search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96364"

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று(செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. #Congress #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காங்கிரசை சேர்ந்த சுமார் 18 எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்று, பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆகிய மூன்று பேரும் கடந்த 22-ந் தேதி திடீரென சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் மும்பை செல்வதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அறிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, பெங்களூரு திரும்பும்படி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் உடனடியாக பெங்களூரு திரும்பினர். அவர்களை மந்திரிகள் நேரில் சந்தித்து, கட்சிக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். காங்கிரசை விட்டு விலக மாட்டோம் என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இதன் காரணமாக கூட்டணி ஆட்சிக்கு எழுந்து சிக்கல் தற்காலிகமாக நீங்கியது.

    ஆயினும், இந்த சிக்கல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பா.ஜனதா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

    சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க் களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Congress #Siddaramaiah
    சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Siddaramaiah #DeveGowda






    பெங்களூரு :



    முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சித்தராமையாவும், நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அவர் காங்கிரசில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டணி ஆட்சியை காப்பது எனது பொறுப்பு என்று குமாரசாமியிடம் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

    ஹாசன் மாவட்ட வளர்ச்சி குறித்து எச்.டி.ரேவண்ணா கனவு வைத்துள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாசனை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. அப்போது நான் ஹாசனில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சில முடிவுகளை எடுத்தேன். அதற்கு குறுக்கீடுகள் வந்தன.

    குமாரசாமியின் முதல்-மந்திரி நாற்காலி கெட்டியாக உள்ளது. குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது அவர் தினமும் 16 மணி நேரம் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். கூட்டணி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

    கூட்டணி ஆட்சி மீது எடியூரப்பாவுக்கு கோபம் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். அவர் நினைத்தது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் கூட்டணி ஆட்சி மீது அவர் கோபத்தை காட்டுகிறார்.

    மத்தியில் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து நான் பிரதமரானேன். அதன் பிறகு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் வாஜ்பாய் தனது கோபத்தை காட்டவில்லை. சபையை நடத்தவிடாமல் செய்யவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கண்ணியமாக நடந்து கொண்டார்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Siddaramaiah #DeveGowda
    20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினர். இருவரும் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தனர். #Karnataka
    பெங்களூரு

    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசியலில் புயல் வீசத்தொடங்கியுள்ளது.

    பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாக கூறி ஜார்கிகோளி சகோதரர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் பிரச்சினையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ஜார்கிகோளி சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர்.

    இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சியில் எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை சரிசெய்யும்படி அவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

    ஜார்கிகோளி சகோதரர்களை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா சமாதானப்படுத்தினார். இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக ஜார்கிகோளி சகோதரர்கள் அறிவித்தனர். ஆயினும் பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரசை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேசி இருப்பதாகவும், விரைவில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் பிறகு அவர்கள் மும்பை செல்ல முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.


    இந்த ஆலோசனை சித்தராமையா தங்கியுள்ள காவேரி இல்லத்தில் நடந்தது. அப்போது துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்கலாமா? என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நோக்கத்தில் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சி செய்வதை தடுக்க கோரி சட்டசபை சபாநாயகரிடம் மனு கொடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.

    மேலும் கடைசி நாள் வரை மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பது வேண்டாம் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால், அதன் மூலம் கட்சியில் எதிர்ப்பு குரல் எழ வாய்ப்பு இருப்பதால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. #Karnataka #KarnatakaPolitics #Kumaraswamy #Siddaramaiah
    ஆட்சியை கலைப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #Siddaramaiah
    பெங்களூரு :

    கட்நாட சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு குமாரசாமி ஆட்சி அமைத்தார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதலாக குமாரசாமி தலைமையிலான ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது என அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

    காங்கிரஸ் அமைச்சர்களான சதீஸ் ஜர்கிஹோலி மற்றும் சிவக்குமார் இடையே பெலகாவி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பெலகாவியில் தனது சகோதரருடன் சேர்ந்து செல்வாக்கை நிலைநாட்ட விரும்பும் சதீஸ் ஜர்கிஹோலிக்கு எதிராக எம்.எல்.ஏ லக்‌ஷ்மி ஹெப்பால்கரை அமைச்சர் சிவக்குமார் கொம்பு சீவி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், சதீஸ் ஜர்கிஹோலி சகோதரகள் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் பாரதிய ஜனதா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் எவ்வித அதிருப்தியும் இல்லை என ஊடகங்களிடம் முன்னாள் முதல்வர் சித்தரமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் எவ்வித அதிருப்தியும் இல்லை, எங்களிடையே அதிருப்தி இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சிலரை தொடர்பு கொண்டு பாரதிய ஜனதா கட்சியினர் பேசியுள்ளனர்.

    இந்த ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வது உண்மை. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பது உள்பட எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளனர்.

