search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96364"

    கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார். #Congress #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

    பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பற்றியும், மும்பையில் சிலர் இருப்பது பற்றியும் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறு வரும் தகவல்கள் உண்மையல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வதந்தி பரவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக பா.ஜனதாவினர் பொய் தகவல்களை கூறி வருகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் தான் இருக்க வேண்டுமா?, வேறு எங்கும் செல்லக்கூடாதா?. எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதில் எந்த தவறும் இல்லை. அவர்களது விருப்பப்படி மும்பை சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Congress #Siddaramaiah
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும், தற்போது அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #DKShivakumar
    பெங்களூரு :

    பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் பற்றி நன்கு தெரியும்.

    எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.



    எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். #DKShivakumar
    ஹாசனில் நடந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டு கவிழ விட மாட்டோம் என்று கூறியுள்ளார். #Devegowda
    ஹாசன் :

    ஹாசன் டவுன் சென்னப்பட்டணா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நானும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ விடமாட்டோம். எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. விவசாயிகளின் கடன், கூடிய விரைவில் படிபடியாக தள்ளுபடி செய்யப்படும்.

    பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறார். அவைதான் முக்கியம் என்று கூறுகிறார். அவர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் 56 வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்து விட்டது ஹாசன் மக்கள் தான்.



    ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். இந்த கட்சி ஒன்றும் எனது சொத்து இல்லை, இது அனைவருக்கும் பொதுவான கட்சி. குமாரசாமி முதல்-மந்திரி ஆன பின்பு தான் கர்நாடகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் சிறிய, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தான் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும். அதிகமாக அரசு பள்ளிகள் திறக்கப்படும். ஹாசனில் இருந்து பேலூருக்கு விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட உள்ளது. அதை மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் என பங்கிட்டுக் கொள்ளும்’’ என்று கூறினார்.
    மீண்டும் பிரதமர் ஆகலாம் என்ற மோடியின் கனவு பலிக்காது என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #PMModi
    மைசூரு :

    முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

    ஆனால் இந்த திட்டத்தை முன்பு காங்கிரஸ் கொண்டுவர ஆலோசித்தபோது, பா.ஜனதாவினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தற்போது அவர்கள் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வராத திட்டங்களை தற்போது கொண்டு வந்திருக்கிறார். இதன்மூலம் அவர் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார். அதாவது அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத, ஏழை மக்களின் வாக்குகளை கவருவதற்காக இப்படியொரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.

    அவர் என்னதான் திட்டத்தை கொண்டு வந்தாலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத்தான் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால் மீண்டும் பிரமராகி விடலாம் என்று நினைக்கும் நரேந்திர மோடியின் கனவு பலிக்காது.

    முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தினால் அதன்பிறகு மாநில அரசும் அந்த திட்டத்தை அமல்படுத்தும். கடந்த 2 நாட்களாக நடந்த நாடு தழுவிய போராட்டத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த முழுஅடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் நடத்தவில்லை. அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தி உள்ளன.

    இந்த போராட்டத்தில் பா.ஜனதாவைத் தவிர அனைத்து கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. நான் மைசூருவுக்கு ஏன் திடீரென வந்தேன் என்று நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள். எனது சொந்த ஊரே மைசூருதான். நான் இங்கு வரக்கூடாதா?.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #PMModi
    5 வாரிய தலைவர்களின் நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மீது காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளார். #Siddaramaiah #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 8 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதிருப்தியை சமாளிக்கும் விதமாக 19 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பட்டியல்படி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    மந்திரிசபை விரிவாக்கம் நடந்து, 15 நாட்கள் ஆகியும் வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், 14 வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து குமாரசாமி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 வாரிய தலைவர்களை நியமனம் செய்ய குமாரசாமி மறுத்து விட்டார். இதனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



    இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் குமாரசாமியின் நடவடிக்கை குறித்து புகார் செய்தார்.

