என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96399"
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.
கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.
இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்யவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற இயலாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளன.
இதனால் கணிசமான அளவு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்க வில்லை. அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இது ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. தத்தளித்தப்படி திணறிக் கொண்டிருப்பதை அறிந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அதற்கு ஏற்ப அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அவர் 5 தடவை ராஜஸ்தானுக்கு சென்று ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அஜ்மரில் உள்ள ஷரிப் மற்றும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ராகுல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
அஜ்மர், ஜெய்சல்மார், பொக்ரான், ஜலூர், ஜோத்பூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட கூட்டங்களில் ராகுல் பேச உள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளார். இதனால் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் மோடி பில் வாரா, துங்கர்பூர், கொடா ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ராஜஸ்தானில் வரும் 5-ந் தேதி தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது.
பிரசாரத்துக்கு இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ளதால் அங்கு உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. #PMModi #Rahul
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பாராட்டியும், அவரது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டும் பலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது.
மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.
பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெருமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.
இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.
2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.
காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.
அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெருமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.
தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல் AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.
இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.
ரூ. 2000 கோடி பெருமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.
கடந்த 2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனைதொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் சார்பில் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின்மீது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் மற்றும் வருமான வரித்துறை தரப்பு வக்கீல்கள் வாதத்துக்காக டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். இது எனக்கான அடையாளம் இல்லை. ஏற்கனவே சினிமா மூலம் மக்களுக்கு என்னை தெரியும். தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறிந்து இருக்கிறோம்.
தமிழகத்தில் வருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. தற்போது இல்லை. அது கூட்டணியா? என்று இப்போது சொல்ல முடியாது.
சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, ஏனென்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில் சபரிமலையில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.
கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதுபற்றி கேட்டதற்கு அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.
துரைமுருகன் உங்களைப் பற்றி கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு கமல் பதில் அளிக்கையில் துரை முருகன் நடிப்பு பிடிக்க வில்லை என்றார்.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi #RanilWickremesinghe
குருதாஸ் காமத் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் சோனியா காந்தி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘குருதாஸ் காமத் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி ஆகும். மும்பையில் காங்கிரசை கட்டமைக்க உதவிய அவர், அனைவராலும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். இந்த துயரம் நிறைந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ.க. எம்பி கிரித் சோமையா, சிவசே எம்எல்ஏ மனிஷா காயண்டே என பல்வேறு கட்சி தலைவர்களும் குருதாஸ் காமத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் 20-ந் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியபோதும், “ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் பிரதமரிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசவில்லை” என்று சாடினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். திரும்பவும் ரபேல் போர் விமான பேர பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.
அதில் அவர், “நமது ராணுவ மந்திரி ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ரகசியம் ஏதும் இல்லை. அதை சொல்வேன் என்றார். ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்கிறார். இதில் ரகசியம் இல்லை என்று சொல்லி விட்டு இது மிகப்பெரிய ரகசியம் என்று நிலை மாற்றி பேசுகிறார். ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி நான் கேட்டால் பிரதமர் நெளிகிறார். என்னை நேருக்கு நேர் பார்க்க மறுக்கிறார். இதில் நிச்சயம் ஊழல் நடந்து உள்ளது” என்று கூறி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #tamilnews
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், உமேஷ்யாதவ், சித்தார்த் கவூல் ஆகியோர் நீக்கப்பட்டு தினேஷ்கார்த்திக், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வீரர்கள் தேர்வு முறைக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரகானே ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. அடிக்கடி மிடில் ஆர்டரை (நடுவரிசை) மாற்றி சோதிப்பது முன்கள பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-
இதனால் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவது அவசியம். இந்த வரிசையை அடிக்கடி மாற்றி சோதிப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.
ராகுல், ரகானே ஆகிய 2 பேட்ஸ்மேன்களையும் அணி நிர்வாகம் போதுமான அளவு பயன்படுத்தவில்லை.
மான்செஸ்டர் போட்டியில் சதம் அடித்த ராகுலை கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏன்? என்று தெரியவில்லை. இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது.
