என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96268"
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துக் கூறி, குறிப்பாக மோடியின் திட்டங்களால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றுதல், இது பா.ஜ.க. குடும்பம், இது பா.ஜ.க. வீடு என்று அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பலன் பெற்ற குடும்பத்தினரை பா.ஜ.க.வோடு இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. எங்கள் வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடியாகும். இதனை நிரூபிக்கும் வகையிலான பிரசாரத்தை விரைவில் தொடங்குவோம்.
தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரியுடன் கோதாவரியை இணைக்கும் திட்டம் குறித்த மத்திய மந்திரி நிதின் கட்கரியின் அறிவிப்பு சாத்தியப்படக்கூடியதாகும். இதன் மூலம் காவிரி பிரச்சனை தீரும், கோதாவரி தண்ணீரும் கிடைக்கும்.
வருங்காலங்களில் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை வராது. திருச்சியில் நடந்த ராணுவ தளவாட வழித்தட தொடக்க விழா மூலம் திருச்சிக்கு ரூ.3,300 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இது திருச்சிக்கு மட்டுமல்ல, 4 மாவட்டங்களுக்கும் அடங்கும்.
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் எங்கள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். நான் மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, நடிகர் அஜித் உதவி செய்ததாக பெற்றோர் கூறினர். இதன் அடிப்படையில் நல்ல கட்சியில் ரசிகர்கள் சேர்ந்தது வரவேற்கத்தக்கது.
அரசியலில் இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அது விஜய், அஜித் என யாருடைய ரசிகர்களாவும் இருக்கலாம். ரஜினிகாந்த் தனது திட்டத்தை தெளிவாக கூறிவிட்டார். வாக்கு எந்திரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருவது பொய்யான கூற்றாகும்.
தேர்தல் ஆணையமே தெளிவான அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர்களால் வாக்கு எந்திரத்தில் முறைகேடு என்பதை நிரூபிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கூட்டம் நடைபெற்றது வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பேட்மாநகரம், பேரூர், முக்காணி, பழையகாயல் பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
முத்தலாக் சட்டத்தில் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?. எனவே முத்தலாக் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை எதிர்ப்போம். கொடநாடு விவகாரத்தில் வக்கீல்கள் யாருக்காக வேண்டுமானாலும் ஆஜராகலாம். ஜாமீன் எடுக்கலாம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை வைத்து ஆஜராகக்கூடாது என எப்படி சொல்ல முடியும்.
தலைமை செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் யாகம் வளர்த்தது தவறு தான். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின்போது கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. மத்திய-மாநில அரசுகள் 40 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை. சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று தமிழகத்திற்கு எத்தனையோ நல்ல திட்டங்கள், தொழில் வளங்கள் வந்திருக்கும். மீனவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும். மத்திய-மாநில ஆட்சிகள் இத்திட்டத்தை நிறுத்தக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
பெரியார் கோவிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் அனைவரும் கோவிலுக்குள் செல்ல போராடியவர். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என போராடியது தி.மு.க. ஆனால் போகக்கூடாது என சொல்வது பா.ஜ.க.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டனர். அதற்கு அவர் அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார். #Kanimozhi #Ajith
சென்னை, ஜன.22-
திருச்சியில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார். இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் எந்தக் கட்சி மேடைகளிலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் இதுபற்றி டாக்டர் தமிழிசை இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் அஜித்தை கட்சிக்கு வரும்படி அழைக்கவில்லை. எங்கள் கட்சியில் சேருவார் என்றும் சொல்லவில்லை.
நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்ற முறையில் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மனிதாபிமானத்துடன் அவர் செய்த உதவியை பாராட்டினேன். நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்று குறிப்பிட்டேன். அழைக்கவில்லை. இது தவறா? அவர்கள் நடித்து கொண்டிருந்தால் நடித்து கொண்டிருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்