search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிகுமார்"

    • நந்தன் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. டிரைலர் காட்சிகளில் மிகவும் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சசிகுமார். ஒரு கிராமத்தில் நடக்கின்ற எமோஷனலான அரசியல் கதைக்களத்தை ஒட்டி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் டிரைலர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
    • அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம்.

    இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும் புதிய படம் நந்தன். இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

    இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எச் வினோத், "நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்"

     


    "அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது."

    "நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், இந்த படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன். அந்த வகையில், இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது."

    "சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்," என்று தெரிவித்தார்.

    • இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இப்படம் படப்பிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் இருந்து வந்தது. அண்மையில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து, நந்தன் படமும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    படத்தை பார்த்த நடிகர் சூரி பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ' படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!

    அன்பு இரா.சரவணன் அண்ணனுக்கும், சசிகுமார் அண்ணனுக்கும், ஜிப்ரான் தம்பிக்கும். நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நந்தன் திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இப்படம் படப்பிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் இருந்து வந்தது. அண்மையில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து, நந்தன் படமும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்துள்ளார்.
    • இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கருடன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் அடுத்ததாக 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியது.

    இப்படம் மிகவும் உண்மை கதையில் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தை குறித்து மிகப்பெரிய அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதியாக் இருக்கும் என பலரால் எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி’ என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார்.
    • தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    `சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    அதில் ஒரு படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். கிராமிய குடும்பக் கதையான இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில் பட்டியில் நடைபெற்று வருகிறது.

    படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே.ஆச்சார் இணைந்து நடித்து வருகிறார். படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மதர் இந்தியா என வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சைத்ரா இரண்டாவதாக தமிழில் நடிக்க இருக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன்.
    • படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா?
    • வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி.

    தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதுடன் படத்தின் கதாநாயகனாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    நாடோடிகள், ஈசன், சுந்தரபாண்டியன், கொடி வீரன் உள்பட பல பலபடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் கிராமத்து தோற்றத்தில்தான் சசிகுமார் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கருடன் படத்திலும் கிராமத்து கோவில் சொத்தை பாதுகாக்க போராடும் காட்சிகளில் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் அமைந்தது.

     இந்நிலையில் சசிகுமார் திடீரென முற்றிலும் புதிய தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சமூக வலைதளத்தில் அவர் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா? என வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
    • வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள கருடன் படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது.

    நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

    அந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். ஆனால் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்த சூரி கதாநாயகனாக ஆக நேரம் வந்தது.

    சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார் , சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நகர்புறங்களை விட கிராம் புறத்தில் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி பல்வேறு தரப்பினரடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி கருடன் திரைப்படமானது உலகம் முழுவதும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படமும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் சூரி அடுத்து நடித்து வெளிவர இருக்கும் கொட்டுகாளி மற்றும் விடுதலை2 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன்
    • சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன், இப்படம் நாளை {மே30} வெளியாகவுள்ளது.

    சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோவை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இதில் படப்பிடிப்பு பணிகள், சூரி-யின் ஆக்ஷன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விடுதலை திரைப்படம் போல் சூரிக்கு அடுத்த வெற்றி தரும் திரைப்படமாக கருடன்  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • . இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து வெளியாகும் கருடன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூரி மிகவும் கோவத்துடனும், வெறியுடனும் காணப்படுகிறார். சூரி எப்பேற்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்.
    • கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்.

    காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் கருடன். சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "சீமராஜா படப்பிடிப்பின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழித்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்."

    "அவர் கூறிவிட்டார், ஆனால் எனக்கு பதட்டமாக இருக்கிறது. அவர் இயக்கத்தில் நடிக்க சற்று தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். அவருடன் முதல் படம் இருக்கட்டும், அடுத்து யார் இந்த மாதிரி படம் எடுப்பார்கள் என்று தயங்கினார். அவரிடம் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்."

    "காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். காமெடி நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் காமெடி வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×