என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96176"
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குவது கோவை மண்டலம் தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமே கொங்கு மண்டலம் தான்.மொத்தம் உள்ள இடங்களில் 90 சதவீத இடங்களை அ.தி.மு.க. வென்றது.
ஜெயலலிதா இருந்தவரை ரஜினி அரசியலில் நுழைவது பற்றி முடிவே எடுக்கவில்லை. கமல் அரசியலை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் இருவருமே இப்போது வேகம் எடுக்கிறார்கள்.
கட்சியை தொடங்காமலேயே மன்றத்தின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் ரஜினி கோவையில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் கோவை மண்டலத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இளைஞரணி நிர்வாகிகளுடனான ஆலோசனையை வெளியில் அறிவித்தவர்கள் இதனை ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.
கோவையில் மாநாடு நடத்தினால் கூட்டம் சேர்க்க முடியுமா? என்பது குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். கோவையில் பா.ஜ.க.வுக்கும் செல்வாக்கு உள்ளது. இதன் மூலம் அந்த கட்சியின் வாக்குகளை கவரவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதை அறிந்த கமலும் கோவை மண்டலத்தில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கமல் கட்சி தொடங்கிய உடன் முதல் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு தான் சென்றார். இதனால் கோவை மண்டலத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. #RajiniMakkalMandram #MakkalNeedhiMaiam
கோவை:
பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு அதனை உறுதி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என முதல்-அமைச்சர் கூறி இருக்கும் கருத்தை வழி மொழிகிறேன்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். நாளை வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயமான முறையில் தீர்வு கிடைக்கும்.
எஸ்.வி. சேகரை பொறுத்தவரை அவர் பாரதீய ஜனதாவில் உறுப்பினராக இருந்தாலும் தீவிரமாக பணியாற்றியது இல்லை. அவர் தான் பதிவிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.
வேறு ஒருவர் பதிவை படிக்காமல் பதிவு செய்து விட்டேன் என தெரிவித்து உள்ளார். அவருக்கு இந்த பதிவை அனுப்பியது யார்? என்பதை கண்டு பிடிக்காமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிட்டர் குருமூர்த்தி பாரதீய ஜனதா நலன் விரும்பி. ரஜினிக்கும் நல விரும்பியாக உள்ளார். பாரதீய ஜனதாவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என குருமூர்த்தி கூறிய கருத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தேனி மாவட்டம் போடியில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறதே? என நிருபர்கள் கேட்ட போது, ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #cauveryissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்