search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96151"

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மணி (55). விவசாயி. இவரது தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்த சிவக்குமார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவி முத்துவும் தூங்கி கொண்டு இருந்தனர். யானை காம்பவுண்டு சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். யானை வீட்டிற்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் இருவரும் சமையல் அறையில் பதுங்கி கொண்டனர்.

    சற்று நேரம் அங்கிருந்த யானை பின்னர் அப்பகுதி செட்டியார் தோட்டத்தில் உள்ள விஜய கோபால் தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பெரிய நாயக்கன் பானையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மேற்கு தொடர்ச்சி மலை பூச்சியூர் பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் விநாயகன், சின்னதம்பி ஆகிய இரு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டனர். தற்போது ஊருக்குள் புகுந்து இருப்பது மற்றொரு யானையான சின்னதம்பியாக இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    சபரிமலையில் சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பரமசிவம் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.

    இந்த பகுதியில் இருந்து கடந்த 7-ந்தேதி (திங்கட்கிழமை) பரமசிவம் உள்பட 30 பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிப்பதற்காக 2 வேன்களில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இதில் ஒரு வேனில் 15 பக்தர்களும், மற்றொரு வேனில் 15 பக்தர்களும் அமர்ந்திருந்தனர்.

    வேன், பெரும்வழி என்ற இடத்தில் வந்ததும் அங்கு வேனை நிறுத்தி விட்டு பரமசிவம் உள்பட 15 பக்தர்களும் 48 மைல் தூரத்தில் இருக்கும் சபரிமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    மற்றொரு பிரிவினர் பம்பையில் வேனை நிறுத்தி அங்கிருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் பரமசிவம் உள்பட 15 பேரும் அழுதா இறக்கம் அருகே சென்றபோது, பரமசிவம் மட்டும் தனியாக ½ கிலோ மீட்டர் தூரம் முன்னாடி சென்று விட்டார்.

    அப்போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை பரமசிவத்தின் தலையை திடீரென தும்பிக்கையால் மேலே தூக்கியது. இதனால் அவர் அய்யோ என அலறினார். பின்னர் தலையோடு சேர்ந்து உடலை ஓங்கி தரையில் அடித்து, காலால் மிதித்து கொன்றது.

    பரமசிவத்தின் அலறலை கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் பரமசிவம் தலை நசுங்கி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

    இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முட்களி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். பரமசிவம் பலியான தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். #tamilnews
    கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டி (75). சித்த வைத்தியர். நேற்று இவர் மூலிகை பறிக்க வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் இரவு நேரமாகியும் கிட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு சென்றனர்.

    இன்று காலை முள்ளங்காடு ஊர் தலைவர் ரமேஷ் அத்தி மரக்குட்டை ஜல்லி மேடு பகுதியில் கிட்டியை தேடி சென்றார். அப்போது அங்கு கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது.

    கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போளூவாம் பட்டி வனத்துறையினருக்கும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வருவாய் ஆய்வாளர் குபேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

    யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இப்பகுதியில் கடந்த 4 வருடத்தில் 7 பேர் யானை தாக்கி இறந்து உள்ளனர். இதனால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

    கோவை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி யானையை பார்த்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் இன்று அதிகாலை ஒற்றை காட்டுயானை அங்குள்ள கிருஷ்ணசாமி கோவில், தர்மராஜர் கோவில் எதிரே வந்தது.

    அங்கு ஜெகநாதன் என்பவரின் மனைவி வளர்மதி (வயது 51) நடத்தி வரும் மளிகை கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, உப்பு, பருப்பு, புளி, வெல்லம் உள்ளிட்டவைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. இதில் 2 மூட்டை அரிசியை துதிக்கையால் தூக்கிச்சென்றது.

    பின்னர் அங்குள்ள விநாயகர் நகரில் பழனிச்சாமி, அம்மாயியம்மாள் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது.

    ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அங்குள்ள மலைப்பகுதிக்குள் விரட்டினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கணுவாய், அப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகன், சின்னத்தம்பி ஆகிய 2 காட்டுயானைகள் சுற்றித்திரிந்து குடியிருப்பை நாசப்படுத்தின. அதனை இடமாற்றம் செய்ய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன.

    அது பலன் அளிக்காமல்போகவே மயங்க ஊசி செலுத்தி விநாயகன் என்ற யானை பிடிக்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சின்னத்தம்பி என்ற யானை தப்பியது. அந்த யானை தான் இன்று ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோவிந்தராஜ் நகர், தர்மராஜ் நகர், பாலாஜி நகர், சூர்யா கார்டன், பன்னீர் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

    மீண்டும் காட்டுயானை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தாண்டிக்குடியில் ஊருக்குள் புகுந்த ஒற்றையானையால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தாண்டிக்குடி அய்யப்பன் கோவில் அருகே வசித்து வருபவர் நாகராஜ்(வயது45). இவர் நேற்றிரவு தனது குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டதால் எட்டிபார்த்தபோது ஒற்றையானை நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அச்சத்தில் வீட்டினுள்ளளே முடங்கினர். ஒற்றையானை அங்கிருந்த செட் மற்றும் மரகட்டைகளை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்றது. திடீரென ஒற்றையானை ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அந்தியூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.

    வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.

    இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.

    விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.

    இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

    மேகமலையில் தந்தத்திற்காக யானைகள் கொலை செய்யப்பட்டதா? என்று வன உயிரின கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதியில் உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 5 யானைகள் ஒரே இடத்தில் பலியாகின. இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. யானைகள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வனத்துறையினர் மற்றும் மின்சாரத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேகமலை வன உயிரின சரணாலயத்தில் அடிக்கடி யானைகள் உயிரிழப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக வண்ணாத்திப்பாறை பகுதியில் வன உயிரின ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த யானையின் தந்தத்தை விற்க முயன்றபோது 2 பேர் பிடிபட்டனர். இதனால் சரணாலய பகுதியில் யானைகள் உயிரிழப்பது இயற்கையாகவா? அல்லது கொலை செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    மேகமலை வனப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியது. இதுவரை மின்சாரம் தாக்கி யானைகள் பலியானதே கிடையாது. 2 யானைகள் உயிரிழந்து இதுவே முதல்முறை.

    எனவே தந்தத்தை வேட்டையாடுவதற்காக யானைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து மாநில கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் லிமோட்டசி தலைமையில் வன உயிரின அதிகாரிகள், மேகமலை வன காப்பாளர் கலாநிதி, வன பாதுகாவலர் புவனேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இக்குழுவினர் வண்ணாத்திப்பாறையில் யானை இறந்து கிடந்த இடத்தையும் ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வனப்பகுதியில் அடிக்கடி நடமாடும் நபர்களை விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர். விரைவில் இதில் உண்மை வெளிவரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தமிழக தென்மண்டல முதன்மை வன பாதுகாவலர் தொபாசிஜானா, மேகமலை வனஉயிரினகாப்பாளர் கலாநிதி ஆகியோர் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியார் புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் யானை தந்தங்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா, பிரபு என தெரியவந்தது.

    சுருளிஆறு, மின்நிலையம் அருகே வண்ணாத்திபாறை, காப்புக்காடு, உடுப்பிஆறு வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயரழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததும் அவற்றின் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

    யானை இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவது வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கங்கா, பிரபு ஆகியோர் யானை தந்தத்தை எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலமலை வனப்பகுதியில் யானைகள் விரட்டுவதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    கோவையை சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா புறப்பட்டனர்.

    சத்தியமங்கலம் வந்த இவர்கள் மலைப்பகுதிக்கு செல்ல ஆசைப்பட்டனர். அதன்படி பண்ணாரியில் இருந்து திம்பம் மலைக்கு சென்றனர்.

