search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது.

    இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையில், அந்த வழியாக காரில் வந்த ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோயல் ஸ்நார் என்பவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஜோயல் ஸ்நாரின் துரித நடவடிக்கையால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
    இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொழும்பு:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

    இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    இங்கிலாந்தில் ஐதராபாத் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லண்டன்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது நதீமுதின் (24). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் ஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி இருந்தார். புறநகரில் பெர்க்ஷிர், பகுதியில் ஸ்லப் என்ற இடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார். உடனே அவரை சூப்பர்மார்க்கெட்டில் பல இடங்களில் தேடினர். இறுதியில் பாதாள கார் நிறுத்தும் அறையில் பார்த்தபோது, கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் 26 வயது வாலிபரை பிர்மிஸ் காமில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்லப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. ஆனால் எதற்காக முகமது நதீமுதினை கொலை செய்தான் என தெரியவில்லை.

    கொலை செய்யப்பட்ட நதீமுதினின் பெற்றோர் ஐதராபாத் பழைய நகரை சேர்ந்தவர்கள். தற்போது இவருடன் லண்டன் சவுத் ஹாலில் தங்கி உள்ளனர். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. மனைவி பெயர் அப்சரி. டாக்டராக இருக்கிறார். கர்ப்பிணியான அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கிடையே நதீமுதின் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை இங்கிலாந்தை விட இந்தியா மோதும் ஆட்டத்துக்கு தான் அதிகம் வசூலிக்கப்படுகிறது. #WorldCup2019
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    1992-ம் ஆண்டை போல இந்த உலக கோப்பையில் ஆட்ட முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை ரவுண்டு ராபின் முறையில் மோதும், ஒவ்வொரு அணிக்கும் 9 லீக் ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா மோதும் ஆட்டத்தின் டிக்கெட் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை விட இந்தியா விளையாடும் போட்டிக்கு டிக்கெட் விலை கூடுதலாக இருக்கிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுத்தம்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஹோட்டல் பாக்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.63,500 ஆகும். இதோடு வாட் வரியும் கூடுதலாகும்.

    இதே மைதானத்தில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஆட்டத்துக்கு ஹோட்டல் பாக்சின் டிக்கெட் விலை ரூ.54,418 + வாட்வரி ஆகும். கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் வரை இந்தியா மோதும் போட்டிக்கு கூடுதல் விலையாகும்.

    இந்த ஸ்டேடியத்தில் உள்ள ரூப்டாப் ஹோமர் ஸ்டாண்டில் இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை ரூ.31 ஆயிரம் ஆகும். இங்கிலாந்து மோதும் போட்டிக்கு இதே டிக்கெட் விலை ரூ.27,159 ஆகும்.

    அதே போல இந்தியா- இலங்கை அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதும் ஆட்டத்துக்கும் டிக்கெட் விலை அதிகமாகும். ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.45 ஆயிரமும், இதே மைதானத்தில் இங்கிலாந்து மோதும் போட்டியின் ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் விலை ரூ.31 ஆயிரமாகும்.

    இந்தியா- பாகிஸ்தான் (ஜூன் 16) மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்திய அணி மோதும் மற்ற ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுவிட்டன. 2 சதவீத டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன. #WorldCup2019
    இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. #EngvsPak
    லண்டன்:

    சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கார்டிப்பில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.

    இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 82 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 49 முறையும், பாகிஸ்தான் அணி 31 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #EngvsPak
    இங்கிலாந்தில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #AlexHepburn
    லண்டன்:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பெர்ன் என்ற கிரிக்கெட் வீரர், வொர்செஸ்டர்ஷைர் கௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார். இவர் ஒரு ஆல் ரவுண்டர்.
     
    2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்ட்டிக்கு சென்ற அலெக்ஸ் நன்றாக குடித்தார். அதன்பின், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அலெக்சின் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, ஏப்ரல் 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #AlexHepburn
    இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித் ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கினார். 

    இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் மல்லையா புதுப்பித்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார். வாய்மொழி விசாரணை அடிப்படையில், மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது பற்றி நீதிபதி முடிவு செய்வார். #VijayMallya 
    ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். #Wikileaks #JulianAssange
    லண்டன்:

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.

    பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

    இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

    இந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். 

    ஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார்  கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Wikileaks #JulianAssange
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

    அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.

    அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.



    ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.

    ஆனால் இங்கிலாந்து எம்.பி.க்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி விட்டது.

    இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டு வந்தார்.

    இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

    அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.
    ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்தது. #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #BrexitDeal #TheresaMay 
    3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. #WIvsENG
    பசட்ரே:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவரில் 71 ரன்னில் சுருண்டது. 3 வீரர்கள் (கேம்பெல், ஹோல்டர், நிக்கோலஸ் பூரண்) மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள்.

    வேகப்பந்து வீரர் டேவிட் வில்லே 7 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மார்க்வுட் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 72 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 37 ரன் எடுத்தார்.

    இங்கிலாந்து பெற்ற ‘ஹாட்ரிக்‘ வெற்றியாகும். ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஒயிட் வாஷ்’ ஆனது.

    டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது. #WIvsENG
    ×