search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. கடந்த 14-ந்தேதி அழகியகூத்தருக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது.

    கடந்த 17-ந்தேதி காலையில் அழகியகூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். இரவில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலையில் பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நேற்று நடந்தது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார். 
    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் விநாயகர், தில்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த 8-ந்தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கோவில் முன்பு புறப்பட்டு, வடக்கு வீதி, கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (புதன்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவமும், 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் விநாயகருக்கும், தில்லைகாளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி இரவு தெருவடைச்சான் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    திருச்சி பூஞ்சோலையம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் நெய்க்குளம் ஊராட்சி நெடுங்கூரில் பூஞ்சோலையம்மன் ஆலடியான் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மே 29-ந் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் நெய்க்குளம், பி.கே.அகரம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பாடாலூர், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கிராமமுக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் வழங்கப்பட்டது. 
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தார். அங்கு கிராம வழக்கப்படி வெள்ளை வீசுபவர்கள், கிராம காவலர்கள், தேருக்கு கட்டை போடும் ஆசாரிகள் ஆகியோரை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர்.

    அப்போது காவல்துறை குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து கணேஷ் பட்டர் பூஜைகள் நடத்தினார். பின்னர் காலை 8.50 மணிக்கு கூடுதல் கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன், துணை கண்காணிப்பாளர் மோகன்குமார், தாசில்தார் பார்த்திபன், ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மாதவன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேர் புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக வலம் வந்தது. அப்போது வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பானக்கம், நீர்மோர், கூழ் வழங்கினர் மேலும் சாக்லெட், மாம்பழம், வாழைப்பழம், விசிறி, காசுகள் ஆகியவற்றை சூறைவிட்டனர். தேர்நிலைக்கு வந்ததும், குழந்தைகள் பெரியவர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தேரை வலம் வந்து கோவிலுக்குள் சென்றனர்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் பெண்களிடம் சேப்டி பின் கொடுத்து நகைகளை உடையில் மாட்டி கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். 
    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் ஆகும். இங்கு பெருமாள் 4 வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

    இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித் தருகிறார். மேலும் பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெருமாள், துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்மம், கருடன், ஹனுமந்த வாகனம், யானை, குதிரை, நம்பிரான் ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து சூர்ணாபிஷேகம், நெல் அளவு கண்டருளுதல், உபநாச்சியாருடன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.


    ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளிய வேதநாராயண பெருமாள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை வேதநாராயணப்பெருமாள் மற்றும் உபநாச்சியார்களுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் பழ வகைகளால் 12 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து உபயதாரர் வாங்கி வந்த கிளி மாலை அணிவிக்கப்பட்டு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமான் தேரில் எழுந்தருளினார்.

    காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக கோவிலை வலம் வந்த தேர், 12 மணிக்கு நிலையை வந்தடைந்ததும் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தில் நாமக்கல், எருமபட்டி, முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம், மணமேடு, மோகனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர். 
    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது.

    10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மேல் திருத்தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.


    கோவில் யானை கஸ்தூரி, தேரை முட்டி தள்ளிய காட்சி.

    இதைத்தொடர்ந்து பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக சென்ற தேர் பின்னர் நிலை வந்து சேர்ந்தது.

    முன்னதாக மேடான பகுதிகளை கடக்க முடியாமல் தேர் நிற்கும் போது கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டித்தள்ளி நகர்த்தியது. தேர் நிலையை அடைந்ததும் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9-ம் நாளான நாளை (புதன்கிழமை) இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10-ம் நாள் இரவு சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மயில், நாகம், பூதம், யானை, சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் முருகன், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் விராலூருக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து விராலிமலைக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.


    சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் ராமராஜா, விராலிமலை தாசில்தார் செல்வவிநாயகம் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது கூடிநின்ற திரளான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து முருகனை வழிபட்டனர். பின்னர் 11.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

    இதில் விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வைகாசி பெருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி சாமிகள், கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்தி சாமிகள் தேரை வந்தடைந்தனர்.

    பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.


    பாடலீசுவரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவதற்காக பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.

    தேரடித்தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் ஒரு மணி அளவில் நிலையை வந்தடைந்தது. திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர் வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, நாகராஜன், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலையில் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு இன்னிசை நிகழ்ச்சி, அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தொழில் அதிபர் எம்.கோபி ஒரு ஜோடி வெள்ளி கொலுசை திருவிழாவை காணவந்த ஒரு சிறுமிக்கு தானமாக வழங்கினார். அதன்பின்பு பூப்பந்தல் வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    9-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியாக எடுத்து வரப்பட்டார். அம்மன் பல்லக்கின் முன் நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை மீது புனித நீர் கொண்டு செல்லப்பட்டது. தேர் நிறுத்தப்பட்டிருந்த கீழரத வீதிக்கு இந்த பவனி சென்றடைந்ததும், அம்மன் தேரில் எழுந்தருளினார். தேரில் வைத்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் மூலமும் அபிஷேகம் நடந்தது.



    காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்பு மணி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர், தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக மதியம் 12.30 மணிக்கு கீழ ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

    10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை மண்டகப்படி, சமய உரை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது. 
    வயலூர் முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களுள் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிசாமி ரதாரோகணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர் தேரில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வயலூர், அதவத்தூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற போது மழை பெய்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்த பிரமுகர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் தரிசனமும், 11.30 மணிக்கு தீர்த்தவாரியும், பிறகு பால் காவடி, அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறுகின்றன. இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளிக்கிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. 
    ×