search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96001"

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெண் குழந்தைகளுக்கு டிரஸ் பண்ண பெரிய போராட்டம் நடக்கும். அம்மாவும், மகளும் ஒரே கலர் டிரஸ் என்று கூட சொல்லி, அவர்களை நம் வழிக்கு கொண்டு வர, டிரஸ் செலக்ட் செய்து வாங்கினால், அதை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் டிரஸ்சை அணிந்து கொள்வர். குழந்தைகளுக்கு நாம் எது நல்லது, எது கெட்டது என்று எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வர்.

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

    திருமண விழாக்களில்: திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹ ந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

    ரிசப்ஷனுக்கு : மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

    பர்த் டே பார்ட்டி: அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

    இன்று பாவாடை-தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை.
    பாரம்பரியம் காப்போம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளி எழுந்து மெரினாவில் திரண்ட கூட்டமும், எழுப்பிய கோஷமும் வரலாற்றுப் பதிவாகிப்போனது.
    சபாஷ். தமிழன் தன் அடையாளத்தை காக்க எழுந்துவிட்டான் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே பாரம்பரிய அடையாளங்கள் காக்கப்படுகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா? என்பதை பாரம்பரியம் பற்றி பெருமை பேசும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.

    இன்னும் பத்துநாளில் தைமகள் பிறக்கப்போகிறாள். தை திருநாள் பாரம்பரிய கலாச்சார திருவிழா.

    இந்த பாரம்பரிய விழாவுக்கு தனி மகத்துவம் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக பாரம்பரியத்தை காத்து கொண்டாடுவதில் அர்த்தமும் உண்டு. நிலத்தில் பாடுபட வைத்து பலனையும் கொடுப்பவள் நிலமகள். அந்த இனிய மகளுக்கு - இயற்கைக்கு நன்றி செலுத்தும் இனிய விழாவே தை திருநாள். இந்த இனிய நாளில் உண்பது, உடுத்துவது, கொண்டாடுவது எல்லாமும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தோடு தொடர்புடையது. அதில் ஒன்று தான் ஜல்லிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பைக் ரேஸ், கார் ரேஸ் என்று எத்தனை போட்டிகள் வந்தாலும் ஜல்லிக்கட்டை மட்டும் மனதார நேசிப்பது ஏன்? அது தமிழர் அடையாளம். அதேபோல் தான் பொங்கல் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நேசிப்பதும், காப்பதும் தான் நமது அடையாளத்தை அழியாமல் பாதுகாக்கும். நாகரீக மோகத்தில் சிக்கி நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, பாவாடை-தாவணி, புடவை இவைகளை மறந்து போனோம் என்பதை மறைப்பதற்கில்லை.

    இன்று பாவாடை - தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை. இந்த அடையாளம் தானே தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இதன் மீது தானே மற்றவை எல்லாம் கட்டமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த அடிப்படை அடையாளத்தை தொலைத்துவிட்டு மற்ற எதைப்பற்றியும் பேசிப் பயனில்லை.



    வேட்டி... ....


    அவ்வளவு சாதாரணமான உடையா?

    கர்ணனுக்கு உடன் பிறந்த கவச குண்டலம் போல் தமிழனின் உடலை முதல் முதலில் ஒட்டியிருந்தது இந்த வேட்டி அல்லவா? இலைகளையும், தளைகளையும் சுற்றி உடலை மறைத்து வாழ்ந்த ஆதிகால தமிழன் நாகரீகத்தின் முதல் அடையாளமாக உருவாக்கிய உடை தான் வேட்டி. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து, பஞ்சை நூலாக்கி நெசவாளர்கள் எண்ணத்துக்கு வடிவமாக்கி உருவாக்கியது தான் வேட்டி, சேலை வகையறாக்கள்... !

    இது வெறும் உடை அல்ல. உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் அல்லவா அடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் வேட்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது! கவித்துவம் இல்லாத இதயங்கள் கூட என்ன விலை அழகே? என்று வர்ணித்து ரசிக்கிறதே! இந்தமாதிரி வேட்டி-சட்டை அணிந்து வருபவருக்கு தனி கம்பீரம் வந்துவிடுகிறது.

