search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.

    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது தான். புதிய தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. காயத்தால் முன்னணி பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அந்த அணி துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பேட்டிங்கைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது.

    இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரில் விளையாடுவார்கள். ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இந்த தொடரை பறிகொடுத்தால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அதை தக்க வைக்க கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். ஆனாலும் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 142 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டங்களில் முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்படுள்ளது. #jamesAnderson #England
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார். #jamesAnderson #England
    ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து வீழ்த்தியது. #SCOTvENG #OnedayMatch
    எடின்பர்க்:

    ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.



    அதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். 

    பேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த  3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வலுவான இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டார். #SCOTvENG #OnedayMatch
    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Mosque #SikhGurdware
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்து விட்டனர்.

    அடுத்த சில நிமிடங்களில் லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும் விஷமிகள் தீ வைத்து விட்டனர். குருத்வாராவின் கதவில் ஒரு பாட்டில் பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மசூதியிலும், குருத்வாராவிலும் தீயை அணைத்தனர்.

    லீட்ஸ் நகர சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஹோம்ஸ் இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில், “இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது விசாரணையின் ஆரம்ப காலம்தான். இவ்விரு சம்பவங்களும், வெறுப்புணர்வு சம்பவங்கள் என்றே கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம்” என கூறினார்.

    மேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் துப்பு துலக்குவதாகவும் அவர் கூறினார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
     #Mosque #SikhGurdware  #tamilnews
    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. #ENGvPAK
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து  வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.

    பாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. #ENGvPAK
    பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லாட்சில் தொடங்குகிறது. #ENGvPAK #testmatch
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லாட்சில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து பலமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும்.

    தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் இங்கிலாந்து வெற்றி நெருக்கடியில் உள்ளது.#ENGvPAK #testmatch
    இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. #IndiaSrilanka #Documents #Destroyed
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.

    இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.

    இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.

    ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.  #IndiaSrilanka #Documents #Destroyed
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்க வீரர் அலைஸ்டர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 70 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58.2 ஓவர்களுக்கு 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர். ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார். ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது.



    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 114. 3 ஓவரில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் 68 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழக்க 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் டொமினிக் பெஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். இருவரும் இணைந்து 125 ரன்கள் சேர்த்துள்ளனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், டொமினிக் பெஸ் 55 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஷதப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தற்போது இங்கிலாந்து அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvPAK
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.

    பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் ஆசம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை 
    உயர்ந்தது.

    ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார்.

    இதனால், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது அமிர் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர்.

    முதல் வரிசை ஆட்டக்காரர்களான ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.

    பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அசரை தொடர்ந்து ஹரிஸ் சொகைல் இறங்கினார். இருவரும் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால், முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 23 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 18 ரன்னுடனும், ஹரிஸ் சொகைல் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvPAK
    இங்கிலாந்து நாட்டின் மிடில்ஸ்பரோ நகரில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கணவர் மிதேஷ் (வயது 36). இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகிலேயே கடந்த 3 ஆண்டுகளாக மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

    இதனிடையே, கடந்த திங்கள்கிழமை ஜெசிகா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெசிகாவில் கொலை தொடர்பாக அவரது கணவர் மிதேசை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெசிகா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×