    பிறகு அங்கிருந்து தலமலை வழியாக அடர்ந்த காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தலமலை அருகே ராமரணை என்ற இடத்தில் 4 யானைகள் கூட்டம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. யானைகளை கண்ட அவர்கள் அதை விரட்ட ஹாரன் அடித்தனர். இந்த சத்தம் யானைகளுக்கு கோபத்தை மூட்டியது.

    அடுத்த கனம் யானைகள் பிளிறியபடி அவர்களை விரட்டியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 இளைஞர்கள் திரும்பி தப்பி சென்று விட்டனர்.

    இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடு ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஊர் பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    அவர்களை தொடும் தூரத்துக்கு ஒரு யானை மிக அருகே வந்து விட்டது. அப்போது ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழி (குழி) தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழியில் அந்த இளைஞர்கள் 2 பேரும் தவறி விழுந்து விட்டனர்.

    குழி அருகே வந்த யானை அப்படியே நின்று விட்டது. குழிக்குள் விழுந்து கிடந்த 2 பேரையும் பார்த்து பிளிறிய படி மிரட்டி கொண்டு அந்த யானை திரும்பி காட்டுக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர்.

    பிறகு ஒரு வழியாக குழியில் இருந்து மேலே ஏறி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி வந்த பாதை வழியாக திரும்பி சென்று விட்டனர்.

    தூங்காமல் முரண்டு பிடித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பாகன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. #Ilaiyaraaja

    திருச்சூர்:

    கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த யானை கடந்த சில நாள்களாக தூங்குவதற்கு சிரமப்பட்டுவந்து இருக்கிறது.

    யானையின் தூக்க மின்மையை போக்க யானைக்கு தாலாட்டாக ஒரு சினிமா பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் மயங்கி யானை தூங்கி இருக்கிறது. இப்போது தினமும் அந்த பாடலை பாடியே தூங்க வைக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பாகன் பாடும் மலையாள பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா. 1984ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.

    இந்தப் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார், கிருஷ்ண சந்திரன் என்பர் இந்தப் பாடலை பாடியுள்ளார். ‘இளையராஜா இசை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனப் பலர் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது அது யானைக்கும் பிடித்துள்ளது. அவரது இசை என்றும் மறையாது’ என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். #Ilaiyaraaja

    போடி, தேவாரம் பகுதியில் மிரட்டி வரும் ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகள் வந்தன. #MagnaElephant

    உத்தமபாளையம்:

    போடி மற்றும் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவு சமயத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    எனவே மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜூலை மாதம் கலீம், மாரியப்பன் 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    இதனை தொடர்ந்து மக்னா யானை கேரளாவில் உள்ள மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் மீண்டும் தேவாரம் வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கியது.

    தற்போது அம்பேத்கார்காலனி, மூணான்டிபட்டி ஆகிய குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

    எனவே மக்னா யானையை பிடிக்க சாக்கலூத்து, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டாப்சிலிப் காப்பகத்திலிருந்து விஜய், வாசிம் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கம்பம் வனஅலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

    கேமிராவில் பதிவாகும் மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் வனப்பகுதிக்கு சென்று மக்னா யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MagnaElephant

    வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கசிவுநீர் குட்டையில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பு கருதி செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக்பில்கி தெரிவித்தார். தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கேரட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஐந்து யானைகள் முகாமிட்டிருந்தது. யானைகள் வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டையில் விளையாடி கொண்டிருப்பதை அதிகாலை கேரட்டி வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்தனர்.

    இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் யானைகள் தங்கி உள்ள பகுதிக்கு வந்து வன விலங்குகளுக்கு இடையூறு செய்ததோடு மட்டுமில்லாமல் அதனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு வந்து பொது மக்களை கலைந்து போக வேண்டியும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். 

    இதை பொருட்படுத்தாமல் செல்பி எடுப்பதில் பொதுமக்கள் தீவிரம் காட்டியதால் வனத்துறையினர் தங்களின் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செல்பி எடுப்போரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக் பில்கி உத்தரவிட்டார்.

    மேலும், இது குறித்து அவர் கூறுகையில், வனவிலங்குகளுடம் செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தான செயல் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
    ×