    இப்படிப்பட்ட பாரம்பரிய அடையாளத்தோடு நின்று, பொங்கல் வைத்து கொண்டாடினால் எப்படி இருக்கும்...? துள்ளாத மனமும துள்ளும்! பாடாத மனமும் பாடும்! ஆடாத மனமும் ஆடும், பாடும் கொண்டாடுமே...?!

    ஆனால் இன்று தமிழர்களின் உடலோடு ஒட்டியிருந்த வேட்டி உருவிப் போனதால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்று கவர்ச்சி வசனம் பேச வேண்டி இருக்கிறது.



    வேட்டி கட்டினால் கவுரவ குறைச்சல் என்று கருதும் காலம்! பக்கத்து மாநிலமான கேரளாவில் வேட்டி கட்டுவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆகால் வேட்டி கட்டக்கூட தெரியாத நிலையில் தமிழ் இளைஞர்கள் இருப்பது வேதனையானது. அதனால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்றெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

    எது எப்படியாயினும் நாம் பாரம்பரிய திருவிழா காலங்களிலாவது நமது பாரம்பரிய உடையோடு இருந்தால் போதும். பாரம்பரியத்தை காக்கிறோம் என்று பெருமையோடு மார்தட்டிக் கொள்ள முடியும். அதைவிட்டு விட்டு பத்துநாள் துவைக்காத ஜீன்ஸ், அரை மற்றும் முக்கால் டவுசருடன் நின்று கொண்டு பாரம்பரியம் காப்போம் என்று முழங்குவது வேடிக்கையாகத்தான் பார்க்கப்படும்.

    வருகிற பொங்கல் திருநாளை அதற்கான சபதமேற்பு நாளாக கடைப்பிடிப்போம். பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைப்போம். எந்த பக்கம் திரும்பினாலும் சேலை கட்டிய எம் இன பெண்கள்-பாவாடை - தாவணியில் என் சகோதரிகள் - வேட்டி, சட்டையில் இளசுகள் முதல், பெரியவர்கள் வரை தெரிய வேண்டும். மாற்று உடையில் ஒருவரை பார்த்தால் அவர் வேற்று மாநிலத்தவராக இருக்க வேண்டும்.

    வருகிற தமிழர் திருநாளையாவது தமிழரின் அடையாளத்தோடு கொண்டாடுவோம். அதுவே தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் வளர்க்கும். வாழ வைக்கும்.

    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    அலுவலகம் செல்லும் பெண்கள் ஆடை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும்.
    அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.

    சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.

    அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும். புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.



    பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.

    சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.

    உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.

    சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…
    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.
    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.

    டபுள் சைடட்

    ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.

    ஹக்கி

    பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.

    பார்பெல்

    பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஜிம்மில் தூக்கப்படும் வெயிட் போல் இருக்கும். ஒரு சிலவகை நீளமான மேல்புற காது மடல்களை இணைக்கும்படியும் இருக்கும். இதற்கென காதில் பல துளைகளைப் போட்டுக்கொள்ளும் இளசுகளும் உண்டு. இவை ஆண்களாலும் அணியப்படும் காதணி வகை. இவைகள் சாதார ணமாகவே ஃபேன்ஸி கடைகளிலேயே ரூ.10 முதல் கிடைக்கிறது.



    பேக் ஸ்டட்

    முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.

    இயர் த்ரெட்

    காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.

    இயர் ஸ்பைக்

    காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.

    ஸ்லேவ்

    ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம். ரூ.400 முதல் ஆரம்பம்.

    ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்யும் புதிய முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. #Aadai #AmalaPaul
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.

