என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96176
நீங்கள் தேடியது "slug 96176"
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வரும் ரஜினி, திரிஷா இருவரும் காசி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். #Rajini #Trisha
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
கடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
நேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வெளியில் வந்த ரஜினியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ‘சாமி தரிசனம் செய்யவே வந்தேன். பேட்டியளிக்கும் எண்ணம் இல்லை’ என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.
காசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.
சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. #2PointO
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியானது. இது ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.
தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 4வது மேக்கிங் வீடியோவான இதுவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #Rajinikanth #2PointO
ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பும், சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்து வருகிறது. #Rajinikanth #Suriya
ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்று வருகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, இந்தி நடிகர் போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின் இடையில் நொய்டாவில் சூர்யா தேசிய பாதுகாப்பு அதிகாரி கெளதம் கங்குலி, ஐபிஎஸ் அதிகாரி ஷாலின் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
ரஜினியின் எந்திரன் படத்தை தொடந்து மீண்டும் அவருடன் ஐஸ்வர்யா ராய் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #2PointO #Rajini
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
இந்த படம் நவம்பர் 29 ந்தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது.
பாலிவுட் லைப் இணைய தளம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யாராய் 2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன் படமாகும். ஐஸ்வர்யா ராய் உண்மையில் படத்தில் ஒரு கவுரவ தோற்றம் கொண்டால் நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.
தகவலில் ஐஸ்வர்யாராய் விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங் படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், ரஜினியுடன் நடிப்பது மூலம் கனவு நினைவானது என்று கூறியிருக்கிறார். #Rajini #MeghaAkash
ஒரு பக்க கதை படத்துக்காக முதலில் ஒப்பந்தம் ஆனவர் மேகா ஆகாஷ். அந்த படம் வெளியாவதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பூமராங்’ என 2 படங்களில் நடித்துவிட்டார்.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். ரஜினியால் காப்பாற்றப்படும் இளம் ஜோடியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் ரஜினியுடன் பங்கேற்கும் காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகின்றன.
அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து இருக்கும் மேகா ஆகாஷ், என் கனவுகள் நிறைவேறிவிட்டன. நட்சத்திரத்தின் அருகில் நிற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் நடிகை சிம்ரன், குறைவாதான் பேசுவார், ஆனால், நிறைய அர்த்தங்கள் என்று அவரைப் பற்றி கூறியுள்ளார். #Rajini #Petta #Simran
சிம்ரன் அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டார். ‘சீமராஜா’வில் காளீஸ்வரியாக வந்து வில்லத்தனம் காட்டியவர் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினியுடன் நடிப்பது பற்றி கூறும்போது, ‘இயக்குனரிடம் முழு கதையையும் கேட்ட பிறகே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பின் முதல் நாளே ரஜினியுடன் சேர்ந்து நடித்தேன். அவரது எளிமையும் அடக்கமும் என்னை ஆச்சர்யப்படுத்தின.
அமைதியான மனிதர்; குறைவாதான் பேசுவார். ஆனா, அர்த்தங்கள் நிறைய இருக்கும். இந்தப் படத்துல எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருக்கு.
படத்துல எனக்கும் அவருக்கும் டான்ஸ் கூட இருக்கு. என் 20 வருட சினிமாவுல ரஜினி தவிர மற்ற பெரிய நடிகர்களோடயும் சேர்ந்து நடிச்சிருக்கேன். ரஜினி கூட நடிக்கணும்ங்கிறது பெரிய கனவு. அது இப்போதான் நிறைவேறி இருக்கு.
என் சின்ன மகன் ஆதித், ரஜினி ரசிகன். படப்பிடிப்புக்கு அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். ரஜினியை பார்த்ததும் ‘சிட்டி...சிட்டி’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். அவனை ரஜினிகிட்ட இருந்து கூட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு’ என்று கூறி உள்ளார்.
ஜோடி படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து திரிஷாவும் ஒரே படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் பேட்டிளித்துள்ளார். #Trisha #Simran #Petta
சிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும் திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.