5-வது வரிசையில் ரகானேயை பயன்படுத்தலாம். அதன்பின்னர் 6-வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் அல்லது டோனியா? என்பதை முடிவு செய்யப்படும். 7-வது வீரராக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ரகானேயை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது வேதனை அளித்தாலும் அவரின் சேவை டெஸ்ட் தொடருக்கு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறது. இருவரையும் வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது என்று நான் கூறவில்லை.
2019 உலக கோப்பையில் டோனி இடம் பிடிக்க வேண்டுமானால் அவரின் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். 25 ஓவர்கள் வரை மீதம் இருக்கும்போது அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நன்றாக விளையாடலாம். ஆனால் டோனி தடுமாறுகிறார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் டோனி. ஆனால் தற்போது பேட்டிங்கில் திணறுகிறார். அவர் தனது திறமையை அதிகரித்து இன்னும் 1ஆண்டுக்கு அணியில் நீடிக்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். #INDvENG #Virat #Ganguly #Rahul
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 31 ரன்னில் தோல்வி அடைந்தது.
திருச்சி வாரியர்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இருந்தது.
தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:-
181 ரன்கள் என்பது சற்று பெரிய இலக்கு தான் இருந்தாலும் அதனை எட்ட முயற்சி செய்தோம். ஆனால் பவர்பிளேயில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் திருச்சி அணி 45 ரன்களை குவித்துவிட்டது. இது அவர்களின் நேரம் என்றே சொல்வேன். கணபதியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவருக்கான நாளாக அமைந்தது.
இந்த ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் உத்வேகத்துடன் விளையாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் வீரர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆடுகளம் தொடக்கத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் எப்போது 2 பவுண்டரிகளை அடிக்க முடிந்ததோ, அதை நாங்கள் தொடர வேண்டும் என்று கருதினேன். கேப்டன் இந்திரஜித்தும், நானும் இணைந்து அணியின் ஸ்கோரை 160 ரன்னுக்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பின்னர் வந்த கணபதி அதிரடியாக ஆடி 180 ரன்னுக்கு கொண்டு வந்தார்.
180-190 ரன் இந்த ஆடுகளத்தில் மிகச் சிறந்த ஸ்கோராகும். ஆனால் 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை இந்த ஸ்கோர் போதுமானது என்று யாரும் கூற முடியாது. இந்த ஆட்டத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நாளை (16-ந்தேதி) நடக்கிறது.
திருச்சி வாரியர்ஸ் 3-வது ஆட்டத்தில் கோவை கிங்சை வருகிற 23-ந்தேதி திண்டுக்கல்லில் சந்திக்கிறது.
டி.என்.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நெல்லையில் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ்- வி.பி.காஞ்சீ வீரன்ஸ் அணிகளும், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ்- ஐடீரிம் காரைக்குடி காளை அணிகளும் மோதுகின்றன. #TNPL2018 #CSGvRTW
சென்னை:
சோனியா-ராகுலை கமல் சந்தித்து பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பால் தி.மு.க. தோழமை கட்சிக்கு இடையில் உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
கமல்ஹாசன் ஏற்கனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியை சந்தித்து இருக்கிறார்.
கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு சென்றபோது சோனியாகாந்தி, மாயாவதி உள்பட பல தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ராகுல்காந்தியையும் சந்தித்து இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒரு தலைவரை இன்னொரு தலைவர் சந்திப்பதால் அந்த சந்திப்பு கூட்டணிக்காக மட்டுமே என்று நாம் யூகிக்க தேவையில்லை.
கமல்ஹாசன், காங்கிரஸ் இடம்பெறும் அணியில் தாமும் இடம்பெற வேண்டும் என்று பேசியிருந்தாலும் அது தி.மு.க.விற்கோ அல்லது அதன் தோழமை கட்சிகளுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.
கமலுடனான சந்திப்பு பற்றி ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்மூலம் அந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிப்பதற்குள் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு மனித உரிமை ஆர்வலர்களை சுற்றுச்சூழல் பாதுகாவலர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை வளங்களையும், மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், பெருமளவில் அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணித்து வருகின்றன. இந்த போக்கை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மக்களின் கருத்தறியாமல் இசைவு இல்லாமல் இந்த திட்டத்தை திணிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. விரைவில் சேலத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #RahulGandhi #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்