    இந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடை படக்குழு கள இசையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்து ரத்னகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    ஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். #Aadai #AmalaPaul

    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.
    நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த அதிநுட்பமான வேலைப்பாடு மிகுந்த கைக் கடிகாரங்கள் என்பது கணினி உதவியுடன் கண்கவர் வடிவங்கள் உள்ளவாறு உருவாக்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் எனும்போது சிக்கலான சிற்பங்கள் என்பதை வடிவமைப்பாக கொண்டு அழகிய வண்ண கற்கள் பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன. அதாவது பூ வேலைப்பாடு கொண்ட ஸ்ட்ராப் முதல் மேம்பட்ட புதிய டிசைன்கள் பல உள்ளவாறு கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன.

    பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்

    மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.

    பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்

    முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.

    வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்

    வெள்ளை நிற பின்னணியில் தங்க நிற வடிவமைப்பு முதன்மை கடிகாரம் இருக்க வலை பின்னல் அமைப்பிலான ஸ்ட்ராப் வண்ணக்கற்கள் பதியப்பட்டவாறு உள்ளன. அதாவது பட்டையான தங்க தகட்டில் இடைவெளிவிட்டு காற்றோட்டமான அமைப்பில் உருவங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. இந்த இடைவெளி விட்ட உருவ அமைப்பில் சிறு சிறு வண்ணங்கள் பூ, இலை, கொடி அமைப்பு என்றவாறு தனி வண்ணங்களில் பதியப்பட்டுள்ளன. முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் மேற்புறம் சிறு வைரக்கற்கள் பதியப்பட்டுள்ளன.



    ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்

    அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

    கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்

    முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.

    வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்

    ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்


    உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.
    ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.
    அரசனுக்கு ஒரு ஆடை, பணக்காரனுக்கு ஒரு ஆடை, ஏழைக்கு ஒரு ஆடை என்று விதவிதமாக பரிணமித்தது ஆடையின் வடிவங்கள். நம் முன்னோர்களில் ஆண்கள் வேட்டி, சட்டையும், இளம் பெண்கள் பாவாடை, தாவணியும், திருமணமான பெண்கள் சேலையையும் அணிந்தனர்.

    ஆனால் காலசுழற்சியில் இன்று ரகங்கள் வீதம் விதவிதமான ஆடைகள் அணிவகுத்து நிற்கின்றன. ஆடை என்பது மானத்தை மறைக்க என்ற நிலைமாறி இன்று பலரது பார்வையையும் நம்பக்கம் திருப்ப என்ற நிலைக்கு வந்திருக்கிறது. நாம் உடுத்தும் ஆடைகளில் புதுமை இருந்தால் பலரும் நம்மை உற்றுநோக்குவார்கள் என்ற மனநிலை பலரது மனதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஆடை ஒருவரை அழகுபடுத்துவதில் தவறில்லை. அதற்காகத்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்றனர் நம்முன்னோர்கள். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அணியும் ஆடை ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் பலரும் முழுக்கால் சட்டை (பேன்ட்) இடுப்பை விட்டு கீழே இறங்கி இருப்பது போலவும், அதற்குள் அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரிவது போலவும் உடை அணியும் நிலை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சிலர் சட்டை அணிந்தால் 3 பொத்தான்களுக்கு கீழே உள்ள பொத்தான்களை மட்டுமே அணிந்து கொள்ளும் நிலையும் உள்ளது. ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.

    அதேபோல சில பெண்களும் உடல் அழகை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஆடைகளை நாகரிகத்தின் சின்னம் என்று கூறி அணிந்து கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆபாசமாக உடை அணிகிறீர்கள் என்று கேட்டால் எங்கள் உடையில் எந்த தவறும் இல்லை. பார்ப்பவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது என்று பதிலளிக்கிறார்கள். ‘உடலழகை ஊருமெச்ச காட்டக்கூடாது’ என்ற சினிமா பாடல் வரிகள் சிந்திக்க தக்கது. அதுமட்டுமா ஆண்களும், பெண்களும் தேவையற்ற வாசகங்களை கொண்ட பனியன்களை ஆர்வமுடன் வாங்கி அணிகிறார்கள்.