    அதாவது காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கிய வாரிய தலைவர்கள் பட்டியலில் 5 பேரின் நியமனத்திற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறினார். இந்த பிரச்சினையை உடனே பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Kumaraswamy

    சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பா.ஜனதா மதிக்கவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். #BJP #Siddaramaiah
    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் எல்லா முடிவுகளையும் கட்சி மேலிடம் எடுக்கிறது. இதில் எனது செல்வாக்கு அதிகரித்துவிட்டதாக சொல்வது தவறு. எங்களிடம் மேலிட தலைவர்கள் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் இறுதி முடிவு எடுப்பது, மேலிடம் தான்.

    எங்கள் கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை. மந்திரிசபை குறித்து தங்களுக்கு அதிருப்தி இருப்பதாக தேவே கவுடா மற்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறியது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இந்த மாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்.



    எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றியும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பா.ஜனதாவினர் மதிக்கவில்லை.

    ராமர்கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரட்டும் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அக்கட்சியினர் செயல்படுகிறார்கள். கோர்ட்டு மீது பா.ஜனதாவுக்கு நம்பிக்கை, மரியாதை இல்லை.

    ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த பா.ஜனதா பயப்படுவது ஏன்?. ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசை விட்டு விலக மாட்டார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #BJP #Siddaramaiah
    கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் நடப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். #siddaramaiah #congress #bjp

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா எதிர்க்கட்சியாக உள்ளது.

    சமீபத்தில் மந்திசபை விரிவு செய்யப்பட்டது. அதில் மந்திரி பதவியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோலி நீக்கப்பட்டார். அதனால் அதிருப்தி அடைந்த அவர் திடீரென மாயமாகிவிட்டார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். டுவிட்டரிலும் செய்தி வெளியிட்டுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. போதிய மெஜாரிட்டி இல்லாததால் அக் கட்சியால் ஆட்சிஅமைக்க முடியவில்லை. தற்போது காங்கிரஸ்- மதசார்பறற ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது.

    இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடக்கிறது.

    எங்கள் (காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையில் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்திக்க எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் இத்தகைய நடவடிக்கை மூலம் ஊழலில் பா.ஜனதா ஈடுபடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது ரமேஷ் ஜார்கிகோலி இன்னும் வந்து சேரவில்லை. அவர் டெல்லியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

    அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோலி கட்சியை விட்டு வெளியேறமாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு கட்சி பல பதவிகளை வழங்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் அவர் பணியாற்றி வருகிறார். எனவே கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அவர் நடந்து கொள்ள மாட்டார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சித்தராமையாவின் குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதே சித்தராமையாவுக்கு நம்பிக்கை இல்லை.

    பா.ஜனதா பெரிய தொகை கொடுத்து குதிரை பேரம் பேசினால் அது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கலாமே என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் எஸ்.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.  #siddaramaiah #congress #bjp

    போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி பரமேஸ்வராவிடம் நான் கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். #Parameshwara #Siddaramaiah
    உப்பள்ளி :

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலீஸ் துறை பற்றி எனக்கும், பரமேஸ்வருக்கும் வாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் அவரிடம் போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம்.

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து என்னுடைய கருத்தை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் தெரிவித்தேன். யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாதவாறு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் துறை பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்தார். இதற்காக வேணுகோபால் டெல்லி சென்றுள்ளார்.



    மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களால் 24 மணி நேரத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் உமேஷ் கத்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்று எதுவும் நடக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும். எப்படியாவது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி அமைத்தே எதிர்கொண்டோம். அதே போல் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும்.

    தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கும்போது, தொகுதிகள் ஒதுக்கீடு உள்பட அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parameshwara #Siddaramaiah
    சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பாஜக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. #Siddaramaiah #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ. ஆகியோர் பெங்களூருவில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது சித்தராமையா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த கையேடு ஒன்றை அவர்கள் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சியை 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். இது தற்போது நிரூபணமாகியுள்ளது.

    ஊழல் தடுப்பு படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் அதிகளவில் சொத்துகள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.

    பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக பணியாற்றியவர் சாம்பட். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. அவர் கர்நாடக அரசு பணியாளர் ஆணைய தலைவராக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டார். அவர் எதற்காக அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

    கர்நாடகத்தில் 2016-17-ம் ஆண்டில் அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 19 சதவீதம் வித்தியாசம் வருவதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் விவரமாக கூறப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளை இந்த அரசு பாதுகாக்கிறது. இதை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    கணக்கு தணிக்கை அறிக்கைப்படி பார்த்தால், சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Siddaramaiah #BJP
    மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #MekedatuDam #Siddaramaiah
    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

    மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் முந்தைய காங்கிரஸ் அரசின் மிக முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு பிரச்சினை செய்கிறது.

    கர்நாடகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளும் கர்நாடகத்திற்கு சாதகமாக உள்ளன. அணை கட்டக்கூடாது என்று எந்த தீர்ப்பிலும் சொல்லப்படவில்லை.



    மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை. எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திடம் எந்த ஆதாரங்களும் இல்லை. கர்நாடகத்தின் திட்டம் நியாயமானது. அதனால் கர்நாடக வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டிற்கு தேவையான விவரங்களை வழங்க வேண்டும்.

    ஒருவேளை இதற்கு இடைக்கால தடை விதித்தால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பிரச்சினையை அந்த மாநில அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #MekedatuDam #Siddaramaiah

    பா.ஜனதாவினர் எவ்வளவு முயன்றாலும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #BJP
    மங்களூரு :

    மங்களூரு நேரு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை கையில் எடுத்து எப்படியாவது கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு கண்டு வருகிறார்கள். அவர்கள் (பா.ஜனதாவினர்) எவ்வளவு முயன்றாலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.



    பா.ஜனதாவுக்கு தனி பெரும்பான்மை இல்லை என்பதை முதலில் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் நாளில் இருந்தே அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதாவினர் ரூ.25 கோடி பேரம் பேசுகிறார்கள்.

    அவ்வளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது. அவை அனைத்தும் ஊழல் பணம். பா.ஜனதாவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டு தான் உள்ளனர். பின்வரும் நாட்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். நான் (சித்தராமையா) பா.ஜனதாவுக்கு சென்றால் சேர்த்து கொள்வோம் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். அவருக்கு (ஈசுவரப்பா) மூளை கிடையாது. அவருடைய பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #BJP
    ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #LokpalBill #Siddaramaiah
    உப்பள்ளி :

    கர்நாடக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்வதாக தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா சொன்னது.

    ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை கர்நாடக அரசு வழங்குகிறது. நிலுவைத்தொகையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மந்திரிசபையை உடனடியாக விரிவாக்கம் செய்யும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் வற்புறுத்தவில்லை. மந்திரிசபை விரிவாக்கம் செய்தால் அன்றைய தினமே கூட்டணி அரசு கவிழும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா கட்சிக்கு கூட்டணி அரசு பற்றி பேச தகுதி இல்லை. கூட்டணி அரசு சுதந்திரமாக செயல்படுகிறது.



    பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. மந்திரியாக வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவர் எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கூட்டம் நடத்தவில்லை. வருகிற 5-ந் தேதி கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும்.

    பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், முதல்-மந்திரியாக வேண்டும் என்று எடியூரப்பா கனவு காண்கிறார். கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இந்திரா உணவகத்தை நடத்த நிதி பற்றாக்குறை ஒன்றும் இல்லை. பா.ஜனதாவினர் ஏழைகளுக்கு எதிரானவர்கள்.

    அதனால் இந்திரா உணவகத்தை எதிர்க்கிறார்கள். ஊழலுக்கு எதிராக பேசி தான், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை லோக்பால் அமைப்பை அக்கட்சி உருவாக்கவில்லை. இதன் காரணமாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    இந்த பேட்டியின் போது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உடன் இருந்தார். இதன்பின்னர் சித்தராமையா கார் மூலம் பாகல்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். #LokpalBill #Siddaramaiah
    ×