search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரிகளில் கடத்திய 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல இடங்களில் குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

    இவை வடமாநிலங்களில் இருந்து கடத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்வதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே லாரிகளில் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீசார் இன்று காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே பெங்களூர் நெடுஞ்சாலை பாரிவாக்கம் ஜங்‌ஷனில் 2 லாரிகளில் இருந்த பொருட்களை சிலர் லோடு ஆட்டோவில் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ய சென்ற போது லோடு ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    2 லாரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து சுமார் 5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும்.

    லாரியில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 2 லாரி மற்றும் லோடு ஆட்டோ பறிதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட 2 லாரிகளும் குஜராத் பதிவு எண் கொண்டது. குஜராத்தில் இருந்து அவர்கள் குட்கா, புகையிலையை கடத்தி வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக கைதான 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பாஜக தலைமையிலான எங்களது அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த பணிகளை வேறொரு அரசு செய்வதற்கு 25 ஆண்டுகளாவது தேவைப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #SuratAirport
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தை ரூ. 354 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிய முனையம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 4 ஆண்டுகளில் இதனை செய்து முடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தொங்கு பாராளுமன்றங்கள் அமைந்ததால் கொள்கை ரீதியாக தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் முந்தைய அரசுகள் திணறி வந்தன.

    மக்கள் எங்களை முழுமையான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்ததால் நாங்கள் பல காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. மத்தியில் மற்றொரு முழு பெரும்பான்மையான அரசு  அமைய வேண்டும். அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியும்.

    முந்தைய கூட்டணி ஆட்சிகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறியதால் வளர்ச்சியில்  பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த பா.ஜ.க. அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி உள்ளது  



    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. எங்களது ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

    பாஜக தலைமையிலான எங்களது அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த பணிகளை வேறொரு அரசு செய்வதற்கு 25 ஆண்டுகளாவது தேவைப்படும்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு, நடுத்தர மக்களும் வீடு வாங்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த கிஷன் ரமோலியா என்ற ஒளிப்பதிவாளர் திடீரென மயக்கம் அடைந்ததால் பிரதமர் மோடி பேசுவதை நிறுத்தினார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #SuratAirport
    வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார். #SaltSatyagrahaMemorial #SaltSatyagrahaMuseum
    அகமதாபாத்:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் உப்புக்கு தனியாக வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் நீரில் இருந்து சொந்தமாக உப்பு தயாரிக்கும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை பகுதியை நோக்கி 1930-ம் ஆண்டு 241 மைல் தூர பாதயாத்திரையை காந்தி மேற்கொண்டார். ‘தண்டி யாத்திரை’ ‘உப்பு சத்தியாகிரகம் யாத்திரை’ என்றழைக்கப்படும் இந்த யாத்திரையில் அவருடன் ஆரம்பத்தில் 80 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த யாத்திரை தண்டி சென்றடைந்தபோது சுமார் 50 ஆயிரம் பேர் உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த ‘உப்பு சத்தியாகிரகம் யாத்திரை’யை நினைவுகூரும் வகையில் தண்டி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை மகாத்மா காந்தியின் 71-வது நினைவுநாளான இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    காந்தியுடன் இந்த உப்புச் சத்தியாகிரகத்தில் ஆரம்பத்தில் புறப்பட்ட 80 பேரின் சிலைகள் இந்த நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    12-3-1930 அன்று தொடங்கிய உப்பு சத்தியாக்கிரகம்  6-4-1930 அன்று முடிந்தது. இந்த 24 நாட்களை குறிக்கும் விதமாக இங்கு 24 சுவரோவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. #SaltSatyagrahaMemorial #SaltSatyagrahaMuseum 
    குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். #ShankersinhVaghela
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் 12வது முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷங்கர் சின்ஹ் வகேலா. இவர் 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர் சின்ஹ் வகேலா தனது எம்.எல்.ஏ. பதவியை 16.8.17 அன்று ராஜினாமா செய்தார்.



    அதன்பின்னர், அகில இந்திய ஜன் விகல்ப்  மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி 95 இடங்களில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.  #ShankersinhVaghela
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கைதாகி, சிறைசென்ற ஹர்திக் பட்டேல் தனது நீண்டநாள் தோழியை இன்று திருமணம் செய்து கொண்டார். #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சுமார் ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதி 17-7-2016 அன்று அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுதலை ஆகும் தினத்திலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் கடந்த ஆறுமாத காலமாக தாய்மண்ணை விட்டு பிரிந்திருந்த ஹர்திக் பட்டேல் 17-1-2017 அன்று குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்தார்.



    இந்நிலையில், தனது நீண்டநாள் தோழியான சட்டக்கல்லூரி மாணவி கின்ஜல் பரேக் என்பவருக்கும் ஹர்திக் பட்டேலுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம், சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் கின்ஜல் பரேக் - ஹர்திக் பட்டேல் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

    முன்னதாக, இதே மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டம், உஞ்சா பகுதியில் உள்ள கடவா பட்டேல் இனத்தவர்களின் சிறப்புக்குரிய வழிப்பாட்டுத்தலத்தில் இந்த திருமணம் நடைபெற ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், மெஹ்சானா மாவட்டத்துக்குள் ஹர்திக் பட்டேல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் , திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.  #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் தனது காதலியை திருமணம் செய்கிறார். #HardikPatel #Kinjal
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் பட்டேல் (வயது 25). இவர் ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

    ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் தனது காதலி கிஞ்சாலை திருமணம் செய்து கொள்கிறார்.

