என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96176"
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?
— Kasturi Shankar (@KasthuriShankar) September 6, 2018
தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். #MemeKast#Rajinipic.twitter.com/YZooptu8Wh
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 7, 2018
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.
கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
ரஜினி மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய 36 பக்க புத்தகம் வெளியானது. ஆகஸ்டு முதல் வாரத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட இந்த புத்தகம் இந்த வாரம் தான் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ரஜினி மக்கள் மன்ற விதிகளில் முக்கியமானவை:-
நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பொது மக்கள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் இடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மன்ற கொடிக்கு துணியால் செய்த கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலிமாசு குறித்த அரசின் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூம்பு வடிவக் குழாய் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துதல் கூடாது. ஒலி பெருக்கிப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சிகள் சிக்கனமாகவும் ஆடம்பரம் இன்றியும் நடத்தப்பட வேண்டும். எந்த மன்றக் கூட்டங்களிலும் சால்வைகள் மாலைகள் பூங்கொத்துகள் பரிசு பொருட்கள் பகிர்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்த உடனேயே பேனர்கள், தோரணங்கள், பிற விளம்பரப் பதாகைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகி இதனை உறுதி செய்ய வேண்டும். கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டே ஒப்படைக்க வேண்டும்.
தலைமையின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப்பதாகைகள் அரசின் உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும். பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைத்தல் வேண்டும்.
நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக வலைதளங்களில் கவனமாக கருத்துகளை பதிவிட வேண்டும். நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது. ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியில் திருநங்கைகளும் எவ்வித பாகுபாடின்றி சேரலாம். நிர்வாக பொறுப்புக்களையும் வகிக்கலாம். மன்ற நிர்வாகிகளை மதித்து நடக்க வேண்டும்.
விவசாய அணியின் குறிக்கோளாக ‘தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான விவசாயத்தை கேள்விக்குறியாக்கி உள்ள பாசன நீர் பற்றாக்குறையை போக்க நதிகள் இணைப்பு, தமிழக ஆறுகள் இணைப்பு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். மேற்கண்டவாறு கட்டுப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.
இதுபோலவே மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, வணிக அணி, மருத்துவர் அணி, நெசவாளர் அணி, தொழில்நுட்ப அணி என்று அணிகளை பிரித்து அவர்களுக்கு கொள்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரஜினியின் இந்த விதிகள் புத்தகத்துக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது திட்டமிடலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
ரஜினியின் இந்த புதிய விதிகள் பற்றி நிர்வாகிகள் கூறியதாவது:-
ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே அவரது கொள்கை என்ன என்று கேட்டு கிண்டல் செய்தார்கள். இப்போது இந்த விதிகள் புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கூறிவிட்டார்.
கொள்கையை விட கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் என்பதால் தான் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். ரஜினியின் அரசியலில் வேகமும் விவேகமும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த விதிகள். கட்சி கொள்கைகள் தனியாக புத்தகமாக வெளியிடப்படும்.
விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அக்டோபரில் கட்சியை தொடங்கி நவம்பரில் மாநாடு நடத்த ஒரு திட்டம் இருக்கிறது.
பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு இரண்டையும் வைத்து தேதியில் மாற்றம் வரலாம். ஆனால் இன்னும் 3 மாதத்துக்குள் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதி’ என்றார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:
தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணிகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
தலைவர்கள் மறைவால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளே கூட்டணி விசயத்தில் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில் சிறிய கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது? என்ன முடிவெடுப்பது? என்ற பெருங் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளன.
முதல் முறையாக கடந்த முறை தேர்தல்களத்தை சந்தித்த த.மா.கா.வுக்கு அந்த தேர்தல் ஒரு அக்கினி பரீட்சையாகவே அமைந்தது.
கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் சேரும் முடிவை ஜி.கே.வாசன் எடுத்தார். அந்த முடிவு மிகப்பெரிய சறுக்கலாகவே அமைந்தது.
எனவே வருகிற தேர்தலில் மிகவும் ஜாக்கிரதையாகவே கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பார் என்று அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
ரஜினி, கமல் இருவரது அரசியல் பிரவேசமும் அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.
ரஜினியுடன் த.மா.கா.வை சேர்க்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.வாசனுடன் நட்பு வைத்துள்ளார். 26-ந்தேதி நெல்லையில் நடைபெறும் கருணாநிதி புகழ்வணக்க கூட்டத்துக்கு ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் கலந்துகொள்கிறார்.
இந்த நெருக்கம் கூட்டணிக்கும் கைகொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இவை எல்லாமே யூகங்களான தகவல்கள் தான். யூகங்கள் மட்டுமே கூட்டணியை உருவாக்கி விடாது.
ரஜினி அரசியலுக்கு வருவதாக செய்திகள்தான் வருகிறது. ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? என்று எதையும் அறிவிக்கவில்லை. வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள் தான்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யவேண்டியது. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எனவே அதுபற்றிய சிந்தனையும் இல்லை. யோசிக்கவும் இல்லை. சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சியை பலப்படுத்தும் பணியைதான் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.
வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது. மக்கள் மனநிலையும், தொண்டர்களின் உணர்வையும் அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJeyakumar #Rajinikanth
மதுரை:
அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மதுரை முனிச்சாலையில் இன்று புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-
இளைஞர்களுக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக சேரும் இளைஞர்கள் கூட தகுதியும், திறமையும் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.
அதற்காக கட்சியின் தலைமையிடத்தில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பரிந்துரை செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.
ஊழியர்களின் போராட்டத்தால் நாளை ரேசன் கடை பொருட்கள் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்கும் அ.தி. மு.க.வின் கோட்டை ஆகும். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்.
அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கலைச்செல்வம், முனிச்சாலை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #Rajini
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்