என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96268
நீங்கள் தேடியது "slug 96268"
சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜித், படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தால் படக்குழுவினர் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார். #Ajith #Viswasam
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்குமார்-நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டை காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு, வருகிற 27-ந் தேதி முதல் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் அஜித் தங்கியிருந்தபோது, அவருடைய எளிமைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் வருமாறு:-
‘விஸ்வாசம்’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற அஜித்குமாருக்கு அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. சில காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் 2 நாட்கள் தேவைப்பட்டது. அதனால் அஜித் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மேலும் 2 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்படி, ஓட்டல் நிர்வாகியிடம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி கேட்டார்.
ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்த அறை 11-ந் தேதி முதல் இந்தி நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஓட்டல் நிர்வாகி தெரிவித்தார். “நம்மால் இன்னொரு நடிகருக்கோ அல்லது படக்குழுவினருக்கோ இடையூறு ஏற்படக் கூடாது” என்று கூறிய அஜித் தனது அறையை உடனே காலி செய்து விட்டார்.
“எனக்கு ஒரு சின்ன கட்டிலும், மின்விசிறியும் இருந்தால் போதும்” என்று கூறிய அவர், அந்த ஓட்டலிலேயே ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு சம்மதித்தார். அவரின் எளிமையை பார்த்து படக்குழுவினரும், ஓட்டல் நிர்வாகியும் வியந்து போனார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான ‘விவேகம்’ திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. #Ajith #Vivegam
வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.
இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கும் முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது.
இதற்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘சரைநடு’ படம்தான் 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது. தற்போது இதை அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் முந்தியுள்ளது. தற்போது வரை ‘விவேகம்’ படத்தை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
நடிகர் அருண் விஜய், தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலர் அஜித், விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு மிகவும் சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார். #ArunVijay
தமிழ் சினிமாவில் திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் பலர் தளர்ந்து போயிருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கடின உழைப்பு மூலம் உழைத்து வருகிறார்கள். அப்படி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் நடிகர் அருண் விஜய்.
இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சையமானார். தற்போது சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார். அதில், நடிகர் அஜித்துடம் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, தெரியல. மீண்டும் அமையும் என்று நம்புகிறேன். அதைத்தான் நானும் விரும்புகிறேன்’ என்றார்.
விஜய்யை பற்றி சொல்லுங்கள்?
அற்புதமான மனிதர். அவருடைய எனர்ஜி ரொம்ப பிடிக்கும்.
அனுஷ்கா பற்றி?
ஸ்வீட்டி
என்னை அறிந்தால் 2 உருவாகுமா?
நானும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்.
அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது?
அவருடைய பேச்சும், பெருந்தன்மையும்.
செக்கச் சிவந்த வானத்தில் சிம்புடன் நடித்திருக்கிறீர்களா?
ஆமாம். நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம்.
உங்களுடைய அடுத்த படம் எப்போது?
தடம் திரைப்படம் ஜூலையில் வெளியாக இருக்கிறது.
2018ல் உங்களை கவர்ந்த படம்?
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ (மகாநடி)
தனுஷ் பற்றி?
திறமையானவர். வலிமையுடன் நடிப்பார்.
விஜய் சேதுபதி பற்றி?
இயற்கையானவர்
இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #ArunVijay
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், படத்தில் ஐந்து சண்டை காட்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `விஸ்வாசம்'. இதில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக நடிப்பதாக செய்தி வருகிறது.
படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், நான் அறிமுகமானது அஜித்தின் `ஜி' படத்தில் தான். `விஸ்வாசம்' படத்திற்கு ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள். ஐதராபாத்தில் ஒரு காமெடி சண்டைக்காட்சியை எடுத்துள்ளோம். இந்த படம் சிறுத்தை படம் போல. உணர்வுபூர்வமாக இருக்கும். படத்தில் வருகிற சண்டைக்காட்சிகள் சினிமாத்தனமாக இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்’ என்று கூறி இருக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 22-ஆம் தேதி துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
வருகிற தீபாவளிக்கு விஜய் 62, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு படமும் தீபாவளி ரேசில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay62 #Viswasam
இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா, விஷால் என்று நான்கு முன்னணி கதாநாயகர்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அஜித், விஜய், சூர்யா, விஷால் இவர்களில் ஏதாவது இரண்டு ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதே அபூர்வமான ஒன்று.
இந்த ஆண்டு விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் சிவா கூட்டணியில் தயாராகும் `விஸ்வாசம்', சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் `என்ஜிகே' படம் ஆகியவை தீபாவளி அன்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விஷால் நடிப்பில் உருவாகும் `சண்டக்கோழி 2' படத்தையும் தீபாவளிக்கு இறக்க திட்டமிடுகிறார்கள். இதனால் நான்கு முனை போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை.
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. நான்கு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. ஏதாவது இரண்டு படங்கள் தள்ளி போகலாம். முன்னதாக ரஜினி நடிக்கும் 2.0 படம் தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தள்ளி போகும் என்பதால் மற்ற பெரிய படங்கள் போட்டி போடுகின்றன. #Vijay62 #Viswasam #NGK #Sandakozhhi2
நடிகர்கள், நடிகைகள் புதிய ரக மாடல் போன்களை பயன் படுத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் சாதாரண சிறிய போன் வைத்துக் கொண்டும் வாட்ஸ் அப் பயன்படுத்தாமல் இருக்கிறார். #Ajith #Thala
சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம்.
‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து பேசுபவர்களிடம் பேசுவதற்கு இந்த போன் போதும். அதுமட்டும் இல்லாமல் நான் வாட்ஸ்அப் பயன்படுத்துவதும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். அஜித்தின் புதிய பொழுதுபோக்கு துப்பாக்கி சுடுதல். மாலை வேளைகளில் துப்பாக்கி சுடுதலில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. #Ajith #Vijay
விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர். எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது.
ஆனால் இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். விஜய்க்கு இது 62-வது படம். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவருக்கும் விஜய்க்குமான கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களில் ராசியாக அமைந்தன. அதுபோல் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் படமாக தயாராகிறது. ராதாரவியும், பழ கருப்பையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் விஜய் பிறந்த நாளான வருகிற 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
அஜித்குமாருக்கு இது 59-வது படம். விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். அஜித்குமார் - சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. நான்காவது படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகின்றனர். மும்பைக்கும் செல்கிறார்கள். பழிவாங்கும் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அஜித்குமார், அண்ணன்-தம்பியாக இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேச்சு உள்ளது.
சிவா - அஜித் கூட்டணியில் உருவாகும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
அஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித்துடன் மங்காத்தா படத்தில் பணிபுரிந்த பிரபல சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அடுத்தகட்டமாக மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் வெள்ளை முடி, தாடியுடன் வந்த அஜித், அடுத்த கட்ட படப்பிடிப்பில் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது.
மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Viswasam #AjithKumar #Nayanthara
அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’ கனெக்ஷன் அமைத்திருக்கிறார்கள். #Thala #Ajith #Viswasam
அஜித் - சிவா கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, விஸ்வாசம் படத்தில் திருவிழா பாடல் இடம் பிடித்திருக்கிறது. இப்படத்தின் சமீபத்தில் சூட்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் திருவிழா போன்று செட் அமைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வீரம்’ படத்தில் திருவிழா பாடலும், ‘வேதாளம்’ படத்தில் விநாயகர் பாடலும் இடம் பிடித்திருந்தது.
தற்போது விஸ்வாசம் படத்திலும் அதுபோன்று திருவிழா பாடலையும் உருவாக்கி வருகிறார்கள். மேலும், இப்படத்தின் கதை தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்பதை கண்டுபிடித்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.
படப்பிடிப்பில் தேனி பதிவு எண் கொண்ட ராயல் என்பீல்டு புல்லட் ஒன்று நிற்கிறது. இது படத்தில் அஜித் ஓட்டும் புல்லட் எனத் தெரிகிறது. இதனால், ‘விசுவாசம்‘ படம் தேனியை கதைக்களமாகக் கொண்ட படம் என அஜித் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
டி.என். 60 ஏபி 2435 எனும் பதிவு எண் கொண்ட புல்லட் புகைப்படமும் இப்போதே வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியான சம்பவத்திற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அஜித், விஜய் மௌனம் சாதித்து வருவது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. #Vijay #Ajith
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ரஜினி, கமல், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் முதல் சூரி வரை எல்லா பெரிய, சின்ன நடிகர்களுமே தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வலுவாக பதிவு செய்தனர். ஆனால் விஜய்யோ, அஜித்தோ இதுவரை வாயே திறக்கவில்லை.
தமிழ்நாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவருக்கு தான் ரசிகர்கள் அதிகம். இருவரது ரசிகர்களும் நினைத்தால் ஒரு செய்தியை உலக அளவிற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இத்தனை பெரிய சம்பவத்துக்கு இருவருமே கண்டனம் தெரிவிக்காதது அவர்களின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர் ஒருவர் இதுபற்றி கூறும்போது ‘விஜய்யாவது இதற்கு முன்பு சில பிரச்சினைகளில் கண்டனம் தெரிவித்தார். அனிதா பலியானபோது வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். ஆனால் இந்த சம்பவத்தில் அவரும் கருத்து கூறவில்லை.
இவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் அதனை உலக அளவில் கொண்டு செல்லலாம் என்று காத்திருந்தோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி இருந்துகொண்டார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்றார். விஜய், அஜித் மட்டும் அல்லாது முன்னணி கதாநாயகிகளும் தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு நடிகை ஒருவரும் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar
ராஜா ராணியில் ஒரு சின்ன வேடம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்தவர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் நடிப்பதை தொடர்ந்து, அடுத்ததாக அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் இணைந்திருக்கிறாராம். சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுவரை அஜித்தின் வயதான கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு நடந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பையில் விரைவில் துவங்க இருக்கிறது. அதில் அஜித் இளமையான தோற்றத்துக்கு மாற இருக்கிறார். அதில் சாக்ஷி அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளமையான அஜித்துக்கு ஜோடியாக சாக்ஷி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். #Viswasam #AjithKumar #Nayanthara #SakshiAgarwal
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், நான் அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ajith #SakshiAgarwal
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X