search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி எச் பிரிவில் முதலிடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #ENGBEL

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு லீக் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிரிவில் முதலிடம் பிடிக்கும்.



    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டம் சமனில் இருந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அட்னான் ஜனுசாஜ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இன்றைய ஆட்டங்கள் குறித்து காண்போம். #FIFA2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    ‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும். #FIFA2018 #WorldCup2018
    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வாலின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ அணி. #EnglandTriseries #INDAvWIA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ஏ அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சந்தர்பால் ஹேமராஜ் 45 ரன்களும், ஜேசன் மொகமது 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

    இந்திய வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிக்கினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் தாமஸ் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார். 
     
    இறுதியில், இந்தியா ஏ அணி 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி, இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenT20Triseries #ENGvRSA #RSAvENG

    இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேனியேலி வையட், டம்மி பியூமோண்ட் ஆகியோர் களமிறங்கினர். வையட் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சாரா டெய்லர் களமிறங்கினார். பியூமோண்ட் சிறப்பாக விளையாடினார்.

    சாரா டெய்லர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த நடாலி ஸ்சீவர் 16 ரன்னிலும், கேத்ரின் பர்ண்ட் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பியூமோண்ட் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். அரைசதம் கடந்த பியூமோண்ட் 59 பந்தில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஹீதர் நைட் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில், ஜிண்டில் மாலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிச்செலி லீ, லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அதன்பின் சுன் லூஸ் களமிறங்கினார்.அவர் லீயுடன் இணைந்து ரன் குவித்தார். 

    சிறப்பாக விளையாடிய லீ அரைசதம் அடித்தார். அவர் 37 பந்தில் 68 ரன்கள் (4 பவுண்டரி, 6 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் டேன் வான் நைகெர்க் களமிறங்கினார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரியான் 1 ரன்னில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மிக்னான் டு ப்ரீஸ் களமிறங்கினார்.

    ஒரு கட்டத்தில் தென்னாப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிவந்த சுன் லூஸ் அரைசதம் அடித்தார். தென்னாப்ரிக்கா அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுன் லூஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 52 பந்தில் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அன்யா ஷ்ரப்சோலே, சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #WomenT20Triseries #ENGvRSA #RSAvENG
    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், நிக் கபின்சின் சிறப்பான சதத்தால் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் அணி. #EnglandTriseries #EnglandLions #IndiaA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா ஏ அணி சார்பில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 55 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களுடனும், ஷுபமன் கில் 37 ரன்களுடனும் வெளியேறினர்.



    மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா ஏ அணி 46.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
     
    இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் லியாம் டாசன் 4 விக்கெட்டுகளும், டாம் ஹெல்ம் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய நிக் கபின்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு சாம் ஹைன் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து 54 ரன்களில் அவுட்டானார்.

    இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிக் கபின்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா ஏ சார்பில் ஷ்ர்துல் தாகுர் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #EnglandTriseries #EnglandLions #IndiaA
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

    டிராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர். ஆரோன் பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார்.



    அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.
    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் இறங்கினர். 

    இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 174 ஆக இருக்கும்போது ஜேசன் ராய் 83 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 66 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக ஆடினார். இறுதியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஹேல்ஸ் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அத்துடன் தொடரை 4-0 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாசார்பில் ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvsENG
    உலக கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கூறியுள்ளார்.
    பீஜிங்:

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சீனா சென்றிருந்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமிடம், 2018-ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.



    தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நிறைய அனுபவம் கிடையாது. பெரிய அணிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை பயணம் இனி தான் கடினமாக இருக்கும்’ என்றார். 
    இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்டீரிட் நகரில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #Australia #England
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

    முதலில் இருந்தே இந்த நிதானமாக விளையாடியது. இதனால் அணியின் எண்ணிக்கை 101 ரன்களாக இருக்கும்போது ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர்.

    அணியின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.



    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #AUSvsENG
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. #England #Australia
    நாட்டிங்காம்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும்
    அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 159 ஆக இருக்கும் போது முதல் விக்கெட்டாக ஜேசன் ராய் 61 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய அலெக்ஸ் ஹேல்சும் அதிரடியை தொடர்ந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஒரு ஓவருக்கு 8 ரன்களாக உயர்ந்தது.

    அணியின் எண்ணிக்கை 310 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்ததுடன் 92 பந்துகளில் 5 சிக்சர், 15 பவுண்டரியுடன் 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து ஹேல்சும் சதமடித்தார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மார்கன் 30 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    பொறுப்புடன் ஆடிய ஹேல்ஸ் 92 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரியுடன் 147 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 459 ரனகள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஏற்கனவே தான் அடித்திருந்த 444 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி உலக சாதனை புரிந்துள்ளது.
       
    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 482 ரன்கள் என்ற கடின் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், 
    மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களில் ஆல் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், மொயின் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 242 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். #ENGvsAUS
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #TUNENG

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது. 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.



    இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா - ஜப்பான், போலாந்து - செனகல், ரஷியா - எகிப்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #TUNENG
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #England #Australia
    கார்டிப்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜாசன் ராயின் (120 ரன்) சதத்தின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து களம் இறங்கிய உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஷான் மார்ஷ் சதம் (131 ரன்) விளாசியும் பலன் இல்லை.



    இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் கடைசியாக சந்தித்த 8 ஆட்டங்களில் 7-ல் இங்கிலாந்து வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 3-வது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் நாளை நடக்கிறது. 
    இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார். #Germanprince
    லண்டன்:

    ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ். 41 வயதான இவர் இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து 2015-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது வேகமாக சென்ற குதிரை திடீரென்று துள்ளிக் குதித்தது. இதில் இளவரசர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த தகவலை ஜெர்மன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது. #Germanprince
    ×