search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். #KamalHaasan
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.



    இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

    அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.  #KamalHaasan
    பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

    இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த சூறாவளியிடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    இந்நிலையில் நேற்று மாலையும் கல்லாறு, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்- ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு, பர்லியார் இடையே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் இருந்த ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி வழியே திருப்பூரை சேர்ந்த 6 பேர் ஊட்டிக்கு புறப்பட்டனர். பாறை சரிந்த இடம் அருகே வந்தபோது கார் விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து லேசான காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    காயம் அடைந்தவர்களில் திருப்பூர் மங்கலம் ரோடு 4-வது தெரு சின்சாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்த முத்து ரத்தினம் (36) என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற 5 பேர் பற்றிய விபரம் உடனே தெரியவில்லை. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புவனகிரி அருகே இன்று காலை தாறுமாறாக ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.
    புவனகிரி:

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை திண்டிவனத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது33) ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் புவனகிரியை அடுத்த கீழ்புவனகிரி திருவள்ளுவர் நகர் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பஸ்சின் இடிப்பாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் ராஜேஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 37 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவரின் கை துண்டானது. விபத்து குறித்து புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயமடைந்த 37 பேரையும் சிதம்பரம் மற்றும் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில்  கடும் வன்முறை, பல மாதங்களாக நடந்த சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. ஆளுங்கட்சியினர் மற்ற கட்சி வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேர்தலின்போது வன்முறை வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இத்தனை பாதுகாப்பையும் மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது.  பாங்கர் பகுதியில் தொலைக்காட்சி நிறுவன வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். கேமராவும் உடைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

    பிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க செல்பவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். ஓட்டு போட சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் 17-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #WestBengalPolls #PanchayatElections #WestBengalViolence
    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #PakistanBlast
    பெஷாவர்:

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லையையொட்டி உள்ள பழங்குடியின பகுதியில் கொஹாட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீஸ் வேன் கடந்து சென்ற போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்படிருந்த குண்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது.

    இதில் வேனில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்களில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanBlast
    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
    திருவையாறு:

    தஞ்சை அருகே உள்ள ஆவடி குமளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் கபிலன் (18) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு சென்றனர்.

    பின்னர் சொந்த ஊர் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். அவர்கள் அம்மன் பேட்டை மணக்கரம்பை ரோட்டில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் ரமேஷ், கபிலன் ஆகியோரும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த நசீர், வீரமணி, புஷ்பராஜ் ஆகியோரும் காயமடைந்தனர். இதில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து நடுக்காவிரி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×