என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.
அவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.
தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கனவே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
லண்டன்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன் எடுத்தது. இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 289 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ரன்னுக்குள் சுருண்டது.
தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.
நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். நாம் விளையாடி கொண்டிருக்கும் போது வானிலை பற்றி சிந்தித்து கொண்டிருக்க முடியாது.
வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எங்களை ரன் எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.
எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன் என்றார்.
நம்பர்-ஒன் அணியான இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முற்றிலும் திணறிவிட்டனர்.
மேலும் வீரர்கள் தேர்விலும் தவறு செய்துவிட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினர்.
குல்தீப் யாதவுக்கு பதிலாக இன்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளருடன் களம் இறங்கி இருக்கலாம். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வெறும் 1 ஓவர் மட்டுமே வீசி இருந்தார்.
முதல் டெஸ்ட்டில் இந்தியா போராடியே தோற்றது. ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.
5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left 😜 junior @sachin_rt#Goodboypic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018
இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது.
இந்த நிலையில் தற்போது குடியுரிமை கட்டணம் 1,012 பவுண்ட்ஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பெறாத இங்கிலாந்து இளைஞர்களால் உயர்கல்வியில் நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
மேலும் குடியுரிமை பெறாமல் வளரும் குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். தனது நண்பர்களுக்கு இருக்கும் உரிமை தனக்கு இல்லாததை மெதுவாக புரிந்து கொள்வார்கள்.
இது அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த கட்டண உயர்வானது மிக குறைந்த வருமானம் ஈட்டும் புலம் பெயர்ந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும்.
அவர்களை கடனாளியாக்கி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். #UK #citizenship
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
லண்டனில் வானிலை அறிவிக்கையின்படி காலையில் வெயில் அடிக்கும் என்றும், பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் போட்டி தொடங்கினாலும் இடையில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. #ENGvIND #INDvENG #test
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின் தங்கி இருக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி 194 ரன்னை இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி தோற்றது ஏமாற்றமே. கேப்டன் விராட்கோலியை தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் திறமையை வெளிப்படுத்தவில்லை. அவர் தனி ஒருவராக போராடினார். இறுதியில் பலன் இல்லாமல் போனது.
முதல் டெஸ்டில் அஸ்வினின் சுழற்பந்து அபாரமாக இருந்ததால் இன்றைய டெஸ்டில் இந்தியா 2 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே விராட்கோலி முடிவு செய்வார்.
2 சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் உமேஷ் யாதவ் நீக்கப்படுவார். அவர் இடத்தில் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவர்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. கபில்தேவ், டோனி தலைமையில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அந்த வரிசையில் கோலி இணைந்து சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்க தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை ஆல்-ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் 20 வயதான ஆலி போப் மற்றும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-
அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர். #ENGvIND #BenStokes
அவர் தங்கள் அணி வீரர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். என்னால் ரன் குவிக்க முடிகிறது என்றால் உங்களாலும் ஏன் முடியாது என்று எடுத்து கூற வேண்டும். களம் இறங்கி பயமின்றி விளையாடும்படி அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கங்குலி அதில் கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்