என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96179"
திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திண்டுக்கல்:
கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் செம்பட்டி அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் வந்த பயணிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பஸ் டிரைவர் பெரியசாமி, பயணிகள் வேல்முருகன், குருவம்மாள், ரவிக்குமார், முனியம்மாள், மாரியம்மாள், ஜெயஸ்ரீ உள்பட 12 பேர் விபத்தில் நசுங்கினர்.
இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.
பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நம்பியூர், கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோட்டில் இருந்து ராமேசுவரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.
கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் நேற்று ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேனை சென்னிமலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வேன் கொடுமுடி அருகே கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வாழநாயக்கன்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.
திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் விபத்து காரணமாக வேனுக்குள் சிக்கி சத்தமிட்டனர்.
அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொடுமுடி போலீசாருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
வேனின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர், பக்தர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
1. சத்யராஜ் (26),
2. குமராயாள் (48),
3. ஜெயந்தி (28),
4. கண்ணம்மாள் (20),
5. அருக்காயி (60),
6. லட்சுமணன் (23),
7. சண்முகம் (50),
8. சாந்தி (40),
9. மீனா (23).
இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார்.
நேற்று இரவு 6 மணிக்கு ஈட்டியம்பட்டியில் இருந்து அரூர் அருகே உள்ள புறாக்கள் குட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பேரையூர்:
திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.
நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்