search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96002"

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?
    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய ட்ரெண்ட் என்று சொல்லலாம்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    மிகச் சமீபத்திய பிளவுஸ் டிரெண்ட் என்று பட்டன் ரோ பேக் மாடலைச் சொல்லலாம். இவை பட்டு சேலைகளுக்கு அணிந்து கொள்ள சூட்டானவையாகும். இந்த பிளவுஸ்களில் க்ளோஸ் நெக் வைத்து, முதுகுப்புறம் பட்டன்களைத் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ தைக்கிறார்கள். ப்ளவுஸ் நிறத்திற்கு கான்ட்ராஸ்டாக பட்டன்களை வைப்பது இன்னும் அழகைக் கூட்டுகின்றது.

    ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்காக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆஃப் ஹோல்டர் பிளவுஸ் டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும். அம்மா, பாட்டியின் பட்டுப் புடவைகளை இதுபோன்ற பிளவுஸ்களுடன் போடும்பொழுது மிகவும் மாடர்னான தோற்றத்தையே தரும்.

    மக்காம் வேலைப்பாடுகளுடன் முக்கால் கை வரை வைத்துத் தைக்கப்படும் இவ்வகை பிளவுஸ்களையே தென்னிந்திய மணப்பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

    ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் டிசைன்களை அனைவருமே பட்டுச் சேலைகளுடன் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாடல் பிளவுஸ்கள் மறுபடியும் இன்றைய டிரெண்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    அதேபோல் ப்ரோகேட் பிளவுஸ்களை எந்தச் சேலையுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பலவித நிறங்களை ஒரே பிளவுஸில் இருப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தோ அல்லது பல சேலைகளுக்கு ஒரே பிளவுஸை அணிந்து கொள்ளவோ வாய்ப்புகளை அதிகமாக வழங்குகிறது. இவற்றின் ரிச்சான லுக்கானது அனைத்து பெண்களின் வாட்ரோப்களிலும் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

    நெட் துணிகளை பிளவுஸ்களின் கைப் பகுதிக்கு மட்டும் வைத்து தைக்க டிசைன் மாறி இப்பொழுது முதுகுப்புரம் முழுவதும் வைத்துத்தைத்து அதில் பேட்ச் வொர்க் அல்லது சிக்கி, குந்தன் வேலைப்பாடுகளுடன் தைத்து அணிவது இப்பொழுது டிரெண்ட் என்று சொல்லலாம்.

    முக்கால் கை வைத்து ஹை நெக்குடன் தைக்கப்படும் பிளவுஸ்களை டிசைனர் சேலைகளுடன் அணியும் போது அவை கூடுதல் கம்பீரத்தை தருகின்றது.

    நார்மல் ஷர்ட்டுகளின் மாடல்களில் பிளவுஸ்களை அணிந்து கொள்வது இன்றைய டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக உள்ளது.

    ஹை நெக் முக்கால் கை வைத்து முழுக்கழுத்தும் நகை அணிந்தது போல தங்க நிற நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும் பிளவுஸ்களை பிளெயின் சேலைகளுடன் அணிந்தால் ஒரு சின்ன நகையைக் கூட அணிய வேண்டிய அவசியமில்லை.

    பட்டர்ஃபிளை கட் பேக் நெக் பிளவுஸ்கள் ஒரு தனித்துவமான பாணியில் பூசிய உடல் வாகுடன் இருக்கும் பெண்கள் அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இவ்வகை பிளவுஸ்கள் டிசைனர் சேலைகளுடன் அணிய ஏற்றவை.

    சோளி ஸ்டைல் ஃபேஷன் பிளவுஸ்களில் பின்புறம் முடிந்து கொள்வது போல் வந்திருக்கும் மாடலும் இன்றைய டிரெண்ட் எனலாம்.