    நான் தனிமையில் இருக்கிறேன், இந்த இடம் பார்ப்பதற்கு மட்டுமே, என் இதயவாசல் திறந்து இருக்கிறது, என்பது போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்கலாம். வாசகங்கள் இருப்பது தவறல்ல. அது வாழ்க்கைக்கு உதவும் வாசகமாகவோ, தத்துவத்தை தெரிவிக்கும் வாசகமாகவோ, பிறருக்கு பயன்படும் வாசகமாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். தத்துவஞானிகளின் வரிகள், திருக்குறள் வரிகள், பொன்மொழிகள் போன்றவற்றை எழுதிய பனியன்களை அணியலாம்.

    ஆடை என்பது மானத்தை காக்க என்ற நிலைமாறி அடையாளத்துக்கானதாக மாறியது. அதன்பின்னர் அலங்காரத்திற்கானது என்ற நிலையில் இருந்து இன்று உடல்அழகை வெளிக்காட்டுவதற்கானது என்ற நிலையில் வந்து நிற்கிறது. இதனால் ஆடை தனது அடையாளத்தை இழந்து விட்டது.

    ஆடை ஒவ்வொருவருக்கும் தனி அடையாளமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தலைவர்கள், அரசர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள், டாக்டர்கள், போலீஸ் என பல்துறையில் பயணிப்பவர்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துவது அவர்கள் உடுத்தும் ஆடைகள்தான். நாம் தேர்ந்தெடுத்து அணியும் ஆடை நம்மை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டும் சான்றாக இருக்க வேண்டும். ஆடைகளை அணிவதில் அனைவரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆடை ஒவ்வொருவரின் தனித்தன்மையையும், தனி அடையாளத்தையும் வெளிக்காட்ட வேண்டும். அதாவது முழு மனிதனாக அடையாளம் காட்ட நாம் அணியும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்காத அளவுக்கு இருக்க வேண்டும். ஆடையின் அடையாளம் மனிதன் அல்ல. மனிதர்களின் அடையாளம் தான் ஆடை.

    -எஸ்.முத்துக்குட்டி, அகஸ்தீஸ்வரம்

    மென்மை தன்மை கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.
    நாம் அணிகின்ற எந்தவித துணியிலான ஆடைகளும் உடலில் படும்போது ஏதேனும் ஒர் உரசலை, உறுத்தலை தரவே செய்யும். ஏனெனில் அந்த துணி நெய்யும் நூல் இழைகளில் உள்ள கட்டமைப்பே காரணமாக அமைகின்றது. குறிப்பாக செயற்கை இழை ஆடைகள் என்பவை உடலில் படும்போது அதிக தொந்தரவுகளையும், கோடை காலத்தில் அதிக எரிச்சலையும் தரும். அதனை போக்கும் விதமாக புதிய வழவழப்பும், மென்மை தன்மையும் கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.

    நூறு சதவீதம் இயற்கை இழை

    புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துணி என்பது முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுயிட் பேஷன் என்றவாறு திரவ நிலையின் வளைவுகள், மென்மை தன்மை கொண்ட துணியமைப்பாக உள்ளது. எங்கும் எப்போதும் அணிய கச்சிதமான, மென்மையான சுற்று சூழலுக்கு பாதிப்பு உண்டாகாத, நூறு சதவீதம் இயற்கை முறையில் இந்த துணியமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதனை அணியும் போது அதிக சுதந்திரத்தன்மை ஏற்படுவதுடன் நல்ல காற்றோட்டமான உணர்வையும் தருகிறது. ஆடை அணியும் போது மற்ற துணிகளை போல் கனமாக தெரியாமல் எடைகுறைவான துணியமைப்பாகவே தோற்றமளிக்கும். எனவே இந்த வகையில் நெய்யப்படும் ஆடை அணியும் போது ஆடையை சுமக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பே ஏற்படாது. கோடைகாலம், குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் அணிய ஏற்ற வகையில் உள்ளது.

