search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 2 பேர் கலந்து கொள்கிறார்கள். #SardalPatel #PMModi #Inaugurate
    ஆமதாபாத்:

    ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

    இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

    இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கும்.

    நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து செல்லும்.

    பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து படேல் சிலை மீது மலர்களை தூவும்.

    சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, படேல் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு நர்மதா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சிலை உருவாக்கும் திட்டத்தால், இயற்கை வளங்கள் பேரழிவை சந்திக்கும் என்பதால், திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு 22 கிராமங்களின் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

    விழாவுக்கு வரும் மோடியை வரவேற்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
    குஜராத் மாநிலத்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது தாயின் கருப்பை பயன்படுத்தி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். மூன்று முறை கருச்சிதைவு, மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்க முன்வந்ததை அடுத்து கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல் நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன்மூலம், ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்தியாவிலேயே முதல் குழந்தை பிறந்துள்ளது. 
    குஜராத்தில் தன் 5 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GujaratWomen #Suicide #WellThrow
    ஆமதாபாத்:

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். நவீன நல்லதங்காள், இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. அங்கு பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார். இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், காப்பாற்றும் நோக்கத்தில் கிணற்றில் குதித்தனர். ஆனால் அதற்குள் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள்.

    2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #GujaratWomen #Suicide #WellThrow 
    குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
    ஜெய்ப்பூர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
     
    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    குஜராத்தில் வசித்து வரும் வெளிமாநில இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் என இந்தி மொழி பேசுபவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
    குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலைக்கு பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டி மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். #Gujaratattacks
    கொல்கத்தா:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரவிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

    எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக குஜராத் மாநில பா.ஜ.க. அரசுக்கு
    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ‘‘இந்த தாக்குதலின் பின்னணியில் சிலரது தூண்டுதல் இருந்துள்ளது. அதனால்தான் மக்கள் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான முன்மாதிரியாகி வருகிறது. மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய இந்த பிரச்சனை பேரழிவுக்கான பாதையாக மாறிவிட கூடாது. இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தவறியது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.

    அந்த மக்கள் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். குஜராத்தை தங்களது சொந்த மாநிலமாக கருதிவந்த அவர்கள் எல்லாம்  இப்போது பீதி அடைந்துள்ளனர். இது எனக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது’’ என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிவரும் நிலைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘‘குஜராத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளால் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்கள் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். #Gujaratattacks #Gujaratmigrantworkers #Mamata #Attackonmigrantworkers #Gujaratmigrantlabourers
    உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #Gujaratviolence #YogiAdityanath
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
     
    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன 

    இந்நிலையில். உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன், உபி மக்கள் அங்கு தகுந்த பாதுகாப்புடன் உள்ளனர் என தெரிவித்தார். #Gujaratviolence #YogiAdityanath
    குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசும் வெளிமாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Gujaratviolence
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
     
    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவர்கள் தாக்கப்படுவதற்கு உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.


    எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

    அங்கு வெளிமாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘வறுமையைப்போல் அதிபயங்கரமானது எதுவுமில்லை. குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதும், வேலையில்லா திண்டாட்டம் அங்கு பெருகி வருவதும்தான் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பெருகுவதற்கான மூலக்காரணம்.

    இதற்காக, வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த கூலி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது முற்றிலும் தவறானது. இதைநான் வன்மையாக எதிர்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Gujaratmigrantlabourers #Rahul #Gujaratviolence
    குஜராத்தில் 14 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்தி பேசும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பயந்து வெளிமாநிலத்தினர் சுமார் 20 ஆயிரம் வெளியேறியுள்ளனர். #GujaratCMRupani
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

    எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.



    இதற்கிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.

    ஏதாவது பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வெளிமாநிலத்தவர்கள் போலீசில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என ராஜ்கோட் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி தெரிவித்துள்ளார். #GujaratCMRupani #20000migrants #20000migrantsfledGujarat
    குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் கடந்த 3 வாரங்களில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Girforest
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
     
    இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான காலத்தில் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அடுத்த சில தினங்களில் மேலும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன.

    இதற்கிடையே, கிர் வனப்பகுதியின் தல்கானியா பகுதியில் நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி அவை அனைத்தும் உயிரிழந்தன. இதனால் பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆனது. 



    இந்நிலையில், நேற்று இரண்டு சிங்கங்களை மீட்டு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவை இறந்து போயின. இதைத்தொடர்ந்து, கிர் காட்டில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.   

    இதுதொடர்பாக முதல் மந்திரி விஜய் ரூபானி கூறுகையில், இது எதிர்பாராத நிகழ்வு. ஒவ்வாமையால் கிர் காட்டில் 20 முதல் 22 சிங்கங்கள் வரை இறந்துள்ளன. டெல்லி, புனேவில் இருந்து மருத்துவர்கள் வராவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும். அஜாக்கிரதையாக இருந்த வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #Girforest
    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA) என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
    குஜராத் மாநிலத்தில் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதாக தினமும் திட்டிவந்த தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிமாலியா கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங் தட்வி. இவரது மகன் ராஜேந்திர தட்வி வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார்.

    ராஜேந்திர தட்வி தனது அடிப்படை தேவைக்கு கூட சம்பாதிக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தினமும் அவரை திட்டிவந்ததாகவும், வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல், நேற்று மாலையும் ராம்சிங் தனது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர தட்வி அருகில் இருந்த மரப்பலகையால் தந்தையை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராம்சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து, சம்பவம் குறித்து குற்றவாளியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர தட்வி கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெற்ற தந்தையை மரப்பலகையால் கொடூரமாக தாக்கி மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    குஜராத் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 45 ஆயிரம் உயர்த்தப்பட்டதற்கு சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. #GujaratMLA #SalaryHike
    அகமதாபாத்:

    குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது.

    இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.



    இதன்படி ரூ.70,727 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ1,16,316 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்களின் தினசரி படி ரூ.200 லிருந்து ரூ.1000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. #GujaratMLA #SalaryHike
    ×