    ஒரு ஷோல்டர் மாடல், ட்யூப் ஸ்டைல் மாடல், க்நாட்டட் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல் என பிளவுஸ்களை விதவிதமாகத் தைத்து அணிவதிலும், தைத்த பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிவதிலும் இன்றைய இளைம் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையிலும் பிளவுஸ்களுக்குச் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள்.
    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
    இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடிய குர்தீஸ் எனப்படும் மேல்சட்டைகள் அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. பல்வேறு ரகங்களில் உருவாகும் குர்தீஸ்கள் தற்போது புதுமையும், நவீனமும் கலந்தவாறு டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை ஒரு நாள் முழுவதும் அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாகவும், பலரும் பார்த்து வியக்கும் மேம்பட்ட தையல் அமைப்புகளை உள்ளடக்கியவாறு தைக்கப்படுகின்றன. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் செல்வதற்கு ஏற்ற ஆடையாக திகழ்வதுடன், வெளியூர் மற்றும் சுற்றுலா பயண்களிலும் அணிய ஏற்றதாக உள்ளது. இளவயது பெண்கள் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளுக்கு அணிந்து செல்ல ஏதுவான ஆடையாகவும் திகழ்கிறது.

    விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்

    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.

    அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்

    டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.

    அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.

    இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.

    ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்

    அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.

    டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    பெண்கள் அணியக்கூடிய பேண்ட்டுகளில் அழகிய மாற்றங்களுடன் வசதியாக அணிந்து கொள்ளும் விதத்தில் வந்தவைதான் பலாஸோ பேன்ட்டுகள். அதிலும் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.
    பெல்ட் பலாஸோ:-

    இடுப்பிலிருந்து சிறிது சிறிதாக தளர்வாகத் தொடங்கி கால்களை நெருங்கும் பொழுது அதிகத் தளர்வாக இருக்கும் பலாஸோ பேன்ட்டுகளில் பெல்ட்டுகளானது அதுவும் அதே பேன்ட் துணியிலேயே விதவிதமான வடிவங்களில் வருவது பெல்ட் பலாஸோ என்று அழைக்கப்படுகின்றது.

    பார்டர் பலாஸோ

    இந்த பேன்ட்டுகளின் கீழ்ப்பகுதியில் பார்டர்கள் வைத்து வருபவை பார்டர் பலாஸோக்களாகும். இந்த பார்டர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டவையாகவோ, பிரிண்டுகள் செய்யப்பட்டவையாகவோ, ஜரி, குந்தன் வேலைப்பாட்டுடனோ அல்லது பார்டர்கள் தனியாக வாங்கி இதன் மேல் வைத்து தைக்கப் பட்டவையாகவோ, லேஸ்கள் வைத்து தைக்கப்பட்டவையாகவோ இருக்கும். பார்டர்கள் மெல்லியதாகவும் கிடைக்கும் அதேபோல் முழுங்கால் வரை பார்டர்கள் இருப்பது போன்றும் கிடைக்கும்.

    ஸ்கர்ட் பலாஸோ

    அச்சு அசலாக பாவாடை போன்ற தோற்றத்துடன் இருக்கும் இவற்றை “லாங் ஸ்கர்ட் பலாஸோ” என்றும் அழைக்கிறார்கள். இடுப்புப் பட்டையிலிருந்தே சுருக்குப் பட்டைகள் துவங்குகின்றன. அதிக ஃப்ளேர்களுடன் வரும் இந்த ஸ்கர்ட் பலாஸோ ஷார்ட் குர்த்தியுடன் அணியும் பொழுது மிகவும் அழகாக இருக்கின்றது. ஸ்கர்ட் பலாஸோக்களின் பக்கவாட்டில் குஞ்சலம் மற்றும் சலங்கைகள் தொங்குவது போல் வருவது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது.

    பேன்ட் பலாஸோ

    பேன்ட் அமைப்பில் இருக்கும் இவ்வகை பலாஸோக்களை ஷர்ட்டுகள் மற்றும் குட்டை டாப்புகளுடன் அணியலாம். பெரும்பாலும் பிளெயின் மற்றும் கோடுகள் இருப்பது போன்றே இவை வடிவமைக்கப்படுகின்றன. கோடுகளுடன் வரும் பேன்ட்டிற்கு பிளெயின் நிறத்தில் டாப் அணிவதும், பிளெயினாக வரும் பேன்ட்டிற்கு கோடுகள் போட்ட டாப்பை அணிவரும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    ஃபிளீடட் பலாஸோ

    அதிக ஃபிளீட்டுகளுடன் வரும் இவ்வகை பலாஸோக்கள் குர்த்திகள் மற்றும் டாப்புகளுடன் அணிய ஏற்றவை. டாப்புகளை டக்இன் செய்து இவ்வகை பலாஸோவுடன் அணியும் பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கும்.