    மனிதனால் உருவான இயற்கை நூலிழை

    இந்த புதிய துணிவகை என்பது முற்றிலும் மரக்கூழ் கொண்டு இயற்கையான நூலிழையாக செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறது. அதாவது இயற்கையாகவே மறுசுழற்சி வளத்தை மேம்படுத்தும் வகையிலான மரக்கூழ் மூலம் இதன் உருவாக்கம் உள்ளது. இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மரங்கள் என்பவை எவ்வளவு மரம் வெட்டப்படுகிறதோ அதனை விட அதிக மரங்கள் உடனேயே நடப்படுகின்றன.



    இந்த வகை மரக்கூழ் நூலிழை தயாரிப்பின் முறை பருத்தி மூலம் நூலிழை தயாரிப்பைவிட புவி பாதுகாப்பு நிகழ்வு அதிகமாக பேனப்படுகிறது. ஆம் பருத்தியை விட ஆறு (அ) ஏழு மடங்கு குறைந்த நிலப்பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. அத்துடன் பருத்தி வளர பயன்படும் நீரின் அளவை விட குறைவான நீரே இம்மரவளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் வளங்களை மேமம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பு முதல் நூலிலை தயாரிப்பு வரை அனைத்தும் புவி பாதுகாப்பு அம்சம் நிறைந்தவையாகவே உள்ளது.

    புதிய ஆடைகள் தயாரிப்பில் இயற்கை நூலிழை

    பலதரப்பட்ட ஆடைகள் தயாரிப்புக்கு என இந்த புதிய பிராண்ட் இயற்கை நூலிழை பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச அளவில் புது ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இப்புதிய நூலிழை கொண்டு ஆண், பெண் என இருபாலர் ஆடைகள் தயாரித்து வழங்குகின்றனர். இயற்கையான செல்லுலாஸ் நூலிழை என்பது அதிக மென்மை தன்மையுடன் ஒர் புதிய பரவச அனுபவத்தை தருகிறது என்பதால் பலரும் இதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர்.

    இந்த நூலிழை ஆடைகள் என்பதன் மேற்புற தோற்ற அமைப்பு அதிக பளபளப்பும், மென்மை தன்மையும் கொண்டதாக உள்ளது. எனவே இதில் நெய்யப்படும் ஆடைகள் அதிக பொலிவு மற்றும் அதிகபட்ச அழகு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. நமது சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட இயற்கை நூலிழை ஆடைகள் பயன்படுத்திய பிறகும் பூமிக்கு பாரமாக அமையாத வகையில் உள்ளது.

    புதிய ப்ளுயிட் பேஷன் என்ற வகையில் அறிமுகமான இந்த வகை ஆடைகள் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஆடைகளாக உள்ளது. பெண்களின் தோற்ற பொலிவை, கச்சிதமான உருவ அமைப்பை வெளிப்படுத்தும் ஆடை என்பதுடன் அவர்களின் மென்மை தன்மையை வெளிப்படுத்தும் ஆடையாகவும், இயற்கை நூலிழை ஆடைகள் உலா வருகின்றன.
    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர்.
    வைரம் ரத்தின கற்களில் தனிச்சிறப்பு பெற்றது. அதன் ஜொலிப்பும், வெண்மை பிரகாசமும் அனைவரையும் மடக்கிட செய்கிறது. வைரம் பூமிக்கடியில் வெட்டி எடுப்பது முதல் நகையில் பதிப்பது வரை அதிக படியான பணி நிலைகளை கடந்து வருகிறது. ஏனெனில் வைரம் ஜொலிக்க செய்ய பட்டை தீட்டும் பணிகள் அதிக மெனக்கெடல் உடன் செய்யப்படுகிறது.

    தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.

    வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.

