search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் அவர் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். மேலும், ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசவுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
     
    கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் ராகுல் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi
    டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG
    இங்கிலாந்து இளம் பெண் ஒருவர் ரிசர்வ் வங்கி பெயரில் போலி வலைதளம் ஆரம்பித்து திருவள்ளூர் வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் வசித்து வருபவர் திலீப்குமார். கைத்தறி நெசவாளர்.

    இவருக்கு பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லிண்டா போஸ்மன் என்ற பெண் அறிமுகமானார்.

    அவர் துணிவியாபாரம் சம்பந்தமாக இந்தியா வர இருப்பதாக திலீப்குமாரிடம் தெரிவித்தார். முன்னதாக தனது உடைகளை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் அதனை பணம் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வாலிபர் ஒருவர் திலீப் குமாரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது ‘‘உங்கள் முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை பெற ரூ.48,500 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பணத்தை கட்ட ரிசர்வ் வங்கி பெயரில் இணையதள முகவரியும் கூறினார். இதனை நம்பிய திலீப்குமார் அந்த முகவரியில் பணத்தை கட்டினார்.

    இதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மீண்டும் திலீப் குமாரை தொடர்பு கொண்ட அதே வாலிபர் விமான நிலையத்தில் சோதனை செய்யத போது பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், இதற்கு அபராதமாக ரூ.98 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    மேலும் ஆர்.பி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் பெற ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் வகையில் பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த திலீப்குமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கும்பலமாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதுவரை ரூ.3 லட்சம் வரை திலீப்குமார் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் பணம் கட்டி இருக்கிறார். அனைத்தும் ஆன்-லைன் மூலமாக நடைபெற்றுள்ளது.

    போலியாக ரிசர்வ் வங்கி பெயரில் இணையதளம் ஆரம்பித்து நூதனமாக கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஏமாற்றபட்டதை உணர்ந்த திலீப் குமார் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். #ENGvIND #viratkohli
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து இருந்தது.

    நேற்றைய 3வது நாளில் விராட்கோலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவரது 2-வது செஞ்சுரியாகும். ஏற்கனவே முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தார். கோலி 103 ரன்னும், புஜாரா 72 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து இருந்தபோது ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்து இருந்தது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு மேலும் 498 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.

    இந்த ரன்னை எடுப்பது என்பது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலே. இந்த இலக்கை நெருங்குவது கடினமே. அந்த அணியின் 10 விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

    இந்த தொடரில் விராட்கோலி இதுவரை 440 ரன்கள் குவித்து உள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு அசாருதீன் கேப்டன் பதவியில் 426 ரன்கள் எடுத்து இருந்தார். இதை கோலி முறியடித்தார்.

    விராட்கோலி தனது 23-வது சதத்தை பதிவு செய்தார். 118 இன்னிங்சில் அவர் இந்த செஞ்சூரியை தொட்டார். இதன்மூலம் பிராட்மேன் (59 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (109), ஸ்டீவன் சுமித் (110) ஆகியோருக்கு அடுத்த நிலையில் கோலி உள்ளார்.

    இந்திய வீரர்களில் ஷேவாக்குடன் இணைந்து அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார்.

    விராட்கோலி கேப்டன் பதவியில் 16-வது சதத்தை (38 டெஸ்ட்) பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் 3-வது இடத்தை பிடித்தார். சுமித் 25 சதத்துடன் (109 போட்டி) முதல் இடத்திலும், பாண்டிங் 19 சதத்துடன் (77 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர். ஸ்டீவன் சுமித், ஸ்டீவ்வாக், ஆலன் பார்டர் ஆகியோரை கோலி முந்தி இருந்தார். இந்த 3 பேரும் கேப்டன் பதவியில் 15 சதம் அடித்து இருந்தனர்.

    வெளிநாட்டில் கோலி அடித்த 13-வது சதமாகும். இதில் கேப்டன் பதவியில் மட்டும் 9 செஞ்சூரியை எடுத்துள்ளார். #ENGvIND #viratkohli
    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் கைப்பற்றிய பின்னர், தான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை என ஹர்த்திக் பாண்டியா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #ENGvIND #HardikPandya
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழக்கவில்லை. அதன்பின் ஹர்திப் பாண்டியாவின் மாயாஜால ஸ்விங் பந்தில் இங்கிலாந்து சரணடைந்தது. அவர் 6 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

    இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் சரியாக விளையாடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளனார். வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டீங் கூறும்போது, “ஹர்த்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிடுவது தவறு. கபில்தேவ் அருகில் கூட அவரால் செல்ல முடியாது” என்றார்.

    இதற்கிடையே 3-வது டெஸ்டில் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை. நான் ஹர்த்திக் பாண்டியாகவே இருக்க விடுங்கள். அதில்தான் நான் நன்றாக இருக்கிறேன். இதுவரை நான் 41 ஒருநாள் போட்டி, 10 டெஸ்ட்டில் பாண்டியாகவேதான் விளையாடி இருக்கிறேன். கபில்தேவாக அல்ல” என்று கூறி உள்ளார். #ENGvIND #HardikPandya
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கோலி மற்றும் ரகானே ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. உணவு இடைவேளைக்குள் இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர்.
     
    இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி 150 ரன்கள் சேர்த்துள்ளது.

    இதற்கு முன்னதாக, கடந்த 2002-ல் லீட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சஞ்சய் பங்கர் - டிராவிட்ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது. அதேபோல், டிராவிட் - டெண்டுல்கர் ஜோடி150 ரன்களையும், டெண்டுல்கர் - கங்குலி ஜோடி 249 ரன்களையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

    இந்திய அணி தேனீர் இடைவேளை வரை 56 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்களுடனும், ரகானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்திய அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் மறைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்னர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் வரிசையில் நின்று சமீபத்தில் மரணமடைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்டில் ரிஷப் பந்த் அறிமுக ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND #INDvENG
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் இந்தியா கண்டிப்பாக வெல்ல வேண்டும். அல்லது ‘டிரா’ செய்ய வேண்டும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

    முதல் 2 டெஸ்டில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முரளிவிஜய், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தவான், ரிசப்பாண்ட், கருண்நாயர், பும்ரா அல்லது உமேஷ்யாதவ் ஆகியோர் இடம் பெறலாம். குறைந்தபட்சம் 3 மாற்றம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. குர்ரான் இடத்தில் பென்ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND #INDvENG
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvEng
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    பர்கிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது. இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் போராடி தோற்ற இந்தியா 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

    பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவது அவசியம். விராட் கோலி மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார்.

    ஆனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினால் மட்டுமே எழுச்சி பெற முடியும். தவறுகளில் பாடம் கற்று கொண்டு திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    2-வது டெஸ்டில் வீரர்கள் தேர்வில் தவறு செய்தனர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம்இறங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

    காயத்தில் இருந்து குணமடைந்ததால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம்.



    கடந்தபோட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகர் தவான் திரும்பவும் வாய்ப்பு உள்ளது.

    தோல்விகளால் இந்திய வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்து வருகிறது. இதனால் நாளை தொடங்கும் டெஸ்டில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். மேலும் இப்போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதுதான்.

    அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய வீரர்கள் மீதான விமர்சனங்கள் கடுமையாக மாறும். இதனால் 3-வது டெஸ்டில் கண்டிப்பாக எழுச்சி பெற்று வெற்றி பெற இந்திய வீரர்கள் போராடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் பலமாக இருக்கிறது. ஆண்டர்சன், பிராட், சாம்குர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 2- டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. #ENGvIND #INDvEng
    ×