திரிஷா கூட ஜோடி படத்துல சேர்ந்து நடிச்ச நாள்களெல்லாம் ஞாபகம் இருக்கா, இப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்க என்ற கேள்விக்கு சிம்ரன் பதிலளிக்கும்போது, ‘திரிஷாவை முதல் முறை பார்த்த மொமெண்ட் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க சினிமாவுல தன்னை ஒரு நல்ல நடிகையா முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘ஜோடி’ படத்துல பார்த்தப்போவே இந்தப் பொண்ணு பெரிய ஆளா வரும்னு எனக்குத் தோணுச்சு.
டயலாக் இல்லாத சீன்கள்ல நடிக்கிறதுதான் இருக்கிறதுலேயே ரொம்பக் கஷ்டம். அதுல திரிஷா கில்லாடி. நானும் விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கிறேன். திரிஷாவும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. சினிமாவுல என்னை மாதிரி டான்ஸ் ஆடுற இன்னொரு நடிகைனு அவங்களைச் சொல்வேன். இத்தனை வருடம் ஒரு நடிகை நிலைத்திருக்கிறது, பெரிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் திரிஷா! என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், ரஜினிக்கு மிகவும் பிடித்த தலைவர் யார் என்று கூறியிருக்கிறார். #PaRanjith
தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது:-
என் தந்தை தீவிர தி.மு.க. ஆதரவாளர். என்னுடைய தாத்தா பஞ்சாட்சரம் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அவருடனும் பயணம் செய்திருக்கிறேன்.
அவர் கலைஞரின் தீவிர ரசிகர். முக்கியமாக கலைஞரின் பராசக்தி வசனங்களை பேசி காட்டி மகிழ்வார். பராசக்தி படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டி. தி.மு.க. இந்த அளவுக்கு மக்களிடத்தில் கொண்டு செல்ல காரணம் கலைஞர் நாடகம், திரைப்படங்களை பயன்படுத்தியது தான்.
ரஜினி என்னிடம் அவருக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று கலைஞரை கூறினார்.
நான் பார்த்து வியந்த மனிதர் கலைஞர் என்றும் அரசியலில் இறங்க முடிவு செய்து அவரை சந்தித்து கூறியபோது ஒருதுளி கண்ணீர் வந்தது. அதை நான் ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டேன் என்றும் கூறினார். கலைஞருக்கும் ரஜினிக்குமான பந்தம் உணர்வுபூர்வமானது. அரசியலில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விநாயகர் சதுர்த்தியை அன்று சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டீசர் வெளியிடப் படம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0Teaser
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது இதன் டீசரை (செப்டம்பர் 13) நாளை காலை 9 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
#2point0 teaser pic.twitter.com/Wq3m6dKJir
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 12, 2018
இதுதவிர இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Rajinikanth #2PointO #2PointOTeaser
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடித்து வருகிறார். #Rajini #Petta #KarthikSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
மேலும் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் கம்மட்டிப்பாடம்.
இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை அன்று சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டீசரை தியேட்டரில் பார்க்க புதிய முயற்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. #2Point0Teaser
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.
2.0 marks the first ever 3D Teaser and you can watch the premiere in a PVR & Sathyam theatre near you. Give a missed call on +91 9099949466 to book your free ticket. #2Point0Teaser in 2 days 👓 pic.twitter.com/g7vt6P5V59
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 11, 2018
மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என்று சங்கர் கூறியிருக்கிறார். #Rajinikanth #2PointO
கபாலி, காலா படத்தை தொடந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்திலும் நில அரசியல் பற்றி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Rajinikanth #Petta
ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.0 படம் தயாரிப்பில் இருக்கும்போதே பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என 2 படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து கட்சி ஆரம்பித்து அரசியலில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்த்த போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமானார்.
ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து இந்தப் படத்திற்காக பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படத்திற்கான பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படத்தை தயாரிக்கும் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்திற்கு “பேட்ட” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சியில் ரஜினி என்ட்ரி கொடுப்பது போல் மோஷன் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் ரஜினி தோற்றம் அமைந்துள்ளது.
கபாலி, காலா என இரு படங்களும் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களாக வெளியாகியிருந்தன. ‘பேட்ட’ என்கிற பெயரும் நிலம் சார்ந்த பெயராக இருப்பதால் படத்தின் கதைக்களம் மீண்டும் நில அரசியலை மையமாக கொண்டு இருக்கலாம் என்று தகவல் வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X