    சைட் ஸ்லிட் பலாஸோ

    கணுக்காலிலிருந்து முழங்கால் வரை பக்கவாட்டில் ஸ்லிட்டுகளுடன் வரும் பலாஸோக்கள் இப்பொழுது கல்லூரி மாணவிகளிடையே மிகவும் பிரபலம். குட்டை டாப்புகளுடன் இவற்றை அணியும் பொழுது இது நிச்சயமாக மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பக்கவாட்டில் வரும் ஸ்லிட்டானது சிலவற்றில் குறைந்த அளவு உடையதாகவும் வருகின்றது.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    இன்று பாவாடை-தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை.
    பாரம்பரியம் காப்போம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளி எழுந்து மெரினாவில் திரண்ட கூட்டமும், எழுப்பிய கோஷமும் வரலாற்றுப் பதிவாகிப்போனது.
    சபாஷ். தமிழன் தன் அடையாளத்தை காக்க எழுந்துவிட்டான் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே பாரம்பரிய அடையாளங்கள் காக்கப்படுகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா? என்பதை பாரம்பரியம் பற்றி பெருமை பேசும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.

    இன்னும் பத்துநாளில் தைமகள் பிறக்கப்போகிறாள். தை திருநாள் பாரம்பரிய கலாச்சார திருவிழா.

    இந்த பாரம்பரிய விழாவுக்கு தனி மகத்துவம் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக பாரம்பரியத்தை காத்து கொண்டாடுவதில் அர்த்தமும் உண்டு. நிலத்தில் பாடுபட வைத்து பலனையும் கொடுப்பவள் நிலமகள். அந்த இனிய மகளுக்கு - இயற்கைக்கு நன்றி செலுத்தும் இனிய விழாவே தை திருநாள். இந்த இனிய நாளில் உண்பது, உடுத்துவது, கொண்டாடுவது எல்லாமும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தோடு தொடர்புடையது. அதில் ஒன்று தான் ஜல்லிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பைக் ரேஸ், கார் ரேஸ் என்று எத்தனை போட்டிகள் வந்தாலும் ஜல்லிக்கட்டை மட்டும் மனதார நேசிப்பது ஏன்? அது தமிழர் அடையாளம். அதேபோல் தான் பொங்கல் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நேசிப்பதும், காப்பதும் தான் நமது அடையாளத்தை அழியாமல் பாதுகாக்கும். நாகரீக மோகத்தில் சிக்கி நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, பாவாடை-தாவணி, புடவை இவைகளை மறந்து போனோம் என்பதை மறைப்பதற்கில்லை.

    இன்று பாவாடை - தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை. இந்த அடையாளம் தானே தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இதன் மீது தானே மற்றவை எல்லாம் கட்டமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த அடிப்படை அடையாளத்தை தொலைத்துவிட்டு மற்ற எதைப்பற்றியும் பேசிப் பயனில்லை.



    வேட்டி... ....


    அவ்வளவு சாதாரணமான உடையா?

    கர்ணனுக்கு உடன் பிறந்த கவச குண்டலம் போல் தமிழனின் உடலை முதல் முதலில் ஒட்டியிருந்தது இந்த வேட்டி அல்லவா? இலைகளையும், தளைகளையும் சுற்றி உடலை மறைத்து வாழ்ந்த ஆதிகால தமிழன் நாகரீகத்தின் முதல் அடையாளமாக உருவாக்கிய உடை தான் வேட்டி. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து, பஞ்சை நூலாக்கி நெசவாளர்கள் எண்ணத்துக்கு வடிவமாக்கி உருவாக்கியது தான் வேட்டி, சேலை வகையறாக்கள்... !