    வைரத்தின் உருவ அமைப்புகள்:

    வைர நகைகளில் பதியப்பட்டுள்ள வைரத்தின் வடிவம், உருவ அமைப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்திட வேண்டும். வைரங்கள் வட்டம், ரேடியண்ட், பிரின்ஸஸ், பியர், ஓவல், மார்குயிலி, இதயம், எமரல்டு, குஷன், கிரவுன்ஸ்டார், அஸ்சர் என்றவாறு ஒவ்வொரு விதமான உருவ அமைப்பில் வைரங்கள் பட்டை தீட்டப்ட்டு விற்பனைக்கு வருகின்றன. சர்வதேச அளவில் நிறைய வைர நிறுவனங்கள் நகை தயாரிப்பிற்கு என பிரத்யேகமான சிறிய மற்றும் பெரிய வைரக் கற்களை தயாரித்து வழங்குகின்றன.



    ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்

    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.

    தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.

    சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்

    காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.

    பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்

    சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.
    தீபாவளிக்கு பெண்களுக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.
    தீபாவளி என்றாலே பெண்களுக்கு என பிரத்யேக ஆடைகள் வெவ்வேறு வேலைப்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெண்களின் ஆர்வத்தை தூண்டும் என ஆடைகளை உருவாக்கவே தனிப்பட்ட வடிவமைப்பாளர்கள் கூடுதல் மெனக்கெட்டு வடிவமைக்கின்றனர். அதன் காரணமாக புதிய ஆடைகள் வெளிவரும்போதே அதற்குரிய சிறப்பிடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.

    அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது முழு நீள உடையாகும். இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபையா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த சல்வார் காமீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அபையா ஆடை என்பது அணிபவரின் முழு உடல் பகுதியை மூடும் அமைப்பில் கை மற்றும் கால்பகுதி மட்டும் தெரியும் வகையில் உள்ள ஆடை. அதிக வெட்டுதல்கள் இன்றி முழு துணி அமைப்பை தான் மாறுபட்ட வகையில் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றியுள்ளனர்.

    தரையில் புரளும் ஆடையின் அமைப்பு இந்திய பெண்கள் அணியும் வகையிலான வடிவில் அதிக வேலைப்பாடு மற்றும் திறன்மிகு கலையம்ச மேம்பாட்டுடன் உருவாகி உள்ளது. பார்த்தவுடன் விரும்பும் வகையில் அபையா ஆடைகள் வண்ண பொலிவும், துணிகளின் நேர்த்தியும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    அபையா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:


    அபையா ஸ்டைல் சுடிதார் என்பது பல்வேறு விதமான துணிரகங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்கென பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல பிரிவுகள் உள்ளவாறு அதாவது திருமணம், பார்ட்டி, விழா, பண்டிகை என்பதுடன் முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்கு அணிய ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் உருவாக்கப்படுகிறது.

    சாதாரணமாகவே அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது அதிகபட்ச வேலைப்பாட்டுடன்தான் உருவாக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட ஓவிய வேலைப்பாடு என்பது பார்டர், ஸ்லீவ் மற்றும் கழுத்து பகுதிகள் அனைத்திலும் அதிக சிறப்பு தன்மையுடன் நெய்யப்பட்டுள்ளது. அதாவது பாரம்பரிய எம்ப்ராய்டரி கைவினைகளைஞர்கள் கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதி உண்மையான கலையம்ச பணிகள் தனிநேர்த்தியுடன் செய்யப்படுகின்றது.

    ஆச்சர்யமூட்டும் சில வடிவமைப்புகள்

    அனார்கலியோடு ஒப்பிட்டு குழம்ப கூடாது என்பதற்கு இதில் மாறுபட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் முழு கை அமைப்பு என்பது ஒரு சில மாடல்களில் மட்டுமே இருக்கும். மற்றதில் பிற வகை கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் கழுத்து பகுதி பல வித மாடல்களில் திறம்பட வளைவுகளுடன் தைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்த வகையில் உள்பகுதி லேயர்கள் மெல்லிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எம்ப்ராய்டரி ஜாக்கெட் அபையா சூட்ஸ்

