என் மலர்
நீங்கள் தேடியது "slug 96178"
- மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து சுவரின் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்சா புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் மதன்குமார் (வயது 16). தீபாவளி பண்டிகையையொட்டி இவர் குப்பிச்சிபுதூரை சேர்ந்த தனது நண்பர் மாதேஷ் என்பவருடன் கோட்டூர் ரோடு அய்யா மடை பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மாதேஷ் ஓட்டி வந்தார்.
மதன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து அந்த பகுதியில் இருந்த சுவரின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மதன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கன்றுக்குட்டி குறுக்கே வந்ததால் விபத்து.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). அவர் சந்திரசேகர் (52) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ் கோத்தகிரி பகுதிக்கு வந்தார்.
அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டி ஒன்று குறுக்கே வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் திடீரென பிரேக் பிடித்தார். மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த சந்திரசேகர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினி டெம்போ மோதியது
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் நடந்த விபத்துகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வழியாக வந்த மினி டெம்போவை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மினி டெம்போவின் டிரைவர் டோரை திறந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மினி டெம்போ மீது மோதியதுடன் முன்னால் சென்ற மற்றொரு மொபட் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஓடையில் விழுந்தனர். அவர்களுக்கு உடல், தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்கள் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையில் பலியானதில் ஒருவர் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்த சகாயபெர்வின் (வயது 21) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய மினி டெம்போவையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதல்
- இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி இவ ரது மகன் ஜெரின் (வயது31).கட்டிட தொழிலாளி.
இவர் தனது நண்பர் பூஞ்சான்விளையைச் சேர்ந்த ஜெபிஷன் (24) என்பவருடன் நாகர்கோ விலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர்.
தோட்டியோடு அடுத்த வில்லுக்குறியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்ஸை ஜெபிஷன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஜெரினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஜெபிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெரின் உறவினர் சிசில்தங்கம் (55) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்தில் நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
- 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
பெரம்பலூர்
திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற பிரியங்கா தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாலையில் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது திடீரென்று பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியங்கா தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து பிரியங்காவை மீட்டு பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல் குவாரி எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
- துண்டு சிக்கியதால் நடந்த சம்பவம்
கரூர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் சிங் (வயது 30) இவர், கரூர் மாவட்டம், தென்னிலையில் தங்கி, அதே பகு தியில் உள்ள, தனியார் கல் குவாரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கல் குவாரியில் உள்ள, இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் சிங் போட்டிருந்த துண்டு எந்திரத்தில் சிக்கி, அவரையும் சேர்த்து இழுத்தது. இதில், தலையில் பலத்த காய மடைந்த ஜஸ்டின் சிங், சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென் னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் மோதி பெண் பலியானார்
- நடந்து சென்றபோது விபரீதம்
கரூர்
கரூர் மாவட்டம், முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பேச்சியம்மாள், (வயது50). கூலி தொழி லாளியான இவர், கரூர் உழவர் சந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர், காத்தப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த, பைக், பேச்சியம்மாள் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர், மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
- நிலச்சரிவில் சிக்கி உயிரிழவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தரலி பகுதியில் இன்று காலை 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில், சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 வயது சிறுமி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, பெரிய பாறைகள் உருண்டு இந்த வீடுகள் மீது விழுந்தன. இதன் காரணமாக இந்த வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்தன. இடிபாடுகளுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் புதையுண்டனர்.
தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டிற்குள் இருந்தவர்களை வெளியேற்றும் நேரத்தில், இடிபாடுக்குள் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தரலி துணை ஆட்சியர் ரவீந்திர சிங் ஜுவந்தா தெரிவித்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு
- ட்ரான்ஸ்பார்மர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
கன்னியாகுமரி:
தென் தாமரை குளம் அருகே பொத்தையடியை சேர்ந்தவர் முருகன் (வயது 47), லாரி டிரைவர். இவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் நேற்று பேயோட்டிலிருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாடு இழந்த முருகன் ராஜாக்க மங்கலம் அருகே எம்.ஜி.ஆர். நகர் வரும்போது அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். பலியான முருகனுக்கு அகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
- நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார்.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இளையான்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நிவேதாவை 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவ உதவியாளர் திருச்செல்வி நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றினார். அவருடன் நிவேதாவின் தாய் விஜயலட்சுமி (55), உறவினர் சத்யா ஆகியோர் உடன் சென்றார். விளத்தூரை சேர்ந்த மலையரசன் என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார்.
நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார். இளையான்குடி சாலை செங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
வேகத்தில் ரோட்டோர மரத்தில் ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நிவேதா, அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
வலியால் அலறி துடித்த நிவேதாவும், அவரது தாய் விஜயலட்சுமியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், உதவியாளர் திருச்செல்வி, சத்யா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவேதா, விஜயலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உட்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று குழந்தை பிறந்து விடும் என்ற சந்தோஷத்தில் இருந்த நிவேதாவின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி இடியை இறக்கியது. நிவேதா மற்றும் அவரது தாயின் உடல்களை பார்த்து அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது.
- விபத்தில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரியகாவனத்தை சேர்ந்தவர் வசந்த ராஜ் (வயது 34). இவர் நண்பரான சின்னக்காவனம் பர்மா நகரை சேர்ந்த ஜெய் பீம் தாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மெதூரில் இருந்து பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது (எண்90சி) கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது. இதில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்த ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
- தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
பூந்தமல்லி:
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்கள்.
இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் வேடந்தாங்கலில் இவர்களுக்கு சொந்தமான பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் இயங்கி வருவதாகவும் அந்த வாகனம் பழுதடைந்ததால் இங்கிருந்து மெக்கானிக்கை அழைத்து சென்று வாகனத்தை சரி செய்துவிட்டு காரில் ஐந்து பேரும் வந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்து போனதும் உடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.