    கர்நாடக மந்திரிசபையில் இன்னும் 6 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களில் புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோனை செய்ய முதல்வர் குமாரசாமி நாளை(இன்று) டெல்லி பயணம் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Siddaramaiah
    சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகிறது என்று கர்நாடக அரசு மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். #yeddyurappa #Siddaramaiah
    பெங்களூரு :

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாபுராவ் சின்சனசூர். இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக பணியாற்றினார். சுமார் 3 ஆண்டுகள் காலம் அவர் மந்திரியாக செயல்பட்டார். அதன் பிறகு மந்திரிசபை மாற்றத்தின்போது, அவரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். தனது மந்திரி பதவி பறிபோக மல்லிகார்ஜுன கார்கே தான் காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

    சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பாபுராவ் சின்சனசூர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் எடியூரப்பா முன்னிலையில் முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவில் சேர்ந்தார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

    சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசிகளை கர்நாடக அரசு ஒட்டுகேட்கிறது. இது 100-க்கு 100 உண்மை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுகேட்டதால் அப்போது இருந்த அரசுக்கு என்ன நடந்தது? என்பதை மாநில அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

    இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு பிரச்சினை குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்து நாளையுடன் (அதாவது இன்று) 100 நாட்கள் ஆகிறது. மாநிலத்தில் அரசு உள்ளது என்ற மனநிலையே மக்களிடம் இல்லை.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் எடியூரப்பா முன்னிலையில் கட்சியில் இணைந்தபோது எடுத்தபடம்

    ஒருபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றொருபுறம் மழை குறைவால் வறட்சி ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் துயரங்களை கேட்பவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. விதான சவுதாவுக்கு மந்திரிகள் யாரும் வருவது இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. மாநிலத்தில் எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும்?. குடகு மாவட்டத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து அவர்கள் தவிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்களை சொல்லிமாளாது. இந்த கூட்டணி அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதிலேயே காலத்தை கழிக்கிறது. பாபுராவ் சின்சனசூர் சேர்ந்துள்ளதால் பா.ஜனதாவுக்கு யானை பலம் வந்தது போல் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் கலபுரகியில் பலமான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு பாபுராவ் சின்சனசூர் பேசுகையில், “சட்டசபை தேர்தலில் என்னை காங்கிரசாரே தோற்கடித்துவிட்டனர். இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவேன். நான் 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 தடவை மந்திரியாகவும் பணியாற்றியவன். நான் சார்ந்துள்ள கோளி சமூகத்தை மேம்படுத்த நான் அரும்பாடுபட்டேன். இதை சிலரால் சகித்துக்கொள்ள முடியாமல், தேர்தலில் என்னை சதி செய்து தோற்கடித்தனர்“ என்றார். #yeddyurappa #Siddaramaiah
    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #BJP #Siddaramaiah
    உப்பள்ளி :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று நான் முன்பு கூறினேன். தற்போது நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. மக்கள் ஆசிர்வதித்தால் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று தான் சொன்னேன். இந்த கருத்துக்கு பல்வேறு அர்த்தங்களை கற்பிக்க வேண்டாம். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் எந்த கடிதமும் எழுதவில்லை.

    பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் இந்த கூட்டணி அரசு நிதியை ஒதுக்கி வருகிறது. அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.



    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மந்திரிகளும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் சேர்ந்து கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. அது தவறானது.

    கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதன் பயன் கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கும் சேரும். நான் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று கூறிய கருத்துக்கு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது?.

    அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்-மந்திரியாவேன். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் பகல் கனவு காண்கிறார்கள். அந்த கனவு பலிக்காது. ஆட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு முன்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக கூறுவது அர்த்தமற்றது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #BJP #Siddaramaiah
    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்ற சித்தராமையாவின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.

    இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குமாரசாமி டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது கூட்டணி அரசு தொடர்பாக கருத்துக்களை வெளியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்து இருந்தது. இதனால் அவர் கூட்டணி அரசு குறித்து கருத்து ஏதும் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் நேற்று இரவு நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன். 2-வது முறையாக நான் முதல்-மந்திரி ஆவதை எதிர்கட்சிகள் கைகோர்த்து கொண்டு தடுத்தன. எதிர்பாராத விதமாக என்னால் முதல்-மந்திரியாக முடியவில்லை. ஆனால் இதுவே இறுதி அல்ல. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமானது.

    கர்நாடகத்தில் ஜாதியும், பணமும் அரசியலில் பரவி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சித்தராமையா அடிக்கடி குமாரசாமி அரசை விமர்சித்து பேசி வருவதால் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அதிருப்தியுடன் இருந்து வருகிறார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய குமாரசாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். அப்போது அவர் பேசியது, ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசில் விரிசல் இருப்பதை காட்டியது. இது குறித்து குமாரசாமி பேசிய பேச்சு வருமாறு:-

    முதல்- மந்திரி பதவி என்பது ரோஜா பூக்களால் நிறைந்த படுக்கை அல்ல. அது முட்கள் நிறைந்தது. மக்களுக்காகவே முதல்-மந்திரி பதவியில் இருக்கிறேன். நெருக்கடி அதிகரித்தால் ராஜினாமா செய்ய தயார்.

