search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார். #Dhoni #Sehwag
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. 

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டிவி பேட்டி ஒன்றில் கூறுகையில், இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார்.



    தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கோப்பை போட்டிக்கு முன் 15  அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார்.

    அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என தெரிவித்தார். #Dhoni #Sehwag
    இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் மோசமாக தோற்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி போராடி தோற்றது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன.

    இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

    இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் லோகேஷ்ராகுல் (149 ரன்), விக்கெட் கீப்பர், ரி‌ஷப்பாண்ட் (114 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

    இந்திய அணி 94.3 ஓவர்களில் 345 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது இதனால் இங்கிலாந்து அணி 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராகுலும், ரிசப்பாண்டும் தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்ய கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதி வரை அவர்களால் போராட இயலவில்லை.

    ஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷித், சாம்குர் ரான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

    பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், சவும்தானில் நடந்த 3-வது டெஸ்ட் 60 ரன் வித்தியாசத்திலும் ஏற்கனவே இந்தியா தோற்று இருந்தது. நாட்டிங்காமில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.

    லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.

    இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் (டிரா’ செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.

    இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய வி‌ஷயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKholi
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். #ENGvIND #RishabhPant
    லண்டன்:

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் விளையாடியது. 

    5-ஆம் நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுடன் கை கோர்த்தார் ரிஷப் பந்த். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
      
    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

    ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இணைந்தார் ரிஷப் பண்ட்.

    மேலும், டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள் வரிசையிலும் சேர்ந்து கொண்டார். கபில்தேவ், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங்குடன் நிணைந்தார்.



    மிகவும் குறைந்த வயதில் சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அஜய் ராத்ராவை தொடர்ந்து இரண்டாவதாக இடம் பிடித்து அசத்தினார்.
     
    மற்றொரு சாதனையாக, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பரில் முதலிடம் பிடித்தும் அசத்தியுள்ளார். (100* ரிஷப் பண்ட்).

    தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார். #ENGvIND #RishabhPant
    இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான குக் இன்றைய ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்தால் சங்ககராவை (இலங்கை) முந்தி டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடிப்பார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் குக். தொடக்க வீரரான அவர் இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5-வது டெஸ்டோடு ஓய்வு பெறபோவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    முதல் இன்னிங்சில் குக் அபாரமாக விளையாடி 71 ரன் எடுத்தார். 2-வது இன்னிங்சில் நேற்று அவர் 46 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    குக் 12,371 ரன்களுடன் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 30 ரன் எடுத்தால் சங்ககராவை (இலங்கை) முந்தி டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடிப்பார். சங்ககரா 12,400 ரன்களுடன் உள்ளார்.



    தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதல் இடத்திலும், பாண்டிங் 13,378 ரன்களுடன் 2-வது இடத்திலும், காலிஸ் 13,289 ரன்களுடன் 3-வது இடத்திலும், டிராவிட் 13,288 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜடேஜா பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார். #ENGvIND #Jadeja
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 292 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரைவிட 40 ரன் குறைவாகும்.

    ரவிந்திரஜடேஜா 86 ரன்னும், புதுமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷீத், குர்ரான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி தற்போது 154 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

    இந்த டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா ஏற்கனவே பந்து வீச்சில் சாதித்து இருந்தார். அவர் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல பேட்டிங்கிலும் ஜடேஜா முத்திரை பதித்தார்.



    8-வது வீரராக களம் இறங்கிய அவர் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 156 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் கைப்பற்றினார்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். முதல் 4 டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டில் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். #ENGvIND #Jadeja
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, தேனீர் இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  



    உணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லரும், அடில் ரஷீத்தும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    அடுத்து இறங்கிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  

    இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 63 ரன்னுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 90 ரன்களை சேர்த்துள்ளது. 

    இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா2 விக்கெட்டும் வீழ்த்தினர். #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #JoeRoot #AlasterCook
    லண்டன்:

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்தில் மூன்றில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதற்கிடையே, இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்ட்ர் குக் ஓய்வு பெறுகிறார்.
     
    33 வயதான குக் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் குவித்துள்ளார்.



    இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வாரம் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான வாரமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக நிறைய போட்டிகளில் விளையாடிய வீரர் ஓய்வு பெறுவது எங்களுக்கு பெரிய இழப்பாகும்.

    ஓய்வுபெறும் அலெஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்ப முடிவு செய்துள்ளோம். அதையே இலக்காக கொண்டு இந்த போட்டியில் விளையாட உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #JoeRoot #AlasterCook
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. #ENGvIND #INDvENG
    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கடைசி டெஸ்டில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் கடைசி டெஸ்டில் வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இதில் கோலி மிகவும் நிலையாக ஆடுகிறார்.

    இதனால் நாளைய டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா இடத்தில் புதுமுக வீரர் ஷிகாரி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டெஸ்டில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல காயம் அடைந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம் பெறலாம். மேலும் அஸ்வின் கடந்த டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. லோகேஷ் ராகுல் ஒருவேளை நீக்கப்பட்டால் பிரித்விஷா இடம் பெறலாம்.

    இந்தியாவின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. பேட்டிங் தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் அதில் மேம்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த இயலும்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான குக் இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி டெஸ்டில் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

    33 வயதாக குக் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் குவித்துள்ளார். #ENGvIND #INDvENG
    கோலியை நம்பியே இந்திய அணி இருப்பதாக டெஸ்ட் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். #INDvENG #ViratKohli #KapilDev
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது .

    இதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்டிலும் இந்தியா தோற்றது. 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது. சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன்முலம் டெஸ்ட் தொடரை இழந்தது.

    இங்கிலாந்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-

    விராட்கோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒருவரை மட்டுமே அணி நம்பி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும்.

    விராட்கோலி முக்கியமான வீரர் ஆவார். நீங்கள் முக்கியமான வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். ஒரு வீரரை நம்பி இருக்கும் போது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கூட்டாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற இயலும்.

    இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியைவிட அவர்கள் நன்றாக ஆடுவார்கள்.

    ஆனாலும் நமது அணி இங்கிலாந்தை விட சிறப்பானதாகவே இருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியமானது. நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமானால் அடிக்கடி தவறுகள் செய்யக்கூடாது.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvENG #ViratKohli #KapilDev
    ×