என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.
மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
கயானா:
6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 83 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட்இண்டீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 31 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.
‘ஹாட்ரிக்’ வெற்றி மூலம் வெஸ்ட்இண்டீஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 19.3 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 5 புள்ளியுடன் இங்கிலாந்தும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.
தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் மோதும் ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இதனால் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
இந்த பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நியூசிலாந்து 2-வது வெற்றிக்காகவும், அயர்லாந்து முதல் வெற்றிக் காகவும் காத்திருக்கிறது. #WomenWorldT20
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் கோலோச்சி, இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து தீவிரம் காட்டுகிறது.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ காயமடைந்ததால் காலே டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் சேர்க்கப்பட்டார். சதம் அடித்து சாதனை படைத்த பென் போக்ஸ், விக்கெட் கீப்பிங்கில் 3 கேட்ச், ஒரு ரன்-அவுட் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். பேர்ஸ்டோ காயத்தில் இருந்து குணமடைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் பேர்ஸ்டோ- பென் போக்ஸ் ஆகியோரில் யாருக்கு இடம் என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்த சூழலில் அணியில் மாற்றம் இல்லை, பென் போக்ஸ் அணியில் நீடிப்பார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெளிவுப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக பேர்ஸ்டோ வியக்கத்தக்க வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனாலும் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் பென் போக்சே விக்கெட் கீப்பிங்குக்கு பொருத்தமானவராக இருப்பார் என்றும் ஜோ ரூட் குறிப்பிட்டார். ஆடுகளம் நன்கு உலர்ந்து சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் காணப்படுவதால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்க இங்கிலாந்து காத்திருக்கிறது. பேட்டிங்கில் மொயீன் அலி சரியாக ஆடாதால் இந்த டெஸ்டில் 3-வது வரிசையில் ஜோஸ் பட்லரை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொயீன் அலி பின்வரிசைக்கு தள்ளப்படுகிறார்.
முதலாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. காயம் காரணமாக கேப்டன் சன்டிமால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சுரங்கா லக்மல் அணியை வழிநடத்த இருக்கிறார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஓய்வு பெற்று விட்டதால், அவரது இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாரா இறங்குகிறார். முந்தைய டெஸ்டில் மேத்யூஸ் (இரண்டு இன்னிங்சிலும் அரைசதம்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணி இங்கு 6 டெஸ்டில் விளையாடி 1-ல் வெற்றியும், 2-ல்தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், கீடான் ஜென்னிங்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, பென் போக்ஸ், சாம் குர்ரன், அடில் ரஷித், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இலங்கை: கவ்ஷல் சில்வா, கருணாரத்னே, ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, சுரங்கா லக்மல் (கேப்டன்), அகிலா தனஞ்ஜெயா, மலின்டா புஷ்பகுமாரா.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனையொட்டிய சவுதாலில் வசித்து வந்தவர் பால்பீர் ஜோஹல் (வயது 48). இந்திய வம்சாவளி. இவர் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மார்ல்பாரோ ரோட்டில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொலை செய்யப்பட்ட பால்பீர் ஜோஹலுக்கும், சொகுசு காரில் வந்த 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்த காட்சிகளை கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து காரை வைத்து, ஹசன் முகமது (24), யாசின் யூசுப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது லண்டன் பழைய பெய்லி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஹசன் முகமதுவுக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனையும், யாசின் யூசுப்புக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.
அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.
அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து, அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இந்த மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அப்படிப்பட்ட இந்த மாநாட்டை சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தினால், ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பலவும் புறக்கணிக்க உள்ளன.
இப்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவ் மனுசின், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பி.பி.சி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. #Boycott #SaudiConference #Journalist
8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
இந்திய அணியில் குர்சாஹிப்ஜித் சிங் 4-வது நிமிடத்திலும், அபிஷேக் 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் டேனியல் வெய்ட் 7-வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39-வது மற்றும் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முன்னதாக லீக் சுற்றிலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. #SultanJoharCup #JuniorHockeyFinal
இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷையர் மாவட்டத்தின் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி நகரில் குவிவது வழக்கம். இதனால் சாலிஸ்பரி நகரில் உள்ள உணவகங்களும், விடுதிகளும் வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழியும்.
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம், சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் ரஷியாவைச் சேர்ந்தவர் ஆவார்.அப்போது இருவரும் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தனர். இதையடுத்து அவர் கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஹை ஸ்டீரிட் பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்தையும் தடை செய்தனர். உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.உணவகத்தில் சாப்பிட்ட அந்த ஆணும், பெண்ணும் ‘நோவிசாக்’ என்னும் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இத்தகைய நச்சுப்பொருளை ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவது உண்டு.
கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், நினைவுகூரத்தக்கது. ஸ்கிர்பால், யூலியா இருவர் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்க வைத்து உயிரை இழக்கச் செய்யும் ‘நோவிசாக்’ நச்சுப் பொருள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கடந்த ஜூலை மாதம் இதே சாலிஸ்பரி நகரின் புறநகரான அமெஸ்பரியில் மர்ம மனிதர்கள் வாசனை திரவிய பாட்டில் மூலம் நடத்திய ‘நோவிசாக்’ தாக்குதலில் டான் ஸ்டர்கெஸ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய காதலர் சார்லி ரோவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவங்களில் ரஷிய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாகவே குற்றம் சாட்டியது. ஆனால் இதை ரஷிய அதிபர் புதின் மறுத்தார்.
இதற்கிடையே ஸ்கிர்பால், யூலியா ஆகியோரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ரஷியர்களான அலெக்சாண்டர் பெட்ரோவ் மற்றும் ரஸ்லன் பொஷிரோவ் ஆகியோர் தங்களுக்கும் இதற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் ரஷிய டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் சாலிஸ்பரி நகருக்கு சென்றது உண்மைதான். ஆனால் எங்களது சுற்றுலாவை முடித்துவிட்டு ஒரு மணி நேரத்தில் லண்டன் திரும்பிவிட்டோம்” என்று கூறினர்.
இந்தநிலையில் அதே சாலிஸ்பரி நகரில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவரும் அவருடன் இருந்த மற்றொருவரும் நோவிசாக் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PoisionAttack #Restaurant
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்