சற்று குறைந்திருந்த குழந்தைக் கடத்தல் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

    குழந்தையை கண்டு பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    திருப்பதியில் உள்ள நடைபாதை மார்க்கத்தில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அவ்வழியாக மர்மநபர் திருப்பதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திருப்பதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. #Tirupati #TirupatiTemple
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக தேவஸ்தானத்தின் செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் இந்தி தர்மம், கோவில், அர்ச்சகர் பணி உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியை 15 நாட்கள், 10 நாட்கள், 5 நாட்கள் என்று பிரித்து தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதன்படி அர்ச்சகர் பயிற்சியை முடித்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அதிகாரிகள் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற 32 பேருக்கும் சான்றிதழ்களையும், அர்ச்சகர்களுக்கான பூஜை பொருட்களையும் வழங்கினர்.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சியை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இப்பயிற்சியைப் பெறுவதற்கு வரும் இளைஞர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் இலவசமாக அளித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiTemple
    தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திணறி வருகிறது. #Tirupati #TirupatiTemple

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள், செல்போன் உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கோவிலுக்குப் பின் பக்கமுள்ள, ‘‘பரகாமணி சேவா குலு’’ அறையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன.

    இந்தியா மற்றும் வெளிநாட்டு சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் திருமலையில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு, இந்திய சில்லரை நாணயங்கள் எண்ணப்படுகின்றன. வெளிநாட்டு சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் எண்ணப்படாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கோணிப்பைகளில் மூட்டை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மொத்த வெளிநாட்டுப் பணத்தில் 52 டன் நாணயங்களாகவே உள்ளன. அதில் மலேசிய நாட்டு சில்லரை நாணயம் மட்டும் 40 டன்னும், இதர வெளிநாட்டு நாணயங்கள் 12 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    2003-ம் ஆண்டு எடை கணக்கில் கொடுத்து, வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெளிநாட்டுப் பணத்தை மூட்டைகளில் கட்டி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பணம் எடை குறைவாக மூட்டைகளில் கட்டி அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    அதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு இ.டெண்டர் மூலமாக மலேசிய நாட்டு நாணயங்கள், பணத்தை மட்டும் இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடைமுறையும் பயனளிக்கவில்லை. பின்னர் ஒரு தனியார் வங்கி மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

    மேலும் மீண்டும் இரு தனியார் வங்கிகள், ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆகியவை மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இரு தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனமும் குறைந்த மதிப்பில் டெண்டர் கேட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. வெளிநாட்டுப் பணத்தை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என முனைப்பில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. எனினும் எந்த முயற்சிகளும் பயனளிக்காததால், வெளிநாட்டுப் பணத்தை மாற்ற திணறி வருகிறது.

    அதன் ஒரு வழியாக வெளிநாடுகளில் வசித்து வரும் தெலுங்கு பேசும் மக்களை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் மூலமாகவே சம்பந்தப்பட்ட நாடுகளின் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அத்துடன் சென்ட்ரல் பேங்க் ஆப் மலேசியா நிறுவனம் மூலமும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati #TirupatiTemple

    திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் இந்த உற்சவம் நடந்தது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் நேற்று மாலை இந்த உற்சவம் நடந்தது.

    எப்போதும் தன்னிடம் வரும் அடிகளார்கள் மற்றும் பக்தர்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்கு அருள் புரிவதிலேயே ஏழுமலையான் கவனம் செல்வதால் அவர் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களைக் காண செல்வதில்லை.

    அதனால் ஏழுமலையான் மீது பொய்க் கோபம் கொள்ளும் நாச்சியார்கள், ஏழுமலையான் வரும்போது அவரை உள்ளே வர அனுமதிக்காமல் அவருடன் அன்புடன் சண்டையிட்டுக் கொள்வதை ஊடல் உற்சவமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் ஒருபுறமும், மலையப்ப சாமி எதிர்புறமும் நின்று கொண்டு தாயார்கள் ஏழுமலையான் மீது பூப்பந்து எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர். இருபுறமும் அர்ச்சகர்கள் நின்றுகொண்டு பூப்பந்துகளை எரியும் சடங்கில் ஈடுபட்டனர்.

    மேலும் ஏழுமலையான் மீது நிந்தஸ்துதியில் பாடல்களைப் பாடி அவரிடமுள்ள கோபத்தை தெரியப்படுத்துவர்.

    அதன்பின் மலையப்ப சாமி அவர்களை சமாதானப்படுத்தி கோவிலுக்குள் அழைத்து சென்றார். நிகழ்ச்சியில், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×