search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    உத்தரபிரதேசம் மாநிலம் பிஜோரி பகுதியைச் சேர்ந்த சூரன் (வயது45). மேஸ்திரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சப்பக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில சூரனும், மற்றொரு வடமாநில தொழிலாளியான தர்காஷ்வரன் ஷகானி என்பவரும் சப்பக்கல் அருகே உளிவிரனப்பள்ளி அருகே நடந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்காஷ்வரன் ஷகானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோமரசம்பேட்டை அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை கான்யான் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன் நகர் மயிலாடுபாறை பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக சென்றார். பின்னர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.இதுகுறித்து அவரது தந்தை சுந்தர்ராஜன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சரவணன் தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் குறுக்குச்சாலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது குறுச்சாலை பகுதியில் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிள், சரவணன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தவறி விழுந்து சரவணன், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சக்திவேலுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சரவணனின் தந்தை சாமியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றச்சாட்டு.
    • ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து.

    வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

    சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி, விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினார்.

    ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி போக்குவரத்து விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    • இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.

    இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள்.

    இதில் 205 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 83 பேர் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

    பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ரெயிலில் பயணம் செய்து மாயமாகி உள்ளவர்களை உறவினர்கள், பிணவறையில் உள்ள உடல்களை பார்த்து தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் பலியானவர்கள் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரபாஸ் ரஞ்சன் திரிபாதி கூறும்போது, 'சிறந்த முறையில் எம்பாமிங்கை 6 முதல் 12 மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும். இறந்த பிறகு 12 மணி நேரத்துக்கும் மேலாக எம்பாமிங் செய்தாலும் அதற்கு பலன் இல்லை. மேலும் உடல்கள் சேதமடைந்துள்ளதால் எம்பாமிங் செய்வது மிகவும் கடினம்' என்றார்.

    இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பலியானவர்களின் உடல்களில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் பொருத்தி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    பலியானவர்களின் உடல்கள் குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உடல்கள் மோசமாக சிதைந்துள்ள நிலையில் அடையாளம் காண முடியாததால் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
    • மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

    அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

    குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

    மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலியானார்.
    • 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி ரிங்ரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெ க்டர் ஞானபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் சிவப்பு வண்ண சேலை அணிந்திருந்தார். இடது பக்க கன்னத்தில் கருப்பு மச்சமும் வலது முழங்காலில் காயத்தளும் இருந்தது. மதுரை காமராஜர் சாலையில் தனியார் வங்கி அருகே வாகனம் மோதி 72 வயது மதிக்கத்தக்க முதியவர் கணுக்காலில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குப்புசாமி என்பது மட்டும் தெரிய வந்தது. அவரது வலது கால் தொடையில் ஒரு கருப்பு மச்சமும், வலது பக்க விலாவில் கருப்பு மச்சமும் இருந்தது. இவர்களை பற்றி தகவல் தெரிய வந்தால் 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது.
    • 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மதுபாட்டிலுக்குள் பாசி மிதப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

    மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்க மடைந்து வீழ்ந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் இவற்றை பற்றி கவலை இல்லாத தி.மு.க. மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சி காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க ஏழை- எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாத தி.மு.க. அரசு தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறீர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சூர்யா வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றை குத்தி கிழித்தது.
    • விபத்து தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆரத்தி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவரும், இவரது நண்பர் ஜெகதீஸ்வரன் என்பவரும் தலைவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது குடித்து விட்டு, மேலும் 2 பாட்டில் மது வீட்டுக்கு கொண்டு செல்ல வாங்கினர். இந்த மதுபாட்டிலை சூர்யா, தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார்சைக்கிளை சூர்யா ஓட்டினார்.

    பின்னால், ஜெகதீஸ்வரன் அமர்ந்திருந்தார். தலைவாசல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வந்தபோது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் சூர்யா உள்ளிட்ட 2 பேரும் நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் சூர்யா வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றை குத்தி கிழித்தது. இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த சூர்யா மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். உடன் வந்த ஜெகதீஸ்வரனுக்கு கை முறிவு ஏற்பட்டு அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மது பழக்கத்திற்கு ஆளான வாலிபரை, மதுபாட்டிலே உயிரை பறித்துள்ள சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.

    இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி கந்தசாமி மகன் சதீஷ்குமார் தொழிலாளர்கள் நடேசன், பானுமதி ஆகியோர் பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மகேஸ்வரி (32) என்பவர் இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×