search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96001"

    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும்.
    பெண்கள் தினமும் காலையில் கண்விழித்து கண்ணாடி முன்பு நின்று தங்கள் அழகை பார்க்கும்போது, அவர்களுக்கு பளிச்சென்று தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகள்தான் தெரியவரும். அதிக உடல் எடை கொண்டவர்கள் சற்று வருத்தத்தோடு ‘இன்னும் கொஞ்சம் உடல் மெலிந்தால் அழகாக இருக்கும்’ என்று நினைப்பார்கள். அளவுக்கு அதிகமாக உடல்மெலிந்து காணப்படுகிறவர்கள், ‘சற்று உடல் பூசிமெழுகியது போன்றிருந்தால் அதிக அழகு கிடைக்குமே..’ என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வார்கள். தங்கள் உயரத்தை குறித்தும், சரும நிறத்தை குறித்தும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தினமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம்.

    இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகளே தெரியாத அளவுக்கு அவர்களை ஆடை வடிவமைப்பு மூலம் அழகில் மெரு கேற்றிகாட்டுகிறார்கள், பேஷன் டிசைனர்கள்.

    “பெண்கள் பண்டிகைகள், விழாக்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய நாட்கள் போன்ற எல்லாவற்றுக்கும் புதிய ஆடைகள் வாங்கி, அதை உடுத்திதான் கொண்டாட விரும்புகிறார்கள். திருமணம் என்றால் சொல்லவேண்டியதில்லை. அப்போது விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எல்லோரையும் கவர விரும்புகிறார்கள்.

    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண் களின் உடல் அமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்புக்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்கு கீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல்வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல் பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். செவ்வக வடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள்தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள்.

    இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.

    “பேஷன் என்பது ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்று சொல்வார்களே அது போன்றதுதான். பெயர் மாறும், அதன் தோற்றத்திலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். அடிப்படையை ஆராய்ந்தால் அது ஆதிகாலத்தில் இருந்தே சற்று மாறி மாறி வந்ததாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் நடிகைகள் பானுமதியும், சரோஜாதேவியும் சினிமாவுக்காக அணிந்த லெஹங்கா இப்போது கூடுதல் அழகுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன் சோளிக்கு இப்போது கிராப்டாப் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எல்லா வயதினரும், எல்லா சூழலுக்கும் அணிந்துகொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்படுகிறது.

    மணப் பெண்கள் லெஹங்காவை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதல் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் சேர்க்கப்படும்போது, அதிக எடை இருப்பது போல் தோன்றினாலும், மூன்று கிலோவுக்கு மேல் ஆகாது. அதனால் இது கனமாக இருக்கும் என்று கருதவேண்டியதில்லை.

    தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது.வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக் கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

    துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடினமான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்துகொண்டிருக்கும்போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்துவிடுகிறார்கள். சேர்த்து அணிந்துகொள்ளும்போது தைத்திருப்பதுபோல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும்.

    எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

    விலை உயர்ந்த புடவைகள்தான் கூடுதல் அழகுதரும் என்ற கருத்து இப்போது வலுவிழந்துவிட்டது. சராசரியான விலையிலே புடவை வாங்கி, அதில் தேவையான இணைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் அழகாக்கிக்கொள்ளலாம். புடவைகளில் பிராணிகளின் உருவங்களை பிரிண்ட் செய்துகொள்வது இப்போது புதிய பேஷனாக இருக்கிறது. பகல்பூர் சில்க் அதற்கு ஏற்றது. அதில் யானை, மான், வாத்து போன்றவைகளை பிரிண்ட் செய்து அழகுபடுத்தலாம். யானை உருவம் பொறித்த புடவைகள் நடுத்தர வயது பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
    பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன.
    இந்தியாவில் பண்டிகை நேர ஷாப்பிங் எனும் தீபாவளியின் போது மட்டுமே அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி ஷாப்பிங் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணி ஏற்பாடு செய்யப்படுகிறது. தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது விற்பனையாகின்றன. அதாவது ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள் என்றவாறு அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன.

    எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் அணிவரிசை நீண்டு கொண்டே போகும்.