    இவ்வாறு குமாரசாமி பேசியதால் அந்த நேரத்தில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு தற்போது சித்தராமையா பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. #Siddaramaiah

    சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BJP #Siddaramaiah #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சித்தராமையா 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததாலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதாலும், சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெற்றி பெறும் என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

    ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை. இந்த தோல்வியில் இருந்து சித்தராமையாவால் மீள முடியவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் சொந்த தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாதாமி தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை எட்டி பறித்தார்.

    எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார். தேவேகவுடாவும், சித்தராமையாவும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டாலும் இருவரும் அரசியலில் பரம எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    குமாரசாமி முதல்-மந்திரி ஆனதை சித்தராமையா சிறிதளவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து இந்த அரசின் செயல்பாடுகள் பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ அதிகம் பேசாமல் சித்தராமையா சற்று ஒதுங்கியே இருக்கிறார். தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கைவிடும் முடிவை எதிர்த்து குமாரசாமிக்கு 4, 5 கடிதங்களை சித்தராமையா எழுதினார். கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருக்கிறார். இந்த குழுவின் கூட்டம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது.

    இந்த நிலையில் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். இதனால் குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



    அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு தன்னிச்சையாகவே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வைத்துள்ள குமாரசாமி, அந்த திட்டத்தை முறியடிக்க தன்னிடம் ஒரு திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா ஏன் முயற்சி செய்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், அந்த ஆட்சி அமைந்த பிறகும் சித்தராமையாவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பேசப்படுகிறது. தன்னை புறக்கணித்த காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் எண்ணமாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.

    பா.ஜனதா சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 2022-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி பதவியை வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

    பா.ஜனதா மதவாத கொள்கையை பின்பற்றி வருவதாக மேடைக்கு மேடை பேசி வரும் சித்தராமையா அக்கட்சியை கடுமையாக குறை கூறுகிறார். அப்படிப்பட்ட மதசார்பற்ற கொள்கையை கொண்ட பா.ஜனதாவுக்கு சாதகமாக அவர் செயல்படுவாரா? என்ற கேள்வி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் அரசியல் வாதிகள் இடையே எழுந்துள்ளது.  #BJP #Siddaramaiah #kumaraswamy
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அங்கு 12 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் கூறிய உரையாடல் வீடியோ வெளியானது.

    இந்த நிலையில் பெங்களூரு திரும்பிய சித்தராமையா காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் மவுனத்தை கலைத்து பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில், “சாதாரணமாக பேசுவதை வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவது நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. எந்த சூழ்நிலையில் நான் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது என்பது சரியானதா?. இந்த கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறுகையில், “நான் சொன்ன கருத்துக்கு நீங்கள் வேறுவிதமாக அர்த்தம் கற்பித்தீர்கள். நான் எந்த அர்த்தத்தில் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அரசு நிலையாக நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார். 
    கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்ட அறிக்கை தயாரானது. இந்த பொது செயல் திட்டத்தில் 5 ஆண்களுக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படுகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியை சுமூகமாக நிர்வகிக்க முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் கூட்டத்தில், பொது செயல் திட்டத்தை வகுக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவின் உறுப்பினர்களாக காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    அந்த குழுவினர் ஏற்கனவே பல முறை கூடி இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அந்த குழுவின் கூட்டம் வீரப்பமொய்லி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பொது செயல் திட்டத்தில் 5 ஆண்களுக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமாக விவசாய கடன் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்க குமாரசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.1.25 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த பொது செயல் திட்ட அறிக்கை ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படும் என்று வீரப்பமொய்லி கூறினார். 
    காங்கிரஸ் பட்ஜெட் புறக்கணிக்கப்பட்டதால் சித்தராமையா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Budjet
    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சேர்ந்து இயற்கை சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, சித்தராமையா பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தது சரியல்ல என்றும் சித்தராமையா கூறினார். புதிய மந்திரிகள் பட்டியலை ராகுல் காந்தி முடிவு செய்ததாகவும், அவரது முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

    மேலும் புதிய பட்ஜெட் வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதையும் கூறி சித்தராமையா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. முன்பு தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸ் பட்ஜெட்டை புறக்கணித்துவிட்டு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், காங்கிரசின் நிலை என்னாவது என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

    மேலும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து குமாரசாமி புதிய பட்ஜெட்டுக்கு அனுமதி பெற்றதாகவும், தான் கூறிய கருத்து குறித்து ராகுல் காந்தியிடம் புகார் செய்ததாகவும், இது தன்னை வேதனை அடைய செய்துள்ளதாகவும் சித்தராமையா தனது ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  #Siddaramaiah #Budjet #Tamilnews 
    மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் முதல் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என கார்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார். #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக உள்ளார். 

    இந்நிலையில், தனது சட்டமன்ற தொகுதியான பதாமி தொகுதியில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சித்தராமையா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மஜத - காங் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது என்றும், இந்த கூட்டத்தில் முக்கியமானதாக விவாதிக்கக்கூடிய விவகாரங்கள் என்ன என்பது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

    மேலும், சமீபத்திய மந்திரிசபை விரிவாக்கத்தில், மந்திரி பதவி கிடைக்காத சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தற்போது யாரும் அதிருப்தியாக இல்லை அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என கூறினார்.  #Siddaramaiah
    ×