search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிகுமார்"

    • இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'காரி'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காரி'. இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    காரி

    காரி

    இந்நிலையில் காரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

    • தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
    • இதில் சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதையடுத்து 'சுந்தரபாண்டியன்' படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.

    பின் அவர் பேசியதாவது, "சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சி. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன்.


    எஸ். ஆர். பிரபாகரன் 

    சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் அவர்களுக்கு இணை இயக்குனராக இருந்தேன். சசிகுமார் சாரும் மிகவும் யதார்த்தமான பாணியில் கதையமைக்கக் கூடியவர். சசிகுமார் சார் "சுந்தர பாண்டியன்"படத்தை தயாரித்து நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார்.

    ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைத்துப் படமும் ஹிட் அடித்து வருகிறது. அதற்கான பிள்ளையார் சுழி "சுந்தர பாண்டியன்" படத்திலிருந்து போடபட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.


    டெக்னாலஜி ரசிகர்களின் கையில் வந்து விட்டது, ஓடிடியில் தான் பெரும்பாலான மக்கள் தற்போது படங்களை பார்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்கு என்றிருக்கிறது. இரண்டையும் ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகளை கொண்டு வரும் இளம் இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது.

    நடிப்பதற்கு நண்பர்கள் பலரும் என்னை அழைக்கிறார்கள். ஆனால், எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இல்லை. இயக்குனராக நல்ல கதைகளை வழங்கவேண்டும் என்று மட்டும் தான் எண்ணம் இருக்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.

    • இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'காரி'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காரி'. இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    இதையடுத்து 'காரி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். காதல், ஆக்‌ஷன், ஜல்லிக்கட்டு என கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். 

    சசிகுமார்

    இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச் சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
    ×