    தீபாவளிக்கு ஏற்ற தயாரிப்பு பணிகள்:-

    தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

    ஓராண்டு தயாரிப்பு ஒரு சிலநாளில் விற்பனை:-

    தீபாவளிக்கு என ஆடைகள், பட்டாசு மற்றும் உபயோகப்பொருட்கள் தயாரிப்பு என்பது ஓராண்டு அதிக வேலையாட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பின்னர் அதனை அந்தந்த பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப கடைகளுக்கு பிரித்தளித்து அதன் விற்பனையை கண்காணிப்பர். தீபாவளி நெருங்க நெருங்க தான் அதன் மவுசும், தெரியவரும். பட்டாசு என்பது அதிக பாதுகாப்புடன் நிறைய பணியாளர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனை தீபாவளிக்கு சில நாள் முன்பு வாங்கி மகிழும் போது தயாரிப்பாளர்களின் மகிழ்வும் வெளிப்படும்.

    மின்னணு பொருட்களும் விலையுயர் ஆபரணங்களும்

    தீபாவளி ஷாப்பிங்-யில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்-யில் இடம் பெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் என்பது ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தீபாவளி சமயத்தில் தான் அதிகளவில் இதன் விற்பனை அதிகரிக்கிறது எனலாம்.

    பணப்பெருக்கமும் வாங்கும் தன்மை அதிகரிப்பும்:-

    ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதனை அதிக மகிழ்ச்சி படுத்தும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும் இணைந்து விடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்துவிடுகின்றனர்.

    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு நகைகள். வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு அல்லது ரூபி பதிக்கப்பட்ட நகைகள். நவரத்தினங்களில் ஒன்றான ரூபி அல்லது கெம்பு கல் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உலோகங்களில் பதிக்கக்கூடியவை. மேலும் இக்கல் வைரம், பச்சைக்கல், முத்து போன்றவற்றுடன் இணைத்து பதிக்கவும் ஏற்றதாகும்.

    கெம்பு கற்கள் பின்க், பர்ப்புள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றாலும் பொதுவாக கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. இது கொரண்டம் (அலுமினியம் ஆக்சைட்) என்ற தாதுவின் ஒரு வகையாகும். இந்த தாதுவில் உள்ள கிரோமியம் என்ற வேதிப்பொருளினால் சிவப்பு நிறம் இந்த கற்களுக்கு கிடைக்கிறது.

    கெம்பு கற்களில் மியான்மார் அல்லது பர்மாவில் கிடைக்கும் கற்களுக்கு விலை அதிகம் இருக்கிறது. பொதுவாக ஒரு கேரட் எடையுள்ள கற்களுக்கு 7 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையில் அதன் நிறம், எடை, அளவு, சுத்தம் மற்றும் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல. மிகவும் மெல்லிய வகை நகைகளை விட சற்று எடை கூடுதலான நகைகளில் கெம்பு அருமையாக இருக்கும். டெம்பிள் ஜூவல்லரி நகைகளிலும், ஜிமிக்கி போன்ற பிரதான நகைகளிலும் பதிக்கப்படும்போது கெம்பு கற்கள் மிக நேர்த்தியாகவும், எடுப்பாகவும் இருக்கும். பொதுவாக பச்சை மற்றும் நீல நிற கற்கள் சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு அதிக எடுப்பாக இருக்கும். ஆனால் கெம்பு கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற கற்கள் கொண்ட நகைகள் மாநிறம் மற்றும் கருத்த நிறம் உள்ள பெண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

    கெம்பு கற்கள், பச்சை நிற கற்கள், முத்து போன்றவற்றுடன் சேர்த்தும் பதிக்கப்படுகிறது. கெம்பும், முத்தும் பதித்த ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற நகைகள் செட்டாக அணியும்போது மிக நேர்த்தியாகவும், அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.

    இன்று பல நகைக்கடைகளில் மணமகளுக்கு திருமண நகைகளாக முழு கெம்பு செட் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், தொங்கட்டான் அல்லது ஜிமிக்கி, வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம், மாங்காய் மாலை போன்ற மாலைகள், ஒட்டியானம், நெத்திச்சுட்டி, டாலர் என்று ‘ப்ரைடல் ரூபி செட்’ நகைகள் கிடைக்கின்றன. பழமையும், புதுமையும் கலந்து நகைகள் அணிய விரும்பும் இளம் பெண்களுக்கும் பல புதுமையான டிசைன்களில் கெம்பு பதித்த நகைகள் அருமையான தேர்வாக இருக்கும். 
    பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன.
    இளம் பெண்கள் தங்களின் ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு விதவிதமான புதிய ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர். பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன. பட்டு நூல் லேசானது. எடை குறைவானது. மேலும் பளபளப்பும் வழவழப்பும் தன்மை கொண்டது.

