search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96268"

    விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #Sarkar #KeerthySuresh
    விஜய்யுடன் 2வது முறையாக ஜோடி சேர்ந்ததில் உற்சாகமாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களிலுமே வரலட்சுமியுடன் நடித்துள்ளீர்களே?

    ஆமாம். ஆனால் 2 படங்களிலுமே அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவர் வரும் காட்சிகளில் நான் வரமாட்டேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இருவருமே ஈகோ இல்லாதவர்கள். எனவே நல்ல தோழிகளாக இருக்கிறோம்.

    சாவித்திரி போல மீண்டும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பீர்களா?

    இல்லை. அந்த படம் அனுபவத்தையும் பக்குவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இன்னொருமுறை அப்படி என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு சிறப்பாக வந்தது. அது ஒரு மேஜிக். முழுக்க முழுக்க கதாநாயகிக்கான படங்களில் மட்டுமே நடிக்க முடியாது. சண்டக்கோழி, சர்கார் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அதுதான் ஒரு கதாநாயகிக்கு நல்லது. பெரிய படங்களில் ஒரு நல்ல வேடத்தில் இருப்பது என்பது நடிகைக்கு அவசியம்.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

    இப்போதைக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க விரும்பவில்லை. சாவித்திரியாக நடித்ததிலே நிறைவு அடைந்துவிட்டேன். போதும்.

    ஓய்வில் இருக்கிறீர்களாமே?

    ஆமாம். நடிக்க வந்ததில் இருந்து வேகமாக தொடர்ந்து நடித்துள்ளேன். எனவே சில மாதங்கள் ஓய்வில் இருக்கிறேன். வயலின் கற்றுக்கொள்கிறேன். சமைப்பேன். உடற்பயிற்சி செய்கிறேன். 20க்கு மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன்.

    சாவித்திரி படத்துக்கு பிறகு சம்பளத்தை அதிகரித்து விட்டதாக செய்தி வந்ததே?

    இன்னும் எந்த படத்திலுமே கமிட் ஆகவில்லை. அப்புறம் எப்படி சம்பளத்தை ஏற்ற முடியும்?

    உங்கள் குடும்பத்தின் ஆதரவு பற்றி?

    அப்பா சுரேஷ் ஒரு தயாரிப்பாளர். அம்மா ரஜினியுடன் நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது எனது பாட்டியும் ரெமோ, தாதா 87 என்று நடிகையாகி விட்டார். ஆக, எங்கள் குடும்பமே சினிமா குடும்பம் தான். அப்பா தயாரிப்பில் அக்கா இயக்கத்தில் பாட்டி, அம்மா இருவரும் நடிக்க திட்டமிட்டுள்ளோம்.

    யாருடன் நடிக்க ஆசை?

    தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்துவிட்டேன். அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.



    தொடரி போன்ற படங்கள் தோல்வி அடையும்போது உங்களை பாதிக்குமா?

    இல்லை. வெற்றி, தோல்வி இரண்டையுமே ஒரே மாதிரியாக தான் எடுத்துக்கொள்கிறேன். எல்லாமே பாடங்கள் தான். அவற்றில் இருந்து கற்றுக்கொள்கிறேன்.
    விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

    அஜித் இரு விதத் தோற்றங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.

    ஐதராபாத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து படக்குழு மும்பை சென்று பாடல் காட்சியை படமாக்கிவருகிறது. இதைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு நடத்தப்படஉள்ளது.

    இதைத் தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அது பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணியில், அஜித் ஆலோசனையில் செயல்படும் தக்‌ஷா குழுவினர் ஈடுபட உள்ளனர். #Ajith #DhakshaTeam
    நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.



    இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்‌ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு பங்கேற்றது. அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது.

    தற்போது அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா அணியினர், காவல் துறையுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னை தி.நகரை கண்காணிக்க உள்ளனர். #ThalaAjith #DakshaTeam #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #ViswasamSecondLook #AjithKumar #Nayanthara

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தீபாவளிக்கு படத்தை ரீலஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    தற்போது ஐதராபாத்தில் கிளைமாக்ஸ் சூட்டிங் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய ஆடிட்டோரியம் ஒன்றில் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் காட்சியில், ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துவரும் முக்கிய நடிகர்கள் அனைவருமே பங்குபெற்றுள்ளார்கள்.