    இவர்களது காதல் திருமணம் வைதீக முறைப்படி அங்குள்ள சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    எளிய முறையில் நடக்கிற மண விழாவில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன.  #HardikPatel #Kinjal
    குஜராத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    ஹஜிரா:

    மத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருகிறது. இதன் அடிப்படையில் லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனம் 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் ‘கே9 வஜ்ரா’ என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி ரூ.4,500 கோடியில் 100 பீரங்கிகள் வழங்க வேண்டும்.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் சூரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹஜிரா என்ற இடத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவன உற்பத்தி வளாகத்தில் 40 ஏக்கரில் பீரங்கி உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் தொழிற்சாலை வளாகத்தையும், தயாராகிவரும் பீரங்கிகளையும் அவர் பார்வையிட்டார்.



    கே9 வஜ்ரா ராணுவ பீரங்கியின் தொழில்நுட்பம் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் இந்த விழாவில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கொரிய மந்திரி வாங்க் ஜங் ஹாங், எல் அண்டு டி குழும தலைவர் ஏ.எம்.நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டர் வலைத்தளத்தில், “இந்த நிறுவனத்தின் முழு அணியினரையும் இதற்காக நான் பாராட்டுகிறேன். இங்கு கே9 வஜ்ரா பீரங்கி உற்பத்தி செய்யப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கும், இந்திய ராணுவத்துக்கும் முக்கிய பங்காற்றுவதாகும். பாதுகாப்பு துறையிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதே நமது முயற்சி. தனியார் நிறுவனங்களும் இதனை ஆதரிக்கும் நோக்கத்தில் தனது பங்களிப்பை வழங்குவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு, ஒரு பீரங்கியில் ஏறி நின்று அதனை தானே படம்பிடித்த வீடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதில், ‘எல் அண்டு டி நிறுவனத்தில் பீரங்கியை சோதனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் கே9 வஜ்ரா பீரங்கிக்காக 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சுமார் 13 ஆயிரம் உதிரிபாகங்களை தயாரிக்கின்றன. இதில் வெளிநாட்டு உதவியின்றி அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிறது.

    கே9 வஜ்ரா பீரங்கி 50 டன் எடையும், 47 கிலோ குண்டுகளை 43 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறனும் கொண்டது என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தின்போது உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக  மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.



    டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானத்தில் இன்று மதியம் அகமதாபாத்திற்கு வந்தார் மோடி. அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில், அவரை குஜராத் கவர்னர் ஓ.பி.கோலி, முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் துணை முதல் மந்திரி எம். நிதின் படேல், குஜராத் பாஜக தலைவர் ஜீத்து வகானி, அகமதாபாத் மேயர் பிஜல்பான் படேல் மற்றும் முதன்மை செயலாளர் ஜெ.என் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி காந்தி நகர் சென்று அங்கு நடைபெற உள்ள உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின்னர் அகமதாபாத் திரும்பும் மோடி, விஎஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, சர்தார் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதன்பின்னர் நாளை (ஜனவரி 18) உலக முதலீட்டாளர் மாநாட்டை மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகள், நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த பயணத் திட்டங்களை முடித்துக் கொண்டு 19-ம் தேதி அகமதாபாத் திரும்பும் மோடி, அங்கிருந்து சூரத் அருகே உள்ள ஹஜிரா சென்று துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர் அருகிலுள்ள  சில்வாஸா நகரத்திற்கு சென்று ஒரு மருத்துவக் கல்லூரியையும் திறக்க உள்ளார்.

    மோடியின் சுற்றுப்பயணத்தையொட்டி அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 9-வது உலக முதலீட்டாளர் மாநாடு நாளை தொடங்கி 20-ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit 
    குஜராத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. #EWSReservation #Telangana
    ஐதராபாத்:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார்.



    பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் இந்த இட ஒதுக்கீடு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி அலுவலக அதிகாரி கூறியதாவது:-

    மத்திய அரசின் அறிவிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #EWSReservation #Telangana
    குஜராத்தில் மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர். #Gujarat #KiteString #SlitThroat
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளை பறக்க விட்டனர். மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் அவன் உயிரிழந்தான்.

    இதேபோல் மாஞ்சா நூல் அறுத்து மேலும் 4 பேர் பலியாகினர். ஆமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்பட பல இடங்களில் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.  #Gujarat #KiteString #SlitThroat
    ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார். #RamnathKovind #10pcreservation
    அகமதாபாத்:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் நேற்றிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.


    இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் மாநிலமாக குஜராத் சிறப்பிடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.   #VijayRupani #Gujaratgovernment #10pcreservation
    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    ×