    அதன் மூலம் உருவாகும் ஆபரணங்கள் நாளடைவில் மங்காத தன்மையுடன் உள்ளது. அத்துடன் எந்த வண்ண ஆடை அணிகின்றோமோ அந்த வண்ணத்திலான நூல்களை கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடை நெய்த நூல் அமைப்பிலேயே ஆபரணமும் அணியும்போது கூடுதல் அழகும், பொலிவும் ஏற்படும்.

    பட்டு நூல் ஆபரணங்கள்

    பட்டு நூல் கொண்டு தற்போது காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவை உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆபரண வகையும் அதற்கென உள்ள பிரத்யேக கம்பி வடிவங்கள், கொக்கி அமைப்புகள் கொண்டு அழகுற பின்னப்படுகிறது. பட்டு நூல் இறுக்கமான அமைப்புடன் ஆபரணமாக செய்யப்படும்போது அதன் உறுதி தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதன் மேம்பட்ட பொலிவு தன்மை எந்த புறம் திரும்பினாலும் அழகிய வண்ண சாயலுடன் பிரதிபலிக்கின்றன. விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் ஆர்வமாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

    சிறு மணி கொத்துகளுடன் கூடிய நெக்லஸ்கள்

    முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சீரான இடைவெளியில் அழகிய சிறு சிறு முத்து மணிகள் கொத்துகளை உள்ளதுடன் அதன் இணைப்பாக வண்ண பட்டு நூல் இணைந்தபடி உள்ளது. அதுபோல் அதன் நடுப்பகுதி பதக்கங்கள் பட்டு நூல் சேர்ந்தபடியும், கற்கள் பதித்த பதக்கங்கள் என்றவாறும் இணைக்கப்பட்டுள்ளன.

    சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.



    உலோக மணிகளுடன் கூடிய மாலைகள்

    இரட்டை வண்ண கலவையுடன் நடுநடுவே உலோக மணிகள் இணைப்புடன் கூடிய மாலைகள் பட்டு நூலில் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நீளமான மாலைகள் பந்து வடிவ உருளைகள் மற்றும் நீள் வடிவ உருளைகள் என்றவாறு பல வண்ண கலப்பு நூல்களுடன் மாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளில் நடுநடுவே உலோக மணிகள் இணைப்பும், நடுவே பெரியஉலோக பதக்கங்களுடன் காட்சி தருகிறது. பித்தளை உலோக மணிகள் என்பதுடன் வெள்ளி உலோக மணிகள் என்றவாறும் இம்மாலைகளில் இடம் பெறுகின்றன.

    பிரகாசமான வண்ணங்களை பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் இளஞ்சிகப்பு நூல்கள் கொண்ட மாலைகளில் சில ஒற்றை வண்ண நூல்களுடன் உருவாக்கி தரப்படுகிறது. பார்க்க பரவசமான உருவ அமைப்புடன் பட்டு நூல் மாலைகள் உருவாகின்றன.

    அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள்

    காதணிகளில் அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள் பாந்தமான வடிவமைப்புடன் காட்சி தருகின்றது. பட்டு நூல் ஜிமிக்கிகளின் நடுப்பகுதி மற்றும் ஓரப்பகுதிகள் கற்கள் மற்றும் மணிகள் தொங்கும் அமைப்பில் உருவாகியுள்ளன. இதிலும் ஒற்றை நிற ஜிமிக்கி மற்றும் பல நிறத்திலான ஜிமிக்கிகள் கிடைக்கின்றன. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜிமிக்கி காதணிகள் விதவிதமான அளவில் கிடைக்கின்றன.

