என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96179"
ஊத்துக்கோட்டையை அடுத்த ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த நரேஷ். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றார். அதில் 9 பேர் பயணம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நரேஷ், ஆட்டோவில் பயணம் செய்த பூண்டி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்த நதியா, இவரது மகள் ஹர்ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி, காட்டம்மாள், ரித்விக், சேகர், செல்வம், கோவர்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
நெல்லையில் இருந்து கோவை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் திண்டுக்கல் - பழனி சாலையில் பாலம் ராஜக்காபட்டி அருகே இன்று பிற்பகலில் வந்தது. அப்போது எதிரே பெருந்துறையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி பயங்கரமாக பஸ் மீது மோதியது. விபத்தை தவிர்ப்பதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையோரம் திருப்பிய போது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது திருமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40). விவசாயி.
இவர் புத்தாண்டையொட்டி நேற்று இரவு தனது வீட்டு வாசல் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(25), மணிகண்டன்(27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் திடீரென்று கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தவர்கள் அருகில் விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.
ஆத்திரமடைந்த வீரப்பன் மற்றும் சிலர் முத்துராமன், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தமோதல் குறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மோதல் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடத்தின்போது மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார்.
காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கலஸ்தம்பாடியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 21), ராணவ வீரர். இவர் நேற்று வீட்டில் இருந்து மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நூக்கம்பாடி என்ற இடத்தில் சென்ற போது ஈரோட்டில் இருந்து எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் மணிவண்ணன் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்