    இது வெறும் உடை அல்ல. உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் அல்லவா அடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் வேட்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது! கவித்துவம் இல்லாத இதயங்கள் கூட என்ன விலை அழகே? என்று வர்ணித்து ரசிக்கிறதே! இந்தமாதிரி வேட்டி-சட்டை அணிந்து வருபவருக்கு தனி கம்பீரம் வந்துவிடுகிறது.

    இப்படிப்பட்ட பாரம்பரிய அடையாளத்தோடு நின்று, பொங்கல் வைத்து கொண்டாடினால் எப்படி இருக்கும்...? துள்ளாத மனமும துள்ளும்! பாடாத மனமும் பாடும்! ஆடாத மனமும் ஆடும், பாடும் கொண்டாடுமே...?!

    ஆனால் இன்று தமிழர்களின் உடலோடு ஒட்டியிருந்த வேட்டி உருவிப் போனதால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்று கவர்ச்சி வசனம் பேச வேண்டி இருக்கிறது.



    வேட்டி கட்டினால் கவுரவ குறைச்சல் என்று கருதும் காலம்! பக்கத்து மாநிலமான கேரளாவில் வேட்டி கட்டுவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆகால் வேட்டி கட்டக்கூட தெரியாத நிலையில் தமிழ் இளைஞர்கள் இருப்பது வேதனையானது. அதனால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்றெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

    எது எப்படியாயினும் நாம் பாரம்பரிய திருவிழா காலங்களிலாவது நமது பாரம்பரிய உடையோடு இருந்தால் போதும். பாரம்பரியத்தை காக்கிறோம் என்று பெருமையோடு மார்தட்டிக் கொள்ள முடியும். அதைவிட்டு விட்டு பத்துநாள் துவைக்காத ஜீன்ஸ், அரை மற்றும் முக்கால் டவுசருடன் நின்று கொண்டு பாரம்பரியம் காப்போம் என்று முழங்குவது வேடிக்கையாகத்தான் பார்க்கப்படும்.

    வருகிற பொங்கல் திருநாளை அதற்கான சபதமேற்பு நாளாக கடைப்பிடிப்போம். பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைப்போம். எந்த பக்கம் திரும்பினாலும் சேலை கட்டிய எம் இன பெண்கள்-பாவாடை - தாவணியில் என் சகோதரிகள் - வேட்டி, சட்டையில் இளசுகள் முதல், பெரியவர்கள் வரை தெரிய வேண்டும். மாற்று உடையில் ஒருவரை பார்த்தால் அவர் வேற்று மாநிலத்தவராக இருக்க வேண்டும்.

    வருகிற தமிழர் திருநாளையாவது தமிழரின் அடையாளத்தோடு கொண்டாடுவோம். அதுவே தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் வளர்க்கும். வாழ வைக்கும்.

    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    அலுவலகம் செல்லும் பெண்கள் ஆடை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும்.
    அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.

    சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.

    அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும். புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.



    பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.

    சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.

    உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.

    சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…
    பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர்.
    விழா காலங்களில் தொடர்ச்சியாக வருகின்ற காரணங்களால் ஆடை வடிவமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் புதிய புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை சந்தையில் விற்பனைக்கு தருகின்றனர். பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. அதுபோல் திருமண நிகழ்வுகளுக்கும் லெஹன்கா சோலி விரும்பி அணிகின்ற ஆடையாகவே உள்ளது.

    லெஹன்கா சோலி என்பது உடனுக்குடன் அணிந்து கொள்ளவும், வேறு உடைக்கு மாறும்போது சுலபமாக கழட்டி மாற்றி கொள்ளவும் முடியும். அதுபோல் பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். அதுபோல் லெஹன்கா என்பது சிலகாலம் வரை வைத்திருந்து அணியக்கூடிய வகையில் இருக்கும்.