    வண்ண பிரகாசத்துடன் வளையல்கள்


    வளையல்கள் என்பதில் பட்டு நூல் இடைவெளியுடன் உலோக உருவங்கள் இணைப்புடன் கூடிய அகலமான பெரிய வளையல்கள் வருகின்றன. அதுபோல் மெல்லிய கம்பி அளவு பட்டு நூல் வளையல்கள் என்பது பல இணைந்தவாறு ஓரப்பகுதி வளையல்கள் கற்கள் வைக்கப்பட்டவாறு பல வளையல் அமைப்புடன் உள்ளன. ஒரே வளையலில் பல வண்ண நூல்கள் சாய்வான அமைப்புடன் உருவான வளையல்கள் ஒளிவெள்ளத்தில் பார்க்கும்போது அழகிய வானவில் போன்று காட்சி அளிக்கிறது.

    பட்டு நூல் வளையல்களில் சிறு சிறு மணிகள் தொங்கியபடி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான ஆடை அலங்காரத்திற்கும் ஏற்ற பட்டு நூல் ஆபரணங்கள் பாரம்பரிய பட்டாடைகளுக்கு அணியும்போது தனிப்பட்ட கூடுதல் அழகை தருகின்றது. இளம்பெண்கள் குர்தி போன்ற வண்ண பருத்தி ஆடைகளுக்கும் பட்டு நூல் ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர்.
    ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.
    ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வாணி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதாவது ஷெர்வாணி என்பது பெண்கள் அணிகின்ற பிரம்மாண்ட ஆடைகளுக்கு ஏற்ற நிகரான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகிறது. ஆண்கள் அணிகின்ற ஷெர்வாணி வடிவமைப்பு என்பது ஒன்பது வகையிலான பிரிவுகளில் அடங்கி விடுகிறது. அதாவது சிப்கான் ஷெர்வாணி, இன்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி, அச்கன் ஷெர்வாணி, ஜோத்பூரி ஷெர்வாணி, ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி, அனார்கலி ஸ்டைல் ஷெர்வாணி, பிரிண்டட் ஷெர்வாணி, பாகிஸ்தானி ஷெர்வாணி உள்பட ஒன்பது பிரிவுகளை அடிப்படையாக கொண்ட ஷெர்வாணி உருவாக்கம் செய்யப்படுகிறது.

    சிறப்பு மிகு சிப்கான் ஷெர்வாணி


    பழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வாணி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாக காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வாணி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.

    நவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி

    தற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வாணி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.



    பிரிண்டட் ஷெர்வாணி

    நவீன மாடல் என்பதில் பிரிண்டட் ஷெர்வாணியும் இடம் பிடித்துள்ளது. பலதரப்பட்ட உருவ அமைப்பு, வடிவம் மற்றும் வரைவோவிய வேலைப்பாடுகள் போன்றவை பிரிண்ட் செய்யப்பட்டவாறு மேம்பட்ட வண்ண கலவையுடன் உள்ளன. கண்டவுடன் மயங்கும் அமைப்பில் மேற்சட்டை அமைப்பு முழுவதும் பிரிண்ட் வேலைப்பாடு செய்யப்பட்டவாறு கிடைக்கின்றன. இரட்டை வண்ண சாயலில் கீழ்பகுதி பேண்ட்-க்கு இணையான வண்ண அமைப்பு மேல்சட்டையில் வெளிப்படும் வகையில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.

    ஜோத்பூரி ஷெர்வாணி

    அதிகபட்ச ராயல் தோற்றத்தை வழங்கிடும் கச்சிதமான ஷெர்வாணி. இதன் உருவாக்கம் கவுரவ தோற்றத்தை அளிக்கும் வகையிலேயே இருக்கும். ஒற்றை வண்ணத்தில் அழகிய வெட்டுகள் மற்றும் பட்டன் அமைப்புகள் மட்டும் செய்யப்பட்டு இருக்கும். இதில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் ஏதும் பதியப்படாமல் அதிகபட்ச வேலைப்பாடு ஏதுமின்றி அதேசமயம் வியக்கும் வடிவமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணிகள் உள்ளன. மேம்பட்ட துணிகள் கொண்ட சற்று சுகமான அமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணி உருவாக்கப்படுகிறது.

    ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி

    உயர் தரமான துணி வகைகளை உஸ்ஸர், ராசில்க், பனாரஸி மற்றும் ஜாம்வார் கற்கள் கொண்டு அதிகபட்ச கவர்ச்சியுடன் இந்த ஷெர்வாணி உருவாக்கம் திகழ்கிறது. மேல்சட்டை அமைப்பு என்பது இரு அடுக்கு பிரிவுகளாக வேறு வண்ணப்பகுதிகளாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜாக்கெட் அமைப்பில் அதிகபட்ச வேலைப்பாடும் அதற்கு அடுத்த பகுதியில் பிளைன் துணி அமைப்பும் உள்ளவாறு உள்ளது. தங்க சரிகை மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் ஷெர்வாணி தங்கமயமாய் ஜொலிக்கும் அமைப்பில் உள்ளன.

    அனார்கலி ஷெர்வாணி

    மார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வாணியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வாணி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது. 
    பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.
    இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

    ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

    இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

    இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.



    இயற்கை முறையில் சாயமேற்றுதல்

    இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

    கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

    கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.
    பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர்.
    விழா காலங்களில் தொடர்ச்சியாக வருகின்ற காரணங்களால் ஆடை வடிவமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் புதிய புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை சந்தையில் விற்பனைக்கு தருகின்றனர். பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. அதுபோல் திருமண நிகழ்வுகளுக்கும் லெஹன்கா சோலி விரும்பி அணிகின்ற ஆடையாகவே உள்ளது.

    லெஹன்கா சோலி என்பது உடனுக்குடன் அணிந்து கொள்ளவும், வேறு உடைக்கு மாறும்போது சுலபமாக கழட்டி மாற்றி கொள்ளவும் முடியும். அதுபோல் பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். அதுபோல் லெஹன்கா என்பது சிலகாலம் வரை வைத்திருந்து அணியக்கூடிய வகையில் இருக்கும்.

    உடனே சிறியதாக மாற்றம் அடையாது. அதுபோல் உடல் அளவில் ஏதும் மாற்றம் ஏற்பட்டாலும் சிறு மாற்றம் செய்து அணிய வசதியான ஆடையாகவும் உள்ளது. தற்போது லெஹன்கா சோலி என்பதில் கீழ் பகுதி பேண்ட் என்றவாறு பலோசா மற்றும் ஷராரா பேண்ட் போன்றவை வந்துள்ளன. இது புதிய லெஹன்கா ஆடை வகையாக மாற்றம் பெற்றுள்ளன. லெஹன்கா சிறப்பிடம் பெறுவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கவே செய்கின்றன.

    லெஹன்கா சிறப்பு மிக்க துணி வகைகள்


    லெஹன்கா என்பது பெரும்பாலும் அதிக எம்பிராய்டரி மற்றும் மேல் வேலைப்பாடுகளுடன்தான் காணப்படும். இந்த சீசனில் அதில் சற்று மாறுபட்டு கனமான அதிக உயர்தர தையல்களுடன் கண்கவரும் வகையில் உயர்ரக துணிகளான பராகோட், பனாரஸி பட்டு, காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற தாய பட்டு துணிகளுடன் உருவாக்கப்படுகின்றன. அதிக எம்பிராய்டரி இல்லாமல் உயர்ரக பட்டு துணி என்பதில் மைசூர் பட்டு மற்றும் பனாரஸி பட்டு துணி லெஹன்கா அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன. சாதாரணமாக அணியக்கூடிய வகையில் பட்டு துணி லெஹன்கா இருப்பதுடன் அதிக விலையின்றியும் கிடைக்கின்றது.

    கோப்பு படம்

    மேற்புற ஓவிய வேலைப்பாடுகள்

    ஓவியம் சார்ந்த (அ) கலைநயம் சார்ந்த பிரிண்ட் செய்யப்பட்டவை அதிகமாக உள்ளன. அதாவது அழகிய ஓவியங்கள், மார்டன் ஆர்ட், முரலி மற்றும் பாரம்பரிய ஓவியக் கலைகளான ஆஸ்டெக் மற்றும் மெரேக்கான் ஓவியப்பாணியிலான வடிவங்கள் அழகுற துணிகளின் மீது பி ரிண்ட் செய்யப்படுவதால் அவை ஆடம்பர வடிவமைப்பை தருகின்றன. இந்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியின் ஓரப்பகுதியில் பிரம்மாண்ட அளவில் நெய்யப்படும் சில லெஹன்காகள் வருகின்றது. எம்பிராய்டரி செய்யப்பட்டு அதிக கனமான லெஹன்கா போலன்றி எடை குறைந்த இந்த லெஹன்கா அணிவதற்கு இலகுவாக உள்ளது.