    ஒற்றை வண்ண பின்னணியில் தங்க நிற கம்பிகள் பின்னப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் ஜாக்கெட் அபையா ஸ்டைல் சூட்ஸ் வருகின்றன. முழு உடையில் மார்பு பகுதி, கைப்பகுதி மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அடுத்தடுத்தான எம்ப்ராய்டரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேவி ப்ளு, மெரூன், பிங்க், சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இந்த எம்ப்ராய்டரி ஜொலிக்கின்றது. ஆடையின் மார்பு பகுதி ஜொலிக்கும் கவசம் போன்ற அமைப்புடன் பின்னல் செய்யப்பட்டும் அதன் கீழ் பகுதி மலர்கள் உள்ளவாறும் நெய்யப்படுகிறது. கொடிகள், இலைகள் உள்ளவாறும், ஆடையின் கீழ்பகுதி டிரில் அமைப்பில் அடுத்தடுத்தான தோரண அமைப்பு உள்ளவாறு கூடுதல் தரத்துடன் எம்ப்ராய்டரி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெட் துணியில் அபையா சூட்ஸ்

    பாலி ஷன்டூன் லைனிங் அமைப்பு என்பது நூல் மற்றும் ஜரிகையில் நெய்யப்பட்டவாறு மேல் கோட் அமைப்புடன் உள்ளது. இதில் மேற்படி அழகை கூடுதல் மேம்படுத்தும் வகையில் நெட் துணியில் துப்பட்டா மற்றும் மேல்சட்டை அமைப்பு கொண்டவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் காலர் அமைப்புடன் மெல்லிய துணியின் மேற்பகுதி, உட்புறபகுதி பாலி ஷன்டூன் துணி அமைப்பு மெல்லிய எடை குறைந்த ஆடைக்கு உத்தரவாதம் தருகிறது. ராயல் கவுன் அமைப்பில் கம்பீர நடையுடன் பவனி வரச்செய்யும் இந்த அபையா ஸ்டைல் ஆடைகள் புதிய திரைப்படங்களில் கதாநாயகிகளின் முக்கிய ஆடையாக உலா வருகிறது. கூடிய விரைவில் அழகிய பெண்களின் அட்டகாசமான ஆடையாக வீதிகளில் அணிந்து செல்லும்போது கண்டு வியந்திடவே செய்வர். 
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும்.
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் வீட்டை தலைகீழாக மாற்றி விடுவர். முன்பு தீபாவளி பண்டிகைக்கு என ஒருசில மாடல்களில்தான் ஆடைகள் வரும். தற்போது ஆண் குழந்தைகளுக்கு என விதவிதமான ஆடைகள் புதிய வடிவங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல வண்ணச் சேர்க்கையுடன் தனிப்பட்ட இணைப்புகள் கொண்ட ஆடைகள் வருகின்றன. தீபாவளி வரவுகள் என்பது பாரம்பரிய ஆடை, வெஸ்டர்ன், கார்ட்டூன், ஜீன்ஸ், கோட்சூட் என பலவித ரகங்களில் அள்ளி கொள்ளும் வகையில் உள்ளன.

    சுட்டி பசங்க தீபாவளியன்று அணிய பாரம்பரிய ஆடை, பள்ளிகளுக்கு அணிந்து செல்ல வெஸ்டர்ன் என இரண்டு விதமான ஆடைகளை எடுத்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆசை படுகிறதே என பெரியவர்களும் எவ்வளவு விலை அதிகமாக இருப்பினும் வாங்கி தந்து விடுகின்றனர்.

    பாய்ஸ் எத்னிக் ஆடைகள்

    தீபாவளி என்றாலே வண்ணங்ளுக்கு பஞ்சமில்லை. அதில் குழந்தைகள் ஆடைகள் என்றால் எல்லா வண்ணமும் நன்றாகவே நடனமாடும். எத்னிக் ஆடைகள் எனும் பைஜாமா குர்தா, ஷெர் வாணி, வேட்டி சட்டை போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன. இது இந்தியா முழுக்க ஒரே வகையில் அணிய கூடிய ஆடைகளாக இருக்கின்றன.

