என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96179"
ஆம்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனிஸ் அலிகான். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் சவுதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்தார். நேற்றிரவு, விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
அவர்களை ஓசூருக்கு அழைத்து வருவதற்காக, முனிஸ் அலிகானின் மகன் முகமதுஅபாஸ் (23) மற்றும் இவரது உறவினர் லியகத் அலித்கான் மகன் ஜுபேர் அலிகான் (40) ஆகிய இருவரும் 2 கார்களை எடுத்து சென்றனர். ஒரு காரில் ஹஜ் பயணம் சென்றவர்கள் வந்தனர்.
மற்றொரு காரில் முகமது அபாஸ் மற்றும் ஜுபேர் அலிகான் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். அப்போது, ஹஜ் பயணம் சென்றுவிட்டு திரும்பிய தருமபுரி அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அப்துல்ரகுமான் (38) என்பவரும், லிப்ட் கேட்டு அவர்களுடன் காரில் ஏறி பயணித்தார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரை கடந்து கார்கள் சென்றது. ஆம்பூர் அடுத்த கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது முகமது அபாஸ் உள்பட 3 பேர் பயணித்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முகமது அபாஸ், ஜுபேர் அலிகான் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உடன் வந்த பேராசிரியர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த விஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.
இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொடைரோடு:
மதுரையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு சுங்கச்சாவடி முன்பாக வந்தபோது இடதுபுற ஓரத்தில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காமல் அரசு பஸ் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். திடீரென பஸ் விபத்தில் சிக்கியதை உணர்ந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் லாரியின் பின் பகுதி முழுவதும் சுக்கு நூறாக உடைந்து சேதமானது. மேலும் அரசு பஸ்சின் முன் பகுதியும் உடைந்தது.
பஸ் டிரைவரான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 39), கண்டக்டர் சுப்புராஜ் (49) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (33), மாசினி (47), அவரது மனைவி கவிதா (42), பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (30) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சவுந்தர்யா (19), இசக்கி துரை (45), கோபி (33), சிவஞானய்யா, ஜெயமாலா மேரி, பாலு, திருப்பதி ராஜா, காஜாமைதீன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை 4 வழிச்சாலையில் மறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு பயந்தே லாரிகள் சுங்கச்சாவடி அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சென்ற பிறகு மீண்டும் அவை இயக்கப்படுகிறது.
அதுபோல்தான் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது. இதுவே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரிஷிவந்தியம்:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(7), புனித்(6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குமார் தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தார். அதற்காக தனது உறவினர்களை ஒரு மினிலாரியில் அழைத்து கொண்டு தியாகதுருகம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
அங்கு காதணி விழா முடிந்தவுடன் குமார் தனது உறவினர்கள் 50 பேருடன் மினிலாரியில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அந்த மினிலாரி நேற்று மாலை தியாகதுருகம் அருகே முடியனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியில் பயணம் செய்த தேவி(21), ராஜேந்திரன்(52), முனியம்மாள்(60), மண்ணாங்கட்டி(58), மேகலை(42), மணி(36), ராணி(35), சினேகா(13), ராதா(32), பானுப்பிரியா(35), சத்யா(24), நல்லம்மாள்(78) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மினிலாரியில் இடிப்பாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்கு செட்டி பாளையம் இருளர்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். அதே பகுதியை சேர்ந்தவர் குமார், அவரது மனைவி லட்சுமி (வயது 40).
கடந்த மாதம் அய்யனார், குமார், லட்சுமி ஆகியோர் சென்னைக்கு செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அய்யனாருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு சென்ற 3 பேரும் சொந்த ஊர் திரும்பினர். நேற்று மாலை அய்யனார் தனது வீட்டில் தந்தை கிருஷ்ணன், தாய் ராணி, தாத்தா கலியபெருமாள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குமாரும், அவரது மனைவி லட்சுமியும் இரும்பு கம்பியுடன் அய்யனார் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அய்யனார், கிருஷ்ணன், ராணி, கலியபெருமாள் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் அய்யனார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து தாக்கிய குமார், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தார்.
கிருஷ்ணகிரியில் இருந்து இன்று காலை திருப்பத்தூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சினை டிரைவர் பாலாஜி (வயது 42). என்பவர் ஓட்டி வந்தார்.
கந்திலி அருகே உள்ள சதாங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ்சை ஒரு பைக் முந்தி சென்றது. அந்த பைக் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.
இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் பாலாஜி, கண்டக்டர் ராமலிங்கம் (38). விஜயகுமாரி (70). அசோக்குமார் (31). முருகன் (40). சென்றாயன் (55). லட்சுமி (50). 7 பேர் படுகாயமடைந்தனர்.
கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தருமபுரி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 40). இவர் வேலூர் காமராஜர் நகரில் வசித்து வருகிறார்.
குடும்பத்துடன் இவர் கருங்கடல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு சென்று விட்டு காரில் வேலூர் திரும்பி கொண்டிருந்தார். இன்று காலை இந்த கார் தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டி வந்த வேலூர் மூங்கல்பட்டியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ். ஸ்டீபன்ராஜ், அவரது மனைவி பிரமிலா (34) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஸ்டீபன் ராஜின் குழந்தைகள் ஆரோக்கிய பபிதா, காசினி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கேரளாவின் எர்ணாகுளம் தெருக்களில் கல்லூரி சீருடையில் மீன் விற்று பிரபலமானவர் மாணவி ஹனான்.
சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி பலரும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தனர். முதல்-மந்திரி பினராயி விஜயனும் மாணவி ஹனானை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் மாணவி ஹனான் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது அவரது கார் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ஹனான் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற ஹனான் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக் குறித்து மாணவி ஹனான் கூறும் போது, சாலையில் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பிய போது கார் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியது.
இதில் எனது உச்சந்தலை, கை, கால், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார். #Hanan
கடலூர்:
கடலூர் முதுநகர் மோகினி பாலம் அருகே நேற்று இரவு 12 மணியளவில் ஒரு மினிலாரி சென்றது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த கார்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் மேல்புவனகிரியை சேர்ந்த சிவக்குமார்(44), ரவிக்குமார்(40) மற்றும் வரதராஜன்(68), சுதா, லோகநாதன், அமுதா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40) சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த வேனில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி இவரது மனைவி பூங்கொடி (40) அம்மு (40) செல்லம்மாள் (50) முனியம்மாள் (45) சக்கரபாணி ( 29) பாண்டியன் (45) முருகம்மாள் (45) செல்வி (50) பாக்கியம் (45) உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர்.
வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகே வோன் வந்த போது எதிர்பாராத விதமாக பின் சக்கரம் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பூங்கொடி உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்த அருள் காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி, முருகம்மாள், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே பாபநாசத்தில் ஒரு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பட்டவர்த்தி கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் 14 பேரை ஏற்றி கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடிய வேன் அந்த பகுதியில் இருந்த ஒரு வயலில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வேனில் இருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் 14 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மகேந்திரபிரபு(வயது 34) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நெல்லை கரிக்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(38) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுற சாலையில் திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மகேந்திரபிரபு, கண்டக்டர் சுந்தர்ராஜ் மற்றும் பயணிகள் 3 பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரி மற்றும் அரசு பஸ்சை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்