    பூ வேலைப்பாடு லெஹன்கா

    லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

    பெரிய ஜாக்கெட் அமைப்புடன் கூடிய லெஹன்கா

    லெஹன்கா ஜாக்கெட் அமைப்பு என்பது இடுப்பு வரை மட்டுமே இருக்கும். புதிய ஜாக்கெட் என்பது முழு அளவு அதாவது இடுப்பிற்கு கீழ் பகுதி வரை இறங்கியவாறும், முழுக்கை அமைப்புடன் பிரம்மாண்ட ஆடை வடிவமைப்புடன் இருக்கின்றன. இந்த ஜாக்கெட் என்பது அதிக வேலைப்பாட்டுடன் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி பிளைன் லெஹன்கா என்றவாறும் சில வருகின்றன. அதாவது ஓரப்பகுதியில் மட்டும் பட்டையான லேஸ் வைக்கப்பட்டு உடல் பகுதி ஏதும் பிரிண்ட் செய்யப்படாது பிளைன்-ஆக உள்ள லெஹன்காவும் சற்று வித்தியாசமாக காட்சி தருகின்றது. லெஹன்கா சோலி தன் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டை குறைத்து கொண்டு பிரிண்டட் லெஹன்கா சோலிகளாக உலா வருகின்றன. 
    பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
    இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

    இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

    தோத்தி சல்வார்:-
    பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

    பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

    பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.



    ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

    பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

    ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

    பெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.
    பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

    பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

    பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.



    நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

    நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

    மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

    ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.



    நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

    அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால்  வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

    பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் பெண்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் தான்
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்…

    ப்யூர் காட்டன் :

    மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.

    போச்சம்பள்ளி :

    காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.

    பூம்காய் சேலை :

    இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள்.



    இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.

    டண்ட் சேலை :

    பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காதி சேலை:

    கைத்தறி சேலைகளான இதனை ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டனில் விரைப்பான லுக் கொடுப்பதால் பார்ட்டிகளுக்கு அணிந்து சென்றால் தனியாக தெரிந்திடும். அதே போல இதில் பெரிய கண்களை உறுத்தும் டிசைன்கள் இருக்காது.

    தாக்ககை சேலை :

    பங்கலாதேஷில் உள்ள தாக்காவிலிருந்து வருகின்ற சேலை இது. இங்கிருந்தே ப்ளைன் த்ரட் வொர்க் கொண்ட சேலைகளும் வருகிறது. தங்க நிறத்தில் ஜரிகை வேலைகள் நிரம்பியிருக்கும் அந்த சேலையை ஜம்தனி தாக்கை என்றும் அழைக்கப்படும். டிசைனர் சேலைக்கான லுக் இதில் கிடைத்திடும்.

    பசப்பள்ளி சேலை :

    ஒடிசாவின் கைத்தறி சேலை வகை இது. இதில் பெரும்பாலும், செக்டு பேட்டர்ன் தான் வரும். இந்த டிசைனில் ஒரு சேலை தயாரிக்கு ஒரு மாதம் வரை ஆகும் மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இதன் எலகண்ட் லுக்கிற்கு தாரளமாக கொடுக்கலாம்.
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோன் நீங்க தான் என்று விமர்சித்துள்ளார்கள். #Amalapaul
    அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

    அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

    அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.



    அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.
    ‘அதோ அந்த பறவை போல’ படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் போஸ்டரை பார்த்து விஷால் மிரண்டிருக்கிறார். #Amalapaul #Vishal
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார் அமலாபால்.

    ‘ஆடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘மேயாதமான்’ புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ராணாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் நேற்று வெளியிட்டார்கள். வித்தியாசமான தோற்றத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    தற்போது விஷால் இந்த போஸ்டரை பார்த்து தைரியமான அமலாபாலை பாராட்டுகிறேன். சிறப்பான பர்ஸ்ட்லுக் போஸ்டர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.
    ×