    உடனே சிறியதாக மாற்றம் அடையாது. அதுபோல் உடல் அளவில் ஏதும் மாற்றம் ஏற்பட்டாலும் சிறு மாற்றம் செய்து அணிய வசதியான ஆடையாகவும் உள்ளது. தற்போது லெஹன்கா சோலி என்பதில் கீழ் பகுதி பேண்ட் என்றவாறு பலோசா மற்றும் ஷராரா பேண்ட் போன்றவை வந்துள்ளன. இது புதிய லெஹன்கா ஆடை வகையாக மாற்றம் பெற்றுள்ளன. லெஹன்கா சிறப்பிடம் பெறுவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கவே செய்கின்றன.

    லெஹன்கா சிறப்பு மிக்க துணி வகைகள்


    லெஹன்கா என்பது பெரும்பாலும் அதிக எம்பிராய்டரி மற்றும் மேல் வேலைப்பாடுகளுடன்தான் காணப்படும். இந்த சீசனில் அதில் சற்று மாறுபட்டு கனமான அதிக உயர்தர தையல்களுடன் கண்கவரும் வகையில் உயர்ரக துணிகளான பராகோட், பனாரஸி பட்டு, காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற தாய பட்டு துணிகளுடன் உருவாக்கப்படுகின்றன. அதிக எம்பிராய்டரி இல்லாமல் உயர்ரக பட்டு துணி என்பதில் மைசூர் பட்டு மற்றும் பனாரஸி பட்டு துணி லெஹன்கா அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன. சாதாரணமாக அணியக்கூடிய வகையில் பட்டு துணி லெஹன்கா இருப்பதுடன் அதிக விலையின்றியும் கிடைக்கின்றது.

    கோப்பு படம்

    மேற்புற ஓவிய வேலைப்பாடுகள்

    ஓவியம் சார்ந்த (அ) கலைநயம் சார்ந்த பிரிண்ட் செய்யப்பட்டவை அதிகமாக உள்ளன. அதாவது அழகிய ஓவியங்கள், மார்டன் ஆர்ட், முரலி மற்றும் பாரம்பரிய ஓவியக் கலைகளான ஆஸ்டெக் மற்றும் மெரேக்கான் ஓவியப்பாணியிலான வடிவங்கள் அழகுற துணிகளின் மீது பி ரிண்ட் செய்யப்படுவதால் அவை ஆடம்பர வடிவமைப்பை தருகின்றன. இந்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியின் ஓரப்பகுதியில் பிரம்மாண்ட அளவில் நெய்யப்படும் சில லெஹன்காகள் வருகின்றது. எம்பிராய்டரி செய்யப்பட்டு அதிக கனமான லெஹன்கா போலன்றி எடை குறைந்த இந்த லெஹன்கா அணிவதற்கு இலகுவாக உள்ளது.

    பூ வேலைப்பாடு லெஹன்கா

    லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

    பெரிய ஜாக்கெட் அமைப்புடன் கூடிய லெஹன்கா

    லெஹன்கா ஜாக்கெட் அமைப்பு என்பது இடுப்பு வரை மட்டுமே இருக்கும். புதிய ஜாக்கெட் என்பது முழு அளவு அதாவது இடுப்பிற்கு கீழ் பகுதி வரை இறங்கியவாறும், முழுக்கை அமைப்புடன் பிரம்மாண்ட ஆடை வடிவமைப்புடன் இருக்கின்றன. இந்த ஜாக்கெட் என்பது அதிக வேலைப்பாட்டுடன் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி பிளைன் லெஹன்கா என்றவாறும் சில வருகின்றன. அதாவது ஓரப்பகுதியில் மட்டும் பட்டையான லேஸ் வைக்கப்பட்டு உடல் பகுதி ஏதும் பிரிண்ட் செய்யப்படாது பிளைன்-ஆக உள்ள லெஹன்காவும் சற்று வித்தியாசமாக காட்சி தருகின்றது. லெஹன்கா சோலி தன் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டை குறைத்து கொண்டு பிரிண்டட் லெஹன்கா சோலிகளாக உலா வருகின்றன. 
    பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
    இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

    இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

    தோத்தி சல்வார்:-
    பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

    பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

    பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.



    ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

    பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

    ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

    ×