search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரஞ்சீவி"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.
    அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

    கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.

    கார்த்திகேயா திருமணம்

    இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் - நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.
    தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

    தமன்னா, சிரஞ்சீவி
    தமன்னா, சிரஞ்சீவி

    இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நயன்தாரா - தமன்னா இருவரும் சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இணைந்து நடிக்கும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Nayanthara #Tamannaah
    நயன்தாரா சினிமாவில் யாருடனும் எளிதில் நட்பாகிவிட மாட்டார். முக்கியமாக சக நடிகைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. எனவேதான் நயன்தாராவுக்கு நடிகைகளில் நெருக்கமான தோழி என்று யாரும் இல்லை. மோதலில் தொடங்கிய ஒரு பிரச்சினை நயன்தாராவையும், திரிஷாவையும் தோழிகளாக இணைத்தது.

    இருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கிவிட்டார். இதனால் அந்த படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது. இதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.



    இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதை அடுத்து சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின்களும் இணைந்து நடிக்க உள்ளதாக பட தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. சிரஞ்சீவியின் 152-வது படமாக உருவாகும் இதை கொரட்டலா சிவா இயக்க இருக்கிறார். #Nayanthara #Tamannaah

    நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளனர். #VijaySethupathi #SyeraaNarasimhareddy
    சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

    இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் விஜய் சேதுபதிக்கு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படக்குழுவினர் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்த தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



    சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். 
    சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாக தமன்னா கூறியுள்ளார். #SyeraaNarasimhaReddy #Tamannaah
    கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது, சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறார்.

    உதயநிதியுடன் சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தான் நடிக்கும் வேடம் பற்றி தமன்னா கூறியதாவது, சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவை நனவாக்கி இருக்கிறது.



    அதற்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும். சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் போல் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். #SyeraaNarasimhaReddy #Tamannaah
    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படத்தை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். #RajaMouli #RRR
    ‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

    இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

    தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

    ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. 



    இதற்காக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா இந்த விழாவில் கலந்து கொண்டனர். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

    படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் இடம் பெறும் 8 நிமிட காட்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். #Chiranjeevi
    சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் இருந்து அகற்றுவதற்காக நடந்த முதல் புரட்சி என்று கருதப்பட்ட சிப்பாய் கலகத்துக்கு முன்பே ஆந்திராவில் உள்ள மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை உருவாக்கியவராக நரசிம்ம ரெட்டி கருதப்படுகிறார். நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

    அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சுரேந்தர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார். சண்டை காட்சிகளை அதிக செலவில் எடுத்துள்ளனர்.

    படத்தில் 8 நிமிடம் இடம்பெறும் போர்க்கள யுத்த காட்சிகள் உள்ளன. இவை படத்தின் பிரதான காட்சிகளாக கருதப்படுகின்றன. இந்த 8 நிமிட போர்க்கள காட்சியை படமாக்க ரூ.54 கோடி செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரண்மனை அரங்குகளையும் அதிக செலவில் அமைத்துள்ளனர். வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.



    இந்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சிரஞ்சீவியின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
    தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை நல்ல விலைக்கு போயுள்ளதாக கூறப்படுகிறது. #SyeraaNarasimhaReddy
    சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. 

    சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர்.

    சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 



    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார்.

    படப்பிடிப்பு நவம்பரில் முடிக்கப்பட்டு படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. #SyeraaNarasimhaReddy
    ×