search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    மதுரவாயல்:

    வானகரம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
    • ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    கடலூர், சேனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது35). மீனவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று மாலை ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அமைச்சர் மெய்யநாதனின் கார் திடீரென எதிரே வந்த ஜான்சனின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மனைவி உஷா பலத்த காயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    விபத்து நடந்தபோது அமைச்சர் மெய்யநாதன் காரில் பயணம் செய்யவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்று இருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வருவதற்காக கார் சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்
    • இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கரூர்,

    கரூர் அடுத்த அரவக்குறிச்சி தாலுகா வேலப்பட்டி பீட்டர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). இவர் தனது காரில் சொந்த வேலையாக திருச்சி சென்று விட்டு, வீட்டுக்கு வெல்லமடை பஸ் ஸ்டாப் அருகே வநது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து அவரது மகள் பிரமிளா கொடுத்த புகார்படி டேங்கர் லாரி டிரைவர் சின்ன ரெட்டிபட்டியை சேர்ந்த மகேந்திரன் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளங்கோ கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை போலீசார் மீட்டனர்.

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36). இவர் கோவை பீளமேடு நேரு நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளங்கோ நேருநகர் ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட காண்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வினோத் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் காசிதர்மத்தில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து

    மேட்டுப்பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் சாலையில் தவறி விழுந்தார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. இதில் வினோத் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.

    • மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட சோமூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70), விவசாயி. இவர் சோமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முத்துசாமியின் கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சேதராப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் என்ற ராஜா, ஏழுமலை, ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார்குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கைதான ராஜா புதுவையின் பல்வேறு இடங்களில் சாராயக்கடை ஏலம் எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர் எந்த வகையான வேதிப்பொருளை சாராயம் தயாரிக்க கொடுத்தார்? இவருக்கு யார் மூலம் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேலும் புதுவையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

    • மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.

    • வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
    • புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ரெஜி என்ற ரகுநாத் (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு அம்மாபாளையத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் லாடபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரகுநாத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாத் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ரகுநாத் ரவுடி என்றும், அவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் இருவர் மூழ்கினர்
    • இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 54). இவர் கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டுவதற்காக சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினார். அவரை தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய தஞ்சாவூர் மாவட்டம், மடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(54) என்பவரும் தண்ணீரில் மூழ்கினார்.இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரியலூர் தீயணைப்புத் துறையினர், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் ஆகியோரின் கடும் முயற்சியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் நேற்று முன்தினம் இறந்த நிலையில் முருகானந்தம் மீட்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ஆறுமுகம் பெரியமறை கிராமம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    ×