    விஸ்வாசம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் தீபாவளிக்கு படத்தின் டீசர் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    பிரபல காமெடி நடிகர் சூரி, சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்ததற்கு முதலில் அஜித்தான் பாராட்டினார் என்று கூறியிருக்கிறார். #Soori #Ajith
    ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் ஆர்கே.சுரேஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். சாந்தினி, தம்பி ராமய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    கே.சி.பிரபாத் தயாரிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அஜித் ரசிகராக படத்தில் ஆர்கே.சுரேஷ் தோன்றுவதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியே அஜித்துக்கான பாராட்டு விழா போல அமைந்தது. நடிகர் சூரி பேசும்போது ‘நான் சிக்ஸ்பேக் வைத்த படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குனர் சிவா மூலம் என்னை தொடர்புகொண்டு பாராட்டியது அஜித் தான். அவரை என்றுமே மறக்க மாட்டேன்’ என்றார்.



    அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் விஸ்வாசம் படம் குறித்து பேசும்போது “ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாதமான ரோலில் அஜித் நடித்துள்ளார். குறிப்பாக இரண்டு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார் என்றார்.
    சிவா இயக்கத்தில் அஜித் குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூ.48 கோடிக்கு விலை போனது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் இந்த படத்தை கைப்பற்றியிருக்கிறார்.



    இந்த படத்தில் அவருக்கு அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam #AjithKumar

    விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
    இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.



    இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    விஜய், அஜித் இருவரும் அரசியலுக்கு வரலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vijay #Ajith #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக டெல்லியில் இருந்து சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகிய 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் சஞ்சய்தத்துக்கு 18 மாவட்டங்களும், ஸ்ரீவல்ல பிரசாத்துக்கு 14 மாவட்டங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து தேர்தல் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

    நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். கட்சிக்கு தேர்தல் நிதி திரட்டும் பணி தொடங்கி உள்ளது.


    பிரதமர் மோடியின் ஊழல் குறித்து வீடு தோறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படும். ஹைட்ரோகார்பன் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதை அனுமதிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 13 பேர் பலியாகி உள்ளனர். அந்த ஆலையை திறக்கக் கூடாது.

    கருணாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதைவிட மோசமாக பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் உலாவருகிறார்.

    விஜய், அஜித் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Vijay #Ajith #Thirunavukkarasar

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஆளில்லா விமான போட்டில் நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. #AjithKumar #Australia #DHAKSHA
    கேன்பெர்ரா:

    நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது

    ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில் நடிகர் அஜீத்தை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை வந்தடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், அதில் அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

    இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.



    நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றிலும் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக் ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இதற்கு ஆஸ்திரேலிய நடுவர்களே காரணம் எனவும், திட்டமிட்டு அவர்கள் மதிப்பெண்களை குறைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த வெற்றியின் மூலமாக ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த எம்.ஐ.டி.யின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியர் செந்தில்குமார், அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் கூட இறுதிப்போட்டியை எட்ட முடியாத சூழலில் ஆஸ்திரேலியாவுடன் கடும் போட்டி நிலவியதாகவும், அதிக புள்ளிகள் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய நடுவர்களின் நிறவெறி காரணமாக நேர்முக தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்ட சதியால் நமது மாணவர்கள் முதலிடத்தை எட்ட இயலாமல், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

    விஸ்வாசம் படப்பிடிப்பில் இருப்பதால் குழுவுடன் செல்ல இயலாத நிலை அஜீத்திற்கு ஏற்பட்டது. இருந்தாலும் தினமும் பேராசிரியர்களையும், மாணவர்களையும் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வந்த அஜீத், வெற்றிக்காக தக் ஷா குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #AjithKumar #Australia #DHAKSHA
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் அறிமுக பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால் எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

    இந்த ‘தூக்கு’ துரை என்ற கேரக்டர் மதுரைக்காரர் என்பதால், மதுரைத் தமிழில் பேசி நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் பாடலாசிரியர் அருண் பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில், ‘எத்தன உயரம் இமயமல, அதில் இன்னொரு சிகரம் எங்க தல...’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. 

    இந்த வரியை அருண் பாரதியே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. #Viswasam #AjithKumar

    ×