    வேட்டி சட்டை என்பது தென்னக பகுதியில் அதிகம் விரும்பப்படுகிறது. பைஜாமா குர்தா என்பதில் பேண்ட் பகுதி சுருக்கமான மடிப்புகளுடன், நீளமான குழல் வடிவில், வேட்டி போன்று மடித்து தைக்கப்பட்ட அமைப்பு என்றவாறு வருகிறது. இதன் குர்தா மேல்சட்டை என்பதுதான் அதிக வேலைப்பாடுகளுடன் வருகிறது. இது பருத்தி துணியில் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான குர்தா, குட்டை குர்தா என்ற இரு பிரிவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. பார்க்க பரவசமூட்டும் வண்ண கலவையுடன் சற்று பளபளப்பு தன்மையுடன் சிம்பிள் லுக் சூப்பர் டிரஸ் என்றவாறு பைஜாமா குர்தா கிடைக்கின்றன.

    ஷெர்வாணி என்பது ஆடம்பரமான ஆடை வகை, அதுபோல் சற்று கனமான ஆடையும் கூட. தீபாவளி அன்று அணிய பிரம்மாண்டமான ஆடை. அதிக ஜொலிப்பு மற்றும் பளபளப்பும் கூடிய ஷெர்வாணியின் மேல் சட்டை அமைப்பு கற்கள், மணிகள், எம்பிராய்டரி போன்றவையுடன் பிரம்மாண்ட தோற்ற பொலிவுடன் கிடைக்கின்றன. இதில் தீபாவளிக்கு என புதிய வரவுகள் பல வந்துள்ளன. அவற்றின் உருவ அமைப்பு என்பது கீழ் பகுதியில் மாறுபட்ட வெட்டுக்கள் மற்றும் வளைவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. சில ஷெர்வாணிகள் உட்புற கனமான துணியமைப்பு இன்றி மெல்லிய துணியுடன் எடை குறைந்த ஷெர்வாணியாகவும் உள்ளன. ஷெர்வாணியின் அதிக வேலைப்பாடு கொண்டவை சற்று விலை கூடுதலாகவே காணப்படுகிறது.

    கார்கோ பேண்ட் கலர்புல் ஷர்ட்

    சுட்டி பசங்க போடும் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் சற்று கடினமான துணியில் செய்த கார்கோ பேண்ட் வருகிறது. இது எண்ணற்ற பாக்கெட், கம்பி வளையம், ஜிப்கள், பொருத்தப்பட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கோ பேண்ட்க்கு இணைப்பான பிரிண்டட் சட்டைகள் ஒற்றை நிற பின்னணியில் வடிவமைப்பு செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதற்கு மேல் பகுதியில் அணிய தனிப்பட்ட விஸ்ட் கோட் உள்ளது. கரடுமுரடான அமைப்பும், கலர்புல்லான தோற்ற பொலிவும் இணைந்து பசங்களின் கம்பீரத்தை அதிகரிக்க கூடிய இந்த கார்கோ மற்றும் கலர்புல் ஷர்ட் கோட் ஆடை அதிகம் விரும்பப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ்

    இது இந்திய எத்னிக் போன்றும், அதே நேரம் மாடர்ன் லுக் தரும் வகையில் இரு பிரிவு ஆடை கலப்பாக உள்ளது. இதன் பேண்ட் பகுதி குழல் வடிவில் இறுக பிடிக்கும் வகையிலும், சில மாடல்கள் சுருக்க அமைப்புடன் காணப்படும். மேல் சட்டை என்பது நீளமான மற்றும் குட்டை அமைப்புடன் நீண்ட கைப்பகுதியுடன் ஓர் கம்பீர அமைப்புடன் உருவாக்கம் செய்யப்படும். அதிக தங்க நிற ஜொலிப்புடன் இறுக பற்றும் கழுத்து வடிவமைப்புடன் ஓர் ராயல் தோற்றப் பொலிவை தரும் வகையில் இது உள்ளது. மெத்தென்ற மேல் சட்டை அமைப்பும், மெல்லிய பேண்ட் என்பதும் கலந்த இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ் அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றது. 
    ×